Wednesday, December 14, 2022

Ship to Chidambaram 2022 Sumanapala

காங்கேயன்துறை-புதுச்சேரிப் பயணிகள் கப்பல்

அனுப்புநர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை.

பெறுநர்
திரு எச். சுமணபாலா அவர்கள்
மேனாள் மாவட்டச் செயலர், களுத்துறை.
மேனாள் ஒருங்கிணைப்பாளர், வட மாகாண ஆளுநர்.

பேரன்புடையீர்,

வணக்கம்.
வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

வியாழக்கிழமை (2022 திசம்பர் 01) காலை 11 மணிக்குக் கொழும்பு, கோட்டையில், கப்பல் துறை அமைச்சின் செயலாளர் திரு. உரூவன்சந்திரா அவர்களை நாம் இருவரும் சந்தித்தோம்.

காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்கு மார்கழித் திருவாதிரையை ஒட்டி இலங்கையின் சைவ சமய வழிபடு பயணிகளுக்குக் கப்பல் விடுமாறு கேட்டோம்.

இக்கப்பல் சேவை தொடர்பாக இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலை யூன் 15இலேயே பெற்ற செய்தியையும் அவருக்குக் காட்டினோம்.

காங்கேயன்துறைத் துறைமுகத்தில் இறங்கு / ஏறு துறையில் பயணிகளை ஏற்ற / இறக்க அரசு நடைமுறைகளுக்குரிய கட்டடங்கள் இல்லை, உட்கட்டமைப்புகள் இல்லை, எனச் செயலாளர் தெரிவித்தார்.

இவற்றை அமைத்து முடிக்க 8 மாதங்கள் தொடக்கம் ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதற்குப் பின்பே பயணிக்கக் கப்பல் தொடங்கலாம் எனச் செயலாளர் எம்மிடம் கூறினார்.

வழிபடு பயணிகளுக்காக மார்கழி 2016இல் இக்கப்பல் பயணத்தைத் தொடங்குமாறு வடமாகாண ஆளுநர் மேதகு இரெஜினால்டு கூரே அவர்களிடம் நான் கொடுத்த விண்ணப்பக் கடிதப் படியைச் செயலாளரிடம் காட்டினேன்.

இக்கப்பல் பயணத்தை நடத்துவதற்குரிய கப்பல் தொடர்பான செலவினங்கள், வரவு-செலவுத் திட்டம் என்பன கொண்ட, கொழும்பு ஏலிசு (Hayleys Ltd) நிறுவனத்தார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தந்த கடிதப் படியையும் அவரிடம் காட்டினேன்.

அவர் மனத்தில் மாற்றம் தெரிந்தது. கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் முளைவிட்டது. ஏலிசு நிறுவனத்தாருடன் பேசினார். அவர்கள் ஏற்ற பதிலைச் சொல்லவில்லைப் போலும்.

வேறொரு கப்பல் பயண முகவரிடம் பேசினார். இப் பயணம் தொடர்பாக அம்முகவர் ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

பேசிக் கொண்டிருக்கையில் கைப்பேசியின் ஒலிபெருக்கியை இயக்கினார். எங்களையும் உரையாடலில் கலந்து கொள்ளச் சொன்னார்.

இலங்கைக் கப்பல் துறை அமைச்சின் ஒப்புதல் பெற்றால் விரைவில் கப்பலை இயக்கலாம் என அம்முகவர் சொன்னார். நாளை வாருங்கள், கப்பல் துறை அமைச்சின் ஒப்புதலைத் தருகிறேன், எனச் செயலாளர் அவரிடம் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

அக்கப்பல் முகவரி பெயர் திரு. இராசன் என்றும் அவருடன் நாம் பேச வேண்டும் என்றும் தொலைபேசித் தொடர்பு எண்ணைச் செயலாளர் நம்மிடம் தந்தார்.

தொடர்ந்து நான் இரண்டு முறை திரு. இராசன் அவர்களைக் கொழும்பில் நேரில் சந்தித்தேன். கப்பல் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்று விட்டதாகத் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார்.

