Sunday, September 29, 2019

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில்


புரட்டாதி 7, 2050 செவ்வாய் (24.09.2019)
வினைப்பயனைக் கண் முன்னே கண்ட பின்புமா?
சைவர்களைப் பகைத்துக்கொண்டு வணக்கத்துக்குரிய தேரர்கள் எனச் சொல்லப்படுவோர் புத்தத்தை கட்டியெழுப்ப முயன்றால் அந்த முயற்சி படுகுழியில் விழும் என்பதை வரலாறு உணர்த்தியது.
புற்றுநோய் படுகுழியில் விழுவார்கள். காசநோய்க் கடுமையில் உழல்வார்கள். வெப்புநோய்க் கொடுமையில் தவிப்பார்கள். புத்த சமயத்தவர் நம்புகின்ற கர்மம் என்ற வினைப்பயன் போலிப் புத்தர்களை விடாது தொடரும். வரலாறு தந்த பாடத்தை மறந்தார்கள். மீண்டும் பாடம் புகட்ட வேண்டுமென்று விரும்புகிறார்களோ?
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருக்கேதீச்சரப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருமான் இத்தகைய தேரர்களைப் புனை துகில் அணியும் தேரர் எனக் கூறினார்.
வளர்ச்சியை முடக்குகிறார்கள். இணக்கத்தை உடைக்கிறார்கள். பிணக்குகளை வளர்க்கிறார்கள். நீதியைப் புதைக்கிறார்கள். சட்டங்களை மிதிக்கிறார்கள்.
புத்தத் தேசியத்தை அந்நிய ஊடுருவல்கள் இருந்து காப்பதற்குச் சைவ மக்கள் தயாராக இருக்கிறார்கள். சைவ உணர்வாளர்களேயே மதிக்காமல் மிதித்து நடக்கின்ற புத்தரர்களைப் புத்த உணர்வாளர்கள் புத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் புத்தரின் ஐந்து வழிகளையும் எட்டு ஒழுக்கங்களையும் நம்புகிறவர்கள் புத்தரின் கருணையை எடுத்துக் கூறுபவர்கள் வழிநடத்த வேண்டும்
பிறழ்ச்சிப் புத்த தேரர்களைக் கட்டுக்கடக்காது விட்டால் இந்த நாடு வன்முறைக் காடாகும். ஆட்சியில் உள்ளவர்களுக்குப் புனை துகில் அணியும் புத்த தேரர்கள் சவாலாக இருக்கிறார்கள்.
சைவர்கள் இடையே அப்பரும் சம்பந்தரும் ஆறுமுக நாவலரும் மீண்டும் எழுவார்கள் இந்த எழுச்சியைப் புனை துகில் அணியும் புத்த தேரர்கள் தடுக்கவே முடியாது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலைச் சுற்றியுள்ள சிவ பூமி நிலங்களில் பிற சமயத்தவர் எவரும் தம் சின்னங்களை அடையாளங்களை நிறுவவே முடியாது. விடவும் மாட்டோம்

