Thursday, September 23, 2021

கருதினாலுக்குக் கடிதம் LETTER TO CARDINAL

 18 செப்தெம்பர் 2021


அனுப்புநர்:

மறவன்புலவு க. சச்சிதானந்தன்,

சிவ சேனை,

கோயிலார் வளவு,

மறவன்புலவு, சாவகச்சேரி.

+94772754864

tamilnool@gmail.com


பெறுநர்:

வணக்கத்துக்குரிய கருதினால் மல்கம் இரஞ்சித்தர் அவர்கள்,

கொழும்புப் பேராயர்,

கின்சி சாலை, பொரளை, கொழும்பு 8

பெரு வணக்கத்துக்குரியீர்

திருவடிகளுக்கு வணக்கம்.

இலங்கைச் சைவர்களின் வாழ்த்துதலையும் போற்றுதலையும் ஏற்பீர்களாக.

இலங்கையின் முப்பது இலட்சம் சைவர்கள் சார்பில் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 

அன்பு, அறம், அருள், நல்லிணக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல் வெறும் வாய்ச்சொற்கள் அல்ல. அவை வாழ்வியல் முறைகள். சைவர்களின் வாழ்வியல் முறைகள். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்கின்ற வாழ்வியல் முறைகள். 

400 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த பிரான்சிஸ் சேவியர் சிலாபத்தில் தலை காட்டவே இல்லை. மன்னாருக்கு வந்தார். மதவெறிப் போர்க்கோலம் கொண்டார். சைவர்களை முடமாக்கினார், வதைத்தார், கொன்றார். குருதி தோய்ந்த இன ஒழிப்பு வரலாற்றின் நாயகன் அவர்.

பிரான்சிஸ் சேவியரின் கொடுமைகளைச் சைவர்கள் மனத்தில் கொள்ளவில்லை. சிலாபத்தில் உடைப்பில் அவர் பெயரில் உள்ள, 1848இல் கட்டிய, தேவாலயத்தைப் பேணுவோர், பாதுகாப்போர் சைவர்களே.

சிற்றாறுகளின் முகத்துவாரங்கள் சிதறிய கரையோரம். செவ்வானத்தில் தண்ணொளிப் பிழம்பாய்ச் சூரியன் கடலுள் மறைவதைக் காணக் கண் கோடி வேண்டும். சிலாபத்துக்கு வடக்கே முந்தலுக்கு மேற்கே திறந்தவெளி இடையீட்டுக்கு அப்பால் குடிகள் நெருங்கி வாழும் உடைப்புச் சிறுநகர்.

அங்கே ஏறத்தாழ இருபதினாயிரம் மக்கள். 10 அல்லது 15 குடும்பங்களைத் தவிர அனைவரும் சைவர்கள். மகாபாரதத்தின் மாண்புறு பாண்டவர்களின் வழி வந்தவர்கள் எனத் தம்மை அழைப்பவர். திரௌபதை அம்மனுக்குத் திருக்கோயில் கண்டு தீமிதிக்கும் திருவினர்.

பிரான்சிஸ் சேவியர் பெயர்கொண்டதே அங்குள்ள கத்தோலிக்கத் தேவாலயம். அத்தேவாலயத்தில் பயன் கொள்வாரோ மிகக் குறைவு. பாதிரியாரும் வருவதில்லை.

கடல் காற்று இரும்பைக் கறளாக்கும். பழைய கட்டடச் சுவர் உடையும். கதவுகள், நிலைகள் வெயிலுக்கு வெடிக்கும். வழிபடுவோர் இருக்கை வாங்கை வண்டரிக்கும். உரைமேடையும் கட்டவிழ்ந்து சொரியும். கேட்பாரற்றுக் கிடந்த தேவாலயத்தைக் கண்டனர், உடைப்புச் சைவ மக்கள். அந்தோ! அந்தோ! அவை ஆன்மீகத்தின் அரும்பொருள் அல்லவா? எனக் கருதினர்.

அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் கூடினர். அழிகின்ற தேவாலயத்தை மீளமைக்கலாமா? அழகாக்கலாமா? தம்மிடையே பேசினர். மீளமைக்கத் தீர்மானித்தனர்.

குழை சாந்தால் சுவர்களைப் பூசினர். காலம் கரைத்த ஓட்டைகளை அடைத்தனர். நிலைகளையும் கதவுகளையும் அழகூட்டிப் பொருத்தினர். வண்ணங்களைச் சுவரிலும் நிலைகளிலும் கதவுகளிலும் பூசினர். கூரை வளைகளைத் திருத்தினர். உடைந்த ஓடுகளை மாற்றினர். வழிபடுவோர் வாங்குகளை வரிசையாக அமைத்தனர். வழிகாட்டும் பாதிரிக்கு மணி மேடை அமைத்தனர். இயேசுபிரான் கருநிலையைத் திருத்தி அமைத்தனர்.

அருகில் உள்ள கட்டைக்காடு சென்றனர். பாதிரியாரை அழைத்தனர். அவர் வந்து போக வண்டி கொடுத்தனர். உடைப்பின் பத்துப் பதினைந்து கத்தோலிக்கக் குடும்பங்கள் ஞாயிறுதோறும் வழிபட வழி செய்தனர்.

சைவக் கோயிலார் கத்தோலிக்கத் தேவாலயத்தை மீளமைத்த மாண்பு. அதுவும் மதவெறியர் பிரான்சிஸ் சேவியர் பெயரிலுள்ள தேவாலயத்தைப் பாதுகாக்கும் மாண்பு. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்கின்ற மாண்பு. இந்த மண்ணின் சைவ மரபு அதுவே. 

இந்த நிலமும் இங்குப் பாயும் நீரும் இங்கு எரியும் தீயும் கடற்கரைக் காற்றும் விரிந்த வானும் இசைந்த ஊரே உடைப்பு. பாண்டவர் மரபில் வந்தோர் சைவப் பண்புகளைப் படிப்படியாக வளர்த்த ஊரே உடைப்பு. காலந்தோறும் அல்லன போக்கினர், நல்லன போற்றினர். பரம்பரைகள் ஊடாகச் சைவப் பண்பாட்டை வளர்த்தனர். அப்பண்பாட்டின் மாண்பே இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் மாண்பு. சைவத் திருக்கோயிலார் கத்தோலிக்கத் தேவாலயத்தைப் பேணிக் காக்கும் மாண்பு.

உடைப்பின் உள்ளங்கள் உயர்ந்த உள்ளங்கள். சைவம் செழிக்கும் உள்ளங்கள்.

வணக்கத்துக்குரிய கருதினால் அவர்களே, நீங்கள் பிறந்த இடம் உடைப்புக்குத் தெற்கே 30 அல்லது 40 கிமீ தொலைவிலேயே உள்ளது. 

நீங்கள் மேய்ப்பர். உங்களைப் பின்பற்றுவோரே கத்தோலிக்கர். 1503 தொடக்கம் 500 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் கத்தோலிக்கத்தை வளர்க்கச் சைவக் கோயில்களை இடித்த மரபு இடைவிடாது இன்றும் தொடர்கிறது. 

மன்னார் ஆயராக இருந்தோர் அனைவரும் ஒரே வழியைப் பின்பற்றி இருக்கிறார்கள். வெறுப்பை வளர்க் கிறார்கள் மேலாதிக்கத்தை முன்னெடுக்கிறார்கள். மதத் தின் பெயரால் வெறிகொண்டு ஆடுகிறார்கள். 

400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கேதீச்சரத்தை உடைத்து மண்ணோடு மண்ணாக்கினீர்கள். 400 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாசிவராத்திரி நாளன்று திருக்கேதீச்சர வளைவை உடைத்து, நந்திக் கொடியைக் காலால் மிதித்தீர்கள். சில நாள்களுக்கு முன்னர் (13.09.2021) பரப்புக்கடந்தான் அருள்மிகு பிள்ளையார் கோவிலை உடைத்து இருக்கிறீர்கள். 

ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான இத்தகைய நிகழ்ச்சிகளை நான் உங்களுக்குப் பட்டியலிட முடியும்.

உங்கள் தலைநகரம் வத்திக்கான். அங்கிருந்து வரும் ஆணைக்காக நீங்கள் காத்திருப்பவர்கள், அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள், அதை முன்னெடுப்பவர்கள். 

இலங்கை அரசின் ஆணைகள், விதிகள், சட்டங்கள் வத்திக்கானின் சட்டங்களுக்குப் பின்பே. 

வத்திக்கானின் தலைவர்கள் போப்பாண்டவர்கள். அவர்கள் பெருமைப்படக் கூடாது, அளவுக்கு அதிகம் உண்ணக் கூடாது, ஆசை கூடாது, காமப் போகம் கூடாது, மருளும் மயக்கமும் கூடாது, பொறாமை கூடாது என ஆறு சத்தியங்களைச் செய்கிறார்கள். 

இந்த ஆறு சத்தியங்களையும் மீறிய பாவச் சின்னங்களாகிய போப்பாண்டவர்களின் பட்டியலைத் தருகிறேன். 

Pope Stephen VI -22 May 896 to August 897; 

Pope John XII - 16 December 955 to 14 May 964; 

Pope Benedict VIII - 18 May 1012 to 9 April 1024; 

Pope Benedict IX ruler of the Papal States on three occasions between October 1032 and July 1048; 

Pope Urban VI - 1318 to October 15, 1389; 

Pope Alexander VI - 11 August 1492 to 18 August 1503; 

Pope Leo X - 9 March 1513 to 1 December 1521.

வழி வழியாக மன்னார் ஆயர்கள் இந்த ஆறு சத்தியங்களையும் மீறுவோரே. இந்த ஆறு போப்பாண்டவர்களைப்போலவே பாவச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.

மனிதம் பேணும் நியாயத் தராசின் ஒரு தட்டில் பிரான்சிசு சேவியர் தேவாலயத்தை மீளமைத்துப் பேணிக் காக்கும் உடைப்புச் சைவ மக்கள். மறுதட்டில் பரப்புக் கடந்தான் அருள்மிகு பிள்ளையாரை உடைத்து அந்தோனியார் சிலையை நிறுவிய மன்னார் ஆயர் வழிநடத்தும் கத்தோலிக்கர். 

பண்பட்ட மக்களாக உடைப்புச் சைவ மக்கள். வன்முறையைத் தூண்டி, தமிழரைப் பிளவாக்கி, மண்ணின் மரபுகளை அழித்து மனிதத்தைப் புண்படுத்தும் மக்களாக மன்னார்க் கத்தோலிக்கர்.

மன்னார்க் கத்தோலிக்கர் ஏன் இவ்வாறு பிறழ்கிறார்கள்? உரோமப் பேரரசன் நீரோ மன்னன் கொடுமைகளைத் தாங்கிய தூய பவுலரும் தூய உலூக்கரும் சைவப் பண்பாடு தாங்கிய அருளாளரே என எழுதுவார் வண. யசுவந்தராயர் Grace in the Saiva Siddhantham and in St. Paul by Joseph Jaswant Raj (s.d.b.)

மன்னார்க் கத்தோலிக்கரின் அருள்நிலையை மீட்கும் கடன் உங்களுக்கு. கத்தோலிக்கரை வழிநடத்தும் மேய்ப்பர் நீங்கள். மன்னார்க் கத்தோலிக்கர் பிறழ்நிலையை, அட்டூழியத்தைத் தொடராது நிறுத்துவீர்களாக.

இதுவரை நடந்த நூற்றுக்கணக்கான அட்டூழியங்களில் நிலைகளை விசாரித்து அவை தொடராமல் இருப்பதற்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்காக உங்கள் அமைப்புக்குள்ளேயே உள்ளக விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமையுங்கள்.

சான்றோர் பல்கிய நாடு இலங்கை. இலங்கையின் நான்கு சமயச் சான்றோர்களை அழையுங்கள். உள்ளக விசாரணை ஆணைக்குழு உறுப்பினராக்குங்கள். விசாரணைகளைத் தொடங்குங்கள்.

மனித உரிமைகளை மீறினர். 

அரசியல் அமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை மீறினர்.

அரசின் காணிகளையும் சைவர்களின் காணிகளையும் வன்முறையால் ஆக்கிரமிக்கின்றனர். 

அறத்தை மீறிச் சைவர்களை மதமாற்றிக் கிறித்தவராக்குகின்றனர். 

மன்னார் குருத்துவக் கல்லூரி மற்றும் அறநெறிப் பாடசாலை போன்றவற்றின் பாடத்திட்டங்களில் சைவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பாடங்களை எழுதினர். 

வழிபாட்டாளர்களைத் தூண்டினர். காடையர்களை அனுப்பினர். மற்றும் கத்தோலிக்கர் முன்னெடுத்த அரசு சார்பற்ற நிறுவனங்களே அட்டூழியராயினர். 

அரசு விதிகளைப் புறந்தள்ளி அரசின் ஆட்சிப் பணியில் அரசின் பாதுகாப்புப் பணியில் மன்னார் ஆயரும் அவரின் உதவியாளர்களும் தலையிடுவர். இதனால் சைவர்களே பலிக்கடாக்கள்.

இவற்றை விசாரிக்க வேண்டும். போருக்குப் பின் 19 மே 2009இலிருந்து 13 செப்தெம்பர் 2021 வரையான அட்டூழிய நிகழ்ச்சிகளை விசாரிக்கவேண்டும். 

ஆட்சியால், ஆவணத்தால் அல்லது காட்சியால் என 800 ஆண்டுகளுக்கு முன் சேக்கிழார் கூறிய சைவ நீதி நெறிமுறைக்கு அமைய,

நேரடிச் சாட்சிகளின் வாய்மொழிகள்

சாட்சியம் தரக்கூடிய ஆவணங்கள்

பதிவாகிய காணொளிகள்

யாவற்றையும் சைவர்களாகிய நாம் வரிசையாக்குவோம்.

மன்னார்க் கத்தோலிக்கரின் அட்டூழியங்களாக, 37 நிகழ்ச்சிகளை நான் பின்னிணைப்பாகப் பட்டியலிட்டிருக்கிறேன் 

நீங்கள் அமைக்கும் விசாரணை ஆணைக்குழு முன்பு சாட்சிகளையும் ஆவணங்களையும் காணொளிகளையும் வரிசைப்படுத்துவோம்.

வணக்கத்துக்குரிய கருதினால் அவர்களே, இந்த விசாரணைக் குழுவின் பாரபட்சமற்ற முடிவுகளையும் விதப்புரைகளையும் நீங்கள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். 

நீங்களோ வத்திக்கானோ இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால், சைவர்களாகிய நாங்கள் இத்தகைய விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு இலங்கை அரசைக் கோருவோம். 

அவர்களும் எங்களுக்குச் செவிசாய்க்காவிடின், நீங்கள் ஏற்கனவே இலங்கை அரசின் மீது குற்றங்களைச் சுமத்தி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்துக்குப் போவதாகச் சொல்லி இருக்கிறீர்களே. உங்கள் வழியைப் பின்பற்றி நாங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்துக்குச் செல்ல உள்ளோம். 

உடைப்பு ஊரின் நல்லிணக்கப் பண்பாட்டின் விரிவாக்கமாக இலங்கைத் தீவு மாற வேண்டும். உடைப்புச் சைவரின் அன்பு, அறம், அருள், இணக்கம், தேசியம், விட்டுக்கொடுப்பு யாவும் இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவாக வேண்டும். உடைப்பு முன்னுதாரணமாக உள்ளதே.

சைவத் தமிழ்ப் புலவர், பரிபாடல் நூலில், யாம் இரப்பவை பொருளும், பொன்னும், போகமும் அல்ல நின்பால் அருளும், அன்பும், அறனும் என 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சங்க காலத்திலேயே முருகனிடம் வேண்டினார். 

அந்தப் பராம்பரியமே உடைப்பு மக்களின் அரும்பெரும் சொத்து. அக்கோரிக்கைகளே இலங்கை மக்களின், இலங்கை மண்ணின் மரபுசார்ந்தோரின் வாழ்வியலுமாகும். எனவே உங்களின் விசாரணை முன்னெடுப்புகளுக்கு இலங்கையில் உள்ள சைவர்கள் ஆதரவாக இருப்போம்.

மீண்டும் சைவர்களின் நல்வாழ்த்துக்களையும் போற்றுதல்களையும் வணக்கங்களையும் உங்களுக்குத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

திருவடிகளுக்கு வணக்கம்

நன்றி

அன்புடன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை

படிகள்

1. மாண்புமிகு இராசாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா

2. ஐநா மனித உரிமைகள் ஆணையம், சுவிற்சர்லாந்து

LETTER TO CARDINAL
18th September 2021

From
Maravanpulavu K. Sachithananthan,
Siva Senai,
Koyilaar Valavu
Maravanpulavu,
Chavakachcheri, Sri Lanka
+94772754864 (phone, whatsup)
tamilnool@gmail.com

To
Rev. Cardinal Albert Malcolm Ranjith Patabendige Don,  
Archbishop of Colombo,
Archbishops House,
Kynsey Road,
Borella, Colombo 00800, Sri Lanka

Your Eminence,
Dear Cardinal Malcolm Ranjith,
Greetings from the Hindus of Sri Lanka.
I am writing to your eminence on behalf of the 3 million Hindus in Sri Lanka.
Amicability, tolerance, accommodation are not merely empty words for Hindus. These words are their way of life. Hindus have been taught to repay evil with kindness.
Francis Xavier never visited Chilaw in Sri Lanka. His infamous Mannar Inquisition and the consequent loss of limbs and lives of Hindus are written with blood in Sri Lankan history.
However, Hindus, ignoring the historical evil deeds of Francis Xavier, are contributing to the welfare and maintenance of a church bearing his name at Udaippu near Chilaw. This church was built in 1848. 
Uadippu is an isolated village on the seashore inundated with mouths of river-lets. Around 20,000 inhabitants are peripherating the historical Arulmiku Draupathai Amman temple. The inhabitants claim ancestry to Paandavars, characterized in the immortalised south Asian epic Mahaabaarathaa.
There are around 10 to 12 Catholic households at Udaippu. All others are Hindus. Even those Catholics are sincere devotees of the Amman temple because they claim their ancestry to characters in the mythological Mahaabaarathaa.
St. Xavier’s Church at Udaippu went into disuse. Kaddaikkadu parish priest took little interest in servicing the Udaippu Catholics because of their hybridity. The building had cracks. The paint had worn out. The benches and the pulpit were moths eaten. Metallic material had corroded with the saline-laden wind.
Arulmiku Draupathai Amman temple trust took over the maintenance of the St. Xavier’s Church. Interestingly, a Hindu temple began taking care of a Catholic Church and that named after the inquisition kingpin! Walls were cemented. The building was painted. Windows and doors regained their decorativeness and paint. The entire furniture, with benches for the lay and pulpit for the cleric was re-laid.
Arulmiku Draupathai Amman temple trust went further. They met the transport costs of the Kaddaikkadu parish priest to come and conduct services for the Catholics on Sundays. 
A few decades ago Kaddaikkadu priest acquired a vehicle to travel. However, to this day, Arulmiku Draupathai Amman temple trust contributes to the upkeep and maintenance of the church. Arulmiku Draupathai temple trust conducts free bus service to Chilaw. The Catholics in the village enjoy the same service as the Hindus.
Magnanimity is not merely a word for Hindus. “Love thy neighbour irrespective of his/her caste, creed or faith” is not merely an empty saying for Hindus. Since the Raamaayana / Mahaabaarathaa period, this sand, this soil, this water, this skyline, this sea, these plants, these animals all have jointly and severally nursed, nurtured, and shaped to evolve a culture and tradition to synthesize as faith or belief or religion, that is Hindu. 
Your Eminence is at the top of the hierarchy of the Catholic Church in Sri Lanka. Your Eminence, Cardinal Albert Malcolm Ranjith Patabendige Don, Archbishop of Colombo hails from a village nearly 30 to 40 km south of Udaippu as the crow flies. You are the shepherd, to a herd, which has jointly and severally nursed, nurtured, and shaped to evolve a culture and tradition to synthesize as faith or belief or religion based on hate, violence, aggressiveness. 
So much so, your lieutenants at Mannar, the Bishops, preside over a flock that had periodically uprooted Hindu temples and structures, and brazenly sent hoodlums and hooligans to attack innocent Hindus.
Bishops of Mannar (the incumbent, predecessors and those in charge) reminds us of the infamous Popes of Vatican, who violated all the six oaths of Papacy: No pride, No gluttony, No greed, No Lust, No sloth, No envy.
Those infamous Popes are: 
Pope Stephen VI -22 May 896 to August 897; 
Pope John XII - 16 December 955 to 14 May 964; 
Pope Benedict VIII - 18 May 1012 to 9 April 1024; 
Pope Benedict IX ruler of the Papal States on three occasions between October 1032 and July 1048; 
Pope Urban VI - 1318 to October 15, 1389; 
Pope Alexander VI - 11 August 1492 to 18 August 1503; 
Pope Leo X - 9 March 1513 to 1 December 1521.
If one puts Udaippu in Chilaw on one pan, and Parappukadanthan in Mannar (where a historical Pillaiyaar temple, sacred to the Hindus, was defiled and destroyed to be replaced by a statue of St. Antony on 13th September 2021) on the other, the scales of civilisation and humanity will tilt in favour of the jointly and severally nursed, nurtured, and shaped culture and tradition that synthesized into faith or a belief or a religion, named Hindu.
We in Sri Lanka, whose aspirations are to perpetuate love, amity, and peace, not only among humans but also among animals, plants and the non-living healthy environment, want the entire island transformed into an Udaippu.
Your Eminence, Dear Cardinal Albert Malcolm Ranjith, you have the duty to appoint an internal commission (whose members shall be equi-centered impartial legal luminaries drawn from all the four religions in Sri Lanka), to inquire into, 
1. All the abuses of human rights, 
2. Violations of fundamental freedom,  
3. Forceful encroachment of the state and Hindu lands, 
4. Unethical incentives towards the conversion of Hindus to Christianity, 
5. Illegal interferences to bypass and violate statutes, regulations, and enactments in the functioning of the state administration and security apparatuses,
6. Unchristian coaching and teaching promoting hatred, violence, and aggressive tendencies through syllabuses at seminaries and moral schools,  
by the successive Bishops of Mannar and their team of priests, lay-persons, hoodlums, hooligans, and church-supported non-governmental organizations, during the period spanning from 19th May 2009 to 13th September 2021. 
We Hindus are prepared to line up witnesses supported by documentary and audio-visual aids to bring to the notice of the commission of at least 37 instances, (See Appendix) not to list those hundreds of undocumented irritations and intrusions.
If the Cardinal fails to work towards love, amity and peace through implementing recommendations / conclusions of such an impartial enquiry commission, we Hindus will seek the intervention of the Government of Sri Lanka in appointing a high-level commission of inquiry on the same lines suggested as above, to go into the listed accusations by Hindus.
If the Catholic Church fails us and if the Government also fails us, your Eminence, Cardinal Albert Malcolm Ranjith have shown us the direction and pathway to be followed to present these nefarious matters before an international inquiry, supported by the Office of the United Nations High Commissioner for Human Rights, Human Rights Council Branch - Complaint Procedure Unit.
Our objective is to achieve betterment of Sri Lankan inter-faith lifestyle as exampled by no other than the Sri Lankan Hindu citizens of Udaippu.
Assuring you of the best of support of all Hindus in Sri Lanka to make this island, an enlarged Udaippu.
Greetings from Hindus in Sri Lanka
I remain,
Yours sincerely,
Maravanpulavu K. Sachithananthan,
Leader, Siva Senai, Sri Lanka.
Copies to:
1. Hon. Vidura Wickramanayaka, M.P., State Minister of National Heritage, Performing Arts and Rural Arts Promotion, No. 346, Panadura Road, Horana.
2. Office of the United Nations High Commissioner for Human Rights, Human Rights Council Branch-Complaint Procedure Unit, OHCHR- Palais Wilson, United Nations Office at Geneva,  CH-1211 Geneva 10, Switzerland.











