Sunday, November 28, 2021

Maarkkandu Jegatheeswaran



 An appeal to Global Hindus

by

Maravanpulavu K. Sachithananthan

Siva Senai

 

HISTORY IN THE MAKING

 

Portuguese King Emmanuel I mandated by Pope Alexander VII sent evangelists escorted by the Portuguese Army to Mannar Island in Sri Lanka during 1520 AD, Francis Xavier entered the fray in 1544. Mannar Inquisition followed.

Thousands of Saiva Hindus were tortured incarcerated and or killed for refusing to convert to Christianity during Mannar Inquisition. To this day stands the grave where brave Hindus were buried at Mannar. Archeologists have identified this mass grave inside the present-day Mannar Town.

This violent tradition continued for 500 years. On 13th September 2021, those inheritors of Pope Alexander VI’s mandate removed a Lord Ganesha statue to replace it with a statue of St. Antony in the Mannar district.

For the second time (the first was 150 years ago) in the annals of violent evangelical - proselytizing campaign in the Tamil Homeland of Sri Lanka, this carcinogenic offensive is being met with Hindu stubbornness.

When Siva devotee Maarkkandu Jegatheeswaran was relaxing after his lunch on 27th November 2021, at his farmhouse in Kizhavankulam, Panikkan Kulam off Mankulam in the Mullaitivu District of Sri Lanka, a Toyota Hiace luxury van escorted by motorcyclists stopped in front of the gates of the farmhouse.

Siva devotee Maarkkandu Jegatheeswaran was amused. He was preparing to welcome the unannounced visitors.

Four to five men from the two vehicles opened the gate, entered the frontage, and greeted Siva devotee Maarkkandu Jegatheeswaran. Exchanging greetings, Siva devotee Maarkkandu Jegatheeswaran asked for their background as he had not known them before.

The visitors introduced themselves as messengers of God and his prophet Jesus Christ. They were opening their handbag folders to pull out fliers.

Siva devotee Maarkkandu Jegatheeswaran alerted himself. He had heard of these carcinogenic contaminants who live in luxury, paid by alien funds to pollute the Hindu society. He abhorred this practice.

During the previous week, he appeared before the Sri Lankan Presidential Taskforce on One country One law at their public hearing held at Mullativu town to elaborate on the menace of the evangelical - proselytizing campaign in the district.

Now he was experiencing them face-to-face.

Initial conversations were on a polite and courteous note, as the evangelists were inside his compound. In a way they were his guests. 5000 years or more of his traditional Sri Lankan Saiva Tamil Culture had its civilizing influence on him.

However, he could not bear the "guests" speaking ill of Lord Ganesha his Kula Deivam. When they said the Lord Ganesha was only a piece of stone, Jegatheeswaran became furious. His immediate reaction was to go for the nearest weapon to attack all those who insulted his Kula Deivam.

Better sense prevailed. He asked the "guests" to leave his compound.

From now on, for Jegatheeswaran they were not guests but aggressive intruders. Politely with utmost courtesy, he asked them to leave.

Jegatheeswaran had his passive Saiva Tamil ancestry guiding him through. 

The aggressive intruders had inherited the directives of the 500-year-old decree by Pope Alexander VII. To be ruthless was the mandate. True to their alien masters, the intruders slowly became aggressive. Their language smelled foul. Their mannerisms smelled sewage. Their tones were harsh. Slowly all of them became abusive.

That was a clear provocation. The instinctive reaction of Jegatheeswaran in meeting this foul, abusive spill of sewage was to use his verbose broom. Consequently, the intruders withdrew. Like the defeated dog, they continued to bark from the roadside. 

We had a Sankili in Jegatheeswaran after 500 years. We had an Arumuganavalar in Jegatheeswaran after 175 years. Bold but wise, courageous but soft, Jegatheeswaran not only straightened his backbone but straightened the backbone of the Sri Lankan Saiva Hindu world.

Exasperated, bewildered, and confused, Jegatheeswaran called 1999 the emergency police from his isolated farmhouse. He was directed to the nearest Mankulam Police station, where he was shown all the courtesies. A complaint was filed. The police gave him an acknowledgment.

He reached me on the phone. 

It was a rainy day. Also, it was a day when the state security apparatus was on full alert for other reasons. I wanted to rush to Kizavankulam around 80 km away.

I messaged a few of my colleagues. That was enough to give adequate pressure to the police, who despite their high-alert duties, spotted the culprits, who were pastors cum fathers of a missionary based nearby. 

