Tuesday, August 13, 2019

மகிந்தாவுக்கு மடல் எழுதிய அருச்சுனர் சம்பத்தர்


28 ஆடி 2050 (13.08.2019)

இலங்கையின் மேனாள் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அர்ஜுன் சம்பத்தின் மனம் திறந்த மடல்



அன்புள்ள திரு ராஜபக்சே அவர்களே,

காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு

அண்மையில் காஷ்மீரில் நடந்தவை,  இலங்கையில் ஆட்சிப் பரம்பல் தொடர்பாகப் பொருத்தமானவை என்றும் ஆட்சிப் பரம்பலால் வரும் கேடுகளுக்கு எடுத்துக் காட்டு என்றும் நீங்கள் கூறியதாகக் கொழும்பு வீரகேசரியில் படித்தேன்

நடுவண் அரசில் ஆட்சி அதிகாரங்களைக் குவிப்பதோ மாநிலத்தில் ஏற்கனவே பகிர்ந்த ஆட்சி அதிகாரங்களைக் குறைப்பதோ பிரதமர் மோடியின் நோக்கமல்ல. அத்தகைய நோக்கத்தை அவர் கொண்டிருந்தார் என நீங்கள் கருதினால் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

வடக்கே திருக்கயிலாயம் திபெத் நாட்டில் 

தெற்கே கதிர்காமம் இலங்கையில் 

மேற்கே காந்தாரம் ஆப்கானிஸ்தானில் 

கிழக்கே ஐராவதி மியன்மாரில் 

இவ்வாறு நீண்டு அகன்று விரிந்த பழம்பெரும் பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை. மீட்டும் மீட்டும் தேர்வாகி, பிழைகளைத் தவிர்த்து, தவறுகளை நீக்கி, பட்டறிவின் தளத்தில் உயர்ந்தவற்றைத் தேக்கி, சிறந்தவற்றைப் பேணிச் செதுக்கிச் செதுக்கிக் காப்பாற்றிக் கூர்மையாக்கிய நீண்ட நெடிய பரம்பரீயம் உடைய பண்பாட்டைப் பேணுவதே காஷ்மீரில் பிரதமர் எடுத்த நடவடிக்கையின் உயரிய நோக்கம்.

இலங்கையில் உள்ளவர்களுக்கும் இந்த உயரிய நோக்கத்தை எடுத்துக்காட்டியது பிரதமர் மோடியின் அளப்பரிய பங்களிப்பு ஆகும்.

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் காஷ்மீரில் அரசியல் ஆட்சி அதிகாரம் பெருகியது. காஷ்மீரிகள் தாம் இழந்த மண்ணை மீளப் பெறுகிறார்கள். காஷ்மீரிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தங்களுடைய பண்பாட்டை மீட்டும் நிலை நாட்டுவார்கள்.

கடந்த 1000 ஆண்டுகளூடாக் கஜினியும் கோரியும் தைமூரும் பாபரும் நடத்திய ஆக்கிரமிப்பு வடுக்களை அகற்றுவதில் வெற்றி காண்பார்கள். சுமேரியா தொடக்கம் இந்துகுஷ் மலை வரை படர்ந்து உலகையே அதிர்விக்கும்  பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதலில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

துடைத்து எறிந்து, வழக்கிலிருந்து நீக்கிய காஷ்மீர மொழியை அதன் எழுத்து வடிவமான கிரந்தத்தைப் பெருமை மிக்க புகழ்மிக்க வரலாற்றுப் பயன்பாட்டுக்கு மீட்டமைப்பார்கள்.

காஷ்மீரின் மண்ணின் மகன் ஒவ்வொருவரும் பூமியின் புத்திரன் ஒவ்வொருவரும் தனது ஆளுமையைத் தனது முன்னோர் வழியில் வளர்த்துப் பூத்துக் காய்த்துப் பழமாக்கி உலகம் பயன்பெற வளர்த்து எடுப்பார்.

திபெத்துக்குத் தெற்கே புத்தர்களின் மரபு வழி வாழ்விடம் இலடாக். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நாள் தொடக்கம் மனமோகன் எல்லைக் கோட்டைச் சார்ந்த இலடாக் நிலப் பகுதியையும் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி இலடாக் மக்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்.

அன்னிய மொழி அன்னிய வாழ்வுமுறை அன்னிய மதம் என்பன அண்மைக் காலங்களில் புகுந்து அவர்களின் மரபுகளை வாழ்வியல் முறைகளைப் பாழாக்கி வருவதைப் பலமுறை தில்லியிடம் கூறித் தமக்கு தனியான நிலப்பகுதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

காலம் கனிந்தது. உள்ளம் கனிந்த பிரதமர் மோடி அவர்களுக்கு தனியான நிலப்பகுதியை அமைத்தார். தில்லியில் நேரடி ஆட்சியிலேயே சிறிதுகாலம் இருக்கும் என அறிவித்தார்.

காஷ்மீர் சைவத்தின் வாழ்விடம். காஷ்மீர முனிவரே காஞ்சிபுரம் வந்த கச்சியப்ப முனிவர். கச்சி என்ற சொல் காஷ்மீரத்தைக் குறிக்கும். சைவத்தின் பண்டைய வாழ்விடம் காஷ்மீரம். இலங்கை வேந்தன் இராவணன் அந்த தீவின் இராஜலட்சுமியை நாகர்கள் புடைசூழ எடுத்துச் சென்று காஷ்மீரத்தில் கோயில் அமைத்தான். இன்றும் தால் ஏரியின் அருகே அந்தக் கோயில் இருக்கிறது. 

