Monday, May 25, 2020

சிவன் கொடுத்த கோடரிச் சின்னம்

சோதனைகள் சுருங்கும் 
வேதனைகள் விலகும் 
போதனைகள் பெருகும் 
சாதனைகள் செழிக்கும்

திருமாலின் ஆறாவது தோன்றல் பரசுராமர்
பெருமான் சிவன் பரசுராமருக்குக் கோடரி கொடுத்தார்

அறம் குன்றும் அதர்மம் பெருகும்
பரசுராமா கோடரியை எடு.
பரசுராமரிடம் சிவன் கூறினார்.

இலங்கை சிவபூமி
ஆதிக்குடிகள் வேடர்
சிவ வழிபாட்டிநர்
சிவன் கொடுத்த கோடரி
பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 
வேடர்களின் தோள்களில் இன்றும் தொடர்கிறது
சிவபூமியின் ஆதிப் படைக்கலன் கோடரி

பரசுராமருக்கு சிவனே கோடரி தந்தார்
வேடர்களுக்குச் சிவனே கோடரி தந்தார்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவைக்கும்
சிவனே கோடரி தந்துள்ளார்

அலங்கார வளைவுகளை அழித்தார்கள்
ஆதி மரபுகளைத் துடைத்தார்கள்
அன்பையும் அறனையும் அருளையும் தொலைத்தார்கள்
ஆக்கிரமிப்பாளர்களாக மாறினர் வந்தேறிகள்

அறம் குன்றியது அதர்மம் தலைதூக்கியது
கோடரி ஒரு சின்னமே ஓர் எடுத்துக்காட்டே
சிவன் தன் அடியார்களை இணைக்கும் சின்னம் கோடரி

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை
கோடரிச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறது
சிவன் கொடுத்தார் சைவர்கள் மகிழ்ந்தனர்

தமிழ்த்தேசிய மக்கள் பேரவையின் 
வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் 
சிவன் கொடுத்த சின்னத்துடன்

சோதனைகள் சுருங்கும் 
வேதனைகள் விலகும் 
போதனைகள் பெருகும் 
சாதனைகள் செழிக்கும்

வெற்றி நமதே
நாளை நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: