Wednesday, June 28, 2023

மைத்திரிபால சிறிசேனா

 வியாழன், ஆனி 14, 2054 (29.06.2023)


அனுப்புநர்

இலங்கை வாழ் இந்துக்கள் சார்பில்,

பா. சிறீந்திரன்

சிவ சேனை

கோண்டாவில்

யாழ்ப்பாணம்.


பெறுநர்

மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனா அவர்களே,

வணக்கம்.

இலங்கையின் ஆறாவது குடியரசுத் தலைவர் நீங்கள்.

71 ஆண்டு வரலாற்றுப் பின்னணி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் நீங்கள்.

இந்துக்களின் ஆதரவு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குத் தேவை. எனவே எம்மைச் சந்திக்க அழைத்தீர்கள்.

உங்கள் வீட்டு வாயிலில் அருள்மிகு பிள்ளையார்கோயில். நாள்தோறும் உங்கள் வழிபாட்டில் அருள்மிகு பிள்ளையார். 

போதனைக்கு உங்களுக்குப் புத்தர். சாதனைக்கு உங்களுக்குச் சைவக் கடவுள்.


உலகத்துக்கு உங்களைப் புத்தராகக் காட்டுகிறீர்கள். உள்ளத்தால் நீங்கள் சைவராக வாழ்கிறீர்கள்.


இலங்கை சிவபூமி. அந்தப் பராம்பரீயம் உங்கள் வாழ்வியல். நீங்கள் ஓர் எடுத்துக் காட்டு.


இலங்கை வாழ் புத்தர்கள் அனைவரும் உங்களைப்போலவே சைவக் கடவுள்களை வழிபடுவர். ஏனெனில் இலங்கை சிவபூமி.

இலங்கையில் இந்து சமயிகளின் எதிர்காலம் எவ்வாறு? இலங்கைச் சிவ சேனையினரின் கருத்தறிய விரும்பினீர்கள். (29 6 2023) வியாழன் காலை யாழ்ப்பாணத்தில் சந்திக்கக் கேட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.

1. இலங்கை சிவ பூமி. இலங்கை முழுவதும் இந்துக் கோயில்கள். புத்த விகாரங்களிலும் இந்துக் கோயில்கள்.பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான பழமையான சமயம் இலங்கையின் இந்து சமயம்.  

இந்த வரலாற்றை மறந்தீர்கள். இந்தப் பின்னணியை மறுத்தீர்கள். 

இலங்கை அரசியலமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுத்தீர்கள். நீங்கள் தலைவராக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. 1972ஆம் ஆண்டு புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசியலமைப்பை உருவாக்கிய கட்சியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. 

அந்த வரலாற்றுத் தவறைத் திருத்துக. அரசியலமைப்பில் இந்து சமயத்துக்கு முன்னுரிமை. அதன்பின்பே அடுத்துவந்த புத்த சமயத்துக்கு முன்னுரிமை. 

இவ்வாறு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குக. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

2. இலங்கையின் வட கிழக்கு இந்துக்களுக்கு வரலாற்றுத் தாயகம். இலங்கையின் தென் மேற்கு, புத்தர்களுக்கு வரலாற்றுத் தாயகம். கிறித்தவர்களுக்கும் முகமதியர்களுக்கும் வலாற்றுத் தாயகம் இலங்கையில் இல்லை.  

இந்த அடித்தளமே 1987இன் இலங்கை இந்திய உடன்பாடு. இலங்கை அரசும் மக்களும் ஏற்றுக்கொண்ட உடன்பாடு. 

இந்த உடன்பாட்டை முழுமையாக நிறைவேற்றுக.  

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

3. கடல் வழி படையெடுத்து வந்தனர், 500 ஆண்டுகளுக்கு முன் வந்தனர்.  துப்பாக்கி முனையில் மதமாற்றினர். ஆபிரகாமிய சமயங்களுக்கு மதம் மாற்றினர். ஆபிரகாமிய ஆட்சி முடிந்தது. ஆனாலும்  தொடர்ந்தும் மதமாற்றுகின்றனர். 