உங்களின் முன்னோர், நீங்கள் அண்மையில் ஏவிய செயற்கை கோளின் பெயரைத் தாங்கிய பெருமகன், சைவ சமயத்தின் காவலன்,  இராவணன், காஷ்மீரத்தில் அமைத்த திருக்கோயிலைக் காப்பாற்றுவதற்குப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். நீங்கள் மகிழ வேண்டாமா?

அறிஞர், தத்துவார்த்தி, தமிழ் முனி இராமானுஜர் காஷ்மீரில் சாராத பீடம் சென்று தொல் சுவடிகளைக் கற்றுத் தேர்ந்தார். அவர் சென்ற சாராத பீடமும் ஆயிரக் கணக்கான சிவன் கோயில்களும் புத்த விகாரைகளும் இன்றைய பாகிஸ்கானின் பிடியில் உள்ள காஷ்மீரத்தில் அழிந்து வருவதை அறிவீர்களே. அவற்றை மீட்டகவே பிரதமர் மோடி இலக்கு வைத்துளார்.

மகாவமிசம் கூறிய முதலாவது இலங்கை மன்னன் நாகநாட்டு மகோதரன். பின்னர் கலிங்க விஜயன், கஜபாகு, மானவர்மன், செகராஜசேகரன், விஜயபாகு, பராக்கிரமபாகு, சங்கிலி எனத் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசர்கடைசிக் கண்டியரசன் இராஜசிங்கன் வரை எந்த இந்துக் கோயிலையாவது இடித்து இருக்கிறார்களா?

மாற்றாக நான் சொன்ன ஒவ்வொரு மன்னரும் இடையில் வந்த மன்னர்களும் இலங்கையில் உள்ள சைவக் கோயில்களுக்கு நிவந்தங்கள் மானியங்கள் கொடுத்துப் பூசைகளைப் பேணி வளர்த்திருக்கிறார்கள். இடிக்கவில்லை.

தென் முனையில் வரலாற்றுக்கு முற்பட்டதும் இராவணன், நரசிம்ம பல்லவன், பராக்கிரமபாகு போன்றோர் பேணியதுமான சிவன் கோயில் தென்னாவரத்தை இடித்து உலூசியா தேவாலயம் கட்டியவன் போர்த்துக்கேயர் தளபதி தோமையன்.

இராவணன் தொடக்கம் கயிலாய வன்னியன் வரை பூசித்த திருக்கேதீச்சரம், திருக்கோணச்சரம் இரண்டையும் அழித்தவன் போர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ்டாண்டினாசா.  

அண்மையில் கிழக்கில் காளி கோவிலை இடித்து மசூதி கட்டியவர் அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா.

ஏமாங்கதப் பாலைவனத்தில் பூத்த ஆபிராமிய அறங்களின் போர்வையில் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய்களாகப் பாரத கண்டத்தின் பராம்பரியத்தை அழிக்க முயன்றவர் இவர்கள்.  

பிரதமர் மோடியின் இலக்குத் தோமையர்களும் கொண்ஸ்டாண்டினாசாக்களும் ஹிஸ்புல்லாக்களும் அன்றி வேறல்ல.

அகண்ட பாரத கண்டத்தின் ஆட்சி மரபுகளுக்கு அவ்வப்பொழுது ஆலோசனை வழங்கி நூல்களை எழுதி வைத்தவர்கள் சாணக்கியர் திருவள்ளுவர் போன்ற பெருமக்கள். காந்தாரம் தொடக்கம் உங்களின் போற்றுதலுக்குரிய நிலமான உரோகணம் வரையான அரசுகள் தொடர்ச்சியாக இத்தகைய அறிஞர்களிடமே ஆலோசனை கேட்டு ஆண்டு வந்தனர்.

அகண்ட பரத கண்டத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி அந்தப் புனித மரபைப் பேணும் ஆட்சி. கத்தியின்றி யுத்தமின்றிக் காஷ்மீரத்தில் அரசியலமைப்பு விதி மாற்றம் மூலம் அமைதியான அன்பளிப்பைக் காஷ்மீர மக்களுக்கு கொடுத்தவர் பிரதமர் மோடி. மேலை நாட்டு ஆட்சி அளவுகோல்களும் அரசியல் அளவுகோல்களும் கொண்டு பிரதமர் மோடியின் செயல்களை மதிப்பிடாதீர்கள்.

காஷ்மீரத்தில் இந்த நடவடிக்கைக்காக அவர் சிறு வயதில் இருந்தே மக்களிடம் பரப்புரை செய்து இருக்கிறார் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார் 60 ஆண்டுகள் அவர் நடத்திய அறப் போராட்டத்தின் விளைவாக அவரே ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.

தங்கத் தாம்பாளத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியின் அணுகுமுறைகளை உங்களுக்கு பரிசாகத் தருகிறேன். பரத கண்டத்தின் பண்பாடுகளை மீட்டெடுக்க உங்களுக்கும் அரிய வாய்ப்பு.

இலடாக்கில் புத்த சமயத்நவருக்குத் தனி நிலப்பகுதியை உரித்தாக்கியமை வரலாற்று நிகழ்வு.  இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் தமக்கான நிலப் பகுதியில் இந்து சமயத்தைப் பேணி வந்திருக்கிறார்கள். 