கூர்ச்சரரும் தமிழரும்

புரட்டாதி 11, 2050 (28.09.2019) சனி
கூர்ச்சரரும் தமிழரும்
கூர்ச்சரத்தார் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் மொழியையும் தமிழரையும் போற்றி வாழ்ந்த தலைவர்களைத் தந்தனர்..
தென் ஆப்பிரிக்காவில் காந்தி அடிகள் தமிழ் கற்கத் தொடங்கினார். திருக்குறள் செய்திகளைப் படித்து வியந்தார். இடால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதி அவரையும் திருக்குறள் படிக்கச் சொன்னார். தமிழ் மொழியை உலகுக்குக் கொண்டு சென்ற மூத்த கூர்ச்சராகக் காந்தியடிகளை நான் காண்கிறேன்.
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை உலகுக்கு எடுத்துக் கூறிய காந்தியடிகள் தமிழகம் வந்த பொழுது தில்லையாடிக்குச் சென்று அஞ்சலித்தார்.
தமிழரான இராசகோபாலாச்சாரியார் காந்தியடிகளுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார். நீங்கள் தமிழர் அல்லவா? ஏன் தமிழிலேயே எனக்கு கடிதம் எழுதக் கூடாது? என்று காந்தியடிகள் இராசகோபாலாச்சாரியாரிடம் கேட்கிறார்.
சர்தார் வல்லபாய்ப் பட்டேல் தமிழர்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்.
கொழும்பில் சிசி தேசாய் தூதராக இருந்த காலத்திலேயே மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். நாடற்றவர்கள் என்ற சொல்லாட்சியைத் தந்தவர் சிசி தேசாய்.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது 1979 பிப்ரவரி 4-ஆம் நாள் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகக் கொழும்புக்கு வந்திருந்தார்.
அவர் கொழும்புக்கு வர முன்பதாக 1978 மார்கழியில் நான் சூரத்துக்குச் சென்றிருந்தேன். காந்தியடிகளின் செயலாளர் மகாதேவ தேசாயின் மகன் நாராயண் தேசாயின் வெட்சி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன்.
இலங்கைத் தமிழர் துயரத்தைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று நான் அவரைக் கேட்டேன். அவரும் காந்தி அமைதி நிலையச் செயலாளர் திரு இராதாகிருட்டிணனும் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தனர் இலங்கைத் தமிழர் துயரத்தைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
கொழும்பு வந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அப்போதைய தமிழர் தலைவர் திரு அமிர்தலிங்கத்தை அழைத்து இந்தியத் தூதரக வளாகத்தில் பேசினார். நான் செயலாளராக இருந்த தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுத் தலைவர் பேராசிரியர் நேசையாவும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். நானும் போவதாக இருந்தது. ஆனால் எனக்கு உள்ள தனிப்பட்ட காரணங்களால் போக முடியவில்லை.
ஊடகச் சந்திப்பில் மொரார்ஜி தேசாய் ஈழத்தமிழருக்குத் துயர் நேர்ந்தால் இந்தியா உதவும் என்ற கருத்துள்ள செய்தியைக் கூறினார். அடுத்த நாள் அக்கால நாளிதழ்களில் செய்தி தலைப்பாக வந்தது.
அவ்வாறு ஆதரவுக் குரல் கொடுத்த இந்தியாவின் பிரதமர்களுல் முதலாமவர் கூர்ச்சரரான மொரார்ஜி தேசாய் அவர்கள். அவ்வாறு அவர் சொல்வதற்கு ஈழத்தமிழர் தொடர்பாக நான் வெட்சி ஆசிரமத்தில் கூறிய செய்திகளில் நீதியும் நியாயமும் இருப்பதை நாராயணன் தேசாய் வழியாக பிரதமர் தேசாய் உணர்ந்ததே காரணம் ஆகும்.
பிரதமர் மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தார். அக்காலத்தில் ஈழத்தமிழருக்குத் துயரங்கள் நேர்ந்த பொழுது துயரங்கள் நீங்க வேண்டும் என அவர் பேசினார்.
கூர்ச்சரத்தில் இன்றும் வாழ்கின்ற ஆதிகுடிகள் தமிழ் சார்ந்த மொழியைப் பேசுகிறார்கள். மேல்தட்டினரான பட்டேல்களும் மோடிகளும் தேசாய்களும் காந்திகளும் அவர்களைப் பெரிதும் மதித்து நடக்கிறார்கள்.
எனக்கும் கூர்ச்சரர்களுக்கும் உள்ள தொடர்பு ஆழமானது. கூர்ச்ரப் பெண்கள் ஆடும் கர்பா நடனம் வீட்டுக்குள்ளேயே கலையை வளர்க்கும் நடனம்.
அரபுநாடுகளில் ஆபிரிக்காவில் தென்கிழக்காசிய நாடுகளில் நான் பணிக்காகப் பயணித்திருக்கிறேன்.
நான் சைவ உணவு பழக்கம் உடையவன். நான் போகும் நாடுகளின் நகரங்களில் முதலில் தேடுவது கூர்ச்சரர் ஒருவர் துணிக்கடையோ மளிகைக்கடையோ வைத்து இருக்கிறாரா எனவே. என் அலுவலக ஓட்டுனரிடம் கேட்பேன்.
அழைத்துச் செல்வார்கள் என் சைவ உணவுப் பழக்கத்தைச் சொல்வேன் இன்முகம் காட்டி வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்று அருமையான சைவ உணவு தருவார்கள். ஏனெனில் கூர்ச்சர வணிகக் குழுவினருட்பெரும்பாலோர் சைவ உணவுக்காரர்கள்.
இலங்கைக்கு நேரு இந்திரா என வரிசையாகப் பல பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். ஈழத்தமிழர் நிலத்திற்கு ஓடோடி வந்தவர் பிரதமர்மோடி ஒருவரே.
அந்த வருகை மூலம் உலகுக்கு அவர் உணர்த்திய செய்தி இந்தியா ஈழத் தமிழர்களுக்குப் பின்னால் இருக்கிறது அவர்கள் மீது எவரும் கை வைக்காதீர்கள் என்பதே.
பிரதமர் மோடி தமிழ் மீது கொண்ட மதிப்பும் ஆர்வமும் கூர்ச்சரரின் இயல்பான வெளிப்பாடு.
இந்தியா முழுவதும் செல்கின்ற மோடியார் தமிழரை எங்கும் பாராட்டுவார். தமிழே இந்தியாவின் மூத்த மொழி எனப் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். நாடாளுமன்றக் கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.
நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையிலும் சொல்லியிருக்கிறார் எனில், இந்தியாவின் உள்ளார்ந்த உணர்வை, இந்திய மக்கள் தமிழ் மீது கொண்ட பெருமதிப்பை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் என்பதே பொருள்.
உலகெங்கும் வாழும் தமிழர் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி வாழ்த்த வேண்டும்

புத்த சைவச் சிக்கல் தீ

புத்த சைவச் சிக்கல் தீயில் குளிர்காயும கிருத்தவப் பாதிரிகள்

மட்டக்களப்பில் காளி கோயில் இருந்த இடத்தில் மசூதியை கட்டியது போலச் செம்மலை நீராவியடியில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பல்சாலையைக் கட்டவில்லை.

பிள்ளையார் கோவிலை அப்படியே விட்டுவிட்டு அருகே பல்சாலை, எதிர்ப்புறத்தில் மாபெரும் புத்தர் சிலை என அமைத்துள்ளார்கள்.

திருக்கேதீச்சரத்தில் பாலாவியின் கரையில் சிவன் உறைகிறார். தேவாரப் பாடல் சொல்லும் செய்தி இப்பொழுது பாலாவியின் கரைமேல் அடாத்தாக உறைபவர் உலூர்தம்மாள்.

திருக்கேதீச்சரத்தில் தெருவுக்கு எதிரே புத்த கோயில் ஒன்றையும் அமைத்தார்கள். மன்னார்ப் பெருமகன் சிவகரன் சுட்டிக்காட்டிய பின் அவர்களாகவே வேறு இடத்திற்குப் போகிறார்கள். 