வாழ்வியல் ஊக்குவிப்பாளர் கிறித்தவர். காதல் ஜிகாதியர் முகமதியர். இவ்வாறு ஏமாற்றி ஒருவரை மதம் மாற்றுவது கொடுமை. 

அந்தக் கொடுமையில் இருந்து விடுபட மதமாற்றத் தடையை அரசியலமைப்பு விதியாக்குக. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

4. சிவ பூமி ஆன இலங்கைக்கு பசுக்கள் தெய்வங்கள். புத்தர்களும் பசுவைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். 

பசுக்களைக் கொலை செய்து உணவாகக் கொள்ளும் வழமை கிறித்தவ முகமதிய மதங்களோடு இலங்கைக்குள் புகுந்தது. 

நாடு விடுதலை பெற்ற பின்பு அந்தக் கொடுமையை நீக்க வேண்டிய கட்டாயம் உண்டு. எனவே பசுவதைத் தடையை அரசியலமைப்பு விதியாக்குக. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

5.  இந்துக்களின் வரலாற்றுத் தாயகம் வட கிழக்கு. அங்கே புத்த அடையாளங்கள் ஏன்? புத்த மேலாதிக்கம் ஏன்? 

இந்துத் தாயகத்தில் புத்த மேலாதிக்கத்தைத் தடுக்கும் கொள்கையையும் சட்டங்களையும் அரசியலமைப்போடு அமைக்க. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

6. வழிபாட்டிடங்களில் உயிர்ப் பலியா? கொடுமை அல்லவா? இந்த மூடப் பழக்க வழக்கத்தை அறவே போக்குக. சட்டம் இயற்றுக. அரசியலமைப்பில் உள்ளடக்குக. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

7. 2567 ஆண்டுகளுக்கு முன் ஆசான் காசியப்பரால் முதலாம் புத்த சங்கம். அரசன் அஜாதசத்துருவால் இரண்டாம் புத்த சங்கம். மாமன்னன் அசோகரால் மூன்றாவது புத்த சங்கம். 

2030 ஆண்டுகளுக்கு முன் இலங்கை மன்னன் வட்ட காமினியால் நான்காம் புத்த சங்கம். 

1600 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து பட்டணச்சாரியாரான புத்த கோசரை அநுராதபுரத் தமிழ் புத்த மன்னர் அழைத்ததால் எழுந்த  விசுத்தி மார்க்கம். 

1. அவிச்சை. 2. சங்காரம்‌, 3. விஞ்ஞானம்‌ 4. நாமரூபம்‌ 5. சளாயதனா. 6. பச 7. வேதனா. 8. தண்கா 9. உபாதானம்‌ 10. பவம்‌ 11. சாதி 12. சராமரணம்‌; இவை வினைப் பீடகம் கூறும் மகா வாக்கியம். இந்தப் பின்னணி நோக்குக. 

இன்றும் இலங்கைப் புத்தருக்கு வழிகாட்டல் தேவை. அறம், வினை, அபிதருமம் கோட்பாடுகளின் விளக்கம் தேவை. 

ஏழாவது புத்த சங்கத்தைக் கூட்டுவதற்கு புத்த மக்களின் ஆணை கோருக. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.

இலங்கை இந்துக்களின் ஒருமித்த நிலைப்பாடாக உங்களுக்கு இந்த ஏழு நிலைகளையும் தெரிவிக்கிறோம். இவற்றை முன்னெடுக்கப் புத்த மக்களின் ஆணை கோருக. இலங்கையின் இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பார்கள்.

நன்றி 

அன்புடன் 

இலங்கை இந்துக்கள் சார்பில் 

சிவ சேனை

බ්‍රහස්පතින්දා, අනි 14, 2054 (29.06.2023)


යවන්නා

ශ්‍රී ලාංකික හින්දු ජනතාව වෙනුවෙන්,

පා. සිරින්ද්‍ර

ශිව හමුදාව

කොණ්ඩේ

යාපනය.