The culprits were arrested, produced before a magistrate, who remanded them to judicial custody until the case comes up for hearing at the Mullaitivu courts on 1st December.

For 500 years, Saivaite Hindus were facing the wrath of this contaminant pollutant inimical virus, without any state support. For the first time, the state security apparatus acted to the disadvantage of the evangelical - proselytizing campaign in the Tamil homeland.

There were unorganized, uncoordinated attempts by Hindus to meet this menace. Five years ago, Siva Senai entered the arena to contest this evangelical - proselytizing campaign in an organized manner. The methodology was simple. Strengthen the Saiva Hindu mind. Change the vacillating Hindu mind into a stronger Hindu mind. Alter the helplessness attitude to a faith-based positive attitude. Induce bravery (wherever frail or weak) into the Hindu psyche. 

Towards these aims, Siva Senai ventured to organize a network of grassroots volunteers. They hoisted Hindu Nandhi flags in Hindu homes in vulnerable areas. Posters appeared condemning the evangelical - proselytizing campaign in those areas. The volunteers became anchors of Hindu hope. 

The volunteers were trained to handle this menace in a non-violent manner. Leaflets, handouts, flyers, booklets, and books reached these volunteers. Seminars and meetings to assess local situations were conducted. Realistic goals were set for each village division.

Maarkkandu Jegatheeswaran is one of the few hundred volunteers offering themselves to meet the evangelical - proselytizing campaign. His strong conviction, his unshakable faith proved his mettle. He sets the pathway. He is a torch bearer.

Print and electronic media have highlighted the Mankulam incident of 27th November 2021. That exposure and the combined will of the dedicated volunteers (whose number is increasing day by day) will help to wipe out the evangelical - proselytizing campaign. 

Through the concentrated effort of Siva Senai, Cheddikulam division with 18 village divisions in Vavuniya district, has more or less gotten rid of the evangelical - proselytizing campaign, thanks to its dedicated volunteers.

Now the evangelical - proselytizing campaigners are on the run everywhere. 

Global Hindus have a duty to telephone Maarkkandu Jegatheeswaran at +94768947121 to congratulate him on this historic achievement.

Tuesday, November 16, 2021

Bal Thakerey

 16.11.2014

Tribute to a departed leader

K. Sachithananthan
on behalf of the Tamil Hindu community of Sri Lanka
A roaring lion, a tiger on its prowl, an elephant in musk, a warrior in life, Baba Saheb Bal Thakerey leaves a legacy of Hindu renaissance. With a heavy heart and a silent prayer we, the Sri Lankan Tamil Hindus, mourn the death of this valorous leader par excellence.
His association with Tamils of Sri Lanka earnestly began with a cartoonist fellow student at College in Mumbai. Late Mr. Sivagnanasundaram, the cartoonist of Sirithiran fame in Sri Lanka studied in the same class at Mumbai with Mr. Bal Thakerey at College. Mr. Bal Thakerey helped Mr. Sivagnanasundaram to find a cartoonist job in Mumbai after leaving College. That association remained steadfastly strong for a long time, even though Mr. Sivagnanasundaram returned to Sri Lanka after a short stint at Mumbai.
However, Mr. Bal Thakerey extended his association with Mr. Sivagnanasundarm to the entire Tamil community of Sri Lanka. He always supported the Tamil Hindu community in Sri Lanka at times of its distress.
Once I had the opportunity of bringing to his notice the misery of a temple priest at the hands of a merciless policeman in Colombo. He immediately reacted by writing a strongly worded letter to the Indian Government to take up the matter with Colombo. Whenever I made distress calls to him, his voice strode high, high enough to frighten our detractors and strengthen our weakened brothers and sisters.
Whenever I went to Mumbai, Mr. Sanjay Raut, editor of the Shiva Sena daily, Samana will find time to see me. Now he is a member of Parliament and has spoken about the plight of the Hindus in Sri Lanka apart from joining in agitations and protests in Mumbai and Delhi on the issue.
Sri Lankan Tamils owe deep gratitude to this mega-leader of our times whose courage and determination in spearheading Hindu nationalistic renaissance in Maharashtra, India, and the world is without parallel. We stand in silent prayer and in renewed determination and awed commitment to continue the movement with added momentum from where he left.

Thursday, November 11, 2021

புலனாய்வாளர்

 ஊடகத்தார் வினா 3

ஈழம் தொடர்பாகவும் உங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா? எனவும்  அடிக்கடி குற்றப் புலனாய்வுத் துறையினர் உங்களை விசாரணை மேற்கொண்டு செல்கின்றனரே ? இது குறித்து கூறுங்கள்.