Monday, September 20, 2021

பார்ப்பனர் பூசகர் சுட்டது

 முகநூலில் படித்ததில் பிடித்தது!

1.பார்பனர்கள் வேறு, சிவாச்சாரியார்கள் வேறு

.

பார்பனர்கள் என்ன சங்கராச்சாரியார் கூட கருவறைக்குள் செல்ல முடியாது

.

2. சிவ தீக்ஷை பெற்ற சிவாச்சாரியார்கள் தான் செல்ல முடியும்.

.

3. மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பர்வத ராஜ குலம் என்கிற செம்படவர்கள் தான் அர்ச்சகர்கள்.

.

4. வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் பார்பனரல்லாதார் தான் அர்ச்சகர்.

.

5. அண்ணாமலையார் தீபம் ஏற்றும் உரிமை சிவாச்சாரியாருக்கு இல்லை, பர்வத ராஜ குல மீனவர்களுக்கு தான் உண்டு.

.

6. சாத்தனூர் சிவகிரியில் கிராம தேவதைக் கோவிலில் பெண்கள் தான் அர்ச்சகர்கள். இந்த கிராம தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டவர்களில் பலர் பார்பனர். 

.

7. சிறுவாச்சூர் மதுர காளியம்மன் பார்பனர்களுக்கு குல தெய்வம். அங்கு குருக்கள் கிடையாது.

பிற சாதி பூசாரிதான்.

.

8. தென் தமிழக பார்பனர்கள் பலருக்கு குலதெய்வம் ஐயனார் (தர்ம சாஸ்தா), மாரியம்மன் , தர்ம தேவதை போன்றவை தாம்.

.

9. குலதெய்வம் மறந்த பார்பனர்கள் திருப்பதி வெங்கடேசனைக் குல தெய்வமாகக் கொள்வது உண்டு.இந்தக் கோவில்களில் பிற சாதியினர் தான் அர்ச்சகர்கள்.

பார்பனர்களே உள்ளே செல்ல முடியாது.

.

10. இங்கெல்லாம் போய் அனைவரும் அர்ச்சகர் என்றால் முழுதாக வீடு திரும்ப முடியாது.

.

11. சமயபுரம் கோயிலில் பண்டார சமூகத்தார் தான் அர்ச்சகர்

12. கேரளாவில் பெரும்பாலான கோயில்களில் போற்றி/பொட்டி ஸமுகத்தவர்தான் அர்ச்சகர்

.

13. நம்பூதிரி ப்ராமணர்கள் இல்லை .

.

14. வட தமிழக திரௌபதி தர்மராஜா கோயில்களில் வன்னியர்களே அர்ச்சகர்கள்

.

15. நமது ஊர்களில் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் பண்டாரங்கள் தான் அர்ச்சகர்கள்

.

16. தஞ்சாவூர் கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் பண்டரிநாதன் ஆலயத்தில் எல்லா சாதியினரும் கருவறைக்குள் சென்று பெருமாளை தொட்டு வழிபடலாம். இன்றும் இந்த நடைமுறை உள்ளது. 

யார் வேண்டுமானாலும் எந்த சாதியினரும் போகலாம்.

.

17. ராமன் பிராமணன் அல்ல, கிருஷ்ணன் ஆயர் குலத்தில் பிறந்தவன்.

.

18. வைணவ மரபில் 'திராவிட வேதம்' மிக முக்கியமானது. வைணவ கோவில்களில் அர்ச்சகர்கள் கூட்டம் கூட்டமாக திராவிட வேதத்தை கூறிக் கொண்டு வருவதை இன்றும் பார்க்கலாம். 

.

19. திராவிட வேதமாகிய 4000 திவ்ய பிரபந்தத்தை எழுதிய 12 ஆழ்வார்களில் எவ்வளவு பார்பானர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம். அதிலும் 'திருப்பாணாழ்வார்' தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். இவ்வொரு பல சாதிகளைச் சார்ந்த ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபாந்ததைத் தான் இன்றைய பார்பன அர்ச்சகர்கள் கோவில்களில் பாடுகின்றார்கள்

.

20. சைவ சமயத்தில் 63 நாயன்மார்களில் 13 பேர்கள் தான் பிராமணர்கள். ஏனையர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

.

21. சிவாச்சாரியர்கள் குரு பூஜை எடுத்து வருடா வருடம் கொண்டாடுவதும் இவர்களை தான்.

.

22. மயிலாப்பூர் மற்றும் நமது கொங்கு நாட்டு அவிநாசியில் அறுபத்துமூவர் திருவிழா மிக பிரசித்தம். 

.

23. தேவார , திருவாசகம் சைவ சமயத்தினரால் மிகவும் போற்றப்படுவது. இதிலும் தேவாரம் பாடிய ஞானசம்பந்தர் பார்பனர், சுந்தரர் சிவ பிராமணர்,

திருவாசகம் பாடிய மணிவாசகர் ஒரு பார்ப்பணர் 

ஆனால் திருநாவுக்கரசர் ஒரு வேளாளர்

.

24. இந்த நால்வரும் வேறு வேறு சாதிகள் 

நால்வரையும் சமமாக பாவித்து வணங்குவது சைவ மரபு 

.

25. அனைவரும் சமம் என்று போதித்த சீர்திருத்தவாதி ராமானுஜர் ஒரு பார்பனர்.

.

26. ப்ரஹ்மம் ஒன்றுதாம் பர பிரமம் ஒன்றுதாம்' என்று பாடிய அன்னமாச்சார்யா ஒரு பார்பனர்.

.

27. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் கோயில் பட்டர்களிடம் இரு பிரிவுகள் உண்டு. வைகானசம், பாஞ்சராத்னம் என்று.

.

 ஒரு சம்பிராதாயத்தவர் இன்னொரு சம்பிரதாயத்தில் தலையிட மாட்டார்கள்.. அதாவது ஸ்ரீரங்கம் கோயில் பாஞ்சராத்னம் அதே கூடல் அழகர் கோயில் வைகானசம்.. இங்கே இருக்கும் பட்டர் அங்கே செல்ல முடியாது..

.

28. அதோடு மட்டுமல்ல, சைவத்தில் தீட்சிதர்கள் பூஜை செய்யும் சிதம்பரத்தில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்ய முடியாது 

.

அதே போல் சிவாச்சாரியர்கள் பூஜை செய்யும் கோவில்களில் தீட்சிதர்கள் பூஜை செய்ய முடியாது 

.

29. ஒரு கோவிலில் அக்கோவில் ஸ்தானிக அர்ச்சகர் தவிர வேறு யாரும் அனுமதி இன்றி சாமியை தொட முடியாது 

.

30. கொங்கு நாட்டு குல தெய்வ கோவிலில் பண்டார சமூகத்தவர்கள் தான் அர்ச்சகர்களாக உள்ளனர் 

.

வெற்று ஜாதி அரசியல், இனவெறி அரசியல் செய்பவர்களுக்கு இதுவெல்லாம் எதுவும் புரியாது

.

முகநூல் பதிவு ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டு, சில திருத்தங்களுடன் பதிவு செய்கிறேன்.

சிவாயநம!