2570 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூச நாளில் முருகனுக்கு விழா. அந்நாள், புத்தர் மாணிக்கக் கங்கை ஆற்றோரம் வந்தார். பின்னர் யாழ்ப்பாணம் வந்தார் அதை அடுத்து களனிக்கு சென்றார்.

அகண்ட பாரதத்தின் சிந்தனையூற்றுச் செம்மல் புத்தர். இலங்கையின் சைவ சமயத்தவர் அவரை ஏற்றனர். பலர் அவருடைய கொள்கைகளை கொண்டனர். நீங்கள் அத்தகையோரின் வழி வந்தவர்களே.அண்மையில் யாழ்ப்பாண நாக விஹாரையின் வணக்கத்துக்குரிய புத்த பிக்கு அவர்கள் இந்தச் செய்தியை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். இந்துக்களின் வாழ்விடங்களில் அடாத்தாக அட்டூழியத்தில் ஈடுபடும் புத்த பிக்குகள் புத்தர்களே அல்லர் எனபது இத்தகைய மூத்த அறிவார்ந்த புத்தர்களின் நோக்கு.

இலங்கையில் இரு நிலப்பகுதிகள். ஆதி குடிகளான இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று. பின்வந்த புத்தர் சார்ந்த பெரும்பான்மையினரின் நிலப்பகுதி மற்றது. வேறு எவருக்கும் இலங்கையில் நில உரிமை கிடையாது.

இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று, புத்தர் பெரும்பான்மை நிலப்பகுதி மற்றது, என இலங்கையில் இரண்டு நிலப் பகுதியை அமையுங்கள். தர்ம நிலமும் தம்ம நிலமும் சத்+சித்+ஆனந்தமாய் நிர்வாணம் நோக்கிய தேசமாகும். பிரதமர் மோடி காட்டிய வழி அதுவே. 

அகண்ட பாரதத்தின் பழம்பெரும் பண்பாடுகளைப் பேணுவதற்கு இத்தகை ஆட்சி முறையே சிறந்த வழி என்பதைப் பிரதமர் மோடி உங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவர் வழியைப் பின்பற்றி இலங்கையைச் செழிப்பும் செல்வமும் அன்பும் அறமும் அருளும் நிறைந்த நாடாக மாற்றுங்கள்.

நன்றி

என்றும் உங்கள் அன்புடன் 




அர்ஜுன் சம்பத் 

தலைவர் 

இந்து மக்கள் கட்சி 

இந்தியா.

திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபை


முதுகெலும்பு இல்லாத திருக்கேதீச்சர திருப்பணிச் சபையினர் விலக வேண்டும்

மறவன்புலவு சச்சிதானந்தன்

சிவசேனை

முதுகெலும்பு இல்லாத திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினரே வளைவு உடைப்பதை தடுக்க முடியாமல் வலுவிழந்து செயற்பட்டனர்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பலர் தாங்கள் பதவி சுகத்துக்காகவே அந்த ஆட்சியில் தொடர்ந்து ஆண்டுதோறும் இருப்பதை உறுதி செய்கின்றனர்.  இதற்காகத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் அமைப்பு விதிகளில் உரிய மாற்றங்களை செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் உறுப்புரிமை இல்லாதவர்களே கலந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டடை முன்வைத்த  திரு. குமார் நமசிவாயம் வெளிநடப்பு செய்ததை நான் இங்கு நினைவு கூர வேண்டும்.

கொழும்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் முழுநேரமாக பணியாற்றக்கூடிய நேரமில்லை.

பிற சபைகளில் உள்ள முரண்பாடுகளால் அதே ஆள்கள் இதே சபைக்குள் வரும்பொழுதும் அதே முரண்பாடுகளை கொண்டுவந்து குழாயடிச்சண்டை குடுமிப்பிடிச் சண்டை வன்முறை என்பவற்றை ஆட்சிக்குழுக் கூட்டங்களில் பயன்படுத்துவதாக அறிந்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்

31.3.2019 ஞாயிற்றுக்கிழமை கூடப் இருக்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பொதுக்கூட்டத்தில் முன்பு இருந்தவர்களே தேர்வாகப் போகிறார்கள்.

இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் குகைக் கோயிலாக இருந்த சிறிய கோயிலை மாபெரும் உலூர்தம்மாள் தேவாலயமாகக் கத்தோலிக்கர் கட்டினர். 

இந்தக் குழுவில் நாளைய கூட்டத்தில் தேர்வாகப் போன்றவர்கள்தான் உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தியவர்கள்.

அடுத்த ஆண்டும் இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களானால் பாலாவி முழுவதும்  கத்தோலிக்கர் வசம் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

முதுகெலும்பில்லாத இப்போதைய ஆட்சிக் குழுவினர் முற்றாக விலக வேண்டும் 

ஆற்றலும் வலிமையும் திறமையும் சைவ சமயத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் மன்னாரைச் சிவபூமியாக்கக் ருதுகின்ற  ஆர்வத்தோடும் அன்போடும் அறத்்தோடும் அருளோடும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கத்தோலிக்க ஆக்கிரமிப்பைச் சந்திக்கக் கூடிய முற்றிலும் புதிய அணி ஒன்று திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆட்சி குழுவில் இடம் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

யாம் இரப்பவை நின்பால் பொன்னும் பொருளும் போகமும் அல்ல அன்பும் அருளும் அறனும் என்ற சங்கப் பாடலை நினைவில் கொள்வோம்.

நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நழலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் மீண்டும் சொல்கிறேன் பணிவோம் அல்லோம் என்ற அப்பர் பெருமான் வரிகளோடு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் புதிய அணி தேர்வாகி உத்வேகத்துடன் பணியாற்ற வருமாறு அழைக்கிறேன்.

Monday, August 12, 2019

சுஷ்மா சுவராஜ்


பாரதிய சனதா கட்சியின் மூத்த தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் 6.8.19 செவ்வாய்க்கிழமை காலமானார்.

பாரதிய சனதா கட்சிக்கு இலங்கையில் ஏதாவது அக்கறை இருக்குமானால் அங்குள்ள தமிழர்களே என என்னிடம் கூறியவர் திருமதி சுஷ்மா சுவராஜ். 

1997ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை அவரது வீட்டில் நானும் திருமதி மாலினி இராசநாயகம் அவர்களும் சென்று சந்தித்தோம். அப்பொழுது அவர் ஈழத் தமிழர் தொடர்பான விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். 

கடந்த ஆண்டு திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் முயற்சியாலேயே ஈழத்தமிழர்கள் சிதம்பரத்திற்கு வருவதற்குரிய கப்பலை விடுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. அப்பொழுதும் நான் தில்லியில் இருந்தேன். மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு இல கணேசன் அவர்கள் என்னை அவரிடம் அனுப்பினார்கள். திரு இல கணேசன் அவர்கள் எதைக் கேட்டாலும் செய்து கொடுக்கின்ற நண்பராகத் திருமதி சுஷ்மா சுவராஜ் இருந்தார்கள்.

பல மாதங்களாக வெளியுறவுத்துறை அமைச்சில் தேங்கியிருந்த கடிதத்தைத் தூசு தட்டி எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுக்கு ஒப்புதல் கடிதத்தை எழுதியவர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள்.

நாடாளுமன்ற அவையிலும் மாநிலங்களவையிலும் ஈழத்தமிழர்களுக்காக அவர் பலமுறை குரல் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களிலும் அமைச்சராக இருந்த காலங்களிலும் அவரது குரல் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்து இருக்கிறது.

ஒரு முறை பொதுவுடமைக் கட்சியின் திரு ராஜா அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து மாநிலங்களவையில் பேசினார். அப்பொழுது பதிலளித்த திருமதி சுஷ்மா சுவராஜ் ஈழத்தமிழர்களின் நலனே இந்தியாவின் நலன் எனவும் அவர்களை காப்பது இந்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.

இத்தகைய நட்பும் அன்பும் ஈழத்தமிழர் மீது பாராட்டுகின்ற அம்மையார் மறைந்த செய்தி கேட்டதும் கண் கலங்கி நின்றேன். நெஞ்சம் கனத்து நின்றேன். நேரே சென்னையில் உள்ள பாரதிய சனதாக் கட்சி அலுவலகத்துக்கு ஓடினேன். அங்கே நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கு பற்றினேன். திரு இல கணேசன் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்த பாசகவின் ஏனைய தமிழகத் தலைவர்களுடனும் இணைந்து அஞ்சலி செலுத்தினேன்.

அம்மையார் ஈழத்தமிழர்களுக்கு ஆற்றிய சேவைகள் பற்றிச் சிறிய உரை ஆற்றினேன் தொலைக்காட்சியினர் கேட்ட வினாக்களுக்குப் பதில் சொன்னேன் ஊடகத்தாருக்கும் செய்தி சொன்னேன்.


கூட்டமைப்பின் முதலைக் கண்ணீர்


கூட்டமைப்பின் முதலைக் கண்ணீர்

மறவன்புலவு சச்சிதானந்தன் 

சிவசேனை 31.07.2019

யாழ்ப்பாணம் நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முன்றலில், எதிர்வரும் சனிக்கிழமை 3.8.2019,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள்.

வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் மாண்புமிகு சிவஞானம் அவர்கள் தலைமை தாங்குவதாக அறிவித்திருக்கிறார்.

சிவசேனையில் உள்ளோர் வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் போற்றுகிறோம்.

தெற்கே உகந்தை தொடக்கம் வடக்கே மாதகல் வரை, தென்மேற்கே வாய்க்கால் ஆறு வரை, சைவத்தமிழ் நிலங்களில் பறி போகின்றன. சைவத்தமிழ் கோயில்கள் இடிபடுகின்றன சைவத் தமிழரை மதம் மாற்றுகின்றனர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் சிதைகின்றன.

சைவர்கள் பெரும்பான்மையாக உள்ள கல்வி நிலையங்களில் சைவ விழாக்கள் கொண்டாடத் தடை. கல்வி நிலையங்களில் திருநீறு, நெற்றிப்பொட்டு, கூந்தலில் பூ,தாவணி, வேட்டி, அணியத் தடைகளும் உள்ளன.

சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் விவேகானந்தர் சிலையை உடைத்து விட்டு அந்தோணியார் சிலையை நிறுவுதல். நான்கரை ஆண்டுகளாக அம்மன் கோயிலுக்குச் செல்லும் ஒரே ஒரு பாதையை வழிமறித்துப் பாதிரியார் அடைப்பு.