3 விடை

1965 மாசியில் சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் நான் மாணவன். விடுதியில் இருந்தேன். போராட்டத்தில் கைதான மாணவர்களுள் நானும் ஒருவன். இலங்கையைச் சேர்ந்தவன் என்பதால் என்னைச் சிறையில் அடைக்கவில்லை. காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் ஒரே அறைக்குள் பல நாள்கள் தங்க வைத்தனர். இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதாக அச்சுறுத்திக் கொண்டு இருந்தார்கள். அக்காலத்தில் சென்னையில் இலங்கைத் துணைத் தூதராக இருந்த சுசந்தா டி அல்விஸ் என்னை மிரட்டினார். காவல்துறைப் புலன் விசாரணையில் எனக்கு முதல்முதலாகப் பட்டறிவு அங்கே தொடங்கியது. இலங்கை அரசின் மிரட்டலும் அங்கே தொடங்கியது.

1966இல் அறிவியல் ஆய்வாளர் பணி. கொழும்பில் உயர் பதவியான அரசுப் பணி.

1972 வைகாசியில் இலங்கையைக் குடியரசாக்கிய அரசியலமைப்பு வந்த காலத்தில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எனக்காகவும் கோப்பைத் தயாரித்தனர். அப்பொழுது என்னிடம் வந்து விசாரித்துக் குறிப்பெழுதினர்.

1973 ஆவணியில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடக்கப் பணிகளில் நான் ஈடுபட்ட காலத்தில் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் மீண்டும் வரத் தொடங்கினர்.

1973இல் நான் அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்தேன். என்னை விலக்க அரசு சார்ந்த தமிழர்கள் நடவடிக்கை எடுத்தனர். சட்டத்துக்கு முரணாக நான் எதையும் செய்யவில்லை. எனவே அவர்களின் முயற்சிக்குப் படுதோல்வி. (படிக்க: நான் எழுதிய ‘எனது யாழ்ப்பாணமே’ நூல்)

1974இல் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அரசின் தடைகளை உடைத்தோம். எதிர்ப்புகளை மீறினோம். அரசு சார்ந்தோர் பகைகளைத் தாண்டினோம். அக்காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் என்னைத் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்தனர். உரும்பிராய் சிவகுமாரன், குருநகர் பிரான்சிஸ், பேபி சுப்பிரமணியம், மயிலிட்டி பத்மநாபா, புசுப்பராசா என மாநாட்டுக்கான என்னுடைய தொண்டர் பட்டியலில் பலர் இருந்தார்கள். இலங்கை அரசுக்குப் பொறுக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை.

1975 1976 என இரு ஆண்டுகள். தை மாதங்கள். யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் இறந்தவர்களுக்கான நினைவு நடுகல் அமைப்பதில் ஈடுபட்டேன். புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உள்ளானேன். என் தலைமையில் அமைத்த அந்த நினைவு நடுகல்லை இருமுறையும் அரசு இடித்துத் தள்ளியது. அக்காலத்தில் அரசின் உயர் பதவி ஊழியனாக இருந்தேன்.

1977 ஆடி ஆவணி இனக்கலவரத்தின் பின்னர் (11 ஆண்டுகள் கொழும்பில் அரசு உயர் பதவியில் இருந்த நான்) ஒரே நாளில் ஓய்வு ஊதியம் எதுவும் பெறாமல் பணியை விட்டு விலகினேன். குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்தேன். அக்காலத்தில் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கப் பல நாள்கள் உறவினர்களின் வீடுகளில் ஒழித்து வாழ்ந்திருக்கிறேன்.

1978இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். 

1979 மாசியில் அறவழிப் போராட்டக் குழுவைத் தொடக்கினேன். விடுவார்களா.. புலனாய்வு பிரிவினர்? தொடர்ச்சியாக என்னை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

1979இல் அக்கால இளைஞர்கள் (அவர்களுள் பெரும்பாலோர் வன்முறை இயக்கங்களில் இருந்தவர்கள்) என்னுடன் சேர்ந்தனர். கைதடியில் சாதி மறுப்பு போராட்டமொன்றை விரிவாக நடத்தினேன். அக்காலத்தில் புலனாய்வுப் பிரிவினரின் கடுமை தாங்க முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு கதிரவேற்பிள்ளை அவர்கள் எனக்காக அவர்களுடன் பேசத் தொடங்கினார். 

