Saturday, July 27, 2019

திருக்குறள் வாரம் இலங்கை 2019


DRAFT PROPOSAL (subject to alterations and deletions)



THIRUKKURAL AWARENESS WEEK

26th July to 1st August 2019



Objective

To increase the awareness of the morals, ethos, values and culture embedded in the 2050 year old intellectual master piece, the all-faith embracing Thirukkural towards betterment and enhancement of the social, cultural and philosophical civilisation of Sri Lanka.



Material

Thirukkural carries 1330 two lined verses in simple and comprehendible Tamil language under 133 chapters in 3 cantos. Composed by the Tamil scholarly poet Thiruvalluvar, 2050 years ago, during the era of Vattagamini of the Anuradhapura Kingdom, has now been translated to more than 82 languages, with 57 versions available in English. Translations are in Assamese, Burmese, Chinese, Czech, Dutch, English, Fiji, Finnish, French, German, Gujarati, Hindi, Kannada, Latin, Malay, Malayalam, Oriya, Punjabi, Polish, Rajasthani, Russian, Sanskrit, Saurastra, Sinhalese, Swedish, Telugu and  Urdu.

Three translations are available in Sinhalese. 1. Thirukural in Sinhalese by Sissigamy Govokgada, M., Colombo, 1961; 2. Sirigiya (Thirukural in Sinhalese) by De Silva, Charles, Colombo, 1964 and 3. Jiwithaya hada wenna thirukkural kiyawanna by Wajira Prabath Wijayasinghe, Godage, Colombo, 2015.

Thousands of Tamil scholars have rendered interpretations to Thirukkural through many centuries. Musicians, dancers, dramatists, cinematographers, painters, sculptors and other artists have rendered Thirukkural in their respective artistic forms.

Jaffna Kingdom of the Arya Chakravarthis happened to be the repository of the thousands of palm leaf manuscripts on Thirukkural (apart from other literature) during the atrocious south Indian invasion of Malik Kaffoor, the Marshal of Delhi Sultan Allaudin Kilji during 1309 to 1370 CE.

Two significant memorials are in Tamil Nadu. One is a mandapam in Chennai, with Thiruvalluvar statue in a granite chariot and all the 1330 verses inscribed in the granite walls. The other is a 133 feet tall granite statue for Thiruvalluvar at the southernmost land-end of the Indian sub-continent at Kanyakumari.

I had the privilege of importing 16 statues (each 8 feet tall) of Thiruvalluvar as a gift from VGP International Association, its president V G Santhosam, to be installed in 16 districts of Sri Lanka with the active support of the Ministry of Education through its then Minister of State, Hon S. Radhakrishnan.



12 point Work Plan

1.     Publications.

1.1 A pocket size edition of the text of original Tamil verses to be provided to Tamil students at the 8th year level.

1.2A Singhalese edition with Tamil original to be provided to all libraries in schools and local councils in the island.

1.3 A colour portrait of Thiruvalluvar to be provided for display in all schools of the island.

2.     Statues

25 statues of Thiruvalluvar to be made in fibre-glass to be provided to 25 schools, one in each of the 25 districts in Sri Lanka. Mr. V G Santhoasam will support.

3.     Competitions in 1. memorising, 2. essay writing, 3. oratory at 3 levels among all Tamil students in Sri Lanka, at 3 age levels, under 10, 10 to 14 and 14 to 18 with prizes for the first three at Educational zones, at district and at national levels. Certificates at zonal level and certificates plus 25 gold medals, 25 silver medals and 25 bronze medals as prizes at district levels. National winners will in addition to medals a tour of the places of interest of Thiruvalluvar in Sri Lanka and India.

4.     Five male and five female scholars specialising in Thirukkural be identified for awards at national level.

5.     An exhibition on Thirukkural to be organised during the week in the major cities where functions are to be held. Support to be sought from Government of Tamil Nadu in organising the exhibition.

6.     Each evening during the week to have musicians, dancers and dramatists to perform on Thirukkural. Support to be sought from Government of Tamil Nadu in organising the art events.

7.     Tamil departments in every University in Sri Lanka to organise seminars in their campuses on Thirukkural during two days of the awareness week, with emphasis on Sinhala scholastic participation. Proceedings of the seminars to be filtered, edited for later publication.

8.     All the 400 plus divisional secretaries, 25 district secretaries, all local council secretaries to observe Thiirukkural week by organising a lecture meeting on Thirukkural at their respective offices.

9.     In major cities of Tamil presence, during one day of the week, there shall be 10 to 15 km long procession parading elephants carrying Thirukkural on its back preceded by performing Kandyan dancers and folk dancers.

10.              In major cities of Tamil presence, the Tamil Sangams to organise, paddi mantram, kavi arangam and similar scholastic manifestation on Thirukkural. Scholars form Tamil Nadu also to participate. Tamil Nadu Government to support by providing orators who could keep the audience in spell bound attention.

11.             In major cities of Tamil presence, seven public meetings, with orators and cinema actors participating. Tamil Nadu Government to support. Each function to end with fireworks display. HE President to be at the grand finale of the week in one of the seven cities or for the inauguration in one city and the grand finale in another city.

12.             The weeklong event to be followed by an announcement of competitions in 1. memorising, 2. essay writing, 3. oratory at 3 levels among all Sinhalese students in Sri Lanka, at 3 age levels, under 10, 10 to 14 and 14 to 18 with prizes for the first three at Educational zones, at district and at national levels. Certificates at zonal level and certificates plus 25 gold medals, 25 silver medals and 25 bronze medals as prizes at district levels. National winners will in addition to medals a tour of the places of interest of Thiruvalluvar in Sri Lanka and India.



