Wednesday, January 19, 2022

பரராசேகரப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்

 வாழ்த்துரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை

 

குடத்துள் விளக்கு. உறையுள் வாள். காட்டினால் காணலாமா? அன்பும் அத்தகையதே.

நினைக்கும் தொறும் தன்னை மறப்பர். காணும்தொறும் தம் அடையாளம் இழப்பர். கேட்கும்தொறும் தலைப்படுவர். காணாத அன்பைக் காட்டுபவர் அவரே.

அம்மமையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே என்பார் மாணிக்கவாசகர்.

மனம் ஒன்றிறும். மனம் ஒடுங்கும். மனம் எதுவாகிறதோ அதுவாகும் அன்பால். தாயாகும் தந்தையாகும் மகவாகும் அன்பர் என்பவர்க்கே.

திங்கள் சேர் சடையாரைக் காணப் போகிறார் கண்ணப்பர். காணா முன்னே அன்புருவமானார். மோகமாய் ஓடிச் சென்றார். கண்டதும் தழுவினார், மோந்து நின்றார் என்பார் சேக்கிழார்.

மக்களுக்கு வாத்தியாராய், வளர்ப்புத் தாயாராய், வைத்தியராய், நண்பனாய், மந்திரியாய், நல்லசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எனக்குள்ளான் கண்ணன் என்பார் மகாகவி பாரதியார்.

அன்பு மேலீட்டினால் தலைவனுக்குத் தாயாகி வந்து பாலூட்டி வளர்க்கும் பாங்கைக் கூறுவதே பிள்ளைத் தமிழ் இலக்கிய மரபு.

அரசன் குலோத்துங்கன் மீது அன்பு மீவரப் பெற்றவர் ஒட்டக்கூத்தர். தன் மகவாப் பார்க்கிறார். தாமே குலோத்துங்கனுக்குத் தாயாகிறார். குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் என அன்பைப் பிழிகிறார், 100 பாடல்களில் தமிழைப் பொழிகிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் நமக்குக் கிடைக்கும் முதலாவது நூல்.

குலோத்துங்கன் பிறந்த மூன்றாவது மாதம் தொடக்கப் பருவம். இரு மாதங்களுக்கு ஒரு பருவம். ஆக பத்துப் பருவங்கள். 21ஆம் மாதம் வரை. காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்கள். ஒட்டக்கூத்தர் விட்டுச் சென்ற வரன்முறை.

குமரகுருபரர், பகழிக் கூத்தர், அழகிய சொக்கநாதர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சிவஞான சுவாமிகள், அருணாசலக் கவிராயர் என ஒட்டக்கூத்தரைத் தொடர்ந்து தத்தம் அன்பரைச் சேயாக்கித் தாம் தாயாகி, அன்பைப் பிழிந்து தமிழைப் பொழிந்த புலவர் பெருமக்கள் எண்ணிக்கை சொல்லும் அளவன்றோ!

அவர்கள் வழி வந்த, பண்டிதை வைகுந்தம்மையார் கணேசபிள்ளை இணுவில் அருள்மிகு பரராசசேகரப் பிள்ளையாரைக் கண்டார், மோகம் கொண்டார். மகவெனப் பாங்கு கொண்டார். தாயாகித் தம்முள் இயைந்தார். நெஞ்சம் கனத்தார். நினைவை மறந்தார். தமிழ்ச் சொற்கள் தாமாக வந்து வரிசையில் நின்றன. அவரை மீறி வரிகள் விரிந்தன. பிள்ளைத் தமிழாயின.

தாலேலோ தாலேலோ, கொட்டுக சப்பாணி, எனத் தமிழைக் கொட்டினார், குவித்தார். குன்றின் விளக்காகிப் பண்டிதை வைகுந்தம்மையார் கணேசபிள்ளை அவர்கள், இணுவில் அருள்மிகு பரராசேகரப் பிள்ளையார் மீது பிள்ளைத் தமிழ் பாடினார். வாழ்த்துகிறேன்.

அருள்மிகு பரராசேகரப் பிள்ளையார் திருக்கோயில் குடமுழுக்கு நாளான திபி 2053, பிலவ, தை 24, ஞாயிறு அன்று திருநெறிய தமிழ் மறைக் கழகத்தினர் வெளியிடுகிறார்கள். வாழ்த்துகிறேன்.

இந்தியப் பிரதமருடன் சந்திப்பா? October 03, 2006

 Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

1. ஈழத்தமிழரின் அடிமை வாழ்வு நீங்கவேண்டும்.

2. ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரடையவேண்டும்.

இந்த இரு நோக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிலிருந்து மேற்கொண்டு வருகிறேன்.

1. ஈழத்தமிழரின் பாதுகாப்பும் தன்னாட்சியும் ஈழத்தமிழரிடமே இருக்கவேண்டிய தேவை,

2. 1987-91 கால, ஈழத்தமிழர் - இந்தியப் பொருந்தா நிகழ்வுகளை மறப்பது,

3. இந்தியாவில் அகதிகளின் நலம்,

4. சிங்களப் படைகளுக்கு இந்தியா உதவக்கூடாதமை,

5. இந்திய நலன்களுக்கு மாறாக ஈழத்தமிழர் செயற்படார் என்ற உறுதி,

6. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை இந்தியா அழைத்துப் பேசுவது,

7. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களை ஈழத்துக்கு அனுப்புவது,

8. இந்த நோக்கங்களை ஒட்டிய கருத்துருவாக்கக் கட்டுரைகள், ஒலி/ஒளி பரப்புகள்,

9. இந்த நோக்கங்களை முன்னெடுக்கச் செல்வாக்குள்ள தமிழகத் தமிழர் மற்றும் இந்தியர்களிடம் ஈழத்தமிழர் பால் நல்லெண்ணத்தை உருவாக்குவது.

போன்றவை என் முயற்சிகளுட் சிலவாக அமைந்து வந்தன.

மாவை சேனாதிராசாவும் நானும்

இந்தப் பின்னணியில் 28.8.2006 முதலாக 23.9.2006 ஈறாக வரையுள்ள மூன்று வார காலப்பகுதியில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்யவேண்டியது என் கடன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் பழம்பெரும் விடுதலைத் தியாகியும் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா என்னுடனேயே தங்குவார். ஈழத் தமிழர் இந்திய உறவுகள் மேம்படையும் முயற்சிகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருப்பார். இதற்காகச் சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை இருவருமாக ஒருநாள் பயணமாகக் காலை தில்லிக்குப் போய் மாலை சென்னை வந்தோம்.

தில்லிச் சந்திப்பும் பிறவும்

இந்தியப் பிரதமர் அலுவலக மூத்த அலுவலர் நீண்ட காலமாக என் அருமை நன்பர் திரு. ஓர்மிஸ் அவர்களின் விருந்தினராகச் சென்று முழு நாளும் அவருடனேயே கலந்துரையாடினோம்.

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன் பெப்புருவரியில் ஒரு சுற்றாகவும், தேர்தலுக்குப்பின் சூலையில் ஒரு சுற்றாகவும் தமிழகத் தலைவர்களைச் சந்தித்தோம்.