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் பகுதியை நேற்றுச் (24.9) சென்று பார்த்தேன். 

தமிழர் மரபுரிமை அமைப்பு என்ற பெயரில் முல்லைத்தீவில் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

அவர்களுட் பலர் பாதிரியார்கள். 

இந்துக் கோயிலைக் காப்பதற்குப் பாதிரியார்கள் ஏன் வந்தார்கள்? என்ற வினா என் மனதைத் தொடர்ந்து குடைந்து கொண்டே இருந்தது.

அவர்கள் எழுதிக்கொடுத்த முழக்கங்களை ஏதுமறியா மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அந்த முழக்கங்கள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த முழக்கங்களை அன்றிச் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் உரிமை பற்றிய முழக்கங்களாக இருந்தவை ஒருசில.

அரசுக்குரிய விண்ணப்பக் கடிதத்தைப் போராட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியவர் பாதிரியார். அந்தக் கடிதத்தில் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் சிக்கலையே தனித்துக் கூறாமல் இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கலாம் நியமிக்க கூடாது என்பது போன்ற அரசியல் கருத்துகளை வலியுறுத்தி இருந்தார்கள்.

பின்பு நடந்த செய்தியாளர் மாநாட்டின் முதன்மைப் பேச்சாளராக இருந்தவர் கிறிஸ்தவ பாதிரியார்.

சைவர்களையும் புத்தர்களையும் சண்டைக்குத் தூண்டிவிடுகின்ற நோக்கத்தில் பாதிரிகள் நீராவியடிப் பிள்ளையார் கோயில் சிக்கலைப் பயன்படுத்துவது எனக்கு மிகவும் வேதனையை தந்தது.

தொண்டீச்சரம் சிவன் கோயில் இருந்த இடத்தில் உலூசியா தேவாலயம்,
நல்லூர் முருகன் கோயில் இருந்த இடத்தில் கிறித்தவ தேவாலயம்,
பாலாவியின் கரைமேல் புதிதாக உலூர்தம்மாள் தேவாலயம்,
மன்னார் தள்ளாடியில் ஆட்காட்டி வெளிச் சந்தியில் பிள்ளையார் கோயில்கள் இடிப்பு.
மன்னார் மாவட்டம் முழுவதும் சைவக் கோயில்கள் இருக்கும் இடங்களில் திடீர் திடீர் மரியாள் சிலைகளும் சிலுவைகளும் அரச நிலங்களில் எழும்புகின்றன.
பண்டத்தரிப்பில் யாழ்ப்பாண நகரத்தில் சிதம்பரம் திருக்கோயிலுக்கு சொந்தமான காணிகளில் கிறித்தவத் தேவாலயங்கள்.
சைவர்களின் நோக்கிய அந்நிய நிதியிலும் அந்நிய நற்செய்தியாளர்களாலும் கடுமையான மதமாற்றக் கிருத்தவ முயற்சிகள்.
சைவர்களை இவ்வாறு அழிக்கவும் ஒழிக்கவும் முயல்கின்ற கிருத்தவ அமைப்புகளைக் கண்டித்துப் பேரணிகள் போராட்டங்கள் நடத்தத் தெரியாதவர்கள் வேதம் ஓதுகிறார்கள் கடவுளர்களகவா சாத்தானகளாகவா?

Friday, September 27, 2019

PILGRIMAGE BY HINDUS TO CHIDAMBARAM IN INDIA

1.0 OBJECTIVE

1.1 To strengthen spiritual, moral and ethical values towards nation building through holy pilgrimages and fulfilling religious vows.
1.2 To facilitate below-the-poverty-line Hindus to travel on pilgrimage to the holiest of Saivaite holies temple of Arulmiku Natarajar (dancing Shiva) at Chidambaram, Tamil Nadu, India during the annual THIRUVATHIRAI ten day festival culminating on the full moon day of Maarkazhi (Nakshathira Betelgeuse, the ninth-brightest star in the night sky and second-brightest in the constellation of Orion) falling somewhere in December / January each year.