1979இல் ஐநா ஆலோசகர் பதவி பெற்று வெளிநாடு சென்றேன்.

1981இல் யாழ்ப்பாணத்தில் திரு ஐ தி சம்பந்தன் திரு ஈழவேந்தன் உள்ளிட்ட பலரைக் கச்சேரி வளாகத்தில் தடுத்து வைத்தனர். Where is the bugger Sachi? That fellow has signed for 14 passports enabling their escape! That fellow Sachi, wherever he is, we will bring him. திரு ஈழவேந்தனையும் திரு சம்பந்தனையும் அடித்துத் துன்புறுத்திக் கேட்ட பல்வேறு வினாக்களுள் என் தொடர்பான இந்த வினாவும் ஒன்று. திரு ஈழவேந்தன் கனடாவில் இருக்கிறார். திரு சம்பந்தன் இலண்டனில் இருக்கிறார். நானோ இன்றும் மறவன்புலவில் யாழ்ப்பாணத்தில் இலங்கையில் இருக்கிறேன்.

1976 மார்கழியில் சிறையிலிருந்த இளைஞர்களைச் சிறிமாவோ அரசு விடுவித்தது. அக்காலத்தில் விடுதலையானsயாரில் 14 இளைஞர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்தனர். அவர்கள் எவரையும் எனக்கு நேரில் பழக்கமே இல்லை. அவர்களுக்குக் கடவுச்சீட்டு எடுப்பதில் நான் உதவினேன். அரசு உயர் பதவியில் இருந்ததால் என் கையொப்பத்தை ஏற்றுக் கடவுச்சீட்டு வழங்கினர். அவர்கள் அனைவரும் உடனேயே வெளிநாடு போயினர். இதற்காகவே இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் திரு. ஈழவேந்தனையும் திரு. சம்பந்தனையும் விசாரித்தனர்.

1986 தை தொடக்கம் சென்னையில் வாழ்ந்து வந்தேன். தமிழகஅரசின் கியூ பிரிவு, சிஐடி பிரிவு, எழும்பூர் புலனாய்வுப் பிரிவு, நடுவண் அரசின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு, நடுவன் அரசின் புலனாய்வுப் பிரிவு, நடுவன் அரசின் குற்றவியல் ஆய்வுப் பிரிவு என அவ்வப்போது தொடர்ச்சியாக இன்றுவரை என்னை விசாரித்து வருகின்றனர். நான் மறவன்புலவில் 2012 தொடக்கம் இருக்கிறேன். மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் என்னிடம், விசாரிப்பர்.

என்னைக் கண்காணிப்பதற்காக நடுவன் அரசின் புலனாய்வுத் துறையின் அலுவலர் ஒருவர் என்னிடம் ஒரு மாதத்துக்கு இரு முறையேனும் வந்து விசாரித்துச் செல்வார். அவரே கவிஞர் காசி ஆனந்தனையும் விசாரிக்கும் அலுவலர்.

1995 தை தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து வரவிருந்த அறிஞர்களை வரவிடாமல் தடுத்ததை எதிர்த்து 1994 கார்த்திகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அடுத்த ஒரு மாதத்திற்கு நான் எங்கு சென்றாலும் காவலர் இருவர் என்னோடு இருக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காரணம், வழக்குத் கொடுத்ததற்காக அரசு சார்ந்தவர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர்.

1997 மாசியில் விடுதலைப்புலிகளுக்கு மருந்து கடத்த முயன்றேன் என என்னைக் கைது செய்து சிறையில் ஒரு மாதம் அடைத்தனர்.  2 ஆண்டுகள் நீடித்த வழக்கில் விடுதலையானேன்.

அதற்குப் பின்னர் என் வீட்டார், என் அலுவலகத்தார், எனக்கு உதவிய ஊழியர் யாவரும் பலமுறை புலனாய்வுப் பிரிவுகளின் விசாரணைகளுக்கு உள்ளானோம். என் வங்கிக்கணக்குகள், என் ஏற்றுமதி இறக்குமதி வணிகம், என் பதிப்புத் தொழில் வணிகம் யாவும் விசாரணைக்குள் அடங்கின.

2000 மாசியில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு எனக்கு நடுவண் அரசின் உள்துறை அமைச்சு, குடியகல்வுத் துறை வழி ஆணை அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அந்த ஆணையை இடையிட்டு நிறுத்தி வைத்திருக்கிறேன். இன்றும் அந்த ஆணை உயிரோடு உள்ளது.