பெப்புருவரியில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் செய்திகள் வெளிவராதவாறு காத்துக் கொண்டோம். தேர்தலுக்குப் பிந்தைய சூலை மாதச் சந்திப்புக்கு இரா. சம்பந்தனும் வருவார் என மாவை சேனாதிராசா என்னிடம் தெரிவித்திருந்தார்.

எனவே தமிழகத் தலைவர்களிடம் அதைக் கடிதமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வர் கலைஞர், எதிர்க கட்சித் தலைவர் செயலலிதா, மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி இவை தவிர ஏனைய கட்சித் தலைவர்கள், ஈழத்தவர் இருவரின் வரவை ஆவலோடு பார்த்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

சம்பந்தனின் ஆர்வமின்மை

ஒப்பியவாறு இரா. சம்பந்தன் வரவில்லை. எனவே மாவை சேனாதிராசாவும் நானும் இச்சந்திப்புகளைத் தொடர்ந்தோம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன.

இரா. சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தார். அக்காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம்.

இந்தச் சந்திப்புகளின் தேவை, அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை கொண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் தோன்றியது.

மாவையின் முயற்சி

அடுத்த சுற்றுச் சந்திப்புக்களுக்காக, இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் 10.8 முதலாகச் சென்னையில் தங்கி இருக்கப் போவதாகவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவை சேனாதிராசா என்னைத் தொலைப்பேசியில் கேட்டுக் கொண்டார்.

அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த பின் தமிழகத் தலைவர்களைத் தொடர்பு கொள்வேத ஏற்றது எனக் கருதிய நான், காத்திருந்தேன். முந்தைய அநுபவம் பாடமாக இருந்தது.

23.8.2006 அன்று மாவை சேனாதிராசா சென்னைக்கு வந்தார். விரைவில் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வந்துவிடும் என எனக்குக் கூறினார்.

வைகோவும் அருணகிரியும்

28.8.2006 மாலை 5 மணியளவில் வைகோவின் செயலர் அருணகிரி என்னிடம் வந்திருந்தார். அவர் வெளியிடவுள்ள புத்தகம் ஒன்றின் பக்கங்களைப் பார்த்துத் தவறுகள் இருப்பின் திருத்தித் தருமாறு கேட்க வந்திருந்தார்.

ஈழத் தமிழர் தொடர்பாகப் பல நூல்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றை நான் பார்த்துக் கொடுப்பது வழமை.

தமிழக முன்னணி இதழான தினமணியில் வெளிவந்த மன்னிப்போம்.. என்ற என் கட்டுரையைத் தம் கட்சி ஏடான சங்கொலியில் மீள்பிரசுரம் செய்யுமாறு வைகோ தன்னிடம் சொன்னதாகவும், வைகோ என்னிடம் பேச விரும்பியதாகவும், அருணகிரி தெரிவித்தார்.

சென்னை வரும்போது வைகோவைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்தேன். உடனே வைகோவுடன் தொடர்புகொண்டு, 29.8 மாலை சென்னையில் சந்திப்பதற்கு அருணகிரி ஏற்பாடு செய்தார்.

மாவை சேனாதிராசாவும் அப்போது உடனிருந்தார். நீங்களும் வாருங்கள் என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். நீங்களே சந்தித்து விட்டு வாருங்கள் என்றார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

பிரதமரைச் சந்திக்கலாமா?

29.8.2006 மாலை 6 மணிக்கு வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மறுநாள் 30.8 பிரதமரைச் சந்திக்கத் தில்லி செல்வதாகக் கூறிய வைகோ, பலவற்றை என்னுடன் பேசினார்.

சிங்களத் தலைவர்கள் அடிக்கடி தில்லிக்கு வந்து பிரதமரையும் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் போகிறார்கள், தமிழர் தரப்பு நியாயங்களைக் கூற ஈழத் தமிழ்த் தவைர்களும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.

ஏற்கனவே குறித்து வைத்திருக்கிறேன், கட்டாயம் பேசுவேன் என்றார்.

ஈழத்தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கப் பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என வைகோ, நெடுமாறன் ஆகிய இருவரும் மிகத் தீவிரமாகவும், மருத்துவர் இராமதாசு, கி. வீரமணி போன்ற பலர் அடிக்கடியும் போராட்டங்கள் நடத்துவதும், அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழ் நாட்டில் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வந்த நிகழ்வுகள்.

ஈழத்தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பது பற்றி முன்பொருமுறை பிரதமரிடம் வைகோ பேசியபொழுதும், கவனிக்கிறேன் எனப் பிரதமர் வைகோவிடம் கூறியிருந்தார்.

வைகோவின் ஏற்பாடு

30.8 பிரதமர் - வைகோ சந்திப்பின் போது, ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் பிறவுமான வைகோவின் பேட்டி 31.8 காலை இதழ்களில் வந்திருந்தது.

அக்காலத்தில் கலைஞர் முதலமைச்சர். கலைஞரின் அணியில் வைகோ இல்லை. தாம் செய்யாமல் வைகோ செய்வதா? என்ற சினம் கலைஞருக்கு வந்திருக்கலாம்!  

அன்று காலை 11 மணிக்கு வைகோ என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார், மாவை சேனாதிராசாவையும் அழைத்துக் கொண்டு பிற்பகல் 2 மணிக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு கேட்டார்.

நானும் மாவை சேனாதிராசாவும் அவரிடம் சென்றோம்.

எம்மிடம் பல விவரங்களைச் சொன்ன அவர், பிரதமர் உங்களைக் கட்டாயம் சந்திப்பார். அதற்கான உறுதியை என்னிடம் தந்துள்ளார். ஆணையையும் என் முன்னே இட்டார். நீங்கள் கடிதம் எழுதித் தொலைநகலாக உடனேயே அனுப்புங்கள் என்றார்.

தமிழ்ச் சாதியின் தலைவிதி

வீடு திரும்பியதும் இரா. சம்பந்தனைத் தொலைப்பேசியில் மாவை சேனாதிராசா தொடர்பு கொண்டார். இந்தியாவில் இரா. சம்பந்தன் இருப்பதாகவும் 4.9 சென்னை வருவார் என்றும் அவர் வந்ததும் கடிதத்தைதத் தயாரித்து அனுப்பலாம் என அவரே சொன்னதாகவும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார்.

அவர் வரும் வரை காத்திருக்க வேண்டாம், நீங்கள் உடன் கடிதத்தை அனுப்புங்கள், எனக் கேட்டேன். மாவை சேனாதிராசா உடன்படவில்லை.

நான் மனம் நொந்தேன். தமிழ்ச் சாதியின் தலைவிதி இதுவா? என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன்.

தமிழ் நாட்டில் பலர் இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள், கருத்துருவாக்கத்தில் பலர் தம் நேரத்தை, பொருளைச் செலவிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் அழுத்தத்தை உணர்ந்த பிரதமரும் ஒப்புகிறார். நீங்கள் கடிதம் அனுப்புவது முறை. அதை ஏன் பின்போடுகிறீர்கள்? எனக் கேட்டேன். இரா. சம்பந்தன் வரட்டும் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

கலைஞருக்குக் கடிதம்

மாவை சேனாதிராசாவும் இரா. சம்பந்தனும் சந்திப்புக் கேட்டு, இருவரும் ஏற்கனவே கையொப்பமிட்டுக் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை 01.09.2006 வெள்ளிக்கிழமை காலை, கலைஞர் வீட்டுக்குக் கொடுத்தனுப்பினோம்.