2.0 RATIONALE

2.1 Hindus celebrate the month of Markazhi, observing fasts, eating vegetarian-only food, with taboo on consumption of liquor. Adolescent women take vows towards healthy marriage and bestowed family life. Arulmiku Natarajar is the Lord of the month. His holy seat is at Chidambaram, Tamil Nadu India.
2.2 Sri Lankan Hindus undertake annual pilgrimages to this temple during the festival season. This has been happening through thousands of years. So much so, that Sri Lankan Hindu communities own pilgrims rests or choultries at Chidambaram (India). There are about 32 such choultries in Chidambaram, each bearing the name of the village or town of the owners: e. g. Kokuvil Madam owned by the devotees from Kokuvil in Jaffna.
2.3 Even Sinhalese venerate the temple. King Sena I (circa 850 CE) had a dumb daughter. He tried to cure her dumbness through many means. Unsuccessful, he took a vow to make a pilgrimage to Arulmiku Natarajar at Chidambaram, guided by an ascetic. After the pilgrimage to Arulmiku Natarajar (dancing Shiva) temple at Chidambaram he returned to Sri Lanka with his beautiful daughter blessed with fluent vocalisation.
2.4 Buddhists travel to India and Nepal on holy pilgrimage to Buddha Gaya, Saranath, Rajagiriya, Kusinara, Lumbini and Kapilavasthu. Christians travel to Jerusalem and Rome on holy pilgrimage. Muslims travel to Mecca and Medina, a lifetime duty cast on them. Catholics from Tamil Nadu travel to Kachchativu on pilgrimage. All these pilgrimages are in a way facilitated by the Government of Sri Lanka through coordination with the concerned countries: India, Israel, Italy and Saudi Arabia. In recent times Indian Government has been facilitating selected Buddhists to travel (sometimes gratis) to holy places in India.
2.5 Hindus do not have a pilgrimage travel facilitated by the Government of Sri Lanka. Most Hindus travel on their own by flying to the nearest destinations like Chennai or Trichy from Colombo on pilgrimage to Chidambaram during December. That is a very expensive proposition requiring many years of savings for the middle income grouper. For the upper income groups such pilgrimages are normal.
2.6 Below-the-poverty-line group cannot afford the air fare, the related travel, accommodation expenses to Colombo and to Katunayake and the post arrival transfer from Chennai or Trichy to Chidambaram. For those with mounting needs, deplorable poverty and poor living standards, faith in God of their choice is the only form of salvation. They make vows to Arulmiku Natarajar at Chidambaram. These vows pass unfulfilled. The un-fulfilment of the vows eats into their spiritual strength, deplete their moral courage and erode their ethical standards resulting in social disorder and occasional lawlessness, thus slowing down nation building.
  2.7 Hindus crossed the Palk Straits by sail boats on holy pilgrimage to Arulmiku Natarajar at Chidambaram during their historical past. British introduced the boat-mail service which continued even after independence between Talaimannar and Dhanushkodi (Rameswaram after 1964). A pilgrim could buy a train ticket direct to Chidambaram in Tamil Nadu from any railway station in Sri Lanka. That two-nights and a day journey service ended by the year 1983. War like situation in traditional Hindu areas of Sri Lanka reduced pilgrimage travel to its minimum. Post-war and the dawn of Yahapalanaya, Hindus are dreaming to restore their historical holy pilgrim travel. A ferry service between Kankesanthurai port in Sri Lanka to the nearest Kaaraikkal port in India (3 to 4 hours of ship’s travel time) will facilitate fulfilling the holy pilgrimage vows of Sri Lankan Hindus to Chidambaram (which is only two hours by bus from Kaaraikkal).

3.0 PROGRESS MADE (2016 TO 2019)

  • 29th November 2016 - Hon. Governor, Northern Province writes to the Ministry of Internal Affairs and the Ministry of Foreign Affairs requesting a ferry service for the Hindu Pilgrims to participate in the Thiruvathirai festival at Chidambaram, Tamil Nadu, India.
  • 12th April 2017 – Rear Admiral, Sri Lankan Navy writes to the Hon. Governor, Northern Province on the requirements of the ship / ferry.
  • 20th April 2017 – Ministry of Foreign Affairs writes to HE High Commissioner for Sri Lanka in New Delhi to pursue the matter with Indian authorities.
  • 2nd May 2017 Ministry of Defence writes to the Hon. Governor, Northern Province on the requirements for the Ferry Service .
  • 19th May 2017 – Meeting of Sri Lankan Government Departments and the representative from Indian High Commission at Ministry of Internal Affairs.
  • 21st December 2017 - Ministry of Foreign Affairs, writes to the Hon. Governor, Northern Province seeking list of passengers and other details.
  • 22nd December 2017 - Consul General of the Government of India, Jaffna writes to the Hon. Governor, Northern Province seeking list of passengers and other details.
  • 26th December 2017 – Hindu Organisations in Sri Lanka requests writes to the Hon. Governor, Northern Province reminding him of their initial request for pilgrim ship to Chidambaram Natarajar Temple festival.
  • 07th January 2018 Department of Hindu Religious Affairs advertises in newspapers calling for enrollment of pilgrims to Chidambaram temple.
  • 19th March 2018 – Secretary to HE President, Mr. Austin Fernando writes to the Chairman of the Ceylon Shipping Corporation
  • 30th July 2018 – Ceylon Shipping Corporation writes to the Shipping Corporation of India. Shipping Corporation of India says it has no ships for the purpose.
  • 18th June 2019 – Singapore Company, Eelat Pvt. Ltd offers a 100 or 200 passenger ferry around per passenger cost of LKR 8000 to operate between Kankaesanthurai (Sri Lanka) and Karaikal (India) ports

4.0 ACTION PLAN


4.1 Pilgrimage shipping service between Kankesanthurai (Sri Lanka) and Karaikkal (India) to begin operations by 10th December 2019 and to continue till 13th January 2020.
4.2 Ceylon Shipping Corporation to arrange a ship operator (please see offer by Singapore Company, Eelat Pvt. Ltd.) and to arrange the service as per dates in 4.1.
4.3 A consultative meeting (during first week of October) with participation by Secretaries from Ministries of 1. Hindu Religious Affairs, 2. External Affairs, 3. Defense, 4. Internal Affairs, 5. Shipping, 6. Trade (Customs), 7. Tourism, 8. Health and others concerned (a) to finalize the implementation of logistics involved, viz: Ticketing, Customs, Immigration, Port, Bank, Health and Passenger amenities at Kankesanthurai harbour, (b) to decide on the waiver of any passenger tax; (c) to decide on a subsidy to pilgrims for economically weakest pilgrims.
4.4 A representative from the Office of the President and a representative from the Ministry of Hindu Affairs to travel to Delhi, (during the third week of October, with concurrence from Delhi) routed through and facilitated by the Indian High Commission, Colombo and Sri Lankan High Commission, Delhi, (a) to arrange for the implementation of the logistics involved, viz: Ticketing, Customs, Immigration, Port, Bank, Health and Passenger amenities at Karaikal harbour; (b) to seek the support of the Tourism Departments of Government of India, Government of Tamil Nadu and the Government of the Union Territory of Puthuchery in transporting to and accommodating pilgrims at Chidambaram; (c) to ask the Consular offices of the Government of India at Colombo, Hambantota, Kandy and Jaffna to facilitate issuance of visa (gratis to pilgrims).
4.5 Ministry of Hindu Religious Affairs to advertise in newspapers, radio and TV calling for enrollment of pilgrims. All District Secretaries be advised to facilitate early processing of Passports to those enrolled by the Ministry of Hindu Religions Affairs.
4.6 His Excellency President of Sri Lanka joined by the Hon. Minister of Hindu Religious Affairs to formally announce to the public, the inauguration of the Hindu Pilgrim Shipping Service.  (first week of October)