ලබන්නා

ගරු පාර්ලිමේන්තු මන්ත්‍රී මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා,

ආයුබෝවන්

ඔබ ශ්‍රී ලංකාවේ හයවැනි ජනාධිපතිවරයායි.

වසර 71ක ඉතිහාසයක් ඇති ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ නායකයා ඔබයි.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයට හින්දු ජනතාවගේ සහයෝගය අවශ්‍යයි. ඉතින් ඔබ අපට හමුවීමට ආරාධනා කළා.

අරුල්මිකු පිල්ලෙයාර්කෝයිල් ඔබේ දොරකඩ. කරුණාවන්ත දරුවනි, දිනෙන් දින ඔබේ නමස්කාරය තුළ.

ඔබට ඉගැන්වීමට බුදු. ශෛව දෙවියන් ඔබට ජයග්‍රහණය සඳහා.

ඔබ ලොවට පෙනී සිටින්නේ බුදුවරයෙකු ලෙසයි. ඇතුළතින් ඔබ සයිබර්නෙටික් ලෙස ජීවත් වේ.

ශ්‍රී ලංකාව ශිවභූමියයි. ඒ සම්ප්‍රදාය ඔබේ ජීවන රටාවයි. මට උදාහරණයක් දෙන්න.

සියලුම ශ්‍රී ලාංකීය බෞද්ධයෝ ඔබ වැනි ශෛව දෙවිවරුන්ට අදහති. මොකද ලංකාව ශිව භූමි.

ශ්‍රී ලංකාවේ හින්දු ආගමේ අනාගතය කුමක්ද? ඔබට ශ්‍රී ලංකා ශිව සේනාව ගැන සිතීමට අවශ්‍ය විය. (29 6 2023) ඔබ බ්‍රහස්පතින්දා උදෑසන යාපනයේදී හමුවීමට ඉල්ලා සිටියා. සතුට

1. ශ්‍රී ලංකාව ශිවගේ දේශයයි. ලංකාව පුරා හින්දු කෝවිල්. බෞද්ධ පන්සල් සහ හින්දු කෝවිල් ශ්‍රී ලංකාවේ හින්දු ආගම වසර දස දහසකට වඩා පැරණිය.

ඔබට මේ ඉතිහාසය අමතකයි. ඔබ මෙම පසුබිම ප්‍රතික්ෂේප කළා.

ඔබ ශ්‍රී ලංකා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන් බුද්ධාගමට මුල්තැන දුන්නා. ඔබ නායකත්වය දරන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය. 1972 දී බුද්ධාගමට ප්‍රමුඛත්වය දෙමින් ව්‍යවස්ථාව සකස් කළ පක්ෂය ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයයි.

ඒ ඓතිහාසික වරද නිවැරදි කරන්න. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන් හින්දු ආගමට ප්‍රමුඛත්වය දී ඇත. ඉන් පසුව බුද්ධාගමට මුල්තැන දුන්නා.

ඒ අනුව අලුත් දේශපාලන ක්‍රමයක් ඇති කරන්න.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

2. ශ්‍රී ලංකාවේ ඊසානදිග හින්දු භක්තිකයන්ගේ ඓතිහාසික නිජබිම වේ. ශ්‍රී ලංකාවේ නිරිතදිග බෞද්ධයන්ගේ ඓතිහාසික නිවහන. ශ්‍රී ලංකාවේ කිතුනුවන්ට සහ මොහොමඩ්වරුන්ට ආගමික නිජබිමක් නොමැත.

මෙම පදනම 1987 ශ්‍රී ලංකා ඉන්දියා ගිවිසුමයි. ශ්‍රී ලංකා රජය සහ ජනතාව පිළිගත් ගිවිසුමක්.