Methodology

1.     National Coordinator with programing cum monitoring group

2.     Communication with Tamil Nadu government for support (mostly gratis) for 1. Exhibition, 2. Artists, 3. Fireworks display, 4. Scholarly orators for public meetings, patti mantrams and Kavi arangams.

3.     Communication with Mr. V. G. Santhosam for the supply (mostly gift) of 25 statues.

4.     Implementation oriented conclave of Tamil Sangams.

5.     Implementation oriented conclave of Heads of Departments of Tamil in Universities

6.     Implementation oriented conclave of the Provincial Governors.

7.     Implementation oriented conclave of the 25 District Secretaries.

8.     Implementation oriented conclave of Provincial Education Ministry Secretaries and / or Directors of Education.

9.     Implementation oriented conclave of Provincial Cultural Ministry Secretaries related to cultural programs and procession plans.

10.             Implementation oriented conclave of elephant parade organisers.

11.             Implementation oriented conclave of selected Sinhala and Tamil Publishers.

12.             Financial allocations / Media Publicity

Thursday, July 11, 2019

ஐயனார்ோயிலடி செர்மையா பத்மநாதன்

கல்லையும் மணலையும் கழிவுக் குப்பையும் கேணிக்குள் வீசினர்
தொல்லை இல்லைத் துடைக்கலாம் என்றவர் இறங்கி அனைத்தையும்
எல்லைக்கு அப்பால் அகற்றினர் அந்நாள் எனக்குத் துணையான
வல்லவர் இன்றிலை வானவர் ஆயினர் வாடுவன் கண்ணீருடனே.
மெல்லிய பேச்சினர் மேன்மையின் உறைவிடம் மேதகு பண்பாளர்
சொல்லிய செய்பவர் சோர்விலர் சிவப்பிர காசம்வீதி சேர்பவர்
இல்லையே இன்று எம்முடன் என்கோ இருப்பனேன் என்கோ
வல்லவா பத்மநாதா வானவர் ஆயினாய் வாடினேன் கண்ணீருடனே.
சந்துகள் பொந்துகள் கடந்தே சயிக்கிளில் சென்றதை நினைப்பனோ
சிந்துகள் பாடுவாய் செம்மையே பேணிச் சொன்னவை நினைப்பனோ
பந்துகள் வீசினால் துடுப்பெடுத் தாடும்உன் துள்ளலை நினைப்பேனென்
சிந்தையில் நிறைந்தாய் வானவர் ஆயினாய் யாரிடம் நோவேனோ?
அறிவியல் ஆய்வாளர் அண்ணன் சட்டம் படித்துநீதி பதித்தம்பி
நெறியால் நிறைந்த மருத்துவர் மனைவியாம் அக்காள் பத்மநாதா
செறிவுறும் பேராசான் செவ்வேள் முகாமையில் சிவஞானம் இவையீந்த
நிறைமகள் இந்திராணி பேறல்லவா? நீயில்லா வறியவன் நானல்லவா?
மையலே கொள்ளாய் மயக்கமே தெரியாய் மாண்புறு கொள்கையாயே
பையவே செல்வாய் பதட்டமே கொள்ளாய் பசித்தவர் பேணுவாயே
ஐயனார் கோயிலடி அன்பர்கள் நெஞ்சில் நினைவற வாழ்ந்தவாறோ
கையறு நிலையனாய்க் கதறுவேன் ஆரெனை ஆற்றுவார் அன்பனே.

JEREMIAH PATHMANATHAN (Retired Teacher). Beloved son of the late Dr Rajendram Jeremiah and Sivakami amma, beloved husband of Indranee, loving father of Dr Sevvel (Senior Lecturer) and Sivagnanavel (Management Assistant), beloved brother of Dr Sithamparanathan (New Zealand) and Viswanadhan (High Court Commissioner), beloved sister of the late Sithadevi Ganandharan and Sivapakiyam Vaitheeswaran Pasupathy (New Zealand) and Kamaladevi Shanmugarajan, passed away. Remains will lie at 28 (80), Sivapiragasam Road, Vannarponnai, Jaffna. Cortege leaves the residence at 11 am on Thursday 12th July 2012 for cremation at Kombainmanal Cemetery, Jaffna.

Monday, July 08, 2019

11th International Conference Seminar on Tamil Studies




உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  நிறைவு பெறும் நாளில் அடுத்த மாநாடு நிகழ்வதைப் பற்றி அறிவிப்பது வழக்கம்.

  அந்த நிலையில் பேராசிரியர் அரங்க.பாரி முன்மொழியப் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அழகுற நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.

  பாரியின் அழைப்பு பாரெங்கும் உள்ள தமிழர்களுக்கு உணர்வூட்டியுள்ளது .

  சீரோடும் சிறப்போடும் சிந்தை மகிழச் செவி குளிர கலை இலக்கியப் பண்பாட்டுக் கதம்பமாக இப்போது முடிந்திருக்கிறது, என்று என் மகன் ஒளவை அருள் அனுப்பிய செய்தியைக் குறிக்க விரும்புகிறேன்.

  ஆர அமர அமைதியாக அலைவில்லாத  மனத்தோடு, எவரும் செலவு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அமைச்சர் காட்டிய வழிகாட்டு விரைவால்தான் அமெரிக்க நுழைவுப் பதிப்பைப் பெற முடிந்தது என்று பலர் பாராட்டினர்.

----- ஔவை நடராசன்

28.06.2019
மேதகு குடியரசுத் தலைவருக்கு நான் அனுப்பிய செய்தி

Rev. Father Thaninayagam, a Sri Lankan born academic, when he was Professor of Tamil at the University of Malaya, Kualalumpur, organised the First International Conference Seminar on Tamil Studies during January 1966. The event was hosted by the Malaysian Government led by Hon Tunku Abdul Rahman, Prime Minister.