Sunday, September 19, 2021

சைவத் திருக்கோயில்களைக் காப்பாற்றியமை 1973 ஆனி

 புரட்டாதி 2 2052 வெள்ளிக்கிழமை (17 9 2021)

அன்புள்ள எனது அருமை ஞானானந்தன் அவர்களுக்கு
நீங்கள் ஆத்திரேலியாவில் பிரிசுப்பேனில் பொறியியலாளாளராகப் பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொடர்வண்டி நிலையங்களை தொடர்வண்டிச் சாலைகளை தொடர்வண்டிப் பெட்டிகளை அமைக்கும் ஆலோசகராக இருந்து வருகிறீர்கள்.
கொழும்பில் வாழ்கின்ற மேதகு ஆளுநராக இறுதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்று இருக்கின்ற எனது அருமை நண்பர் திரு லோகேஸ்வரன் அவர்கள் எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார்.
சைவத் திருக்கோயில்களை வழிபட்டாளர்கள் ஆட்சியில் கொண்டு வருகின்ற முயற்சியை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறிந்து முறியடித்தீர்கள்.
வடமேற்கு மாகாணத்தில் வட மத்திய மாகாணத்தில் தெற்கு மாகாணத்தில் இன்று வரை சைவக் கோயில்கள் சைவ ஆட்சியிலே இருக்கின்றன. அங்கு பெரும் எண்ணிக்கையில் சைவர் அல்லாதவர்கள் வழிபடுகிறார்கள்.
அந்தச் சட்டம் வந்திருந்தால் இன்று அந்தந்த மாகாணங்களில் உள்ள சைவத் திருக்கோயில்கள் மியன்மாரில் உள்ளதுபோல் புத்தர் சிலைகளையும் கொண்ட கோயில்களாக மாறியிருக்கும். சைவ ஆகம ஆட்சி அற்றுப்போய் இருக்கும்.
மியன்மாரில் உள்ள சைவக் கோயில்களில் பிரகாரத்தில் பல மூர்த்தங்களுடன் புத்தரின் மூர்த்தமும் கட்டாயமாக இருக்கவேண்டும்.
ஓம் சாக்கிய நமகா
ஓம் கௌதமா நமகா
ஓம் சித்தார்த்த நமகா
ஓம் கபிலவஸ்தாய நமகா
ஓம் உலும்பினியாய நமகா
ஓம் புத்தாய நமகா
என்ற சுலோகங்களைச் சொல்லி சைவக் குருக்களே பூசையும் செய்வார். அடியவர்களுக்காக அர்ச்சனையும் செய்வார்.
நீங்களும் 20 மாணவர்களும் சேர்ந்து அன்று சைவத்தைக் காப்பாற்றினீர்கள். சைவத் திருக்கோயில்களைக் காப்பாற்றினீர்கள்.
கரணவாய் சிவா ஞானானந்தன்
கரணவாய் கந்தையா நீலகண்டன்
மட்டுவில் நடராசா கருணாகரன்
யாழ்ப்பாணம் இளங்கோ வேந்தனார்
ஆகிய 4 பெயர்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன
அனைவரும் அக்காலத்தில் கட்டுபெத்தை பொறியியல் கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் படித்தவர்கள்.
அந்த நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்திலிருந்து அண்மைக் காலமாக வெளியாகும் மீளுருப் பெற்ற ஈழநாடு இதழின் இன்றைய பத்தி ஒன்றில் ஊர்க்குருவியார் பாராட்டி எழுதியிருக்கிறார்.
அந்தப் பாராட்டுகள் யாவும் உங்களையும் அந்த மாணவர்களையுமே சேரும்.
நன்றி
அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உரை இன் படமாக இருக்கக்கூடும்
Sivakami Sandrasegaran, Kethis Arumainayakam மற்றும் 18 பேர்
2 கருத்துகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

மதவெறியின் மாற்றான சமயப் போர்

 இலங்கையின் இயல்பையும் இயற்கையையும் அழிக்க முயல்வோர்


மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

வத்திக்கானில் பாப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டர். தனி மனித ஒழுக்கத்தில் சீர் கெட்டவன். பாப்பாண்டவர் ஆக இருந்து கொண்டே பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தவன். களவு பொய் காமம் கோபம் கைவரப்பெற்றவன் ஆறாம் அலெக்சாண்டர்.

போர்த்துக்கல் அரசன் முதலாம் இம்மானுவேல் கொடுங்கோலன்.

ஆசியாவைக் கிருத்தவ மயமாக்குக. போர்த்துக்கேய மன்னனுக்கு வத்திக்கான் பாப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரின் ஆணை.

இதற்கு முன்பும் பாப்பாண்டவர் அரசர்களுக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள் 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாண்டவர் இரண்டாம் அர்பன் பிரான்சு சென்றார் 

அங்குள்ள வட்டாரப் படைத் தளபதிகளை பாளையக்காரர்களை அழைத்தார். மக்களை அழைத்தார்.

யெருசலத்தை மீட்க வேண்டும். படைகளுடன் போய் யெருசலேத்தை மீட்டு வருக. முகமதியர் இடம் இருந்து மீட்டு வருக.

பாப்பாண்டவரின் ஆணையைத் தலை மேற்கொண்ட பிரெஞ்சுப் பாளையக்காரர் அல்லது படைத் தலைவர்கள் அல்லது வட்டாரத் தளபதிகள் மூவர் இணைந்து படையெடுத்தனர்.

ஒட்டுமான் பேரரசை மீறினர்
சிரிய துருக்கியப் படைகளை வீழ்த்தினர். 
சிலுவைப் போர் நடத்தினர்
யெருசலேத்தை மீட்டனர்.

பாப்பாண்டவர் இரண்டாம் அர்பனின் ஆணையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுச் சிலுவைப் போரில்  வெற்றியைக் கொண்டு வந்தது போல,

பாப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரின் ஆணையை ஏற்று ஆசியாவில் கத்தோலிக்கக் கிருத்துவத்தை வலிந்து புகுத்தியது போல,

மீண்டும் இன்றைய பாப்பாண்டவர் அறைகூவல் விடுத்திருக்கிறார். இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்க நாளில் அவரின் செய்தி. ஆசியாவை முழுமையாகக் கிருத்தவ மயமாக்கும் நூற்றாண்டே இருபத்தியோராம் நூற்றாண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்றாலும் 
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் 
இன்றைய சூழ்நிலை என்றாலும்

களத்தில் நின்ற படை வீரனுக்கு உந்துதலைக் கொடுத்தது பாப்பாண்டவரின் ஆணை. 
சமயத் தலைவரின் ஆணை.

போரில் உயிர் துறந்தால் சொர்க்கம் உறுதி எனப் பாப்பாண்டவர்கள் கூறிவருகின்றனர். 

ஐரோப்பாவின் நூற்றுக்கணக்கான மொழிகள் வட்டார வேறுபாடுகள் பண்பாட்டுக் கூறுகளைக் கடந்து கிருத்தவம் என்கின்ற சமய உணர்வின் அடிப்படையில் போர்களை நிகழ்த்தினர். களத்தில் படைவீரருக்கு உந்துதலைக் கொடுத்தனர்.

இன்றைய முகமதியரின் போர்க்கோலமும் சமயத்தை அடிப்படையாகக் கொண்டது.

மொழிகளைக் கடந்து பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து நாடுகளின் எல்லைகளைக் கடந்து அல்லாவின் அரசை பூமிப்பந்து முழுவதும் நிலைநாட்டுவோம் என்ற வெறியைத் தளமாகக் கொண்டது.

பாப்பாண்டவரின் நோக்கத்திற்கும் 
முகமதியரின் நோக்கத்திற்கும் வேறுபாடில்லை

2009 வைகாசியில் இலங்கையில் சிங்கள கத்தோலிக்கம் வெற்றி பெறவில்லை. இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் சிங்கள புத்தர்களே.

அத்துரலியே இரத்தன தேரர் போன்ற தேரர்கள் போர்க்களம் சென்று ஒவ்வொரு போர்வீரரின் பின்னால் நின்று சுடு சுடு என்று சொன்னதை நாங்கள் காணொளிகளில் படங்களில் பார்த்திருக்கிறோம்.

தோல்வியுற்றவர்கள் யார்? முகமதிய கிருத்துவ சைவ மதங்களின் இணைப்புத் தளத்தில் தமிழ்மொழியை முன் நிறுத்தியவர்.

கடவுளின் பெயரால் சமயத்தில் பெயரால் நடந்த போர்களே வெற்றி பெற்றிருக்கின்றன.

நேற்றைய தலிபான்களின் வெற்றியும் அந்தத் தளத்தில் அன்றோ.

சைவர்களின் ஆண்மையை மலடாகி 
சைவர்களாக வஞ்சகமாகப் பலிக்கடாக்களாக்கி
சைவத் தமிழர் போரில் தோற்கக் கிறித்தவர்  காரணர்.