2000 சித்திரையில் என் வீட்டையும் அலுவலகத்தையும் ஒரே நேரத்தில் 8 மணிநேரம் முடக்கினர். 20க்கும் கூடுதலான நடுவன் அரசின்  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இரு இடங்களிலும் சமகாலத்தில் தேடுதல் நடத்தினர். என் கணக்குப் புத்தகங்கள், என் கடவுச்சீட்டு, மற்றும் சில கடிதங்கள் கோப்புகள், நூல்கள் யாவற்றையும் கைப்பற்றினர். பயங்கரவாதத் தடைச் சட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே ஒவ்வொரு முறையும் இந்தியாவை விட்டு வெளியே பயணிக்கிறேன்.  இந்தியாவுக்கு மீண்ட உடன் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன். புதிதாக விண்ணப்பித்துக் கடவுச் சீட்டை பெற்றே மீண்டும் நான் பயணிப்பேன். இன்று வரை அதே நிலை.

2010 ஆவணியில் யாழ்ப்பாணம் வந்தேன். நுணாவிலில் தங்கியிருந்தேன். ஒரு மாத காலம் வரை தங்கி இருந்தேன். அக்காலத்தில் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை பருத்தித்துறை மருத்துவமனையில் இருந்தார். (வேலுப்பிள்ளை இணையர் எனக்கு நீண்டகாலத் தொடர்பாளர், நண்பர்கள்). அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

என்னோடு இருந்தவர்கள் நான் சென்று வந்ததை நுணாவிலில் உள்ள படை அலுவலகத்தில் சொல்லினர் (காட்டிக் கொடுத்தனர் போலும்). படையினர் என்னைத் தம் அலுவலகம் வருமாறு அழைக்க, நான் இரவோடு இரவாகக் கொழும்பு வழி சென்னைக்குச் சென்றேன்.

2012 ஆவணி வரை என்னால் யாழ்ப்பாணம் வர முடியவில்லை. வரவேண்டாம் என எனது உச்ச நிலைப் பதவியாளரான நண்பர்கள் பலர் சொன்னார்கள். எனினும் 2012 ஆவணியில் கொழும்பில் நடைபாதையில் என்னைக் கண்ட கரம்பனூர் நண்பர் ஒருவர், தாமே என்னை அழைத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து விட்டார். அவர் அமைத்த காப்பினாலேயே இன்று வரை யாழ்ப்பாணத்தில் மறவன்புலவில் தங்கியிருக்கிறேன்.

யாழ்ப்பாணம் வந்த பின்பு தொடர்ச்சியாகப் பயங்கரவாதத் தடைப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினர், படைப் புலனாய்வுப் பிரிவினர், காவல்துறைப் புலனாய்வு பிரிவினர் என வரிசையாக எல்லோரும் என்னிடம் வருவார்கள், அடிக்கடி வந்து விசாரித்துச் செல்வார்கள்.

1965இல் பொது வாழ்வுக்காகப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உள்ளானேன். அடுத்த 56 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக விசாரிக்கின்றனர். பொதுவாழ்வில் இருக்கிறேன் என்பதற்காக இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

போக்குவரவுக் குற்றங்களுக்காக இடையிடையே தண்டத் தொகை செலுத்தி இருக்கின்றேன்.

அக் குற்றத்தைத் தவிர வேறு எந்தக் குற்றத்துக்காகவும் என் தனி வாழ்வில் விசாரணையோ வழக்கோ கிடையாது.

இக்காலத்தில் இளம் வயதினரான புலனாய்வாளர்  தொடுக்கும் வினாக்களுக்கு நான் சொல்கின்ற பதில்களைப் பலர் புரிந்து கொள்வதே இல்லை.

அவர்களுக்கு விசாரணைகள் புதிது. எனக்கோ 56 ஆண்டுகாலப் பட்டறிவு.

Saturday, November 06, 2021

போரில் இறந்தோரை நினைவுகூரும்

 


போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர் காலங்களிலேயே தீர்மானித்துள்ளனர். 

போர் முடிந்த பின்பும் இறந்தோரை நினைவுகூர்ந்து சடங்குகள் இயற்றி வரும் சைவர்களைத் திசை திருப்பாதீர். 

உரோம கத்தோலிக்க கிரிகோரியன் நாட்காட்டிக்கமைய நினைவு கூர்க எனப் புதிய நாளைக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சைவர்களை நோக்கிக் கூறுவதைக் கண்டிக்கிறேன்.