Second International Conference Seminar on Tamil Studies was hosted during Jan 1968 by Government of Tamil Nadu led by Hon C. N. Annadurai, Chief Minister.

Third International Conference Seminar on Tamil Studies was held at Paris, France organised by Prof. Jean Filiozat during 1970.

Fourth International Conference Seminar on Tamil Studies was held in Jaffna, Sri Lanka during January 1974.

Fifth International Conference Seminar on Tamil Studies was held in Madurai in January 1981 hosted by Government of Tamil Nadu led by Chief Minister Hon M. G. Ramachandran.

Sixth International Conference Seminar on Tamil Studies was held in Malaysia during 1986.

Seventh International Conference Seminar on Tamil Studies was held in Mauritius in 1989.

Eighth International Conference Seminar on Tamil Studies was held in Thanjavur during January 1994 hosted by the Government of Tamil Nadu led by Chief Minister Hon J. Jayalalitha

Ninth International Conference Seminar on Tamil Studies was held in Kualalumpur Malaysia during early 2015 hosted by the University of Malaysia.

Tenth International Conference Seminar on Tamil Studies will be held at Chicago, USA, during 4th to 7thJuly 2019.
Tamil citizens of Sri Lanka will be very happy if the Government of Sri Lanka will host the Eleventh International Conference Seminar on Tamil Studies in Sri Lanka during January 2021 two years from now.

Sri Lanka Unit of the International Association for Tamil Research will organise the conference. Sri Lankan Government will host it.

His Excellency President of Sri Lanka could write a letter to the President of the International Association for Tamil Research C/o Tenth International Conference Seminar on Tamil Studies, Chicago, USA, inviting the International body to Sri Lanka to conduct the Eleventh International Conference Seminar on Tamil Studies during January 2021, stating that the Sri Lanka Unit of the International Association for Tamil Research will organise the conference.

மேதகு குடியரசுத் தலைவர் அலுவலக முதலாவது தகவல்
President has been informed about the Tamil Conference and he has not nodded yet, but will most likely to be heard this afternoon or early tomorrow morning, after the events in Polonnaruwa. I will confirm that as soon as possible. In the meantime, we are working on your travel arrangements tentatively, to leave SL tomorrow itself. I know that is going to give you a lot of trouble getting your travel arrangements ready.

மேதகு குடியரசுத் தலைவர் அலுவலக இரண்டாவது தகவல்
இவை ஊடகங்களுக்கு அல்ல
உங்களுக்கு மட்டுமே

The idea of the conference has to be dropped, as HE does not want to commitment, Ithaca future government may not want to respect., and put all you in jeopardy.

Tomorrow at 10. 30 am, the preliminary meeting will be held to at the presidential secretariat, chaired by Secretary to President. Please attend. Mindshare your NIC number with me, so that I can clear your entrance.

Thank you
Harindra

வணக்கம் காலம் கடந்த பின்னராவது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து சர்வேசுவரனாரிடம் இருந்து வந்த செய்தியால் மகிழ்வுற்றேன்.

நான்கு மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களைச் சந்தித்து அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கை கிளையை மீளமைக்க முயல்வோமா எனக் கேட்டேன் நீங்கள் பொறுப்பெடுத்தால் நான் சேர்ந்து கொள்கிறேன் எனச் சொன்னார்.
ஈழத்தமிழ் சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகி வருகின்ற இந்த நேரத்தில் பதினோராவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதால் இருப்பை உறுதி செய்யவும் அடையாளங்களை நிலை நிறுத்தவும் முன்னெடுக்கலாம் என கருதினேன்.

நான்கு மாதங்களுக்கு முன் பேசியதை மீண்டும் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பும் நினைவூட்டினேன்.

இரு வாரங்களுக்கு முன்பு திரு இலலீசன் அவர்களிடம் தொலைபேசியில் விவரத்தைச் சொல்லி பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டேன்.

தமிழ் அறிஞர்களிடம் செல்லுபடியாகாத என் கருத்தை மேதகு குடியரசுத் தலைவரிடம் எடுத்துச் சென்றேன்.

அழைப்பிதழ் கடிதம் தருவதாகவும் சிகாகோவுக்கு எடுத்துச் செல்லப் பயணச்சீட்டுகளை வாங்கித் தருவதாகவும் குடியரசுத்தலைவர் தரப்பில் எனக்கு முதலில் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் தரப்பில் அதைச் செய்ய முடியாதற்கான காரணங்களைச் சொல்லிச் செய்தி அனுப்பினர் அவர்கள் தரப்பில் சொல்லிய நியாயம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது.

இன்னமும் காலம் இருக்கிறது.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைத் தலைவர்கள் இணைந்து ஒரு கூட்டத்தை நடத்தி அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவன இலங்கைக் கிளையின் மீளமைப்பை எடுத்து நோக்க வேண்டும்

மன்றத்தில் முன்பு பணியாற்றியவர்களில் பேராசிரியர் சண்முகதாஸ் பேராசிரியர் பத்மநாதன் நான் ஆகிய மூவரும் ஆர்வத்தோடு இருக்கிறோம். பேராசிரியர் பத்மநாதனிடமும் பேசினேன். இலங்கை அரசை ஈடுபடுத்துவதில் அவருக்கு உடன்பாடில்லை.

முழுக்க முழுக்க புலமையாளர்களால் புலமையாளர்களுக்காகவே நடத்த வேண்டிய ஆராய்ச்சி மாநாடு என்பதே அவரது நிலை.