போரின் தோல்வியை பயன்படுத்துகிறார்கள். போருக்குப் பின் நடந்த 
மதமாற்றக் கொடுமை 
நில அபகரிப்பு கொடுமை 
கிருத்தவ மேலாதிக்கக் கொடுமை
யாவையும் நோக்குவோர் தோல்வியைக் கிறித்தவர்கள் விரும்பினார்கள் எனவே கருதுவர்.

போர்க் காலத்திலும் பின்னரும் முகமதியர் சைவர்களின் காணியை அபகரித்தனர். சைவப் பெண்களைக் கட்டாயமாக மதம் மாற்றினர்.

இன்றோ அம்பாறை திருகோணமலை முகமதியப் பெரும்பான்மை மாவட்டங்கள். ஒரு காலத்தில் அவை சைவப் பெரும்பான்மை மாவட்டங்கள்.

இலங்கையில் நடப்பது மொழிப்போர் அல்ல. புத்தர்களும் கிருத்துவர்களும் முகமதியர்களும் சைவர்களுக்கு எதிராக நடத்துகின்ற சமயப் போர்.

புத்தர்கள் வெற்றி பெறுமாறு தூண்டியவர்கள் கிருத்துவர்களும் முகமதியர்களும்.

சைவ உணர்வை மலடாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

சைவ உணர்வை நீர்த்துப்போக்கும் நோக்கத்தைச் சவாலாகக் கொள்ள வேண்டும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப்
பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும்  நிலத்தையும் சூரியனையும் இயற்கையையும் வழிபட்டு வாழ்கின்ற 

காலந்தோறும் மனிதநேயத்தை தளமாகக் கொண்டே படிப்படியான நல் மாற்றங்களை உள்வாங்கி பண்பாட்டைக் கூர்மையாக்கி வருகின்ற சைவமரபை உடைத்தெறிந்து அழித்தொழித்து 

புத்த கிருத்தவ முகம்மதிய மரபுகளைத் திணிக்கும் முயற்சியை எதிர் கொள்ளும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் சைவப் பெரு மக்களுக்கு வரவேண்டும்.

கிருத்துவர்களுக்கும் முகமதியர்களுக்கும் 1500 ஆண்டுகால முரண்பாடும் போரும். அந்தப் போர்கள் பாலைவனப் பகுதிகளிலேயே நடந்தன. 

எனினும் முகமதியர்கள் அத்திலாண்டிக் கடல் கரை வரை படையெடுத்துச் சென்ற வரலாறும் உண்டு.

பாலைவனத்தில் போரிட்டு வந்தவர்கள் இலங்கைப் பசுஞ்சோலையைப் போர்க்களமாக மாற்றி வருகின்றனர். 

2050இல் முகமதியர் ஒருவரே இலங்கையின் குடியரசுத் தலைவராவார் எனச் சிங்கள புத்த மேலாதிக்க நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் திரு சம்பிக்க இரணவக்க அவர்கள் விரிவாகப் புள்ளிவிவரக் கணக்கெடுத்து நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

ஓட்டமாவடியில் அமைச்சர் பதவியைத் கொண்டோரின் காளி கோயில் அழிப்பு, 

அளுத்கமவில் தம்புள்ளையில் புத்தர் மீதான தாக்குதல் புத்த கோயில் இடிப்பு 

உயிர்த்த ஞாயிறு கிருத்தவ தேவாலயங்களில் தாக்குதல். 

சிகாதி நோக்குடன் 2050இல் குடியரசுத் தலைவராகும் நோக்குடன் முகமதியரின் முன்னெடுப்புகள்.

தமிழரின் வடமேல் மாகாணத்தில் 1921 சட்டசபைக்கு வேட்பாளராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் நிறுத்துவதாக வாக்குறுதி கொடுத்தனர் இலங்கைத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள்.

கத்தோலிக்க மேலாதிக்க அழுத்தத்தின் விளைவாக அருணாசலத்தின் பெயரை நீக்கி கத்தோலிக்கராக டிமெல்லை வேட்பாளர் ஆக்கினர் இலங்கைத் தேசிய காங்கிரசார்.

வாய்க்கால் ஆறு தொடக்கம் முகத்துவாரம் ஆறு வரை நீண்ட வடமேல் மாகாணம் 

தமிழரின் சைவரின் கோட்டையாக இருந்த வடமேல் மாகாணம் 

சிங்கள கத்தோலிக்கமாகப் படிப்படியாக மாறி இன்று சிங்கள புத்தப் பெரும்பான்மை மாகாணமாகவதற்கு 1920களிலேயே இலங்கைத் தேசிய காங்கிரஸ் வித்திட்டது.

அதே நோக்குடன் அதே திட்டமிடலுடன் அதே செயல் வேகத்துடன் வடமேல் மாகாணத்திற்கு வடக்கிலுள்ள, முகத்துவாரம் ஆறு பாலி ஆறு அருவி ஆறு என எல்லைகளைக் கொண்ட மன்னார் மாவட்டத்தை மாற்றி அமைத்து சைவர்களிடம் இருந்து பிடுங்கி எடுப்பதற்கு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

முள்ளிக்குளத்தில் அடாத்தான முகமதியர் குடியேற்றம் 

மற்ற இடங்களில் சைவக் காணிகளை அரச காணிகளை அபகரித்துத் தேவாலயங்கள் அமைக்கும் கத்தோலிக்க மேலாதிக்கம் 

மடுவில், கொண்டச்சியில் மற்றும் இடங்களில் புத்தரின் அரச குடியேற்றும்,  முருங்கனில் திருக்கேதீச்சரத்தில் அடாத்தாகப் புத்தர் கோயில்களை அமைக்கும் புத்த மேலாதிக்கம்

இவை மன்னார்ச் சைவர்களை, சைவரின் மன வலிமையை மலடாக்கி சைவர்களை உணர்வற்றவர்கள் ஆக்குவதற்காக

முகமதியமும் கத்தோலிக்கமும் புத்தமும் இணைந்து நடத்தும் புனிதப்போர் - சமயப் போர் 

மொழிப்போர் அல்ல பண்பாட்டுப் போர் அல்ல மதவெறியின் மாற்றான சமயப் போர்.

இந்தக் கொடுமையான சூழ்நிலையில் நான் பல வழிகளில் சைவர்களுக்காக முகமதிய கிருத்துவ புத்த சவால்களைச் சந்தித்து வருகிறேன்.

ஒரே நேரத்தில் பல முகங்களில் பல முனைகளில் பல களங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 

பாம்பையும் வேம்பையும் வழிபடுவோம் 
கல்லையும் மண்ணையும் வழிபடுவோம் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவோம் கடலையும் ஆற்றையும் வழிபடுவோம் 
ஐந்து பூதங்களையும் வழிபடுவோம் 
அவற்றைக் கடவுளாகக் கொண்டு வழிபடுவோம் என்ற இயற்கை வழிபாட்டை முன்னெடுக்கும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான சைவத் தமிழ் மரபு இலங்கையில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதே இன்றைய வினா!

மன்னார் ஆயரை

 மன்னார் ஆயரை எச்சரிக்கின்றேன்

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

வன்முறையைத் தூண்டுகிறார் மன்னார் ஆயர்.

தமிழரிடையே பிளவுகளை ஊக்குவிக்கிறார் மன்னார் ஆயர் 

மண்ணின் மரபுகளை அழித்தொழிக்க முயல்கிறார் மன்னார் ஆயர் 

இத்தகைய முயற்சிகளைக் கைவிடுமாறு மன்னார் ஆயரை எச்சரிக்கிறேன்.

வரலாற்றில் மிக மோசமானவராகப் போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரைக் கூறுவார்கள். 

அவரைப்போலவே இன்றைய மன்னார் ஆயரும் மிக மோசமான ஆயர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறாரா?

மன்னாரைக் கைப்பற்றுக என ஆணையிட்டவன் போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டர். 