කරුණාකර මෙම ගිවිසුම සම්පූර්ණයෙන්ම පිළිගන්න.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

3. ඔවුන් මුහුදෙන් ආක්‍රමණය කළා, ඔවුන් අවුරුදු 500 කට පෙර ආවා. තුවක්කුවකින් පරිවර්තනය කළා. ඔවුන් ආබ්‍රහමික ආගම්වලට හැරුණා. ආබ්‍රහම් පාලනය අවසන් විය. නමුත් ඔවුන් දිගටම පරිවර්තනය කරනවා.

ජීවිත ප්‍රවර්ධකයෙක් කිතුනුවකු වේ. ලව් ජිහාඩි මොහොමඩ්වරු. මේ වගේ කෙනෙක්ව ආගමට හරවා ගන්න එක හරිම දරුණුයි.

ඒ කෲරත්වයෙන් මිදෙන්නට ආගමට හැරවීම තහනම් කිරීම ව්‍යවස්ථාපිත නීතියක් කරන්න. ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

4. ශිව දේශය වන ශ්‍රී ලංකාවට ගවයින් දේවත්වයයි. බුදුවරු ද ගවයන් දේවත්වයෙන් අදහති.

ආහාර සඳහා ගවයන් මැරීමේ සිරිත ශ්‍රී ලංකාවට ඇතුළු වූයේ ක්‍රිස්තියානි - මොහොමඩ් ආගම් සමඟිනි.

රට නිදහස් වුණාට පස්සේ ඒ කෲරත්වය නැති කරන්න බැඳීමක් තියෙනවා. එබැවින් ගව ඝාතනය තහනම් කිරීම ව්‍යවස්ථාපිත අයිතියක් බවට පත් කරන්න.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

5. හින්දු භක්තිකයන්ගේ ඓතිහාසික නිජබිම උතුරු නැගෙනහිරයි. බෞද්ධ සංකේත ඇත්තේ ඇයි? බෞද්ධ ආධිපත්‍යය මොකටද?

හින්දු නිජබිම තුළ බෞද්ධ ආධිපත්‍යය වැලැක්වීම සඳහා ප්‍රතිපත්ති සහ නීති පැනවීම.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

6. පූජනීය ස්ථානවල ජීවිත පූජා කිරීම? එය කුරිරු නොවේද? මේ සංවෘත පුරුද්දෙන් මිදෙන්න. නීති සම්පාදනය කරන්න. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට ඇතුළත් කරන්න.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

7. වසර 2567 කට පෙර කාශ්‍යපර් මාස්ටර් විසින් ප්‍රථම බුද්ධ සංගම්. ඉරනාදම් බෞද්ධ සමිතිය ආරම්භ කළේ අජදසතුරු රජු විසිනි. තෙවැනි බෞද්ධ සංඝරත්නය අශෝක මාමා විසිනි.

මීට වසර 2030 කට පෙර ශ්‍රී ලංකාවේ වට්ට කාමිණී රජුගේ සිව්වන බුද්ධසංගමය.

මීට වසර 1600 කට පෙර අනුරාධපුර දෙමළ බෞද්ධ රජු තමිල්නාඩුවේ සිට පට්ඨානාචාර්යවරයෙකුට ආරාධනා කළ විට විශුද්ධි මාර්ගය ඇති විය.

1. අවිචයි. 2. සංඛාරම්, 3. විද්‍යාව 4. නාමරූප 5. සළායතන. 6. බස 7. වේදනා. 8. ධංක 9. උපාදානං 10. භවම් 11. කුල 12. සරමරණං; මේවා ක්‍රියා පිටකයේ මහා වාක්‍යයයි. මේ පසුබිම බලන්න.

අදටත් ශ්‍රී ලාංකේය බුදුන්ට මාර්ගඵල අවශ්‍යයි. ආරාම, විඤ්ඤාණ, අභිදරු යන ප්‍රතිපත්ති පිළිබඳ පැහැදිලි කිරීමක් අවශ්‍ය වේ.

හත්වැනි බෞද්ධ සංඝරත්නය කැඳවීමට බෞද්ධ ජනතාවගෙන් වරමක් ඉල්ලා සිටින්න.