மதியம் கவிஞர் காசி ஆனந்தனும் மனைவியாரும் என்னைத் தற்சேயலாகச் சந்திக்க வந்திருந்தனர். என் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் அவர்களிடம் சொன்னேன்.

ஈழத் தமிழர் நியாயங்களை இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பு நழுவி விடும் போலத் தெரிகிறேத என்றேன்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

நெடுமாறன் சந்திப்பு

வாங்கோ சச்சி, நெடுமாறனிடம் போவோம் எனக் கவிஞர் கூறினார். நேரே நெடுமாறனிடம் போனோம். விவரத்தைச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கவலைப் படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும் எனக் கூறி எங்கள் மூவரையும் வழியனுப்பினார்.

அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்கு நெடுமாறனிடமிருந்து தொலைப்பேசியில் செய்தி. 4.9இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்துவிடுவார், உடன் பிரதமரைச் சந்தியுங்கள் என்பேத செய்தியின் சாரம் என மாவை சேனாதிராசா என்னிடம் சொன்னார்.

இரா. சம்பந்தன் 5.9 இரவுதான் வருகிறார், அவர் வந்த பின்பு முடிவு செய்வோம் என்பைதயும் மாவை சேனாதிராசா சொன்னார்.

2.9 காலை நெடுமாறன் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். கவலைப் படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாளையோ மறுநாளோ வருவார், வந்ததும் தில்லிக்குப் போகலாம் என்றார். மாவை சேனாதிராசாவுக்கும் அத்தகைய செய்தி இரவே வந்துள்ளைத அவரிடம் கூறினேன்.

வைகோவின் செய்தி

இதற்கிடையில் வைகோ என்னை அழைத்தார். 9.9க்குமுன் சந்திப்பு நிகழவேண்டும். 10.9 பிரதமர் வெளிநாடு போக உள்ளார். போனால் 20.9க்குப் பின்னர் தான் நாடு திரும்புவார் என்றார் வைகோ.

கலைஞரோ தமிழ் நாட்டின் முதலமைச்சர். மூத்த அரசியல்வாதி. ஏற்கனவே ஈழத்தமிழரின் சில செய்கைகள் அவரைப் புண்படுத்தியுள்ளன. அவரைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பது முறையல்ல. அவருடைய வாழ்த்துகளுடன் செல்வேத ஈழத்தமிழருக்கு நல்லது, எனவே அந்தச் சந்திப்புக்கு முயல்வோம் என்றார் மாவை சேனாதிராசா.

கலைஞர் தவிர்க்கிறார்

காலை வேளைகளில் தொலைப்பேசியில் அழைத்தால் கலைஞருடன் நேரில் பேசும் வாய்ப்புகள் உண்டு. என்னோடு உள்ள பரிச்சியத்தால் அவர் பேசுவதுண்டு.

எனவே 3.9 காலை 6 மணியளவில் கலைஞர் இல்லத்துக்கு அழைத்தேன். அவர் உடற் பயிற்சியில் இருக்கிறார் என்றார்கள். குழப்பாதீர்கள் பின்னர் அழைக்கிறேன் எனக் கூறிய நானே நேரில் போய்ப் பேசுவேத முறை எனக் கருதினேன்.

அன்று முற்பகலில் உதவியாளர்களிடம் பேசினேன். உங்கள் கடிதத்தை இன்னமும் பார்க்கவில்லை என்றார்கள்.

எனக்கு மனம் கேடகவில்லை. இரா. சம்பந்தன் வரும் வரை பார்த்திருப்பதா? மாவை சேனாதிராசா கடிதம் எழுதினால் என்ன?

மருத்துவர் இராமதாஸ்

3.9 காலை 9 மணிக்கு மருத்துவர் இராமதாசின் உதவியாளரைத் தொலைப்பேசியில் அழைத்தேன். மருத்துவர் இராமதாசே நேரில் பேசினார். பத்து மணிக்குச் சந்திப்போம் என்றார்.

மாவை சேனாதிராசாவும் நானும் சென்றோம். 22 உறுப்பினருள் 10 உறுப்பினராவது சேர்ந்து செல்லவேண்டும் பிரதமரிடம் விவரங்களைச் சொல்லுங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.

இரா. சம்பந்தன் சென்னைக்கு வராமல் எைதயும் செய்யமுடியாது என்பதில் மாவை சேனாதிராசா முடிவாக இருந்தார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

கலைஞரிடம்

8.9.2006 அல்லது 9.9இல், பிரதமரைச் சந்திக்கப் போகிறோம். உங்களைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பதும் முறையல்ல. 7.9 காலை எமக்கு நியமனம் தாருங்கள் எனக் கேடடு 4.9 நாளிட்ட கடிதம் ஒன்றை மாவை சேனாதிராசா எழுத, அதையும், 1.9 கடிதப் படியையும் இணைத்துக் கொண்டு, 4.9 காலை 9 மணிக்கு நேரில் கலைஞரின் இல்லம் சென்றேன்.

அங்குள்ள உதவியாளர் யாவரும் அன்புடன் என்னை வரவேற்று, கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். மாலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர்.

மாவை சேனாதிராசாவும் நானும் மாறி மாறிக் கலைஞரின் உதவியாளருடன் தொடர்பு கொண்டவாறிருந்தோம். சாதகமான பதில் வரவேயில்லை.

சம்பந்தன் சென்னையில்

5.9.2006 மாலை சம்பந்தன் சென்னை வந்தார். 6.9 காலை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் இருவரும் சென்னை வந்தனர். சிவாஜிலிங்கம் சென்னையிலேயே தங்கியிருந்தார்.

மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் நால்வரும் 6.9 மதியம் எனதில்லத்தில கூடிப் பிரதமரின் சந்திப்புப் பற்றிப் பேசினோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்குமாறு பிரதமரிடம் கோருவது என்ற கருத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருந்தது.

பிரதமர் அலுவலக மூத்த அலுவலர் ஓர்மிஸ்ஸைச் சில மாதங்களுக்கு முன் தில்லியில் சந்தித்த பொழுது இதே கருத்தை மாவை முன்வைத்திருந்தார்.

இரா. சம்பந்தன் சென்னயைில் இருந்தாராயினும் அவர் இந்த நால்வரையும் 6.9அன்று சந்திக்கவில்லை. இவர்களும் அவரைச் சந்திக்கவில்லை.

மடியில் நெருப்பு

நெருப்பை மடியில் கட்டிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு. பிரதமர் சந்திக்க ஒப்புதல் தந்துள்ளார். சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கேட்டு நாம் அவருக்குக் கடிதம் அனுப்பவில்லை.

30.8இல் ஒப்புதல் தந்தவர், 10.9இல் வெளிநாட்டுக்குப் புறப்பட இருப்பவர், ஏதோ நாம் கேட்ட உடனே நேரம் ஒதுக்குவார் என்ற துணிவு 6.9 வரை எமக்கு இருப்பது அசாத்தியத் துணிவுதான் எனக் கருதினேன்.