எதுவாக இருந்தாலும் புலமையாளர்களே ஒன்றுகூடித் தீர்மானிக்க வேண்டும் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு ஓர் அமைப்பை இலங்கையில் உருவாக்க வேண்டும். காலந்தோறும் உலகத்தமிழ் ஆராய்ச்சியாளர்களை உள்வாங்கிக் கொண்டும் கொடுத்தும் தமிழ்ப் புலமைக்கும் புத்துலகுக்கு ஏற்ற மொழி ஆளுமை வளர்ச்சிக்கு ஆவன செய்ய வேண்டும்.

1968 ஆம் ஆண்டு இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளாக புலமை வளர்ச்சிக்கு முடிந்தளவு என் பங்கை ஆற்றி வந்துள்ளேன் தொடர்ந்தும் உங்களோடு சேர்ந்து பணிபுரிவேன் இளைஞர்களாகிய நீங்கள் முன்னெடுக்க வேண்டும் உங்களுக்குப் பக்கபலமாக நான் இருப்பேன்.

ஈழத்துப் பூதந்தேவனாருக்கு முன்பேயே பல நூற்றாண்டுகளாக தமிழ்மொழி ஈழத்தில் புலமையாளர் மொழியாக இருந்து வந்துள்ளது

 தமிழ் புலமையாளர்கள் இந்த வளர்ச்சியைப் பேணி வந்துள்ளனர்.

ஸ்ரீமாவோ அரசின் கடுமையான எதிர்ப்பை மீறி யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியதில் என் பங்கு கணிசமானது

எனது யாழ்ப்பாணமே என்ற 260 பக்க நூலை நீங்கள் படித்தால் என் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளலாம்

பதினோராவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடப்பதால் உலக புலமையாளர்களும் ஈழத்துப் புலமையாளர்களும் கொண்டும் கொடுத்தும் உறவாடி புலமை மேம்பட உதவும்

ஈழத் தமிழர்கள் தம் இருப்பை உறுதி செய்ய, தாமும் பூமிப்பந்தில் தமிழர் தாயகத்தின் சொந்தக்காரர்கள் என்ற இறுமாப்பைப் பெற இத்தகைய மாநாடுகள் பெரிதும் உதவும்.

திருக்குறள் விழா ஒன்றை எடுக்க வேண்டும் என மேதகு குடியரசுத் தலைவர் என்னிடம் கேட்ட பொழுது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன் ஆவணிக் கடைசியில் நடைபெறுவதாக உள்ள திருக்குறள் விழாவில் பங்காற்ற உங்களை அழைப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை

கம்பவாரிதி அவர்களுக்கு விருது வழங்குக இலலீசனும் உள்ளார் எனவும விதந்துரைத்துள்ளேன் தான் தொக்கா திரு குகநாதனும் திரு இலலீசனின் திருக்குறள் பணிகளைப் பெருமையாகக் கூறினார்கள்.

சர்வேசுவரனார் ஆர்வத்துடன் எனக்கு எழுதியதால் இந்தச் செய்திகள் அனைத்தையும் உங்களுக்கு மட்டுமே அல்லது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதுகிறேன்

ஊடகங்களுக்கு இந்தச் செய்திகளைத் தெரிவிக்காதீர்கள்
நன்றி

Tuesday, July 02, 2019

செல்வராசாவின் தமிழ்த் தேட்டம்


செல்வராசாவின் தமிழ்த் தேட்டம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

1.   செல்வராசா

கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளை விவரிக்கும் நூல் தேட்டத்தார் திரு. நடராசா செல்வராசா அவர்களின் கருத்துரையை  ஞானம் இதழில் படித்தேன்.

திரு. பாக்கியநாதன், தாம் எழுதிய நூல் ஒன்றைச் (நூலகர் கையேடு) சென்னையில் பதிப்பிக்க என்னிடம் நேரில் வந்து தந்தார். பதிப்பித்தேன். ஆனைக்கோட்டையில் இருந்து கண்டனம் பெற்றேன். தாம் பதிப்பித்த நூலைத் தம் உரிமமின்றிச் சென்னையில் பதிப்பித்தேன் என எழுதியவர் திரு. நடராசா செல்வராசா.

வரலாற்றில் இத்தகைய புலமைச் சொத்தாளர் ஒருவரை ஈழம் பெற்றிருக்கவில்லை. திரு. செல்வராசா அவர்கள் தாம் விட்டுச் செல்லும் நூல் தேட்டப் பகுதிகளால் காலங் காலமாகப் புலமையாளர் நெஞ்சங்களில் வாழ்வார். தமிழ்ப் பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர், ஆய்வாளர் எனப் பன்முகத்தாரின் ஒருங்கிணைப்பாளர், இத்தகைய ஒருங்கிணைப்பாளருக்கு வரலாற்றில் எடுத்துக்காட்டில்லாத முன்னோடி திரு. செல்வராசா.

2.   வளையாபதி


தமிழின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இப்பொழுது அச்சில் இல்லை. அந்நூலின் ஏடுகளைத் தேடுவோருள் தஞ்சாவூரின் சேக்கிழார் அடிப்பொடி த. ந. இராமச்சந்திரன் ஒருவர்.

தவத்திரு ஆறுமுக நாவலர் தாம் பதிப்பிக்க இருந்த நூல்களின் பட்டியலைத் தமது நூல் ஒன்றில் பின்னிணைப்பாகச் சேர்த்திருந்தார். அந்தப் பட்டியலில் வளையாபதி நூலும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் வளையாபதி நூலின் ஏடுகள் இருந்ததாலன்றோ அவ்வாறு பட்டியலிட்டார். யாரிடமாவது ஏடுகள் இருக்குமா? தேடுங்கள் என் என்னிடம் கேட்டிருந்தார் பெரியவர் இராமச்சந்திரன்.