ஏற்கனவே வழமையில் இருந்த சந்திராயன நாட்காட்டியின் வளர்பிறை தேய்பிறைக் கணிப்பில் வானியல் அறிவின் துணையுடன் சைவர்கள் இறந்தோரை நினைவுகூரும் வழக்கத்தை மாற்றக் கத்தோலிக்க ஆயர்கள் முயல்வதைக் கண்டிக்கிறேன்.

கிறித்து பிறந்தநாளில் இருந்து வருகின்ற நாட்காட்டியைக் கொண்டு சைவராகிய இறந்தோரை நினைவுகூரும் நாளை நிர்ணயிக்காதீர்.

சைவர்களைக் கிருத்தவ மயமாக்கும் கடந்த 400 ஆண்டுகால முயற்சியின் தொடர்ச்சியாகவே ஆயர்கள் கூட்டம் நினைவு கூரும் நாளை அறிவித்துள்ளதைக் கண்டிக்கிறேன்.

சைவர்கள் வழமைபோல இறந்தோரை வழிபாட்டுடனும் உணர்வு மீநிற்க உறவுகள் நடுவணாக, நினைவுகூர்வர்.

கத்தோலிக்க ஆயரின் அடிமை மோகக் கோரிக்கைக்கு அமையச் சைவர்கள் தம் நினைவு கூர்தல் முறைமைகளை வழமைகளை மாற்றமுடியாது. 

கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இறந்த கத்தோலிக்கர்களுக்குத் தாம் விரும்பிய நாளில் அல்லது நாள்களில் வழிபட்டு நினைவுகூர்தலையே சைவர்களாகிய நாங்கள் ஆதரிக்கிறோம்.

கத்தோலிக்க கிரிகோரியன் நாட்காட்டியை சைவர்கள் மீது திணித்துச் சைவ மரபுகளை உடைத்தெறிய முயலும் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தின் அறிவித்தலை எச்சரிப்புடன் கண்டிக்கிறேன்.

ஆயர் கூட்டம் தமிழரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் 

மறவன்புலவு சச்சிதானந்தன் 
சிவ சேனை 

ஆட்டை வெட்டினார். சுவைத்துப் பாரத்தோம். 
மாட்டை வெட்டினார். கை தட்டினோம்.
மனிதரையே வெட்ட வந்துள்ளனர்.

திருக்கேதீச்சர வளைவை உடைத்தனர். கண்டிக்க மறுத்தோம். கண்டித்தவர்களை மதவாதிகள் என்றோம்.

பிள்ளையார் சிலையை உடைத்து அகற்றி அந்தோனியார் சிலை வைத்தனர். பொறுமை காத்தோம். கண்டித்தவர்களை மதவாதிகள் என்றோம்.

இப்பொழுது போரில் இறந்தோரை நினைவுகூரும் நாளை மாற்றியுள்ளனர். தமிழரின் வாழ்வியலையே தீர்மானிப்பவர் கத்தோலிக்க ஆயர் கூட்டம் என்ற மிதப்பில் நினைப்பில் திமிரில்.

பிள்ளையார் சிலையை உடைத்து அந்தோணியார் சிலையை வைத்ததுபோல 

திருக்கேதீஸ்வர வளைவை உடைத்து நந்திக் கொடியைக் காலால் மிதித்தது போல 

துயிலும் இல்லத்தை உடைக்கக் கோருவது போலப் 

போரில் இறந்தோரை நினைவுகூரும் நாளை மாற்றுவதாகக் கூறுகிறார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்க வந்துள்ளனர் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தார்.

கார்த்திகை மகம் ஆறுமுக நாவலருக்கு நினைவு நாள் அன்று. 
ஐப்பசிச் சதயம் இராசராச சோழனுக்கு நினைவு நாள் அன்று.
வைகாசி வளர்பிறை அட்டமி நவமி சங்கிலி மன்னனுக்கு நினைவு நாள் அன்று. 

இந்த நினைவு நாள்களை நாங்களே தீர்மானிப்போம் தமிழர் அல்லர் என்கின்ற திமிர் நிலைக்கு வந்துள்ளனர் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தார்.

வானத்தில் நிலவு, சூரியன், 27 நாள் மீன்கள், அவற்றின் அசைவுகள் பற்றிய துல்லிய கணக்கீடுகள்.

அந்தக் கணக்குகள் தரும் வானியல் அறிவு மீநிற்க, இறப்பு நினைவு நாள் பிறந்த நாள் திருமண நாள் தமிழரின் வாழ்வியலோடு இணைந்த வானியல் சார் நாள்கள். 