Friday, September 20, 2019

பேராசிரியர் முனைவர் பூலோகசிங்கம்


புரட்டாசி 3, 2050 (20.09.2019) வெள்ளி
பேராசிரியர் முனைவர் பூலோகசிங்கம். நாற்பத்தாறு ஆண்டுகளாக எனக்கு அருமை நண்பர்.
1998ஆம் ஆண்டு. ஆத்திரேலியா, சிட்னி, இசுராத்பீல்டு. கடைகளின் நெடு மாடம். ஓய்வு இருக்கை ஒன்றில் பேராசிரியர். பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறார். எனக்கு மகள் சிவகாமி அவ்வழியே கடைகளில் பொருள்கள் வாங்கிச் செல்கிறார்.
அவளுக்குப் பேராசிரியரை முன்பின் பழக்கம் இல்லை. அவரே அழைக்கிறார். ஏனம்மா, நீ சச்சியின் மகள் அல்லவா? என்று வினவுகிறார். சச்சின் முகச்சாயல் உன்னிடம் இருக்கிறதே என்கிறார்.
என் மகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவரிடம் சென்று அன்பொழுகப் பேசி, முகவரி கேட்கிறாள். தன் கணவரை அழைத்துச் செல்கிறாள். பேராசிரியர் இல்லத்தவரோடு மகிழ்ந்து பழகுகிறாள்.
அப்பா உங்கள் நண்பரைப் பார்த்தேன் என்ற செய்தியை என்னோடு மகிழ்ந்து பகிர்கிறாள்.
பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் என்ற அறிஞர் பெயரை 1960களில் இருந்தே நெடுங்காலமாகவே நான் அறிவேன்.
1973 ஆவணியிலேயே முதன் முதலாக அவரைச் சந்திக்கிறேன். கொழும்பு மிலகிரிய அவென்யூவில் நடந்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் -இலங்கைக் கிளைக் கூட்டத்தில் அவரை சந்திக்கிறேன்.
திட்டமிட்டவாறு யாழ்ப்பாணத்திலேயே மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியில் நானும் பேராசிரியர் பூலோகசிங்கமும்.
எங்கள் அணியின் வலிமை மேலோங்க நான் கடுமையாக உழைத்தேன் பேராசிரியர் பூலோகசிங்கம் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
மாற்று அணியினரை மீறி, யாழ்ப்பாணத்தில் 1974 தை மாதத்தில் மாநாடு நடந்த பொழுது பேராசிரியர் பூலோகசிங்கம் பூரித்த நெஞ்சினர் ஆனார்.
மாநாட்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பாசிரியராகப் பேராசிரியர் பூலோகசிங்கம் கடமையாற்றினார்.
அக்காலங்களில் என்னுடன் குழைந்து குழைந்து பேசுவார். சச்சி சச்சி என அவர் அழைக்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் விரிந்து மகிழும்.
பேராசிரியர் வித்தியானந்தன் மீதும் பேராசிரியர் பத்மநாதன் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும் பற்றும் அன்பும் பாசமும் கண்டு வியந்தேன்.
பேராசிரியர் பூலோகசிங்கத்தின் நினைவாற்றல் அளப்பரியது. தெரியாதவற்றைத் தேடுவதில் அவருடைய ஆர்வம் எல்லை அற்றது.
அவரோடு பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
பிற்காலத்தில் அவர் இந்துக் கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தார். தகவலின் கடல் அவர் எனலாம். வெள்ளவத்தைச் சந்தைக்கு ஒட்டிய குச்சுச் சந்து ஒன்றில் அவரது வீடு. எத்தனை முறை நான் அங்கு போயிருப்பேன்.
ஆத்திரேலியாவிற்கு புலம்பெயரும் முன்பு அந்த வீட்டை விற்க விரும்பினார்.
சென்னையில் காந்தளகம் பதிப்பகத்தை நான் தொடங்கியபோது ஆறுமுகநாவலர் தொடர்பான நூலொன்றை அச்சிட்டு வெளியிட என்னிடம் தந்தார். அந்த நூலில் உள்ள செய்திகளைப் படிக்கும் தொறும் படிக்கும் தொற்றும் நான் ஆறுமுகநாவலர் பெருமையை நினைந்து நினைந்து உந்துதல் பெறுவேன்.
2008இல் ஆத்திரேலியா சிட்னி சென்றேன். அதே கடை மாடம். அங்கு சென்றேன். சச்சி என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் கண்கள் பனித்தன என் நெஞ்சம் விம்மியது கையில் பொல்லு. நெஞ்சில் கனத்த சிந்தனைகள். பொழுது போக்குக்காகக் கடை மாடம் வந்திருந்தார்.
கொழும்பு ரோயல் ஏசியாட்டிக் சொசைட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பேராசிரியர் ஒருவர் தமிழரின் வரலாற்றுச் செய்தியை ஆராய்ச்சிக் கட்டுரையாகப் படித்ததை என்னிடம் கூறி வருந்தினார்.
மாற்றுச் சிந்தனையாளர் மாற்று அரசியல்வாதிகள் அந்தக் கட்டுரைச் செய்தியைப் பயன்படுத்தி, தமிழருக்கு இலங்கையில் சோழருக்கு முன்பு வரலாறு இல்லை எனக் கூறுகின்ற நிலை வந்ததே என அங்கலாய்த்தார்.
ஆத்திரேலியாவில் இருக்கிறார். ஓய்வாக இருக்கிறார். ஆனாலும் அவர் எண்ணமெல்லாம் ஈழத்திலிருந்தது. ஈழத் தமிழரின் துயரம் தோய்ந்த நிலை அவரது நெஞ்சைப் பிழிந்தது.
சில ஆண்டுகளின் பின் நான் ஆத்திரேலியா சிட்னி சென்றேன் அவர் உடல் நலமற்று மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பார்க்கப் போனேன்.
என்னைக் கண்டதும் கேவிக் கேவி அழுதார். விக்கி விக்கிச் சொற்கள் வெளிவந்தன. சச்சி சச்சி என அவர் அழைத்தபொழுது நானும் அழுதேன். என் கூட வந்து மகளும் அழுதாள்.
ஆறுதல் கூறினேன். அடுத்த நாளும் சென்று பார்த்தேன். ஆறுதல் கூறினேன். அதற்கு அடுத்த நாளும் சென்று பார்த்தேன். ஆறுதல் கூறினேன். வேறு நான் என்ன செய்யமுடியும்?
2017 கார்த்திகையில் ஆத்திரேலியா சென்றேன். பேராசிரியர் பூலோகசிங்கம் முதியோர் இல்லத்தில் இருந்தார்.
தேவாரத்திரட்டு, திருவாசகம், அபிராமி அந்தாதி ஆகிய நூல்களைக் கையில் எடுத்துச் சென்றிருந்தேன்.
நடக்க முடியாத நிலையில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார்.
என் கையைப் பற்றிக் கொண்டார். மட்டற்ற மகிழ்ச்சியில் கண்கள் பனித்தன. அவரால் பேச முடியவில்லை நெடுநேரம் அப்படியே இருந்தார். நானும் செய்திகளைச் சொல்ல முயன்றேன். அவருக்கு நினைவுகள் தடுமாறி இருந்தன.
கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக நோயுற்ற நிலையில் மருத்துவமனையிலும் முதியோர் இல்லத்திலும் மாறிமாறி அவர் இருந்தார். அவரது இல்லத்தார் அவரைப் பேணினர்.
மாபெரும் தமிழறிஞர். ஆனாலும் ஆத்திரேலியத் தமிழ் உலகம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் பூலோகசிங்கத்தின் இயல்பும் தனித்து இருப்பதே.
நேற்று சிட்னியில் அவர் காலமானார். நொந்தது நெஞ்சம். நினைவுகளை மீட்டேன். பனித்த கண்களுடன் எழுதுதுகிறேன். பாசம் மீநிற்க எழுதுகிறேன்.