ஆனாலும் உந்துதலை விடாமல் கடிதம் அனுப்புவோமா எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்தாய்? என்ற என் மனக் குமுறலை அதே சொற்களால் இந்த நால்வரிடமும் கூறினேன்.

7.9 காலை எனதில்லத்தில் இந்த ஐவரும் சந்திப்பது என இரா. சம்பந்தனிடமிருந்து தொலைப்பேசிச் செய்தி வந்தது.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

Text Box: 6இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

பிரதமர் சந்திக்க ஒப்பார்?

காலை 10.30 மணியளவில் எனதில்லத்தில் இந்த ஐவரும் கூடினர். நானும் அங்கிருந்தேன். பிரதமர் எங்களைச் சந்திக்க ஒப்பமாட்டார், எனவே நியமனம் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதுவதில் பயனில்லை என்றார் இரா. சம்பந்தன்.

மற்ற நால்வருக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. அதை அவர்கள் ஒவ்வொருவராக விளக்கிக் கூறினர்.

பிரதமர் அலுவலகத்தில் என்ன செய்வார்கள் என முன்கூட்டியே முடிவு செய்வதற்கு எமக்கு உரித்தில்லை. பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய முடிவை நாம் இங்கிருந்து செய்யவேண்டாம். மூன்று படி நிலைகளாக முயல்வோம்.

கலைஞரை மீறலாமா?

பிரதமருக்குக் கடிதம் எழுதுவோம், கலைஞருக்குக் கடிதம் எழுதுவோம், பிரதமரிடம் என்ன கேட்கப் போகிறோம் என்பைதயும் எழுதி வைத்திருப்பபோம் என அழுத்தம் திருத்தமாகச் சம்பந்தனிடம் கூறினேன்.

தமிழகத்தின் முதல்வர் கலைஞர். அவரை மீறி, அவரின் ஒப்புதல் பெறாமல் பிரதமரிடம் போவது முறையல்ல. கலைஞரின் ஒப்புதலைப் பெறுவோம் அதன் பின்னர் பிரதமரிடம் செல்வோம் என்றார் இரா. சம்பந்தன்.

கலைஞரின் மனோ நிலை

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், பெப்புருவரி 2006இல், மாவை சேனாதிராசாவும் நானும் கலைஞரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தோம்.

கலைஞருடைய வழிகாட்டலில் தில்லியுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறோம் என்று அப்பொழுது அவரிடம் கூறினோம்.

நீங்கள் நேரே தில்லியுடன் தொடர்புகொள்ளுங்கள், என அவர் அப்பொழுது சொன்னார். அதற்குரிய வலுவான காரணங்களையும் கலைஞர் எமக்கு விளக்கினார்.

ஈழத்தமிழருக்கு நன்மை எனில் கலைஞர் ஒரு பொழுதும் குறுக்கே நிற்கமாட்டார். ஈழத் தமிழர் தமக்குரியதை விரைந்து பெறவேண்டும் என்பதே கலைஞரது உளமார்ந்த விருப்பம். அவர் தில்லிக்கு எங்களைப் போகச் சொல்லிவிட்டார். எனவே கலைஞரைக் காரணம் காட்டிச் சந்திப்பபைத் தவிர்க்கவேண்டாம் எனக் கூறினேன்.

அந்தச் சந்திப்பில் நிகழ்ந்ததை இரா. சம்பந்தனுக்கும் மற்ற நால்வருக்கும் மாவை சேனாதிராசா விரித்துக் கூறினார்.

ஒருவாறு கடிதங்கள்

மதியம் 1.30 மணியளவில் கலைஞருக்கான தமிழ்க் கடிதத்தை முதலில் நான் எழுதினேன். பிரதமருக்கான ஆங்கிலக் கடிதத்தை இரா. சம்பந்தன் எழுதினார். இரண்டையும் நானே தட்டச்சுச் செய்து கொடுத்தேன். சம்பந்தன் கையெழுத்திட்டுத் தந்தார்.

பிரதமரின் இல்ல மற்றும் அலுவலகத் தொலைநகல் எண்களைத் தேடிக் கொடுத்தேன். தொலைநகலை அனுப்பிவிட்டதாக மாவை சேனாதிராசா எம்மிடம் வந்து கூறிய பொழுது 7.9.2006 மணி பிற்பகல் 2.30. கலைஞருக்கும் தொலைநகலாகக் கடிதம் போய்ச் சேர்ந்தது.

சரி பிறகு சந்திப்போம் எனச் சம்பந்தன் எழுந்தார். பிரதமருக்கு என்ன சொல்லப் போகிறோம் என்பைதத் தெளிவாக்கி, எழுத்தில் தயாரித்து முடிப்போம் என நான் வலியுறுத்த, சம்பந்தன் மீண்டும் அமர்ந்தார். எழுதினார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

 

பிரதமருக்கு எழுதிய கடிதத்தைத் தட்டச்சு நிலையில் சரி பார்த்த பிறகு போகலாம் என்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் கடிதத்தைத் தட்டச்சுச் செய்ய முன்வந்தார்.

தட்டச்சுப் படிகளுள் ஒன்று இரா. சம்பந்தனிடம் மற்றது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் என்ற நிலையில் அன்றைய கூட்டம் கலைந்தது.

தொலைநகலில் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினோம் என்பதை வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் கூறினேன்.

வைகோ தென் மாவட்டமொன்றில் இருந்தார். பின்னர் அன்றிரவு அவராகவே என்னுடன் பேசினார். நாளை சந்திப்பு நிகழலாம் போலத் தெரிகிறது என்றார்.

7.9.2006 காலை 10.30 மணிக்குக் கூடியபொழுது, எங்களுள் பலருக்கு இருந்த கருத்தொற்றுமையில், பிரதமரைச் சந்திக்கும் வரை இது தொடர்பான செய்திகள் வெளிவரக் கூடாதென்பதாகும்.

ஆனால் கூட்டமாக நாம் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுதே, சிவாஜிலிங்கத்தின் தொலைபேசிக்குச் செய்தியாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன.

அது மட்டுமல்ல, அந்த அழைப்புகளுக்கு இரா. சம்பந்தன் பதில் கூற வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் விரும்பினார்.

பிரதமரைச் சந்திப்பது பற்றிய செய்திகளை, பிரதமர் சந்திப்பு முடியும் வரை எங்கள் தரப்பிலிருந்து எந்தக் கசிவும் இருக்கக் கூடாதென முடிவு செய்தோம்.

பிரதமர் அலுவலக அழைப்பு

8.9.2006 காலை 10.30 மணி. பிரதமர் அலுவலகத்திலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்?

விமான நிலையத்திலிருந்து எத்தனை கிமீ. தூரத்தில்உள்ளீர்கள்?

அடுத்த விமானம் எப்பொழுது?

விவரங்களைத் தயாரித்து என்னை அழைக்கமுடியுமா?