சைவர்களுக்கு என அரசு ஒதுக்கிய நிலத்தில் மதில் கட்டி ஆக்கிரமிக்கும் பாதிரியார் தடுக்கும் மக்களைத் தடிகொண்டு அடிக்கிறார். கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் நிகழ்த்துவோரையும்பாதிரிமார் விரட்டுவர். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மரியாள் சிலைகளையும் சிலுவைகளையும் முற்று முழுதான சைவச் சூழலில் சாலை ஓரங்களில் எவ்வித அனுமதியும் இன்றி நிறுவுவர்.சைவக் குடும்பங்கள் வாழும் சிற்றூர்களுக்குரிய ஹசாலைத் தலைவாயிலில் கிருத்தவ வளைவுகளைக் கட்டுவர்.

புத்த ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தென்னமரவாடி, கொக்கிளாய், செம்மலை, கன்னியா, நாவற்குளி, குச்சவெளி,திருகோணமலை, சிவொளிபாதமலை  எனச் சைவர் போராடும் ஊர்களின் பட்டியல் நீளும். உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சிவன் கோயிலை ஆட்சிக்குள் கொண்டு வரும் புத்த பிக்கு. பண்டைய அம்மன் கோயிலில் இன்றைய புராதன இராசமா விகாரைகள். சிங்கள மன்னரே பல்லாயிரம் ஆண்டுகள் மானியம் கொடுத்த சிவன் கோயில் இன்று புத்த பூசாரிகளின் பிடியில்.

காத்தான்குடியார் கடைகளை முதலில்போடுவர். பிள்ளையார் கோயில் சாலையைப்பள்ளி மசூதிச் சாலையாக மாற்றுவர். சைவப் பள்ளிகளுக்கு செல்லும் சைவத்தமிழ் மாணவ மாணவிகளைக் காதல் வலையில் வீழ்த்துவர். காத்தான்குடிக்கு அழைத்துச் செல்வர். காளி கோயிலை உடைத்து மசூதிகட்டுவர். அவ்வாறு செய்தோம், அரச அதிகாரத்துடன் செய்தோம் எனத் தினவெடுத்து மார் தட்டுவர். விவேகானந்தர் பள்ளியில் சைவரும் முகமதிய மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுநாள் வரை இவற்றைக் கண்டு கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோ மதமாற்றிகளின் பிடிக்குள்.

மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவராகத் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். மன்னார் எங்கும் மதமாற்றத்திற்கு அவரே தலைமை தாங்குகிறார். அவரது மனைவி மதமாற்ற முயற்சிகளுக்காக மாதம்தோறும் ஒன்றே முக்கால் இலட்சம் ரூபாய் வெளிநாட்டிலிருந்து சம்பளமாகப் பெறுகிறார். மதமாற்ற முயற்சிகளுக்காக அவருக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவுத் ொகை கொடுப்பர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவேகானந்தர் சிலை அமைக்கவோ சைவ வளைவுகள் கட்டவோ எதிர்ப்பர். சைவர்களின் தன்னம்பிக்கையை உடைப்போரை ஊக்குவிப்பர். பிள்ளையார் கோயில்களை உடைப்போரைக் காப்பர்.

இவற்றையெல்லாம் இந்நாள்வரை கவனத்தில் கொள்ளார். சைவ உலகின் கண்ணீரைத் துடைக்கார். அழுகுரலுக்குச் செவி சாய்க்கார். கதறலைக் கேட்டால் காதுகளைப் பொத்துவர். சங்கியன் 400ஆவது நினைவுநாளுக்கு வருக என அழைத்தால், கிறித்தவரைப் பகைக்க விரும்பவில்லை எனச் சொல்வர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும், சைவர்களைக் காப்பாற்ற வேண்டும், சைவர்களை காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் உதவி கேட்க வேண்டும், என்றெல்லாம் உரத்த குரலில் பேசி வருகிறார்கள்.

சைவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும் குறைகளைப் போக்குவதற்கும் மதமாற்றங்களை தடுப்பதற்கும் கோயில்களை காப்பதற்கும் யார் உதவிக்கரம் நீட்டினும் சிவசேனையுள்ள நாம் வரவேற்போம். நீலிக் கண்ணீர் வடிப்பவரோ,முதலைக் கண்ணீர் வடிப்பவரோ குரல் கொடுத்தாலும் சிவசேனை வரவேற்கும்.

அந்த வகையில் தமிழர் தேசியக் கூட்டமைப்பினரின் 3.8.2019 சனிக்கிழமைஅன்றான நல்லூர்ப் போராட்டத்தைச் சிவசேனை வரவேற்கிறது.


மாதம் இரண்டு இலட்சம் ரூபாய்


சமய மாற்றத்தை ஊக்குவிக்க
மாதம் இரண்டு இலட்சம் ரூபாய்!!

சைவ சமயத்தின் கொடும் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். இவ்வாறு சிக்கித் தவிப்பவர்களை மீட்கவேண்டும்.

ஏசுக் கிறித்துவின் நற்செய்தியை இவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இயேசு கிறித்து காட்டிய வழியில் கடவுள் நம்பிக்கையை இவர்களுக்கு ஊட்ட வேண்டும். இவர்களைக் கிறித்தவர்களாக மாற்ற வேண்டும்.