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ මැතිවරණ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයට මෙය ඇතුළත් කරන්න. බෞද්ධ ඡන්ද දායකයෙකුගෙන් වරමක් ඉල්ලන්න. හින්දු ඡන්ද දායකයන් ඔබට සහාය වනු ඇත.

ශ්‍රී ලාංකීය හින්දු භක්තිකයන්ගේ සම්මුති ස්ථාවරය ලෙස අපි ඔබට ඉදිරිපත් කරන්නේ මෙම ස්ථාවර හතයි. මේවා ක්‍රියාත්මක කිරීමට බෞද්ධ ජනතාවගේ වරම ලබා ගන්න. ශ්‍රී ලංකාවේ හින්දු ඡන්ද දායකයින් ඔබට සහාය වනු ඇත.

ස්තුතියි

ආදරයෙන්

ශ්‍රී ලාංකික හින්දු ජනතාව වෙනුවෙන්

ශිව හමුදාව


Saturday, June 10, 2023

உமா மகேஸ்வரன் 1983

 சில சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சில முக்கிய விடயங்களையும் இதில் குறிப்பிட வேண்டியுள்ளது. உமா மகேஸ்வரனும், இரா ஜனார்த்தனம் உம் நேருக்கு நேர் சந்தித்தால் ஜனார்த்தனம் தலையை குனிந்து கொண்டு ஒதுங்கி போவதும், உமாமகேஸ்வரன் எங்களிடம் கள்ளன் போகிறான் என சத்தமாக சொல்லுவதும் வாடிக்கை. என்னைப் பொறுத்தளவில்ஜனார்த்தனம் ஒரு பெரிய ஆள் என நினைத்திருந்தேன். மாறன் ஏன் உமா கோபப்படுகிறார் என்ற விளக்கத்தைக் கூறினார்.