எனக் கேட்டுத் தன் பெயரையும் தொலைபேசி எண்ணையும் அந்த உதவியாளர் என்னிடம் தந்தார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

Text Box: 8இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

பிரதமர் அலுவலகமும் நானும்

பயண ஒழுங்குகளையும் பிரதமர் அலுவலகத் தொடர்பையும் நான் கவனிக்க, உறுப்பினரைத் திரட்டும் முயற்சியில் மாவை சேனாதிராசா ஈடுபட்டார்.

விமானச் செலவுகள் பற்றி உடனடியாகக் கவலை வேண்டாம், நான் இப்பொழுது பொறுப்பு நிற்கிறேன், பிறகு பார்ப்போம் என்றேன்.

பிற்பகல் 1.45க்கு விமானம் உள்ளைதயும் பயணச்சீட்டுகள் பெறமுடியும் என்பைதயும் என் அருமைலநண்பர் மதுரா ரவல்ஸ் வி. கே. டி. பாலன் உறுதி செய்தார்.

இந்த விவரங்களை நான் மாவை சேனாதிராசாவிடம் சொல்லி, ஏனைய உறுப்பினரைத் திரட்டி மதியம் 12 மணி அளவில் விமான நிலையம் போக ஆயத்தமாகச் சொன்னேன்.

பிரதமர் அலுவலகத்திற்கும் இந்தத் தகவலைச் சொன்னேன். தாம் சொல்லும் வரை விமான நிலையம் போகவேண்டாம் எனவும், ஆயத்தமாக இருக்கும் படியும் பிரதமர் அலுவலக உதவியாளர் என்னிடம் கூறினார்.

இதற்கிடையில் அடுத்த விமானம் எத்தனை மணிக்கு என விசாரித்தேன். மாலை 6 மணிக்கு என்றார்கள்.

அதையும் பிரதமர் அலுவலகத்தில் கூறிய பொழுது, சந்திப்பதாயின் 1.45 விமானத்திலேயே வந்து விட வேண்டும், பிரதமர் அலுவலகத்துள் செயலாளர் போயுள்ளார், வந்ததும் சொல்கிறேன், காத்திருங்கள் என்றார் பிரதமர் அலுவலகத்தின் அந்த உதவியாளர்.

சந்திப்புப் பின்போடல்

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பத்மினி சிதம்பரநாததனும் பயணப் பொதிகளுடன் எனதில்லம் வந்து சேர்ந்தனர். சம்பந்தனும் சிவாஜிலிங்கமும் நேரே விமான நிலையம் வந்துவிடுவதாகக் கூறினார். தொடர்பாக இருங்கள் நாம் சொன்னதும் புறப்படலாம் என ஆயத்த நிலையில் அவர்களை வைத்திருந்தோம்.

நண்பகல் 1 மணியளவில் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு எனக்கு வந்தது. நியமனத்தை உறுதிசெய்ய முடியவில்லை.

வைகோவுடன் தொடர்பாக இருங்கள் அவருக்கு விவரம் சொல்கிறோம், வெளிவிவகார அமைச்சிடமும் பேசி வருகிறோம் என்றார்கள்.

இதற்கிடையில் மாவை சேனாதிராசாவுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் தொடர்பாக இருந்தனர். அவர்களும் இந்தச் சந்திப்புப் பற்றி உற்சாகமாகப் பேசி ஊக்குவித்து வந்தனர்.

உடனுக்குடன் வைகோவிற்கு விவரம் சொன்னோம். அவரும் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்கொண்டு வந்தார். 8.9 இரவு ஒரு கூட்டத்திலிருந்த வைகோவைப் பிரதமர் அலுவலகம் அழைத்து, வெளிநாட்டுப் பயணத்தின் பின்னரே சந்திப்பு என்பைத எம்மிடம் தெரிவிக்கக் கூறினார்கள்.

வைகோவுடன் சந்திப்பு

இதை எம்மிடம் தெரிவித்த வைகோ, மறுநாள் 9.9 காலை இரா. சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். இதை மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்தேன். குழுவாகப் போவெதன முடிவாயிற்று.

தில்லிப் பயணத்துக்காகப் பயணப் பொதிகளோடு எனதில்லம் வந்த பத்மினி சிதம்பரநாதன் வெளியே விடுதியில் தங்கியிருக்க விருப்பமில்லை என்றதால் எனதில்லத்திலேயே தங்குவது என முடிவாயிற்று.

மாவை சேனாதிராசா ஏற்கனவே எனதில்லத்தில் தங்கி இருந்தார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்குமுன் சந்திப்பு நிகழ முடியவில்லை. 30.8இல் ஒப்பிய பிரதமருக்கு அடுத்த நாளே கடிதம் அனுப்பி இருப்பின் சூட்டோடு சூடாகச் சந்திப்பு நடந்திருக்கலாம்.

ஈழத் தமிழரின் அண்மைய வரலாற்றில் திருப்பு முனையாக அமைய வேண்டிய சந்திப்பு இவ்வாறு நழுவியமைக்கு யார் காரணம்?

7.9 பிற்பகல் 2.30க்குக் கடிதம் அனுப்புகிறோம், 8.9 காலை 10.30 மணிக்குப் பிரதமர் அலுவலகம் எம்மோடு தொடர்பு கொள்கிறார்கள். அத்தகைய வேகம் பிரதமர் அலுவலகத்துக்கு இருந்தது.

30.8இல் ஒப்பியதற்கு 7.9இல் கடிதம் எழுதும் வேகம் (?) ஈழத்தமிழர் தரப்பில் இருந்தது.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

ஊடகத்துக்குக் கசிவு

09.09.2006 முற்பகலில் வைகோவைச் சந்திக்க இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை அழைத்துச் சென்றேன்.

சிவாஜிலிங்கம் வரவில்லை. செய்தியாளரிடம் அவர் கொண்ட தொடர்புகள் பற்றியும் தேவையற்ற கசிவுகள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க முடிவுசெய்ததன் விளைவாகவே அவர் அழைக்கப்படவில்லைப் போலும் என நான் ஊகித்தேன்.

வைகோ எம்மை அன்புடன் வரவேற்றார். பொன்னாடைகள் அணிவித்தார். நிழற்படங்களை அவரது அலுவலக உதவியாளரே பிடித்துக் கொண்டார். செய்தியாளர்கள் எவரும் வரவில்லை.

அறைக்குள் நாம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கையில் சிவாஜிலிங்கம் வந்து சேர்ந்து கொண்டார். 2 மணி நேரம் கருத்துப் பரிமாறினோம்.

செய்தியாளர் வெளியே காத்திருப்பதாக வைகோவின் செயலர் என்னிடம் கூறினார். வியப்பாக இருந்தது.

தனிப்பட்ட பணிக்காக வந்திருப்பைதயும் முடிந்தால் இந்தியாவில் தலைவர்களைச் சந்திப்பதாகவும் பொதுப்படச் செய்தியாளரிடம் கூறுவதாக ஒப்பிக் கொண்டு, வெளியே வந்தோம்.

3 - 4 இதழ்களிலிருந்து செய்தியாளரும் புகைப்படப் பிடிப்பாளரும் காத்திருந்தனர். செய்தியாளரிடம் ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு செய்தியைக் கூறி, அனைவரும் எமதில்ல வாயில் வந்தோம்.