இந்தக் கணினி அமைப்பே கிழக்கே வியத்நாமில் இருந்து மேற்கே காந்தாரம் வரை, வடக்கே இலாசாவில் இருந்து தெற்கே கதிர்காமம் வரை பரந்த நிலப்பரப்பில் வாழ்வோரின் துல்லிய வானியல் கணக்கீடு.

தொல்காப்பியர் தந்த கணக்கு 
திருவள்ளுவர் தந்த கணக்கு 
அவ்வையார் தந்த கணக்கு 
இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் தந்த கணக்கு 
யாவும் வானியல் கணக்கு.

தமிழரே கணக்கியலையும் வானியலையும் தூக்கி எறியுங்கள் 

இறந்தோர் நினைவு நாள்களை 
உங்கள் பிறந்த நாள்களை 
உங்கள் திருமண நாள்களை 
நாங்கள் கத்தோலிக்க ஆயர் கூட்டமாகக் கூடித் தீர்மானிப்போம்.

துயிலும் இல்லங்களை உடைத்தெறியும் நிலைக்குச் சமமான நிலையே இறந்தோர் நினைவு நாளை மாற்றும் நிலை என்கின்றார் ஐங்கரநேசன்.

சைவர்களின் தமிழர்களின் இறந்தோர் நினைவு நாள்களைத் தமிழர் அல்லாதவர் தீர்மானிக்கலாமா? என கேட்கிறார் சைவப் பெரியார் ஆறு திருமுருகன்.

கூடாரத்துக்குள் ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த அரபு நண்பரின் கதை ஆகிவிட்டதே தமிழர் நிலத்தில் கத்தோலிக்கருக்கு இடம் கொடுத்தது என்று அங்கலாய்ப்பர் தமிழ் உணர்வாளர்.

தமிழரைப் புண்படுத்திய தீர்மானம்
தமிழ் உணர்வுகளை உடைத்தெறிந்த தீர்மானம், போரில் இறந்த நினைவு நாள் தொடர்பான ஆயர் கூட்டத்தின் தீர்மானம் கொடுமையானது. 

அந்தத் தீர்மானத்தை மீளப் பெறுகிறோம். 
வரலாற்றுத் தவறான தீர்மானத்தை எடுத்ததற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சொல்ல வேண்டும்.

அதுவரை கத்தோலிக்க ஆயர்களுக்கு எதிரான தமிழரின் போராட்டம் தொடரும்.





Wednesday, November 03, 2021

மன்னார் ஞானசாரர்

 https://www.lankanewsweb.net/tamil/107-news/96262-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0

வணக்கத்துக்குரிய ஞானசாரர் சரியான வழியையே சொல்கிறார்



மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை


மன்னார் மாவட்டம் தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்டம் செயலணித் தலைவர் வணக்கத்துக்குரிய ஞானசார தேரர் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.

அம்பலவாணர் சிவபாதசுந்தரம் மூத்த ஆட்சிப் பணியர்.

அவரை மன்னார் மாவட்டச் செயலராக அமைச்சரவை ஏற்றுப் பதவி வழங்கல் கடிதம் வழங்கும் நிலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு.

மன்னார் மாவட்டத்திற்குக் கத்தோலிக்கரே மாவட்டச் செயலாளர் ஆக வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கட்டளை. கர்தினால் மல்கம் இரஞ்சித்தரின் கட்டளை. ஒரே நாடு ஒரே சட்டம் இல்லாததால் மன்னாரில் கத்தோலிக்க ஆட்சி.

வங்காலையைச் சேர்ந்த இசுடான்லி த மெல் அம்மையார் ஆட்சிப் பணியர். கத்தோலிக்கர். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிந்தைய மன்னார் மாவட்ட செயலாளர்.

மூத்த ஆட்சிப் பணியர் சிவபாதசுந்தரத்தின் பதவி வழங்கலைத் தடுத்து அவரை விட மூப்புக் குறைந்த ஆட்சிப் பணியரான அம்மையாரைக் கத்தோலிக்கர் என்பதற்காகவே மன்னார் மாவட்டச் செயலர் ஆக்க விதந்தவர் மன்னார் ஆயரின் வழிகாட்டலில் வேண்டுகோளில் கர்தினால் மல்கம் இரஞ்சித்தர்.

இலங்கை அரசு ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கொண்டு வருவதற்கு மன்னாரில் வத்திக்கான் ஆட்சியை ஒழிப்பதும் ஒரு காரணம். 