திரு அமிர்தலிங்கம் ஜெயவர்தன இடம்அரசியல் சமரசம் செய்து மாவட்ட சபையை பெற்றது பின்பு கோப்பாய் எம்பி கதிரவேற்பிள்ளை அவர்களுக்கும் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கதிரவேற்பிள்ளை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்க, இலங்கை ரகசிய தொடர்புகள் சம்பந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணி யால் தயாரிக்கப்பட்ட ரகசிய கோப்புகளை எடுத்துக்கொண்டு இந்தியா வந்துடெல்லியில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இடம் கொடுக்கப் போவதாக கூறி 1981 மார்ச் மாதம்என நினைக்கிறேன். இங்கு சென்னை வந்து அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அமிர்தலிங்கம் ஜனார்த்தனன் மூலம்தமிழ் கதிரவேற்பிள்ளை உடலை இலங்கை அனுப்புவதோடு அவரது உடமைகள் எல்லாம் மிக கவனமாக உடலோடு அனுப்பி வைக்கும்படியும் கூறுகிறார்.தமிழ்நாட்டில் பெரியார் திடலில்
அவரது கதிர்வேல் பிள்ளையின் உடலை வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு நடைபெற்றதாகவும் ஜனார்த்தனம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதற்கு பல இடைஞ்சல்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது இதனால்தான் உமா மகேஸ்வரன் ஜனார்த்தனன் மேல் கடுங்கோபத்தில் இருந்த சம்பவத்துக்கு காரணத்தை விளக்கினார்.
எமது பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு லங்கா ராணி அருளர் அடிக்கடி வந்துபேசுவார். இவர்கள் உமா இடம்பேசும்போது நான் மாதவன் அண்ணா சந்ததியர் போன்றோர்களும் இருப்போம். அருளர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் உள்ள சில பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச நடு நிலையாக வந்து இருந்தார். முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அந்த காலகட்டத்தில் சுந்தரம் புலி படைப்பிரிவு. காத்தான் புலி படைப்பிரிவு என்ற பெயர்களில் எமது சிறுசிறு தாக்குதல்களை மேற்கூறிய பெயர்களில் உரிமை கொண்டாடி வந்தோம் இது பிரபாகரனுக்கு பெரும் தலையிடியை கொடுத்தது வந்தது போல. வேறு பல பிரச்சினைகளை சந்ததியாரும் , உமா மகேஸ்வரனும் அருளர் இடம் விவாதித்துகொண்டிருப்பார்கள். இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் இனிமேல் நாங்கள் விடுதலை புலி என்ற பெயரை பாவிப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்தார்கள் சந்ததியாரும் உமா மகேஸ்வரனும்.
எமது இடத்துக்கு ஈரோஸ் ஐயர் பாலாவும் அடிக்கடி வந்து போவார். நாகராஜா. ஐயர் எல்லோரும் வருவார்கள் பழைய கதைகளை கூறுவார்கள். நாகராஜா ஆரம்பகாலத்தில் படுக்கையில் வைத்து சக நண்பர்களை பிரபாகரன்சுட்ட கதைகள் எல்லாம்கூறுவார். PLO வில் பயிற்சி எடுத்த விடுதலைப்புலி ஆரம்பகால உறுப்பினர் விச்சு என்ற விஸ்வேஸ்வரன் அடிக்கடி வருவார் அவர் உமா மகேஸ்வரனும் சிறுசிறு பயணங்களை மேற்கொண்டு வெளியூர்களுக்கும் போய் வருவார்கள்.அதே மாதிரி நாக ராஜா உடன் உமா பயணங்கள் போய் வருவார். அதோடு நாகராசா விடம்பணம் கடன் வாங்குவதும் உண்டு. எமதுஅறைக்கு நாகராஜா வந்தால், எமக்குசந்தோசம் காரணம் பகலுணவு மீன் இறைச்சி எல்லாம் வாங்கித் தருவார்.இப்படியான நேரங்களில் தான் நாங்கள் நல்ல உணவு சாப்பிட முடியும் இல்லாவிட்டால் அந்த10 ரூபாதான். விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு விலகி உமா மகேஸ்வரன் சென்னையில் தங்கியிருந்து கஷ்டப்பட்ட போது ஐநாவில் வேலை செய்த காந்தளகம் சச்சிதானந்தம் ஐயா உமா மகேஸ்வரனுக்கு வருமானம் கிடைக்க காந்தளகம் புத்தகங்களை விற்பதற்குஉதவி செய்தார். சென்னையில் இருந்த தன்னோடு படித்த பச்சையப்பா கல்லூரி பேராசிரியருமான பிரித்திவிராஜ் என்பவரின் செனாய் நகர்வீட்டில் காந்தளகம் புத்தகங்கள் இருந்தன. பேராசிரியர் பிரித்திவிராஜ் அமைந்தகரையில் தனது தோட்ட வீட்டில் உமாமகேஸ்வரன் மறைந்து வாழ உதவி செய்துள்ளார் .மிக ரகசியமான இடம். அமைந்தகரையில் கிளினிக் வைத்திருந்த பேராசிரியர் மூ வரதராஜனின் மகன்தான் உமா மகேஸ்வரனுக்கு இலவச வைத்தியம் செய்பவர் பிற்காலத்தில் நாங்களும் போய் இலவசமாய் மருந்து எடுத்து இருக்கிறோம் அவரின் பெயர் மறந்து விட்டேன்.