Thursday, September 19, 2019

முதுமை போற்றுதும்


வாழும் காலத்தில் மதித்துப் போற்றுவதே அறம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தலைவர், சிவ சேனை
மு என்ற ஓர் இனம் வாழ்ந்தது. மறைந்தது, வரலாறாயது. தொடக்க கால மனித இனம் மு இனமே என்பர் ஆய்வாளர் பலர்.
தமிழில் மு என்ற எழுத்தில் தொடங்கும் சொல் முன்னோரைக் குறிக்கும். முந்தி நிற்பதைக் குறிக்கும்.  
நெடில் ஆகி மூத்ததைக் குறிக்கும்.
முகம், முடி, முட்டை, முதல், முயற்சி, முலை, முளை, முழு, முன், மூக்கு, மூச்சு, மூட்டு, மூத்த, மூப்பு, மூள்க, எனக் குறிலாக மு அன்றி நெடிலாக மூ எனத் தொடங்கும் தமிழ்ச் சொற்களில் பெரும்பாண்மையானவை முந்தி நிற்பதைச் சுட்டுவன.
முதியோர் எனின் மூத்தோர் எனின் முந்தி நிற்பவர் என்றாகும். மு என்ற இனத்தினைச் சேர்ந்தவர் என்றாகுமோ? முன்னோர் என்ற கருத்தியலே மதிப்புக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியோர் என்றாகுமே?
டேய் கிழவா? என்ற தொடர் வழக்கு நமக்குப் புதிதல்ல. முதியோரைப் பழித்து அழைக்கும் தொடர். கிழவிக்கு வேறை வேலையில்லை என்ற தொடரும் நமக்குப் புதிதல்ல.
முதுமை மதிப்புக்குரியதா, பழிப்புக்குரியதா? பண்பட்ட உள்ளங்களுக்கு முதுமை மதிப்புக்குரியது. அறிவு குறைந்தோர்க்கு முதுமை பழிப்புக்குரியது.
முதியோர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற மனோ நிலை பண்பட்ட உள்ளங்களது.
முதியோரை எடுத்தெறிந்து சொல்லாலும் செயலாலும் இழிப்பது அறிவு குறைந்த நிலை.
முதியோரே எழுகின்ற தலைமுறைகளுக்கு வழிகாட்டிகள். வாழ்வியல் விழுமியங்களை விட்டுச் சென்றவர், செல்பவர், செல்லப்போகிறவர்.
காலை எழும் சூரியன் மாலையில் மறையும். பிறந்த உயிர் எதுவும் இறக்கும்.
பிறக்கும் குழந்தைகள் மகிழ்ச்சிக்குரியன. வாழும் முதியோரும் மகிழ்ச்சிக்குரியோரே. இறப்பை நோக்குபவராகையால் கூடுதல் மதிப்புக்குரியோர்.
வாழும் நாளில் முதியோரை மதிப்போம். மறைந்தபின் நினைவு நாள்களில் போற்றுவது மரபு எனினும், வாழ்பவரை வாழும் காலத்தில் மதித்துப் போற்றுவதே அறம்.
வவுனியா மாவட்டத்து முதியோர் சங்கத்தின் செய்தி இதழ், கருத்தோட்ட இதழ், மனமகிழ் இதழ், படைப்பூக்க இதழ், முதியம் பிறக்கிறது. வாழ்த்துகிறேன்.
முதியோரை வணங்குகிறேன் என் எழுபத்தெட்டு வயதிலும் இளைஞனாய்.