படத்தில் 1. சேக்கிழார் அடிப்பொடி, 2. தி. வே. கோபாலையர், 3. சச்சிதானந்தன்.

3.   மாலிக் கபூர்

தமிழகத்தின் ஏடுகளின் களஞ்சியமாக ஈழம் அமையக் கொடூரன் மாலிக் கபூர் ஓர் உந்துதல். 1309 தொடக்கம் 60 ஆண்டுகள் தமிழகத்தைப் புலமைக் காடாக்கியவன். தமிழகத்தின் புலமையாளர், கலைஞர், சிற்பிகள், மருத்துவர் இன்னோரன்னோர் ஈழத்தின் வரோதைய சிங்கை ஆரியச் சக்கரவரத்தியிடம் புகலிடம் தேடினர். தம்மிடமிருந்த ஏடுகள், கருவிகள் யாவற்றையும் கொண்டு கடல் கடந்து யாழ்ப்பாணம் வந்தனர். வேந்தனும் அவர்களுக்கு மானியம் கொடுத்துப் பேணினான். தமிழ், சிங்களம், பாரசீகம், சீனம் எனப் பன்மொழி தெரிந்தவன் ஈழ வேந்தன்.

அவ்வாறு வந்த ஏடுகளுள், ஏற்கனவே அரண்மனை நூலகத்துள் இருந்த ஏடுகளுள், வளையாபதி ஏடும் இருந்தது. ஆறுமுக நாவலரின் பார்வைக்கு வந்தது. எனவே அவர் பட்டியலிட்டார்.

4.   ஏடுகளில் கடவுள்

பூசை செய்யாமல் ஏடுகளை அவிழ்க்கார் புலவோர். கலைமகள் விழா ஏடுகளுக்குச் சிறப்பு விழா. விழா இறுதியில் இன்றும் ஏடும் எழுத்தாணியும் சிறுவருக்கு எழுதத் தொடக்கப் பயனாகும் நிலை.

புராண படனுத்துக்காகத் தொடக்கத்திலும் முடிவிலும் ஏடுகளை இறைவனாக்கி, வாகனமேற்றி வீதி உலா வருவது ஈழத்து வழமை.

புலமை, புலமைப் பேறான உரைவீச்சு, எழுத்தாற்றல், ஈழத்தின் முதற்சொத்து. கடலும் நிலமும் தரும் முதனிலை உற்பத்திகளைப் புறந்தள்ளி, செவிக்கும் கண்ணுக்கும் மூளைக்கும் உணவு தேடுவது, ஈழத்துக்குப் பூதந்தேவனார் காலத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தொடரும் நெடு மரபு.

5.   மணிமேகலை, தம்பிரான்

புலமையாளர் மணிமேகலை 1800 ஆண்டுகளுக்கு முன் புகலிடம் தேடிய புலமைத் தாயகம் ஈழம். புலமையாளர் கூழங்கைத் தம்பிரான் தருமபுரம் ஆதீன மடத்தை விட்டு 250 ஆண்டுகளுக்கு முன் வெளியேறிப் புகலிடம் தேடிய புலமைத் தாயகம் ஈழம்.

இவை இரண்டும் நெடிய புலமைப் புகலிட தேடு வரலாற்றின் தொடு புள்ளிகள். தமிழகத்தின் புலமையாளர் புகலிடமாக வரலாற்றினூடாக அமைவதற்கு ஈழத்தின் புலமை போற்றும் பண்பாடே உந்துதல்.

6.   போப்பையர், உவேசா

மானிப்பாயின் குமாரசுவாமி, தமிழகத்தின் உவேசாவுக்கு நிதி வழங்கிச் சிலப்பதிகாரத்தைப் அச்சேற்றிப் பதிப்பித்தார். ஈழத்தின் புலமைத் தேடலுக்குச் சான்று.

திருவாசகத்தை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வண. ஜி. யூ. போப்பருக்குத் தொடக்க காலத்தில் உதவியவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம். தொடக்க மொழிபெயர்ப்புகள் இருவர் பெயரிலுமே வெளிவந்தன. ஈழத்தின் புலமைத் தேடலுக்கு மற்றுமொரு சான்று.

7.   கொழுத்தினர்

ஈழத்தின் புலமைப் பின்னணியைத் தெரிந்து சிதைக்க முயன்ற மாலிக் கபூர்களே யாழ்ப்பாண நூலகத்தைக் கொழுத்திய கொடூரர்கள். செவியுற்ற உடனேயே புலமையாளர் ஒருவர் உயிர்விட்டார் என்பதே புலமைக்கு ஈழம் கொடுத்த வரலாற்று மாண்பின் சான்று.

அழுத கண்ணீர் வற்ற முன்பு, எரிந்த நூலகத்தையும் யாழ்ப்பாணத்தையும் காட்சி வரலாறாப் பதிய, காணொலியாகப் பதிய, ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகத் திரு. கந்தசாமி அவர்களுக்கு முழுச் செலவையும் நான் கொடுத்தேன். என்னிடம் அக்காணொலி உண்டு.

https://www.youtube.com/watch?v=IinYHwRyabI&t=6s

8.   தமிழகச் சஞ்சிகைகள்

யாழ்ப்பாண நூலகம் எரிந்த சில மாதங்களுள் ஒங்கொங்கில் இருந்து மைக்ரோ பிலிம் ரீடர் micro film reader ஒன்றை இறக்குமதி செய்தேன். அந்நாளைய மாநகர முதல்வர் விசுவநாதன் ஆணையர் சி வி கே சிவஞானம் இருவரிடமும் என் பெற்றோர் சென்று கையளித்தனர்.

