https://www.facebook.com/share/rgCsFDNXxUTg4N8g/?mibextid=oFDknk
கிளி அக்கராயன் பொலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிலையை காணவில்லை
கிளிநொச்சி அக்கராஜன் பொலிஸ் பணிமனை வளாகத்தினுள் உள்ள பிள்ளையாரை இலங்கை பொலிஸ் பிரிவினர் அடைத்து வைத்துள்ளனர் வளாகத்தினுள் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை
தற்போது அரசமரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்த கருத்து அடுத்து இன்று அதனை நேரடியாக சென்று பார்த்தேன்
சைவ வழிபாட்டுக்கு எதிராக அக்ராயன் பொலீசாரின் நடவடிக்கை அப்பகுதி இந்து மக்களை மாத்திரமல்ல அனைத்து மக்கள் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களின் நண்பர் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வணக்க வழிபாட்டு முறைகளுக்கு நெருக்கு வாரத்ததை மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீலங்கா பொலீஸ்
முன்னாள் கரைச்சி பிரதேசசபை தவிசாளர்
#velamalikithan அவர்களின் பதிவிலிருந்து...
https://www.facebook.com/share/PZxDR26tEEYKihGK/?mibextid=oFDknk
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் சூழலில் நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் பூதவுடல் தகனம் செய்தது தொடர்பாக ஞானசார தேரர், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக முன்னாள் பா உ சாந்தி சிறிஸ்கந்தராஜா வழக்கு தாக்கல் செய்து இருந்தார்
குருந்தூர் மலையில் தமிழ்மக்களின் பொங்கலை தடுத்து அடாவடித்தனங்கள் புரிந்த கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக பா உ கஜேந்திரன் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்து இருந்தார்
குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பொதுமக்களை மோசமாக இம்சித்த பொலிஸ் அதிகாரிகள் மீது பா உ சுமந்திரன் ரணில் விக்ரமசிங்கே அவர்களிடம் முறைப்பாடு செய்து இருந்தார்
தமிழர்களை வெ...டுவேன், கொ..லுவேன் பேசிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்து இருந்தார்
திருகோணமலை பொன்மலைக்குடா மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்த பிக்கு பாணமுரே திலகவன்ச தேரர் மீது சிவில் சமூக அமைப்புகள் முறைப்பாடு பொலிசில் முறைப்பாடு செய்து இருந்தனர்
மயிலத்தமடு மாதவனை பகுதிக்கு சென்ற சர்வ சமய தலைவர்கள்18 பேரை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் 6 மணித்தியாலம் தடுத்து வைத்தது தொடர்பாக பா உ கஜேந்திரகுமார் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு இருந்தார்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து ஆளுநர் செந்தில் தொண்டைமானை அச்சுறுத்திய பிக்குகள் மீது அரச அதிகாரிகளே முறைப்பாடு செய்து இருந்தனர்
திருகோணமலையில் குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது என ஆலய நிர்வாகிகள் முறைப்பாடு செய்து இருந்தனர்
காங்கேசன்துறை சை ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் என சைவ அமைப்புகள் முறைப்பாடு செய்து இருந்தனர்
மட்டக்களப்பில் குசலமலை சைவ குமரன் ஆலயத்தின் முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பன அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன என சிவில் அமைப்புகள் முறைப்பாடு செய்து உள்ளனர்
கீரிமலை சிவன் ஆலயம், சடையம்மா மடம், முருகன் ஆலயம் என்பன அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டு இருக்கின்றமை குறித்து ஆறு திருமுருகன் முறைப்பாடு செய்து உள்ளார்
வவுனியா பூவரசங்குளம் மலையிலிருந்த பிள்ளையார் சிலை, சூலம் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளன என ஆலய பரிபாலன சபையினர் முறைப்பாடு செய்து உள்ளனர்
குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவிலின் சூலம் பிடுங்கி வீசப்பட்டு இருக்கின்றது என மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முறைப்பாடு செய்து இருந்தார்
வெடுக்குநாறி மலை சிவலிங்கம் அடித்து நொறுக்கப்பட்டது என பூசகர் முறைப்பாடு செய்துள்ளார்
தென்னவன்மரபடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வினை பொலிஸ் அதிகாரிகளே தடுத்தனர் என முறைப்பாடு உள்ளது
தையிட்டியில் மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்
ஆனால் சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குட்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாடுகள் மீது இதுவரை குறைந்தபட்ச நடவடிக்கை கூட இல்லை
Failed State Sri Lanka வில் சட்டங்களே மோசமாக இருக்கின்றன.
இதற்கு அப்பால் சட்டத்துக்கு புறம்பான ஆட்சியும் (extra-legal regime) நடைபெறுகின்றது.
இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான ஆட்சியை நீதிமன்றங்களும் அங்கிகரிக்கின்றன.