இந்தப் பணியைச் செய்வீர்களா? மாதச் சம்பளமாக இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம் தருகிறோம் என ஒருவரைக் கேட்டால் அவர் என்ன சொல்வார்? வயிறு முக்கியமானதால், ஒரு வேளை சோற்றுக்காகவேனும் ஒத்துக் கொள்வார்.

மாதச் சம்பளம் இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம் ஒரு பகுதியாக. வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு மீதிப் பகுதியாக.

எட்டு நாடுகளில் பணி. பயணிக்கப் பயணச்சீட்டு. தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதி. பயணப் படியாக அமெரிக்க வெள்ளியில் தொகை.

சமய மாற்றமே கொள்கையாக

1 இப்படியும் வாழலாம்.

2 எப்படியும் வாழலாம்.

3 இப்படித்தான் வாழவேண்டும்.

இந்த மூவரில் இரண்டாமவருக்கு இந்தத் தொகைகள், வசதிகள் சகட யோகம். மூன்றாமவருக்குக் கால் தூசி. முதலாமவருக்கு அச்சம் கலந்த நப்பாசை. அஃதோடு அவர் மறப்பார்.

Evangelist என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள், a person who seeks to convert others to the Christian faith, especially by public preaching. தமிழில் அவர் நற்செய்தியாளர். நற்செய்திக் கூட்டங்கள் என்றாலே அவை சைவரைக் கிறித்தவராக்கும் சமய மாற்றக் கூட்டங்களே.

சமய மாற்றும் முயற்சிகள் கிறித்தவத்தின் அடித்தளம். 1999 நவம்பர் 8ஆம் நாள் இந்தியாவுக்கு வந்த பாப்பரசர் இரண்டாம் யோன் போல், கத்தோலிக்கர் சமய மாற்றம்  செய்வதை உரிமையாகக் கொள்வர் எனக் கூறினார்.

Pope tells India his church has a right to evangelize. (Nov. 8, 1999) ''Religious freedom constitutes the very heart of human rights,'' the pope, on a three-day visit to India, said at a interreligious gathering that included Hindus, Muslims, Sikhs, Jews and representatives of several other faiths. ''Its inviolability is such that individuals must be recognized as having the right even to change their religion, if their conscience so demands.''

Christian conversions are at the heart of a political and religious dispute that has made the 79-year-old pope's visit a tense one. Christian proselytizing is fuel for Muslim fundamentalists, but it is also a source of uneasiness between the pope and some of his more moderate and like-minded religious peers.

''Conversions are a fundamental right,'' Samdhong Rinpoche, a Buddhist monk who is the speaker of the Tibetan Parliament in exile, said after leaving the podium he shared with the pope. ''But what we fear is that between indoctrination and anybody's inner-consciousness to choose his religion, there is a clean line.''

''Any kind of action to encourage, or to persuade or to motivate in favor of any particular religion, that is a form of conversion that we as Buddhists cannot recommend,'' the monk said.

மாணவர்களை இலக்கு வைத்துச் சமய மாற்றம்

மாணவப் பருவத்திலேயே சைவர்்களைக் கிறித்தவராக்கும் நோக்குடன் பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட அறக்கட்டளையின் பெயர், International Fellowship of Evangelical Students (IFES). தமிழில் அனைத்துலக மாணவர் சமய மாற்றக் கழகம் (அமாசமாகம்).

The objects of IFES are to advance the Christian faith by promoting, supporting and maintaining an international fellowship of national Christian student ministries (national movements); seeking to awaken and deepen personal faith in the Lord Jesus Christ and to further evangelistic work among students throughout the world; and providing for fellowship on a worldwide and regional basis.

Students have the opportunity to engage with their peers, to listen with openness and sensitivity to the conversations of the academy, and to present a credible Christian perspective on key issues. We seek to equip students in effective witness, to encourage them to initiate spiritual conversations with classmates, to hold evangelistic bible studies and mission events, and to live in ways that demonstrate grace and generosity.

The doctrinal basis of IFES shall be the fundamental truths of Christianity, including:

1. The unity of the Father, Son and Holy Spirit in the Godhead.

2. The sovereignty of God in creation, revelation, redemption and final judgment.

3. The divine inspiration and entire trustworthiness of Holy Scripture, as originally given, and its supreme authority in all matters of faith and conduct.

4. The universal sinfulness and guilt of all people since the fall, rendering them subject to God's wrath and condemnation.

5. Redemption from the guilt, penalty, dominion and pollution of sin, solely through the sacrificial death (as our representative and substitute) of the Lord Jesus Christ, the incarnate Son of God.

6. The bodily resurrection of the Lord Jesus Christ from the dead and His ascension to the right hand of God the Father.

7. The presence and power of the Holy Spirit in the work of regeneration.

8. The justification of the sinner by the grace of God through faith alone.

9. The indwelling and work of the Holy Spirit in the believer.

10. The one Holy Universal Church which is the Body of Christ and to which all true believers belong.

11. The expectation of the personal return of the Lord Jesus Christ.

உலகின் 160 நாடுகளில் அமாசமாகம் பணி. மாணவர்களைச் சமயமாற்றும் பணி. உலகைப் 11 பிரதேசங்களாக்கி அமாசமாகம் பிரித்துளர். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைமை நிலையம். இவற்றுள் 9 பிரதேசங்களுக்கு அந்தந்த நாடுகளில் தலைமையகம். 