1986 வைகாசி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 40 தமிழகச் சஞ்சிகைகளைச் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அனுப்புவேன். அச் சஞ்சிகைகள் புகழ்பெற்ற வார மாத இதழ்கள் அல்ல. சிற்றிதழ்கள், அறிவியல் வணிகம் துறைகளில் உள்ள இதழ்கள்.

அக்காலத்தில் நூலகம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னுள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்ததாக நினைவு.

9.   நன்கொடைகள்

சென்னையில் காந்தளகத்துக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்களை நன்கொடையாக அனுப்புமாறு என்னிடம் புத்தகங்களைத் தந்து தொடர்ச்சியாக அனுப்பி வந்துள்ளேன்.

ஒருமுறை ஆத்திரேலியத் தமிழர்கள் பெருந்தொகை நூல்களை யாழ்ப்பாண நூலகத்துக்கு என் வழி அனுப்பினர். அவற்றை நெடுங்காலம் துறைமுகத்திலேயே விட்டுவைத்த நூலகத்தார், எனது கடும் உந்துதலின் விளைவாக ஒருவாறு பொறுப்பேற்று எடுத்துச் சென்றனர்.

1986இல் இருந்து 2008 வரை வாரந்தோறும் தமிழகச் சஞ்சிகைகளை அனுப்பும் முயற்சியை நான் தளரவிடவில்லை.

2003, 2008 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் வந்தேன். நான் அனுப்பிய நூல்கள், சஞ்சிகைகளின் வருகைகள் பயனாளிகளுக்கு செல்கின்றனவா? என்பதை விசாரித்துச் சென்றேன்.

திரு செங்கைஆழியான் ஆணையராக இருந்த காலத்திலும் பெருந்தொகையான நூல்களைத் தமிழகத்தில் பெற்று அனுப்பி வைத்தேன்.

நல்லூரில், அகில இலங்கை இந்து மாமன்றம் அமைத்திருக்கும் இந்து சமய நூலகத்துக்கான நூல்களைத் தேர்வு செய்து அனுப்பும் பணி என்னுடையதாயிற்று. அதற்குரிய தொகையை அவர்கள் எனக்குத் தந்தனர். தஞ்சாவூரில் சேக்கிழார் அடிப்பொடி அறிஞர் இராமச்சந்திரன் போன்ற பலரிடம் இந்துசமய நூல்கள் நன்கொடையாகக் கேட்டுப் பெற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் நல்லூர் நூலகத்துக்கு அனுப்பினேன்.

10.       தமிழக அரசு நன்கொடை

2012இல் இணுவிலுக்குச் சென்றேன். அண்ணா தொழிலக முதல்வர் திரு நடராசாவின் விதப்புரையில் அங்குள்ள பொது நூலகத்துக்கு ஏறத்தாழ 40,000 தலைப்புகளைத் தமிழக அரசிடமும் தனி ஆர்வலரிடமும் பெற்று அனுப்பினேன்.

கொக்குவில் பிரதேச சபை நூலகம், தச்சன்தோப்புப் பிரதேச சபை நூலகம், யாழ்ப்பாணத்தில் உள்ள 10 உயர் நிலைப் பள்ளிகள், முழங்காவிலில் ஒரு பள்ளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் எனத் தொடர்ச்சியாகத் தமிழகத்து நூல்களை அங்கிருந்து வரும் போது கொண்டுவந்து கொடுத்து வருகிறேன். மறவன்புலவில் பெண்கள் கூட்டுறவு அமைப்பு நடத்தும் நூலகத்திற்கு தொடர்ச்சியாக நூல்களைக் கொடுத்து வருகிறேன்.


2018இல் தமிழக அரசு ஓர் இலட்சம் தலைப்புகளை எனது வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனுப்பியது. அக்காலத்தில் கல்வி இணை அமைச்சராக இருந்த மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்களிடம் பேசி அந்த நூல்களைத் துறைமுகத்தில் இருந்து எடுப்பித்தேன்.

ஐம்பதினாயிரம் தலைப்புகள் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கும் ஏனைய ஐம்பதினாயிரம் தலைப்புகள் மலையகத்திலுள்ள நூலகங்களுக்கும் கொடுக்கும் பணியை என் வேண்டுகோளை ஏற்றுச் செய்த பெருமகனார் கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்கள்.

யாழ்ப்பாணத்துக்கு வந்த தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், யாழ்ப்பாணப் பொதுநூலக விழா மேடைக்கு என்னை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு உரிய நூல்களை உங்களிடம் தருகிறேன் எனத் தந்தார்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் வெளியாகும் சிறந்த தலைப்புகளை இலங்கைக்கு ஒவ்வொரு படியையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

ஏறத்தாழ 50,000 நூல்களை தமிழகம் முழுவதும் ஆர்வலரிடம் சேகரித்த திரு வி சி சந்தோசம், கல்வி இணை அமைச்சர் திரு இராதாகிருஷ்ணன் மூலம் அவற்றை இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு கொடுக்க நான் ஒருங்கிணைத்தேன்.


11.       திருவள்ளுவர் சிலைகள்

அவ்வாறு திரு வி சி சந்தோசம் அவர்களிடம் நான் கேட்டுப் பெற்ற 8 அடி உயரத் திருவள்ளுவர் சிலைகள் 16. அவற்றை இலங்கையின் 16 மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் முகப்பிலும் பள்ளிகளின் முகப்பிலும் நிறுவவ ஏற்பாடு செய்ய உதவியவர் கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்கள்.

சிலை திறப்பு விழாக்களுக்கு தமிழகத்தில் இருந்து 40 தமிழறிஞர் கொண்ட குழாம் வந்து ஒவ்வொரு சிலையாகத் திறந்து வைத்தது.