இரா. சம்பந்தனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புறப்பட்டனர். சிவாஜிலிங்கத்தை அழைத்து வந்தேன். அவர் சினத்துடன் இருந்தார். செய்தியாளரை அழைத்ததன் பின் விளைவுகளைப் பத்மினி சிதம்பரநாதனும் நானும் அவரிடம் கூறினோம்.

பிரதமரைச் சந்திக்க முன், செய்திக் கசிவுகளில் எனக்கு உடன்பாடில்லை என்பைத நான் அழுத்தமாக அன்று தெரிவித்தேன். மாவை சேனாதிராசாவும் உடனிருந்தார்.

தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்ற சிவாஜிலிங்கம், தனக்கு இச்சந்திப்பை அறிவிக்காதது பற்றிக் கடிந்தார். பதட்டமான நிலையில் இருந்த அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். நல்லது செய்தால் யார் செய்தாலென்ன எனக் கூறினேன். சினந்து வெளியேறினார்.

பிரதமருக்குக் கடித வரைவு

பிரதமருக்கு எழுதவுள்ள கடிதத்தின் வரைவு பற்றி ஆலோசிக்க, மாலை 11.09.2006 மாலை 3 மணிக்குக் கூடினோம்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும், தில்லி வெளிவிவகார அமைச்சும் தன்னுடன் தொடர்பாக இருப்பதாவும், மூன்றுபேர் அடங்கிய தூதுக்குழுவை மட்டும் அனுப்பும்படி கேட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.

தான் முயன்று, தன்னையும் தன்னுடன் மூவரையும் சேர்த்து நால்வராகப் போகலாம் எனக் கூறினார்.

யார் யார் குழுவில்?

பத்மினி சிதம்பரநாதனைக் குழுவுள் அடக்கமுடியாதென அவர் நேரடியாகக் கூறவில்லை. சுற்றி வளைத்துச் சொன்னார்.

தன்னைச் சேர்ததுக் கொள்ளும்படி சிவாஜிலிங்கம் கூறினார். தமது கட்சியின் அரசியல் குழுத் தலைவர் தாமென்பதையும் விளக்கினார். செல்வம்தான் தலைவர் அவரைத் தான் அழைப்பது முறை எனச் சம்பந்தன் விளக்கினார்.

தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, முதலமைச்சரின் உதவியாளருடன் அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

11.09.2006 அன்று மாலை பெண் விடுதலை என்ற தலைப்பில் பாரதியார் நினைவு நாள் விழா. தமிழக அரசின் விழா. என்னை அழைத்திருந்தனர். காலம் பிந்தினோமெனினும் பத்மினி சிதம்பரநாதனை அந்நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றேன்.

பொதுவுடைமை மார்க்கசீயர்

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பார்க்கச் சென்றோம். மா. வரதராசன், ஏ. கே. பத்மநாதன், இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 தலைவர்கள் இருந்தனர். தீக்கதிர் இதழ் ஆசிரியர் அங்கிருந்தார். சுருக்கமான சந்திப்பு.

அன்றும் வெளியே செய்தியாளர் கூடியிருந்தனர். பிபிசி நிருபருக்கு இரா. சம்பந்தன் பேட்டி கொடுத்தார்.

அன்று மாலை, பத்மினி சிதம்பரநாதன் என்னிடம் பேசினார். தான் வந்தேத தில்லி போவதற்காக என்றும் வந்த பின்பு தன்னையும் சேர்த்து அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டுச் செல்ல முயல்வதாகவும் மிக மனம் நொந்து கூறினார்.

தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, முதலமைச்சரின் உதவியாளருடன் வழமைபோல அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.

யார் யார் குழுவில்?

13.09.2006 அதிகாலை மாவை சேனாதிராசாவுடன் பேசினேன். பத்மினி சிதம்பரநாதனைத் தில்லிக்கு அழைக்காமல் விட்டுச் செல்வது உசிதமல்ல. திட்டமிடாமல் நடந்து கொண்டதால் வந்த விளைவு. இப்பொழுதாவது இரா. சம்பந்தனுடன் பேசுங்கள், அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.

இந்திய அரசு கடந்த 1983-91 காலப்பகுதியில் நடந்து கொண்ட முறைகள், அவற்றுக்கு நாம் ஈடு கொடுக்கமுடியாததால் ஏற்பட்ட பின் விளைவுகள், இந்திய அரசுக்குள்ளே எமக்கு எதிரானவர்கள் எம்மிடையே பிளவுக்கு முயல்வார்கள் என யாவற்றையும் விரிவாக என் அறிவுக்கு எட்டியதை மாவை சேனாதிராசாவுக்கு விளக்கினேன்.

இந்திய அரசு பெயரிட்டு ஐந்து போரை அழைத்திருப்பதாகவும், இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்குத் தனித்தனி அழைப்புகளையும் விமானப் பயணச் சீட்டுகளையும் கொழும்பில் இந்தியத் தூதரகம் வழங்க உள்ளதாகவும் இரா. சம்பந்தன் சொன்னதாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார்.

இந்திய வெளிநாட்டு அமைச்சகத்தில் இணைச் செயலாளர் மோகன் என்பவருடனும், கொழும்பு இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதர் மாணிக்கம் என்பவருடனும் இரா. சம்பந்தன் பேசி வருகிறார் என்பைதயும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறியிருந்தார்.

18.9 தொடக்கம் 21.9 வரை அல்லது 19.9 தொடக்கம் 22.9 வரை தில்லியில் தங்கவேண்டியிருக்கும் எனவும், இந்திய அரசின் விருந்தினர்களாகத் தங்குவோம் எனவும் மாவை சேனாதிராசா கூறினார்.

கி. வீரமணியுடன்

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, கி. வீரமணியுடன் பகல் 12 மணிக்குச் சந்திப்பு. நான் போகவில்லை. ஏனைய ஐவரும் போய் வந்தனர். கலைஞருடனான சந்திப்பை ஏற்படுத்த வேண்டுமென கி. வீரமணியிடம் மாவை சேனாதிராசா கேட்டுக் கொண்டார். கலைஞருக்கு அனுப்பிய கடிதப் படியையும் கொடுத்தார்.

மாலை 4 மணிக்கு வீட்டுக்குள் நுழைகிறேன், பத்மினி சிதம்பரநாதனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சூடாகவே பேசிக்கொண்டிருந்தனர். தான் சென்னைக்கு வந்த காரணத்தையும் பின்னணியையும் சூழ்நிலையையும் பத்மினி சிதம்பரநாதன் கூறிக் கொண்டிருந்தார்.

பாரதீய சனதாக் கட்சியுடன்

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, மாலை 5 மணிக்கு, பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு. இல. கணேசன், சுகுமாரன் நம்பியார், குமாரவேலு ஆகியோர் இருந்தனர். யாவரும் போயிருந்தோம்.

விரிவான விளக்கமான கலந்துரையாடல். இரா. சம்பந்தன் வரலாற்று விவரங்களைச் சொன்னார். திருகோணமலை பறிபோவைதச் சொன்னார். சிவாஜிலிங்கம் தெளிவாக விவரங்களைச் சொன்னார். பேச்சு வார்த்தையில் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்து நடந்த விடுதலைப் புலிகளின் அமைதி ஆர்வத்தைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்துக் கூறினார்.