மன்னார் மாவட்டம் வத்திக்கானின் ஆட்சியில் உள்ளதா? இலங்கை அரசின் ஆட்சியில் உள்ளதா? என்ற வினா எழுகின்றது.

குடியரசுத் தலைவர் கோத்தபாய தனது ஆட்சியை நிலைநிறுத்த 
1. மன்னாரில் வத்திக்கான் அரசு ஆட்சியை ஒழிக்க 
2. 1948 விடுதலையை முழுமையாக உறுதியாக்க  
3. 1619 இல் போர்த்துக்கேயர் ஆட்சியையும் வத்திக்கான் ஆட்சியையும் முழுமையாக அகற்ற 

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை முன் வைக்கிறார்.

முருங்கன் தொடக்க நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் யார் என்பதை மன்னார் ஆயர் தீர்மானிக்கிறார். அவரிடம் சென்று முறையிடுங்கள் என வெளிப்படையாக அப்பள்ளியின் கிறித்தவப் பெற்றார் ஆசிரியர் சங்கத்திற்குச் சொன்னவர் மன்னார் மாவட்ட கல்வி அலுவலர்.

கல்விப்பணிப்பாளர் கத்தோலிக்கர். 
கமநல உதவி ஆணையர் கத்தோலிக்கர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலர் தன் ஊரில் சைவக் கோயிலைக் கட்டினார் என்பதற்காகவே அவரை இடம் மாற்றி அங்கே கத்தோலிக்கரை மன்னார் ஆயர் விதந்ததால் பணிக்கு அமர்த்தி இருக்கின்றனர்.

கோயில் மோட்டை அரச காணியில் 27 பராம்பரியக் குடும்பங்களிடம் இருந்து காணியை அடாத்தாகப் பெற்று மடு தேவாலயத்துக்குக் கொடுப்பதற்கு வசதியாக மன்னார் மாவட்டச் செயலாளருக்கு உதவியாக 55% சைவர் வாழும் அங்கு கத்தோலிக்கப் பிரதேச செயலர் ஒருவரை அண்மையில் மன்னார் ஆயர் விதந்து பணிக்கு அமர்த்தினர்.

மன்னாரில் வத்திக்கான் ஆட்சி நடப்பதற்கு வேறென்ன சாட்சி?

1619இல் தொடங்கிய போர்த்துக்கேய ஆட்சியை மன்னாரில் இருந்து முற்றுமுழுதாக விடுவிக்க, இலங்கையின் இறையாண்மையை மன்னாரில் நிலைநாட்ட, இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் என்று கொள்கையை முன் வைக்கிறார்.

இலங்கை முழுவதும் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு தேசவழமைச் சட்டத்தின் கூறுகள் அனைத்துப் பகுதிகளிலும் இருந்ததைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச ஒத்துக்கொள்கிறார்.

போர்த்துக்கேயர் சென்றனர் ஒல்லாந்தர் சென்றனர் ஆங்கிலேயரும் சென்றனர் ஆனாலும் உரோம ஒல்லாந்தச் சட்டங்களும் முகம்மதியச் சட்டங்களும் எச்சங்களும் மீநிற்பதால் இலங்கையின் வளர்ச்சிக்குத் தடை.

தேசவழமைச் சட்டத்தை இலங்கையின் ஒரே சட்டமாக அமைப்பதற்கு முயற்சிக்கிறார் குடியரசுத் தலைவர் கோத்தபாய இராஜபக்ச.

அடிமைச் சின்னங்களான முகமதிய கிருத்துவச் சட்டங்களை நீக்குவதற்கு முயற்சிக்கிறார் கோத்தபாய இராஜபக்ச.

அடிமை வாழ்வை விரும்புகின்றவர்கள் எதிர்க்கிறார்கள்.
தேசவழமைச் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருவதை எதிர்க்கிறார்கள். 
ஆபிரகாமிய மதங்களைப் புகுத்த விரும்புவோர் இலங்கையை முகமதிய நாடாக்க வேண்டும் இலங்கையைக் கிருத்தவ நாடாக்க வேண்டும் என்ற மதமாற்றப் பரம்பலில் ஆர்வமுள்ளோர் ஒரே நாடு ஒரே சட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இதே சட்டங்களும் இதே வசதிகளும் தொடர்ந்தால் இன்னமும் 10 15 ஆண்டுகளில் இலங்கையும் முகமதிய நாடே என மேனாள் அமைச்சர் சம்பிக்க இரணவக்க எழுதிய நூலை அனைவரும் படிக்க வேண்டும்.