தெற்காசியப் பிரதேசச் செயலாளர் சாவித்திரி

 அமாசமாகத்தின் தெற்காசியா, வடக்கு ஆபிரிக்கா ஆகிய இரு பிரதேசங்களுக்கும் இலண்டனில் தலைமையகம்.

தெற்காசியப் பிரதேசத்தின் அமாசமாகம் செயலருக்குத் தலைமையகம் பிரித்தானியாவின் ஆக்சுபோர்டு நகரம். தெற்காசியாவின் ஆப்கானித்தான், இரான், பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், மியன்மார், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய பத்து நாடுகளில் பணி.

 It encompasses war-torn nations, a Buddhist kingdom, a closed dictator-led state, and nations gripped by Islam and Hinduism. Already struggling with much extreme poverty, the region's suffering is often exacerbated by natural disasters.

Student ministry in South Asia: 5 IFES-affiliated movements; 2 unaffiliated movements; 3 countries remain to be pioneered; largest movement: UESI India, over 30,000 students.

இவற்றுள் மூன்று நாடுகளுக்குள் அமாசமாகம் நுழைய முடியாதவாறு தடை. 

அந்தப் பத்து நாடுகளிலும் நற்செய்திகளைச் சொல்வது. மாணவரை அணிதிரட்டுவது. அணிகள் ஊடாகக் கிறித்தவ மயமாக்குவது திருமதி சாவித்திரி சுமந்திரனின் பணி.

All ten of the countries in the IFES South Asia region appear in the Open Doors World Watch List. In eight of those countries, the level of persecution is considered ‘very high’ or ‘extreme’.

Please pray for an opening up of those countries currently closed to the gospel.

அந்தப் பணிக்கு இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம். வெளிநாட்டில் அமெரிக்க வெள்ளியில் மீதிச் சம்பளம்.

இந்தச் சம்பளம், இந்தக் கிம்பளம், இந்த வசதி, இந்த வாழ்க்கை என்றால், எப்படியும் வாழலாம் என வாழ்பவர் ஏற்பாரா? மாட்டாரா?

இலங்கை ரூபாய் இரண்டு லட்சத்தை மாதச் சம்பளமாக பெற்று, வெளிநாட்டில் கிம்பளம் பெற்று, சைவ சமயக் கொடும் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்களைக் கிறித்துவ மக்களாகச் சமயம் மாற்றும் முயற்சியாளரே திருமதி சாவித்திரி சுமந்திரன்.

சுமந்திரன் ஒப்புக்கொள்கிறார்

திருமதி சாவித்திரி சுமந்திரனின் மாதச் சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆபிரகாம் சுமந்திரன் சொல்கிறார் (31.03.2018).

தன்னுடைய வருவாய்க் கணக்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்ட பொழுது, திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு அமெரிக்க இடாலர் 1,100 சம்பளம் எனக் கூறியிருந்தார். அஃதே இலங்கை ரூபாயின் இன்றைய (ஏப்பிரல் 2019) மதிப்பில் தோராயமாக இரண்டு இலட்சம் ஆகும்.

திருமதி சாவித்திரி சுமந்திரனின் முறையான அலுவலகம் தெற்காசியாவில் இல்லை.

IFES South Asia, Savithri Sumanthiran, Regional Secretary, c/o IFES International Services, 5 Blue Boar Street, Oxford OX1 4EE, United Kingdom

அங்கே பணி எனில், மாத வருவாய் இலங்கை ரூபாய் இரண்டு இலட்சத்துள் அங்குள்ள செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார்? அங்கு அவர் பெறும் மேலதிக வருவாயையும் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிடுவது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆபிரகாம் சுமந்திரனின் கடமை அல்லவா? 

தெற்காசியாவுக்கான நிதி

தெற்காசியாவுக்காக அமாசமாகம் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் இலங்கை ரூபாய் 2017இல் ஒதுக்கினர்.  ஏறத்தாழ ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாய் இலங்கை ரூபாய் 2016இல் ஒதுக்கினர்.

ஒதுக்கிய தொகைகள் செலவு செய்த பின்னரும், நிலையான கணக்கில் மூன்று கோடியே இருபத்தைதந்து இலட்சம் ரூபாய் தெற்காசியச் செலவுகளுக்காக (2017) வங்கியில் உள்ளதே.

அமாசமாகம் 2017இல் மொத்த வருவாய் 133 கோடி இலங்கை ரூபாய். 2016இல் மொத்த வருவாய் 100 கோடி இலங்கை ரூபாய். இந்த வருவாய் முழுவதும் உலகம் முழுவதும் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும் கிறித்தவர்களல்லாதவரைக் கிறித்தவராக்கவுமேயாகும்.

சைவர்களைக் கிறித்்தவர்களாகச் சமயம் மாற்றுவதற்குரிய முயற்சிக்காகத் திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு இலண்டனில் உள்ள அவரது தலைமையகம் கொடுக்கின்ற தொகை முழுவதும் அவருடைய பொறுப்பில் செலவாகிறது. மேலிடத்தில் பொதுவான வழிகாட்டல்கள் உண்டு. ஆனாலும் நிதிச் செலவுக் கணக்குகளில் மேலிடம் தலையிடுவதில்லை. தெற்காசியச் செயலர் என்பதால் செலவுகளை அவரே தீர்மானிக்கிறார்.  