12.       பல்கலைக்கழக நூலகம்

புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டு கொண்ட வன்தட்டினை 20 நாள்களுக்கு முன்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்து நாகரீக பீடத் தலைவரிடம் கையளித்தேன்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் தொடங்கிப் பேராசிரியர் கயிலாசபதி தலைவராகப் பொறுப்பேற்ற முதல் மாதத்தில் வாழ்த்தச் சென்ற நான் அவரிடம் ஏறத்தாழ 200 ஆங்கில, யப்பானிய மொழி அறிவியல் நூல்களைக் கையளித்தேன். புதிய நூலகத்துக்கு கொடுங்கள் என்றேன்.

13.       பதின் கவனகம்

அட்டாவதானம், சதாவதானம் என்ற கவனகத்தில் பன்முக ஆற்றல் கொண்ட தமிழகப் பேராசிரியரை இலங்கைக்கு வரவழைத்து,  இலங்கையின் மேற்கு, நடு, கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் 38 உயர்நிலைப் பள்ளிகளில் செயல்விளக்கம் அளிக்க ஒருங்கிணைத்தேன்.

சதாவதானி புலோலியூர் நா கதிரவேற்பிள்ளை வாழ்ந்த மண்ணில் அந்தக் கலை மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருந்தது.


14.       நமக்குள் மாலிக் கபூர்கள் 

1959 தொடக்கம் 1979 வரை நான் சேகரித்து என் அறிவுத் தேடலுக்குரியதான நூல்கள் 2000 வரை எண்ணிக்கையுள்ள தலைப்புகளாக இருந்தன. நான் எழுதிய கட்டுரைகள் சேர்த்துவைத்த ஆய்வுக் குறிப்புகள் யாவும் ஆவணங்களாக இருந்தன.

1979இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை விட்டு ஐக்கிய நாடுகள் சபை ஆலோசகராகப் புறப்பட்டேன். என் பெற்றோரிடம் மறவன்புலவு வீட்டில் மிகவும் பாதுகாப்பான அறையில் அவற்றை அடுக்கி ஒழுங்குபடுத்தி விட்டுச் சென்றேன்.

மறவன்புலவைச் சேர்ந்த திரு ஆனந்தரஞ்சன் அவரது உடன்பிறப்புகள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அக்காலத்தில் இருந்தனர். வழிபாட்டுப் பயணமாக என் பெற்றோர் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சென்ற காலத்தில், 1984இல் திரு ஆனந்தரஞ்சனும் அவரது உடன்பிறப்புகளும் மற்றும் உதவியாளர்களும் அறையை உடைத்து அத்தனை நூல்களையும் அத்தனை ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். இஃது எனது தனிப்பட்ட சோக வரலாறு.

திரு ஆனந்தரஞ்சன் இப்பொழுதும் மறவன்புலவில் இருக்கிறார். அவரது உடன்பிறப்புகள் ஐரோப்பாவில் இருக்கின்றனர்.





எங்கள் ஊர் நிலதாரியும் நானுமாகச் சென்று திரு ஆனந்தரஞ்சனிடம் எங்கே நூல்கள்? எங்கே ஆவணங்கள்? எனக் கேட்டோம்.

எடுத்தோம் வைத்திருந்தோம் உயர் பாதுகாப்பு வலையக் காலத்தில் அவற்றைக் கைவிட்டோம். எங்கே அவை எனத் தெரியாது எனக் கைவிரித்து விட்டார்.

திரு கிருட்டிணானந்த சிவம் எனது அருமை நண்பர். அவரைப் போல, என்னைப் போல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தமிழர் வீடுகளில் இருந்த புலமைச் சொத்துக்கள் அழிவதற்குப் போரில் ஈடுபட்ட அனைவருமே காரணம்.


15.       பழ. நெடுமாறன், ஈரோடு அன்பர்

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிந்த அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் திரு. பழ. நெடுமாறன் பல்லாயிரக் கணக்கில் தமிழகப் பதிப்பாளரிடமும் ஆர்வலரிடமும் நூல்களைச் சேகரித்தார். விடிவுக்குப்பின் நூல்களைக் கொடுக்க உள்ளாதாகக் கூறி இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.

ஈரோடில் ஓர் அன்பர் தாம் சேர்த்து வைத்திருக்கும் அரிய நூல்களின் தொகுப்புகளை ஈழத்துக்குக் கொடுக்க ஆர்வமாக இருந்தார். இதற்காக 2003இல் கிளிநொச்சி வந்து சென்றார். அனுப்புவதில் என் உதவியைக் கோரினார். பின்னர் தொடர்பில் இல்லை. ஈரோடு அன்பரின் நூல்கள் கிளிநொச்சிக்கு வரவில்லை எனத் தெரிந்தது.

16.       மாண்புமிகு பேபி சுப்பிரமணியம்

அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோயிலில் இருந்த சங்கிலியனின் வீர வாள் உள்ளிட்ட தொல் பொருள்கள், யாழ்ப்பாணத்தில் பெரியார்களிடமிருந்து சேர்ந்த அரிய நூல்கள், ஆவணங்கள் யாவும் கிளிநொச்சியில் கல்வி அமைச்சர் மாண்புமிகு பேபி சுப்பிரமணியத்திடம் இருந்தன.

2003, 2008 என இருமுறை கிளிநொச்சி சென்ற காலங்களில் மாண்புமிகு பேபி சுப்பிரமணியம், தம் களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்று எனக்குக் காட்டுவார். பெருமிதத்தோடு மகிழ்வார். எனக்குவேண்டிய ஆவணங்களைக் குறுந்தட்டாக்கித் தந்தார்.