தமிழரின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கக் கூடிய அமைதித் தீர்வை நோக்கி இந்தியா உதவக் கோரினேன்.

செய்தியாளர் வெளியே கூடியிருந்தனர். இரா. சம்பந்தன் பேசினார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

 

 

சம்பந்தரின் நிலை

மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, பழ. நெடுமாறனைச் சந்திக்கப் போனோம். இரா. சம்பந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சேனாதிராசா மூவருடன் நானும் ஒரே வண்டியில் போனோம்.

தூதுக்குழுவின் எண்ணிக்கையையும், யார் எவர் என்பைதயும் தலைவராகிய நீங்கள் தீர்மானியுங்கள். தில்லியிடம் பேசுங்கள். பத்மினி சிதம்பரநாதனைத் தனிமைப் படுத்துவது நல்லதல்ல, அவரையும் சேர்த்துக் கொண்டு போங்கள். எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் தில்லிக்குப் பேசட்டுமா என்று இரா. சம்பந்தனிடம் கூறினேன். மற்ற இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

என்னுடைய தீர்மானங்கள் எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும். நீங்கள் இது தொடர்பாக வேறு யாருடனும் பேசினால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லை எனச் சொல்லிவிடுவேன் என்றார் இரா. சம்பந்தன்.

நெடுமாறனிடம்

பழ. நெடுமாறன் வீட்டில் மாலை 7 மணியளவில் சந்திப்பு. அனைவரும் போயிருந்தோம். பிரதமரிடம் என்னென்ன பேசவேண்டும் எனக் கேட்டேன். உங்களுக்குத் தெரியாததா? என்றார். உங்கள் கருத்து என்ன என்பைதக் கூறுங்கள் என்றேன்.

வரிசைப் படுத்தித் தமது கருத்துகளை நெடுமாறன் எம்மிடம் தெரிவித்தார். 15.09.2006 வெள்ளி மாலை இரவுணவுக்கு வாருங்கள் என அவரை மாவை சேனாதிராசா அனைவர் சார்பிலும் அழைத்தார். செய்தியாளர் எவரும் அங்கு வரவில்லை.

பிரதமருக்கு ஈழத்தமிழர் சார்பில் கொடுக்கும் கடித வரைவு தயாரிப்பதில் 14.09.2006 அன்று என் வீட்டில் ஈடுபட்டோம். சிவாஜிலிங்கம் வரவில்லை.

சுருக்கமாக எழுதவேண்டும் என்பதில் சிலர், நீண்டே எழுதலாம் எனச் சிலர் கூற, வரைவுக்குரிய பனுவலை இரா. சம்பந்தன் தன் கைப்பட எழுத, பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தட்டச்சுச் செய்தார்.

அங்கிருந்தோர் சொன்னனவும் இருந்தன, சொன்னன பல விடுபட்டும் இருந்தன. சொல்லாதனவும் இருந்தன. 7.9 தொடக்கம் 14.9 வரை எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பனுவல் 8 பக்கங்கள் வரை நீண்டது.

மடத்தனமானதே

இவ்வாறு எழுதிக் கொண்டிருக்கையில், இரா. சம்பந்தன், என்னைப் பார்த்து, சச்சி, தமிழர் தாயகத்தின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கவேண்டிய தேவை பற்றிப் பாஜக விடம் நீங்கள் கூறியது மடத்தனமான கருத்து என்றார்.

நீண்ட எல்லைகளையும் பரந்த நிலப்பகுதியையும் காக்கும் படைகளை நாம் வைத்திருக்கமுடியுமா? எனக் கேட்டார்.

அடித்தளத்திலேயே கை வைக்கிறாரே? சொல்லாட்சி கூடப் பொருத்தமானதாக இல்லையே!

உங்கள் சொல்லாட்சியைப் பொருட்படுத்தவில்லை, 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் எந்தத் தனமானேதா, அந்தத் தனமானதுதான் நான் தொடர்ந்து பாஜக விடம் மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி வருகிற கருத்து என்றேன்.

மாவை சேனாதிராசாவும் நானும் அந்தக் கருத்தை வலியுறுத்தியே தமிழகத் தலைவர்களிடம் பேசி வந்தோம். சிவாஜிலிங்கமும் அதையே தமிழகத் தலைவர்கலிடம் பேசி வருகிறார்.

மாவை சேனாதிராசாவுக்கு இது நன்றாகத் தெரிந்தும் அவர் வாய் திறக்கமால் இருந்தமை, தமிழகத் தலைவர்களிடம் தான் பேசியைதத் தன் தலைவரிடமே பேச முயலாமல் மௌனியாக இருந்தமை வியப்பாக எனக்கு இருக்கவில்லை. நாடாளுமன்றப் பதவி அரசியலே அதுதான்.

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

Text Box: 12இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

அத்வானிக்குக் கடிதம்

தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் எல். கே. அத்வானியைப் பார்க்க நேரம் கேட்டுத் தொலைநகல் ஒன்றைஸ14.09.2006 அன்று தயாரித்துக் கொடுத்தேன். மாவை சேனாதிராசா அதை உடனேயே அனுப்பி வைத்தார்.

அன்று மாலை பொது நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பார்த்த இல. கணேசன், என்னிடம் வந்து, ஈழத்தமிழர் பிரதிநிகள் வருகிறார்கள், சந்தியுங்கள் எனத் தானும் தில்லிக்குச் செய்தி அனுப்பியதாகக் கூறினார்.

15.09.2006 பகல் முழுவதும் அவரவர், அவரவர் பணியைப் பார்க்கப் போயினர். தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, முதலமைச்சரின் உதவியாளருடன் வழமைபோல அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.

பத்மினி சிதம்பரநாதன் 16.9 கொழும்பு திரும்புவதற்காப் பயணச் சீட்டை உறுதிசெய்யப் போனார். பின்னர், மாலை கடைத்தெருவுக்குப் போனார்.

நெடுமாறனுக்கு இரவுணவு

15.09.2006லஇரவுணவுக்காக மயிலாப்பூருக்கு நெடுமாறனை அழைத்துக் கொண்டு சென்றோம். இரா. சம்பந்தனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கு வரவில்லை. கவிஞர் காசி ஆனந்தனை அழைத்திருந்தேன். வந்திருந்தார். மாவை சேனாதிராசா விருந்து வழங்கினார்.

16.09.2006 காலையில் பத்மினி சிதம்பரநாதனை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொழும்புக்கு அனுப்பினார் மாவை சேனாதிராசா.

பிரதமருக்குக் கடித வரைவு

17.09.2006 இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் யாவரும் காலையில் எனதில்லத்துக்கு வந்தனர். மாவை சேனாதிராசாவும் நானும் சேர்ந்து கொண்டோம். பிரதமருக்குக் கொடுக்கவுள்ள கடித வரைவைத் தயாரித்தோம்.