கிறித்தவ சமயத்தின் கொள்கைகளை ஏற்குமாறும் சைவ சமயத்தைக் கைவிட்டு கிறித்தவத்துக்கு சமயம் மாறுமாறும் மாணவர்களைக் கேட்கவே திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு மாதச் சம்பளம் இலங்கை ரூபாயில் இரண்டு இலட்சம்.

சமய மாற்ற வரலாறு

இலங்கை மண்ணில் 5000 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இந்து சமயத்தவர்களாக வாழ்கிறோம். இலங்கை சிவ பூமி.

400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தின் சைவத் தமிழ் அரசை வீழ்த்தியோர் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.  அக்காலத்தில் தொடங்கியதே கிறித்தவத்துக்கு சமயம் மாற்றும் முயற்சி.

வாள் முனையில், துப்பாக்கி முனையில் பீரங்கி முனையில் சமயமாற்ற முயற்சிகள் ஒருபுறம். சோறு, உடை, பணம், பதவி ஆகிய ஈர்ப்புகள் வழி சமயமாற்றம் மறு புறம்.

ஒல்லாந்தர் வந்தனர். சமயமாற்றம் தொடர்ந்தது.

ஆங்கிலேயர் வந்தனர் சமயமாற்றம் தொடர்ந்தது.

மேலைத் தேய மேலாட்சி அகன்றது. விடுதலை பெயரளவிலே. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், திருமதி சாவித்திரி சுமந்திரன் எனத் தொடர்கிறது அடிமை கொள்ளும் அணுகுமுறை.

மெதடிசுத்த திருச்சபை - துணைத் தலைவர் சுமந்திரன்

மெதடிசுத்த திருச்சபையின் துணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்.

1814இல் தொடங்கிய திருச்சபை. மன்னாரில் முருங்கனில் சீவோதயம் என்ற மரக்கறித் தோட்டம் என்ற போர்வையில் சைவ சமயிகளைக் கிறி்த்தவத்துக்கு மாற்ற  40 ஆண்டுகளாக நடத்துகின்றனர். போதகர் காண்டீபன் பொறுப்பாளர்.

போருக்குப் பின் சமயம் மாற்றினர் சுமந்திரன் சார்ந்தோர்

முருங்கன்பிட்டி என்ற அயலூரில் 50 சைவக் குடும்பங்களையும் கடந்த சில ஆண்டுகளில் கிறித்தவராக மாற்றியோர் திரு. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்  தலைவரான மெதடிசுத்த திருச்சபையினர்.

கற்கடந்த குளம் அரசுப் பள்ளி. தலைமை ஆசிரியர் அருள்நங்கை ஒருவர். கட்டை அடம்பனில் இருந்து செல்லும் மாணவ மாணவியர் பள்ளிக்குள் திருநீறு அணிய முடியாது. மாணவியர் பொட்டு வைக்க முடியாது. கையில் கட்டிய நேர்த்திக் கயிறு அறுக்கப்படும்.

ஆனாலும் சைவர்கள் விடவில்லை. கல்வி அதிகாரிகளைக் கண்டனர் முறையிட்டனர். அரசுப் பள்ளியல்லவா?

மெதடிசுத்த திருச்சபையின் ஆண்டறிக்கையில் சைவ விழிப்புணர்வைக் கூறினர். சுவரொட்டி ஒட்டுகிறார்கள். சமயமாற்றிகளை விரட்டுகிறார்கள். கடந்த ஆண்டில் (2017) இந்த எதிர்ப்பு வலுத்துள்ளது. மெதடிசுத்த திருச்சபை பின்வருமாறு கூறுகிறது.

OPPOSITION TO EVANGELISTIC WORK - During the past year we have faced increasing opposition for Evangelistic work in new areas. New converts have been threatened, their houses have been attacked, they have forfeited their rights in local death donation societies, where their family members and their children have been ridiculed and harassed in schools. Our workers and the team visiting new areas, have also been harassed. Handbills have been distributed against us and posters put up. Loud speakers have been used to spread false stories and character assassinations. People have been sent to abuse us coming almost on the verge of assault and several believers and some workers have actually been assaulted. Despite all these activities the Lord has been blessing us to add more and more people to His Kingdom. For this we solicit your continued prayers.

சாவித்திரியும் சுமந்திரனும்

 திருமதி சாவித்திரி சுமந்திரன் பொது வாழ்வில் இல்லையே. அவர் எதைச் செய்தாலும் செய்துவிட்டுப் போகட்டும். திருமணம் செய்ததற்காகத் திரு. சுமந்திரன் பொறுப்பாக இருக்க முடியுமா? என்று கேட்கலாம்.

திரு. சுமந்திரன் மெதடிசுத்த திருச்சபையின் துணைத்தலைவராக இருக்கிறார். மெதடிசுத்்த திருச்சபையின் நோக்கங்களில் ஒன்று சைவர்்களைச் சமயம் மாற்றிக் கிறித்தவர்களாக்குவதே.

2017ம் ஆண்டு சிவசேனை இந்துக்களை சமயமாற்றம் முயற்சிக்கு எதிராகச் சைவர் கொடுத்த நெருக்கத்தை மெதடிசுத்த திருச்சபை தனது ஆண்டறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டது.

சமயமாற்றத்தை முன்னெடுப்பதில் திரு. சுமந்திரனுக்கு எவ்வளவு ஈடுபாடு உண்டோ அதை விட அதிகமான ஈடுபாடு திருமதி சாவித்திரி சுமந்திரனுக்கு உண்டு.