அந்த ஆணையை ஏற்றுப் பிரான்சிஸ் சேவியர் என்ற கொடுமையாளரை அனுப்பியவன் போத்துக்கேய மன்னன் முதலாம் இம்மானுவேல்.

Mannar Inquisition சூத்திரதாரி பிரான்சிஸ் சேவியர். அவன் நூற்றுக் கணக்கில் சைவர்களைக் கொலை செய்து புதைத்த மன்னார் நகரத்தின் புதைகுழி 420-480 ஆண்டுகள் வரை பழமையானது எனத் தொல்லியலார் கூறுகின்றனர். அக்காலம் கொடுமையாளன் பிரான்சிஸ் சேவியரின் காலம்.

- பிரான்சிஸ் சேவியரைப் பின்பற்றி 
- போர்த்துக்கேயர் மன்னன் முதலாம் இம்மானுவேலனைப் பின்பற்றி 
- போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாண்டரைப் பின்பற்றி 
மன்னாரில் சைவர்களை ஒழிக்க முயல்பவர் இன்றைய மன்னார் ஆயர்.

வீறு கொண்டு எழுந்த முதலாம் சங்கிலியன் அக்காலக் கொடுமையாளனான பிரான்சிஸ் சேவியரை ஓட ஓட விரட்டினான் என்பதை இன்றைய மன்னார் ஆயர் மறந்துவிடக்கூடாது.

மடு பிரதேசச் செயலகப் பிரிவு சைவப் பெரும்பான்மைப் பூமி, சிவபூமி. அங்கே பரப்புக்கடந்தான் இல் உள்ள பசுஞ்சோலையின் தலைவரான பிள்ளையார் சிலையை எடுத்து விட்டு, அரேபிய பாலைவனத்துத் துறவி அந்தோனியார் சிலையை வைக்க முயன்ற கொடுங்கோலர்களை அனுப்பியவர் மன்னார் ஆயர். 

சைவர்கள் மறக்கவில்லை. செட்டிகுளத்தில் பிள்ளையார் கோயிலுக்கு முன்பு அந்தோணியார் சிலையை நிறுவிய ஆயரின் அடியாட்களைச் சைவர்கள் மறக்கவில்லை. அந்தச் சிலையை வெற்றிகரமாக அகற்றினோம். அங்கே விவேகானந்தர் சிலையை நிறுவினோம்.

1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயிலில் மரியாள் சிலையை நிறுவிய பாதிரியாரையும் அடியாட்களையும் கண்டுபிடித்தனர்.

மரியாள் சிலையை அகற்றினர். இன்றுவரை அந்தப் பாதிரியாரையும் அடியாட்களையும் காணவில்லை என்ற நிலையை உருவாக்கிய வீரமறவர்கள் விடுதலைப் புலிகள்.

பரப்புக்கடந்தானில் சிவ பூமியான மடுப் பிரதேசத்தில் பிள்ளையார் சிலையை அகற்றும் துணிவை அடியாள்களுக்குக் கொடுத்தவர் மன்னார் ஆயர்.

திருக்கேதீச்சர மஹாசிவராத்திரி வளைவை உடைக்கவும் நந்திக் கொடியை காலால் மிதிக்கவும் பாதிரியாருக்கு அடியாள்களுக்கும் துணிவைக் கொடுத்தவர் மன்னார் ஆயர்.

முதலாம் சங்கிலியன் இன்று இல்லை.
விடுதலைப் புலிகள் இன்று இல்லை.

எனவே வேட்டையாடலாம் சேட்டை விடலாம் என மன்னார் ஆயர் துணிந்து நிற்கிறார்.

அவரை எச்சரிக்கிறேன். 

தமிழரைப் பிளவுபடுத்தும் முயற்சியைக் கைவிடுக.

வன்முறையைத் தூண்டி மன்னாரை மீண்டும் குருதி வெள்ளமாக்கும் முயற்சியைக் கைவிடுக.

மண்ணின் மரபை அழிக்கும் முயற்சியைக் கைவிடுக.

சைவ மக்கள் சமயப் பொறை காண்பவர்கள். அதைப் பலவீனம் என மன்னார் ஆயர் கருதி, பிள்ளையார் சிலைகளை உடைத்து அந்தோணியார் சிலைகளை வைக்க ஆணையிடுவாராயின் அவர் சைவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.

மடுவில் கண்ணகை அம்மன் கோயிலையும் மாந்தையில் திருக்கேதீச்சரத்தையும் உடைத்தது போன்று தமிழ் மரபு அடையாளங்களை தொடர்ந்து உடைக்கலாம் அழிக்கலாம் என மன்னார் ஆயர் கருதுவார் ஆயின் அதற்காக ஆயர் வருந்த வேண்டிய காலங்கள் விரைவில் வரும். 

மன்னார் ஆயரே, சைவர்கள் உங்களை எச்சரிக்கிறார்கள்.

Monday, September 13, 2021

கற்பனை சுமந்திரன் ஸ்டாலின்


தமிழக முதலமைச்சர் ஸ்டாலினைச் சுமந்திரன் சந்தித்தார்.

இலங்கைத் தமிழர்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பாக இன்று காலை சென்னையில் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் சந்தித்தார்.

நீண்ட நாள் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் தமிழகத்தின் மூத்த ஆயர்களின் ஒருவரான பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்தார்கள்

சுமந்திரன்: வணக்கம் 

முதலமைச்சர்: வணக்கம் 

சுமந்திரன்: திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததால் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

முதலமைச்சர்: நன்றி 

சுமந்திரன்: தமிழகத்தின் வளர்ச்சியை கண்டு பிரமித்துப் போய் இருக்கிறோம் உங்கள் தலைமையில் மேலும் வளர்ச்சி காண வேண்டும். அதற்காகவே திராவிட முன்னேற்ற கழகத்தைத் தமிழகத்தார் தேர்ந்து சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் பெரும்பான்மையாக அனுப்பியிருக்கிறார்கள்.

முதலமைச்சர்: ஈழத் தமிழர்கள் மீது நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம். நீங்கள் எங்களின் தொப்புள் கொடி உறவுகள். 

சுமந்திரன்: உங்கள் தந்தையார் கலைஞர் அவர்களும் அவரைத் தொடர்ந்து நீங்களும் காட்டிவரும் ஆதரவுக்கு நன்றி, தமிழக அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் 

முதலமைச்சர்: 1956 சிதம்பரம் மகாநாட்டிலும் பின்பு தூத்துக்குடியில் நடந்த மாநாட்டிலும் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தீர்மானங்களை இயற்றினோம். அத் தீர்மானங்களை என் தந்தையார் கலைஞரே முன்மொழிந்தார் தொடர்ச்சியாக நாங்கள் ஈழத் தமிழர் மீதும் அவர்களது அரசியல் எதிர்காலம் மீதும் அக்கறையுடன் இருக்கிறோம். இப்பொழுது நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? 

சுமந்திரன்: இலங்கையில் தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை இலங்கை அரசுடன் பேசித் தீர்க்க விரும்புகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் அனைத்து உலகமும் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் இலங்கை அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கொழும்பில் பிறந்தேன் என்பதால் எனக்குச் சிங்கள அரசியல் தலைவர்களின் மனோநிலை தெரியும். இலங்கையின் தமிழர் மரபு வழித் தாயகத்தில் வாழ்கின்றவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் எதிர்க்கிறார்கள். இரணில் விக்கிரமசிங்க என்றாலும் இராஜபக்சக்கள் என்றாலும் நல்லவர்கள். தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். எனவே அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம். 

முதலமைச்சர்: மிக்க மகிழ்ச்சி நல்ல வழியில் செல்கிறீர்கள். மேலும் உயிர் இழப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதையே நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் தமிழகமும் தமிழகம் வழியாக இந்தியாவும் தரும். 