கஜேந்திரகுமார் பென்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஆக்கபூர்வமான கருத்துகளை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

ஆட் கடத்தல்களின் வேகம் விரைவு எண்ணிக்கை பற்றிச் சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கமாகக் கூறினார். அவற்றையும் உள்ளடக்கியே கடித வரைவை இரா. சம்பந்தன் எழுதிக் கொண்டிருந்தார்.

இலங்கைக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கக் கூடாது எனக் கடிதத்தில் எழுதுங்கள் எனக் கேட்டேன். நேரில் சொல்லுவோம், கடிதத்தில் எழுத வேண்டாம் எனச் சம்பந்தன் மறுத்துவிட்டார். நேரில் சொல்வதே சரியாக இருக்கும் என மாவை சேனாதிராசாவும் கூறினார்.

போர்நிறுத்த உடன்பாட்டைக் கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தில்லி வலியுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் கேட்டேன். விடுதலைப் புலிகள் தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அதையும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.

தமிழர் எதிர்பார்ப்புகளை நோக்கிய அரசியல் தீர்வுக்கு உடன்படுமாறு கொழும்புக்குப் போதுமான தூதரக, பொருளாதார, அரசியல் அழுத்தம் கொடுக்காமாறு தில்லியைக் கேட்டுக் கடிதத்தில் எழுதுங்கள் என்றேன். இது முதல் சந்திப்பு இதில் அரசியல் தீர்வு விடயங்கள் வேண்டாம் என இரா. சம்பந்தன் கூறினார்.

அல்லலுற்று ஆற்றாது துயருரறும் ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா உடனடியாக உதவவேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் உதவிகளை, இலங்கை அரசின் மூலமாக வழங்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி, தமிழர் அமைப்புகள் மூலம் வழங்குமாறு பிரதமருக்கு எழுதுங்கள் எனக் கோரினேன்.

பயனாளிகளுக்கு நேரடியாக இந்திய உதவி உடனடியாகக் கிடைக்கவேண்டும் என்றும் இலங்கை அரசில் தமிழருக்கு நம்பிக்கை இல்லை என்றும் எழுதுவதாகக் கூறினார் இரா. சம்பந்தன்.

மொத்தம் ஆறு பக்கங்கள் கொண்ட கடிதத்தின் இறுதி வடிவைத் தமிழில் பந்தி பந்தியாக வாயால் மொழிபெயர்த்துக் கூறினார், இரா. சம்பந்தன். அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஒரே ஒரு பக்கத்தில் பெரிய எழுத்துகளில் கடிதச் சுருக்கத்தைப் புள்ளியிட்டுப் பிரதமருக்குக் கொடுப்பதன் அவசியத்தை நானும் மாவை சேனாதிராசாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வலியுறுத்த இரா. சம்பந்தன் ஒப்புக் கொண்டார்.

 

Tuesday, October 03, 2006 நான் எழுதிய கட்டுரை

Text Box: 13இந்தியத் தலையீட்டை விரும்பாத
தமிழரசுக் கட்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்

தில்லிக்குக் குழு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரும் எனதில்லம் வந்தனர். கடைசி நேரத் திருத்தங்களுடன் கடிதத்தின் அச்சுப் படியைத் தயாரித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தில்லிப் பயணம் வெற்றியாக அமைவதாக என அவர்களிருவரையும் வாழ்த்தி அனுப்பினேன்.

19.09.2006 காலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தில்லிக்கு ஐவரும் புறப்படனர். இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தில்லியில் தங்கியிருந்தனர்.

இரவு, இரா. சம்பந்தனின் அறையில், அவரைப் பார்த்ததாகவும் பின்னர் மாவை சேனாதிராசாவைப் பார்த்ததாகவும், தன்னையும் அந்தக் குழுவில் இணைத்துக் கொள்ள அவர் செய்த கடைசி முயற்சியும் வெற்றி பெறாமல் சோர்வுடன் தில்லியிலுள்ள தனது அறைக்குத் திரும்பியதாகவும் 27.9 அன்று சென்னையில் என்னிடம் சிவாஜிலிங்கம் கூறினார்.

18.9 புதன் மாலையே தில்லி போய்விட்டதாகவும் 22.9 மதிய விமானத்தில் சென்னை திரும்பியதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஈவிரக்கமற்ற RUTHLESS

ஈவிரக்கமற்ற ஆயுதபாணிகளே விடுதலைப் புலிகள், என்ற துணைத்தலைப்புடன் இரா. சம்பந்தன் தில்லியில் பேசிய பேச்சின் சாரம் சென்னை இந்துவில் வெளிவந்திருந்தது.

தப்புத் தப்பாய் வெளியிடும் வழமை இந்துவுக்கு உண்டு என்பதால் மற்றொரு ஆங்கில இதழான தெக்கான் குரொனிக்கிள் பார்த்தேன். தலைப்பில் அந்த வரி இல்லை. உள்ளே செய்தியில் அதே வரிகள். நான் வியப்படையவில்லை.

22.9 பின்னிரவு மாவை சேனாதிராசா எனதில்லம் வந்தவேளை நான் உறக்கத்திலிருந்தேன். 23.9 காலை உணவுக்குப்பின் அவர் என்னிடம் பேசினார்.

பிரதமரைப் பார்க்கத் தில்லி சென்றவர்கள் பிரதமரைப் பார்க்கமலே திரும்பினார்கள். பிரதமர் அலுவலக, வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளையும் இணை அமைச்சர் ஒருவரையும் பொதுவுடைமைக் கட்சியினரையும் பார்த்ததாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார். வேதனையுடன் இருந்தேன். நினைவுக்கு நிகழ்ச்சி ஒன்று வந்தது.

துணைவேந்தர் குழந்தைசாமி

26.8அன்று தமிழ்க் கணினி வளர்ச்சி தொடர்பான தமிழக அரசின் உள்ளகக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்திருந்தனர், போயிருந்தேன்.

புலமையாளரையும் பேராசிரியர்களையும் கணினித் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடைய என்னையும் அரசு அழைத்திருந்தது.

மாவை சேனாதிராசாவையும் அழைத்துச் சென்றேன்.

தேனீர் இடைவேளையின் பொழுது பேராசிரியர் முனைவர் வா. செ. குழந்தைசாமி என்னிடம் பேசினார். இந்தியாவில் மூன்று பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தரானவர் குழந்தைசாமி. கொழம்பு கட்டுபெத்தை பொறியியற் கல்லூரியில் சில காலம் பேராசிரியராகவும் இருந்தவர். எனக்கு நெருங்கிய அன்பர்.

சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத்தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. போரில் ஈழத்தமிழர் காட்டும் அதே இறுக்கத்தையும் உத்வேகத்தையும் இராஜதந்திரத்தில் காட்டுவதில்லையே.

உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழரால் முடியவில்லையே சச்சிதானந்தம் என என்னிடம் உரிமையோடு மனம் நொந்து கூறினார்.

பின்னர் அவரிடம் மாவை சேனாதிராசாவை அழைத்துச் சென்றேன். முன்பு என்னிடம் கூறியைத மாவை சேனாதிராசாவிடமும் கூறுங்கள் என அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

அதையே அவர் திரும்பவும் மாவை சேனாதிராசாவிடமும் சொன்னார்.