ஜூலை கலவரம் நடந்து கொஞ்ச நாட்களில் இலங்கையிலிருந்து காந்தளகம் சச்சிதானந்த ஐயா கலவர நேரம் பாதிக்கப்பட்டு சென்னை ப்ளு டைமன்ட் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார் அங்குதான் தந்தை செல்வாவின் மகன்சந்திரகாசன் நும் தங்கியிருந்தார். காந்தளகம் சச்சிதானந்தம் தனது அறைஇல் பிரஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த போது உமா மகேஸ்வரன் அதற்கு அழைத்தார் உமாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு அது. கூட என்னையும் அழைத்துப் போய் இருந்தார். பிரஸ்மீட் முடிவில் சச்சிதானந்தம் ,உமா இடம் கூறிய ஒரு செய்தியை உமா பத்திரிகையாளர்களிடம் கூறச் சொல்லி அதாவது மொரிசியஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாக இருப்பதான செய்தி. இந்த செய்தி அடுத்த நாள் பத்திரிகையில் சச்சிதானந்தம் ஐயா, உமாமகேஸ்வரன் பேட்டி களோடு, எனது பேட்டியும் வந்திருந்தது. எனது போய்ட்டு இருக்கு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் கூறுகிறார் என்று இருந்தது. அடுத்த நாள் காலையில் பத்திரிகையை வாசித்த சந்ததியார் என்னை அழைத்து கடுமையாக ஏசினார் முதலாவது நான் பேட்டிகொடுத்தது தவறு என்றும், அதைவிடத் தவறு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் என்று கூறியது என்றும் திட்டினார்.நல்ல காலம் அந்த நேரம் உமா மகேஸ்வரன் அங்கு வந்து தான்தான் பேட்டி கொடுக்க சொன்னதாகவும், இங்கு உள்ள பத்திரிகைகள் இலங்கை போராளிகள் பற்றி எழுதும்போது எந்த இயக்கமாக இருந்தாலும் விடுதலைப் புலிகள்தான் என்று எழுதுகிறார்கள் இதில் வெற்றியின் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார். ஆனாலும் சந்ததியார் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதை போல், உமாவையும் இடித்துரைப்பது போல், பேட்டி கொடுக்கும் முன்பு விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று கூறினார். உமாவும் சிரித்துக்கொண்டு நீங்களே இந்த முயற்சியை எடுக்கலாம் தானே என்று கூறினார்.
இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர்கள் சிறுவர்கள் இந்தியாவில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்கள். இங்கு வந்த பெரும்பான்மையானவர்கள் 3 மாத பயிற்சி ,திரும்பும்போது ஆயுதத்தோடு போவோம்என்ற நம்பிக்கையில்தான் வந்தவர்கள். சில பேர் இங்கு சினிமா நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்ற கனவில் வந்தவர்களும் இருந்தார்கள். டெலோ இயக்கம் உமா மகேஸ்வரன் இயக்கத்துக்கு என்று ஏமாற்றி ஆள் சேர்த்த கதையும் உண்டு. வந்தவர்கள் ஸ்ரீ சபா ரத்னத்தைபார்த்து இவரா உமாமகேஸ்வரன் என்று கேட்டு தாங்கள் பார்த்த படத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும்வித்தியாசமாக இருக்கிறார் என்று கூறியும்இருக்கிறார்கள்.
இன்னொரு மிக முக்கிய சம்பவத்தையும் கூறவேண்டும் இயக்கத் தலைமைகள் எல்லாம் மறைத்த சம்பவம். பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவுக்கு கூடுதலாக வந்து இந்தியா நேரடியாக பங்களாதேசில் தலையிட்டு பிரித்து கொடுத்தது போல், இங்கும் இலங்கை அகதிகள் பெருமளவு வந்தாள் இயக்கங்களுக்கு பெருமளவு பயிற்சியும் ஆயுதமும் கிடைக்கும் என்ற கனவில் எல்லா இயக்கங்களும் பெருமளவு பொதுமக்களை மூன்று மாதத்தில் திரும்பி வந்து விடலாம் அகதிகள் கூடினால் இந்தியா தலையிடும் தமிழீழம் கிடைத்து விடும் என்று கூறி பொதுமக்களை தங்கள் தங்கள் இயக்க படகுகள் மூலம் கூட்டி வந்தார்கள். அதோடு இதை பணம் சேகரிப்பதற்கான வழியாகவும் கையாண்டார்கள் பணம் வாங்கிக்கொண்டு இயக்க, வெளி படகுகளில் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இந்தியா கொண்டு வந்து சேர்த்து இருபது முப்பது வருடங்கள் அவர்களின் வாழ்க்கையை சீரழித்து அதில் இந்த விடுதலை இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்