சுமந்திரன்: இராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளோம். தமிழக அரசியவாதிகள் சிலர் வட்டுக்கோட்டை 2 என்ற தலைப்பில் உணர்ச்சிவசப்பட்டு இலங்கையில் தமிழருக்கு தனியான நாடு வேண்டும் என்ற கண்ணோட்டத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதனால் எங்கள் பேச்சு வார்த்தை குழம்பிப் போயிருக்கிறது. நீங்கள் தலையிட்டுத் தமிழகத்தில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலங்கையின் மரபுவழித் தாயகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் உணர்ச்சிவயப்பட்டு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பார்கள். நான் அவர்களை எதிர்த்து வருகிறேன். இதனால் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு என் மீது நம்பிக்கை உண்டு. 

பேராயர் எஸ்ரா சற்குணம்: பிரபாகரன் கொலைகாரன். சுமந்திரனின் பெற்றோரையும் பிரபாகரன் தண்டித்தார். பிரபாகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருப்பது இலங்கை அரசுக்கு தலையிடியாக உள்ளது. தமிழக முதலமைச்சராக நீங்கள் பிரபாகரன் ஆதரவாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

சுமந்திரன்: போர்க் காலங்களில் இருபக்கமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை மனித உரிமை ஆணையர் அழுத்திக் கூறியுள்ளார். அந்த அறிக்கை வரிகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையத்துக்கு நாங்கள் எழுதும் கடிதங்களில் அந்த அறிக்கை வரிகளை மேற்கோள் காட்டுகிறோம். 

முதலமைச்சர்: தமிழகத்தில் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சட்டசபையில் தீர்மானம் இயற்றவா? ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதவா? பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவா? தமிழகததில் அனைத்துக் கட்சிகளைக் கூட்டிப் பேசவா? சொல்லுங்கள் என் கட்சிக்காரர்களுடன் பேசுகிறேன். 

சுமந்திரன்: இலங்கை அரசுக்கு எதிராக நீங்கள் எதையும் செய்துவிட வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அரசோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி காண்போம். இரணில் விக்ரமசிங்கவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுத்தோம். அவர் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவருடைய ஆட்சி நல்லாட்சி. அதைப்போலவே இராஜபக்சக்களினுடைய ஆட்சியும் நல்லாட்சியே. அவர்கள் ஈழத்தமிழர் அரசியல் எதிர்காலத்துக்காக எதையும் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து நல்லாட்சி அமைக்க இருக்கிறோம். எனவே தமிழக அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஈழத்தமிழர்கள் தொடர்பாகத் தீவிரமாகச் செயற்பட வேண்டாம். தில்லியில் அரசிடமும் கட்சிகளிடமும் இவ்வாறே கோரியுள்ளோம். 

முதலமைச்சர்: அப்படியா! உங்களுடைய இந்தவேண்டுகோள் ஈழத் தமிழர் சார்பில் இருப்பதை எனது கட்சிக்காரர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களின் உதவியுடன் இங்குள்ள மற்ற கட்சித் தலைவர்களையும் நீங்கள் சந்தித்துப் பேசுங்கள். இதே கோரிக்கைகளை அவர்கள் முன் வையுங்கள். எங்களது தலையீட்டைக் குறைத்துக் கொள்கிறோம். இராஜபக்ஷவுடன் நீங்கள் உங்களுடைய அரசியல் எதிர்காலத்தைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

சுமந்திரன்: இதையே நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். முதலமைச்சர் அவர்களே என்னுடைய தலைவர் சம்பந்தன் அவர்களிடம் நீங்கள் சொன்ன செய்திகளை அப்படியே சொல்கிறேன். 

முதலமைச்சர்: என்னுடைய கட்சிக்காரர்களிடம் இதை சொல்கிறேன் மாவை சேனாதிராஜா எனக்கு நன்கு தெரிந்தவர். நலமாக இருக்கிறாரா? சிவாஜிலிங்கம் நலமாக இருக்கிறாரா? மறவன்புலவு சச்சிதானந்தன் என்னுடைய அப்பாவின் நெருங்கிய ஆலோசகர். அவர் நலமாக இருக்கிறாரா? பழைய தலைவர்கள் எல்லாம் இப்பொழுது இல்லை என்றாலும் ஆனந்தசங்கரி அவர்கள் அங்கு இருக்கிறார்கள். நலமாக இருக்கிறாரா? என் அப்பாவுக்காக சன்சோனி விசாரணைக்குழுவில் தோன்றிய பெரும் அறிஞர் ஜீ ஜீ பொன்னம்பலம். அவரின் பெயரன் கஜேந்திரகுமார் நலமா? யாவரிடமும் நான் அன்புடன் விசாரித்தேன் எனக் கூறுங்கள்.

சுமந்திரன்: நீங்கள் கேட்டவர்கள் எல்லோரும் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள் உங்களுடைய அன்பை அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று தெரிவிப்பேன். என்னைச் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. என்னை உங்களிடம் அழைத்து வந்த பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களுக்கும் நன்றி.

(யாவும் கற்பனை)

Saturday, September 04, 2021

ஊலர் Hoole திசை திருப்புகிறார்

www.colombotelegraph.com - nallur-kandasamy-of-the-other-side-nallur-versus-st-james-of-town-side-



 

1. "Old families from Changili Thoppu, the Hensmans, and the Phillipses, may assert royalty through their lands there," says Hoole. He acknowledges that these families were the initial rice bowl Christians. There were no Christians in Tamil areas before them.

2. "King Changili martyred the first Franciscans and many Tamil saints, including his own son," says Hoole. The fact remains that at Mannar Inquisition, thousands of Saivaites were killed to be buried at a grave in the present-day Mannar town. Carbon dating of this grave testifies them as 480-year-old remnants of bones and skulls. This inquisition was conducted by Francis Xavier in person along with his lieutenant John Lawson. King Sankili II sent a force headed by his son. Cunningly the inquisition mastero Xavier imprisoned the son with the support of Portuguese soldiers. So King Sankili II led a force to Mannar, drove the Portuguese soldiers away. The captive son was killed by the avenging Portuguese soldiers.  Sankili II killed John Lawson. Francis Xavier escaped to Tuticorin. Franciscans and few converts were killed during the victorious war led by Sankili II. All those killed at war were burnt in wooden pyres following Sankili II's  Hindu tradition.

3. "Changili took baptism in Goa before his beheading for his crimes, testifying “I would rather die a Christian Coolie than a Heathen King” and “uttering the sweet name of Jesus” (Queiroz, 690-1) says, Hoole.
Queiros wrote the Conquista temporal, e espiritual de Ceylão,
although he had himself never traveled to the island. At Goa, there is no archival material supporting the description of Queiroz on Sankili II. Except for Queiroz, no other Portuguese historian either in Lisbon or in Goa recorded so.

4. Hoole dismisses Yalpaana Vaipava Maalai as "nonsence'. Hoole trusts the word of the far away Queiroz whose primary interest was the restoration of the central role of the Portuguese military in Srilanka, a fact that sits uneasily with his religious vocation. Also, Queiroz had no access to textual sources in Sri Lanka as Dutch were in control of coastal Sri Lanka. Also, Dutch had banned Catholicism in their territories. For the Jesuit historians, especially those who wrote history without visiting Sri Lanka, the textual sources and oral traditions of Sri Lankan non- Christians were imperfect.

5. Queiroz never attempted to learn about the linguistic traditions of Sri Lanka. He writes that an inscription in “ancient characters of the Chingala” was found on the stone after dismantling a temple in Triquimale (Trincomalee). The passage was deciphered, according to Queiroz as meaning that “there will come a nation called Francos who will demolish it [this temple] and there will be no King in this Island to rebuild it anew.” Let these rice bowl ancestry-laden Hoole know that it was Queiroz who wrote "nonsense" as the Trincomalee inscription is in Tamil. Conversely,  Queiroz thought that all Sri Lankans of his time spoke Tamil. He did not know that the southern Sri Lankans spoke Sinhalese and most Buddhist religious texts were written in Pali.

6. "There is an ongoing attempt to call the temple area Siva Boomi," says Hoole. Let it be known to Hoole and other rice-bowl ancestry-laden Christians that Nallur has been and shall continue to be the seat of Tamil tradition and culture as Siva Boomi. Desert sprang cults and philosophies are violent intrusions into this sacred Siva Boomi to be deported at our earliest convenience.