  


Thursday, September 12, 2019

அருள் பெருக்கும் வள்ளைக்குளப் பிள்ளையார்




(1)
உழவுந்து கடனில். மாதாந்தக் கட்டணம் கட்ட முடியவில்லை. பழுது அடைந்த நிலை. வருவாய்க் குறைவு. வறுமை வாட்டியது. வீட்டுக் கொட்டிலில் ஒழுக்கு.
வள்ளைக்குளம் வந்தார். பிள்ளையாரை வழிபட்டார். வெள்ளிக்கிழமைகளில் தோரணம் மாவிலை கட்டினார். கற்களை நீக்கித் திருவீதியைத் திருத்தினார். புல் வெட்டினார். முட்களை அகற்றினார். பிள்ளையாரே உன்னிடம் அடைக்கலம் என்றார்.
சில வாரங்கள் கழிந்தன. பழுதுற்ற உழவுந்தைத் திருத்துநரிடம் எடுத்துச் சென்றார். கடனுக்குத் திருத்தினார். வயலில் உழுதார். பொருள்களைச் சுமந்தார். வருவாய் பெருகியது.
திருத்துநர் கடனை அடைத்தார். மாதாந்தக் கடனை மீட்கத் தொடங்கினார். ஓர் ஆண்டு உழைப்பு. கடன்கள் தீர்ந்தன. உழவுந்து அவருக்கே உரித்தாயது.
வள்ளைக்குளப் பிள்ளையார் கோவிலுக்கு நாள்தோறும் பால் கொடுக்கத் தொடங்கினார்.
ஒழுகிய கொட்டில் கலைந்தது. அரசு வீடு கொடுத்தது.
பட்டி பெருகியது. பசு மாடுகள் கன்றுகளை ஈன்றன. கூட்டுறவுச் சங்கத்துக்கு நாள்தோறும் பால் விற்கத் தொடங்கினார்.
பிள்ளையார் கோவிலுக்கும் இடைவிடாது வந்தார், வழிபட்டார். தொண்டாற்றினார். பூசனைகள் செய்தார். வள்ளைக்குளப் பிள்ளையாரின் அருளைப் போற்றினார். முத்துலிங்கத்தார் பெற்ற அருள் இன்பத்தை யார் அறிவார்?
(2)
பணிக்குப் போனார். துன்புறுத்தினர். வேறு பணிகளுக்குப் போனார். ஒத்துவரவில்லை. வள்ளைக்குளப் பிள்ளையார் கோயிலுக்கு வந்தார். பணியில் சேர்ந்தார்.
கோயில் கழுவினார். தோட்டத்துக்கு நீர் இறைத்தார். பூசகருக்கு உதவினார். பூப்பறித்துச் சாற்றினார். நாள்தோறும் நினைந்து நினைந்து உருகி உருகி வழிபட்டார்.
வயது ஏறுகிறதே? வாழ்வு அமைய வேண்டாமா? தாயார் பிள்ளையாரிடம் கேட்டார்.
நாச்சிக்குடா சென்று வா. நங்கையைக் கண்டு வா. நல்வாழ்வு பெற்று வா. பிள்ளையார் அருள் பெற்றார் கயன். தொண்டாற்றி அருள் மழையில் நனைபவர். இல்லறத்தில் அன்பு மழையில் நனைகிறார்.
(3)
பிள்ளையார் திருவீதியில் தொண்டு. பூசனையில் வழிபாடு. பொங்கல் விழாவில் பங்களிப்பு. மாவிலை தோரண அலங்காரம். குலையுடன் வாழையை நிமிர்த்திய வண்ணம்.
வெள்ளிக்கிழமையில் பண்ணோடு இசை பாடல்.  தேர்வுக்குப் போகுமுன் வேண்டுதல்.
மழையில் நனைந்தனர். வெயிலில் காய்ந்தனர். கடுங் காற்றில் களைத்தனர். தொலைவு நடந்தனர். தனியார் உந்தில் ஏறினர். சட்டைகள் கசங்கின. முன்னுக்கும் பின்னுக்கும் இடி தாங்கமுடியவில்லை. வண்டியில் ஏறிப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் வரை நெருக்கத்தில் புழுக்கத்தில் அவதியுற்ற மாணவர்கள்.
வீட்டு வாயிலுக்கு வராதா? சிறு தெருவில் பேருந்துப் பயணமா? குளக்கரைகளில் புதையுமா? வயலுள் இறங்குமா? மரக்கிளைகள் முட்டாதா?
பிள்ளையார் அருளினார். தொண்டாற்றிய மாணவருக்குப் பள்ளி நேரம் வந்தாலே வீட்டு வாயிலில் அரசுப் பேருந்து. ஏறியோர் இறங்குவதோ பள்ளி வாயிலில்.
பள்ளி நேரம் முடிந்தது பள்ளிவாயிலுக்குப் பேருந்து வந்தது. வீட்டு வாயிலில் இறக்கியது.
பிள்ளையாரிடம் போனார்கள், அரசுப் பேருந்துடன் வந்தார்கள். மகிழ்ந்தனர் பெற்றோர்.
(4)
அப்பாவிகள் காவலரிடம் சிக்கினாரா? தடுப்புக்குள் புகுந்தனரா? துன்பத்தில் கலங்கினரா? உற்றார் பிள்ளையாரிடம் வந்தனர், வேண்டினர். தடுப்பு நீங்கியது.  கலக்கம் பறந்தது.