அந்தோ, அந்தோ, புலமைச் சொத்தின் பெற்றி, அரும்பொருள்களின் களஞ்சியம் 2009இல் என்ன ஆனதோ?

17.       தமிழர் தகவல் நடுவம்

சென்னைத் தமிழத் தகவல் நடுவத்தின் ஆவணங்களைத் திரு. சிவநாயகம் தன் நண்பர் ஒருவரிடம் விட்டுச் சென்றார். அவை தாம்பரத்துக்கு அப்பால், காட்டாங்குளத்தூர் அருகே ஒரு வீட்டில் இருந்தன. அந்த ஆவணங்களின் படிகளைக் கொடுப்பதற்குப் பணம் கேட்டார் என்ற செய்தியையும் கூறுவர். முனைவர் அரு கோபாலன் போன்றோருக்கு மேலும் விவரங்கள் தெரியலாம்.

18.       சென்னையில் என் சேகரங்கள்

1980 தொடக்கம் ஈழத்து வெளியீடுகளைச் சென்னைக்கு வரவழைத்து விற்பனை செய்தோம். கிரியா அமைப்பின் மொழி அறக்கட்டளையினர் ஆர்வத்தோடு தொடர்ந்து வாங்குவர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்துக்கு ஈழத்து வெளியீடுகளை ஆண்டுதோறும் விற்பனை செய்வோம்.

1991இல் இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர், சென்னையில் வாழ்வதில் தளம்பல் நிலை. 1980 தொடக்கம் நான் சேகரித்த, நான் பதிப்பித்த ஈழத்து நூல்களின் தொகுப்பு என்னிடம் நூலடுக்காக இருந்தது. ஒரு நாள் யாவற்றையும் பெட்டிகளில் கட்டி, ஒரு பகுதியை மறைமலை அடிகள் நூலகத்துக்கும் மற்றொரு பகுதியை ரோஜா முத்தையா நூலகத்துக்கும் கொடுத்தேன்.

அக்காலத்துக்குப் பின்னர் என்னிடம் சேரும் ஈழத்து வெளியீடுகளைப் பெட்டியாகக் கட்டி வைப்பேன். ரோஜா முத்தையா நூலகத்தார் மாதம் ஒருமுறை தாமே வந்து பெட்டியை எடுத்துச் செல்வர். இன்று வரை அந்த நடைமுறை சென்னையில் உண்டு.

இதற்குப் பின்னரும் என்னிடம் சேர்ந்த ஈழத்தவர் நூல்கள், ஈழம் தொடர்பான தமிழக வெளியீடுகள் 2000 தலைப்புகள் வரை என் நூலடுக்கில் உள. என் உசாத்துணையாக உள. அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர முடியாது. சட்டச் சிக்கல் வரலாம்.

எனக்குப் பின்னர் அவை ரோஜா முத்தையா நூலகத்துக்குச் செல்லலாம்? அறியேன்.

19.       செல்வராசா

ஞானம் இதழில் உங்கள் கருத்துரையும் தேம்பித் தேம்பி அழுது பேனாவுக்குள் கண்ணீரை விட்டு எழுதிய கட்டுரையும் ஈழப் போர்ச்சூழலில் அறிவுச்செல்வம் அகன்ற வரலாறு கூறின.

நீல நதிக் கரை ஓரம். எகிப்திய நாகரிகப் பேழையாக நூலகம். எரித்தோர் கொடூர உரோமனியர். சிந்து நதிக் கரை ஓரம். தக்சிலாப் பல்கலைக்கழக நூலகம். எரித்தோர் மங்கோலியக் கொடூரர். கங்கை நதி ஓரம். நலாந்தப் பல்கலைக்கழக நூலகம். எரித்தோர் தில்லி சுல்தான்கள். எரித்தவன் பெயரே இன்றைய நலந்தாத் தொடர்வண்டி நிலையப் பெயர்.

தமிழகமெங்கும் புலவோர் நூலகங்கள், அரச நூலகங்கள், திட்டமிட்டு எரித்தவன் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் கபூர். ஆரியச் சக்கரவரத்திகளின் நல்லூர் அரண்மனை நூலகம். எரித்தவன் போர்த்துக்கேயப் பாதிரி பிரான்சிசு சேவியரின் தூண்டுதலில் தளபதி இடி ஒலிவேரா. யாழ்ப்பாணப் பொது நூலகம். எரித்தோர் அரசு அமைச்சர் போர்வையில் வந்த இன ஒழிப்புக் கொடூரக் கும்பல்.

காலம் கொடுமையானது. இறப்பே காலமாதலன்றோ? ஆனாலும் காலத்துக்குத் தமிழைத் தேக்கத் தெரியும். அதனாலன்றோ உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ் எனக் காலக் கண்ணாடி காட்டுகிறது.

நீங்கள் தொகுத்தவை நூல் தேட்டம். காலத்தின் கருவி நீங்கள். தமிழை வாழ்வியலாக்கும் கருவி நீங்கள். புலமைச் செறிவைப் போற்றி, ஆற்றல் மிளிர்வைக் காட்டி, திறமைத் தெளிவைப் பதிவாக்கிய வரலாற்றுக் கடமையாளர்.

அறிந்தவன் அறிவான் அரியாலைப் பனாட்டுச் சுவை என்பர். புலமைப் பேணலை நீங்கள் அறிந்தளவு வேறு யார் அறிவார்? புலமைப் பேணலை நீங்கள் முயன்றளவு வேறு யார் முயல்வார்? வரலாற்றில் வாழ்கிறீர்கள். பிறவிப் பயன் கண்டீர்கள். புகழொடு தோன்றியோரில் நூல் தேட்டம் திரு. செல்வராசா ஒருவர்.