வேண்ட முழுவதும் தருகின்ற பிள்ளையாரே வள்ளைக்குளப் பிள்ளையார்.
(5)
ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக  மறவன்புலவு அடியவரின் வேண்டுதல்களுக்குச் செவி சாய்ப்பவர் வள்ளைக்குளப் பிள்ளையார். 
பொருள் தேடிக் கணவர் அயலூர் செல்கிறார். ஒரு நாள் இரு நாள்கள் எனப் பல நாள்கள் கழிகின்றன. வாரங்கள் ஓடுகின்றன. கணவர் திரும்பவில்லை. வழி தெரியவில்லை.
வள்ளைக்குளப் பிள்ளையாரிடம் மனைவி வருகிறார். கணவர் வந்தபின் உண்பேன் என்கிறார். குளக்கரையில் தவம் இருக்கிறார். அருள் வேட்கிறார். நோன்பின் பெற்றியால் கணவர் திரும்புகிறார்.
பொருளீட்டலில் கலங்கிய நாள்களைக் கணவர் கூறுகிறார். எனினும் மிகையான செல்வத்துடன் மறவன்புலவு திரும்புகிறார்.
பொருள் ஈட்டலே அருள் வேட்கவே என்கிறார் மனைவி. இருவரின் திருப்பணியால் திருக்கோயில் மண்டபங்கள் எழுகின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு.
வள்ளைக்குளப் பிள்ளையாரின் அருள் பெருக்கும் நிகழ்வுகள் நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன மறவன்புலவில்.
(6)
அண்மைக் காலப் போர்.  அதன் விளைவான அழிவுகள்.
1999 மார்கழி திருவம்பாவை நான்காம் நாள்.  படையினர் வருகின்றனர் ஊரை விட்டு வெளியேற இரு மணி நேரக் காலக்கெடு.  வெறிச்சோடியது மறவன்புலவு. மக்கள் கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு சாரிசாரியாக அகன்றனர், அயலிடங்களுக்கு ஏதிலிகளாய்.
2009 ஆவணிச் சதுர்த்தி நாள். மக்களை மீள அழைத்தனர் படையினர். பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக மக்களே இல்லாத காடாக மாறியிருந்தது மறவன்புலவு.
போரினால் வீடுகள் உடைந்தன. வயல்கள் சிதைந்தன. கோரைப் புற்கள் வளர்ந்தன. கால்நடைகள் கட்டாக் காலிகள் ஆயின. வாய்க்கால்கள் தூர்ந்தன. குளங்கள் மண்மேவின. கோயில்கள் முற்றாக இடிந்தன.
பிள்ளையார் கோயிலும் இடிந்தது. ஓடுகளைக் காணவில்லை. கூரை மரங்களோ வளைகளோ கிடைக்கவில்லை.  துப்பாக்கிச் சூடுகளும் பீரங்கி வேட்டுகளும் சுவர்களில் காயங்கள் ஆயின. சுவர்கள் இடிந்தன ஆலம் விழுதுகள் வளர்ந்து சுவர்களை மூடின. பற்றைச் செடிகளுள் பாழடைந்த மண்டபங்களாயின கோயில்கள்.
நாகங்களும் விரியன்களும் சாரைகளும் புடையன்களும் உடும்புகளும் ஊர்வன அனைத்தும் கோயில் வளாகங்களுள் நிறைந்தன.
(7)
மக்கள் மீண்டனர். மகிழ்ச்சி மீளவில்லை.  அருள்மிகு வள்ளைக்கும் வீரகத்திப் பிள்ளையார் கோயிலை மீளக் கட்டி எழுப்பும் திருப்பணி நடைபெறுகிறது.
மரபுகளை மீட்கும் ஆர்வலர் உதவுவீர்களாக.  அடையாளங்களைப் பேண விழைவோர் ஆதரவு நல்குவீர்களாக.  இலங்கை சிவபூமி.  மறவன்புலவு மாண்புறு சிவபூமி. சைவ அடியவர்கள் மட்டுமே வாழ்கின்ற சிவபூமி. திருக்கோயில் திருப்பணிக்கு நன்கொடைகள் வழங்கிச் சிவபூமியைப் பேணுக.
காசோலைகளாக, வரைவோலைகளாக, அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயில் பெயருக்கு மறவன்புலவு, சாவகச்சேரி முகவரிக்கு நன்கொடைகளை அனுப்பலாம்.
நேரே வங்கிக்கும் நன்கொடைகளை அனுப்பலாம். Sampath Bank PLC, Chavakachcheri, Sri Lanka, Account No. 116 961 000 901, Swift Code: BSAMLKLX, Name: Arulmiku Vallakkulam Veerakathy Pillaiyaar Koil.