மார்கழித் திருவாதிரை நாளுக்கு வழிபடு பயணிகளை ஏற்றி செல்லுங்கள் எனத் திரு. இராசனிடம் கேட்டேன். பயண முகவர் ஒருவரையும் அவருக்கு அறிமுகித்தேன்.

திசம்பர் 28ஆம் தேதி கப்பல் புறப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகத் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார். எனினும் கடல் கொந்தளிப்பைக் கருத்தில் கொண்ட கடற்படையினர், சனவரி நடுப்பகுதிவரை பின்போடுமாறு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கரி இறக்குமதியால் மாசுற்ற காரைக்கால் துறைமுகம், துறைமுகத்திலிருந்து காரைக்கால் நகரத்திற்குப் போவதற்குரிய தொலைவு, இரண்டையும் கருத்தில் கொண்டு புதுச்சேரி துறைமுகத்திற்குக் காங்கேயன்துறையில் இருந்து போகக்கூடிய வாய்ப்புகளே உண்டு எனவும் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மார்கழித் திருவாதிரைக்குச் சைவ வழிபடு பயணிகள் போகவேண்டுமே என அவரிடம் விண்ணப்பித்தேன்.

நான் யாழ்ப்பாணம் வந்த பின்பும் நீங்கள் திரு. இராசனுடன் தொடர்பாக உள்ளீர்கள். நேற்று (13.12.2022) திரு. இராசன் அவர்கள் மாண்புமிகு கப்பல்துறை அமைச்சரைச் சந்திக்கப் போவதாக என்னிடம் சொன்னீர்கள்.

2023 சனவரி நடுப்பகுதியில் இருந்து காங்கேயன்துறைக்கும் புதுச்சேரிக்கும் இடையே பயணிகள் கப்பலில் பயணிக்கலாம் என மாண்புமிகு கப்பல் துறை அமைச்சர் கூறியதாக இன்று 14.12 காலை நாளிதழ்களில் வந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

பயணி ஒருவர் 60 அமெரிக்க வெள்ளி (ரூ. 21,000 இலங்கை ரூபாய்) கொடுத்து, 100 கிலோ பொதிகளுடன் பயணிக்க வாய்ப்புள்ளதாக இன்று கப்பல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வறுமைக்கோட்டை ஒட்டி  வாழும் சைவ வழிபடு பயணிகளின் ஆன்ம ஈடேற்றப் பயணம் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு மிகமிகப் பெருகியுள்ளமை, சிவபெருமான் திருவருளே.

திருவருள் துணையுடன் 2010இல் இம்முயற்சியைத் தொடங்கினேன். மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவை அணுகினேன், மாண்புமிகு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரை அணுகினேன். பிரதமர் மாண்புமிகு தி எம் செயரத்தினாவுக்குக் கடிதம் எழுதினார்.

மீண்டும் சிவபெருமான் திருவருளால் 2016 மார்கழியில் நான் எடுத்த முயற்சி கைகூடும் நிலைக்கு வரும்போலத் தெரிகிறது.

இலங்கையில் இம்முயற்சிக்கு ஆதரவு தந்தோர்:
1.1 வடமாகாண  ஆளுநர் மேதகு இரெஜினால்டு கூரே
1.2 இலங்கைக் குடியரசுத் தலைவரின் செயலாளர் திரு ஆசுடின் பெர்ணாந்து
1.3 மாண்புமிகு அமைச்சர் வி எம் சுவாமிநாதன்
1.4 யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதர் திரு நடராசன் மற்றும் அலுவலகத்தார்
1.5 வட மாகாண ஆளுநரின் செயலர் திரு. இல. இளங்கோவன், மற்றும் அலுவலகத்தார்
1.6 வட மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் திரு. எச். சுமணபாலா
1.7 இந்து கலாச்சாரத் திணைக்கள இயக்குநர், திரு. உமா மகேசுவரன், மற்றும் அலுவலகத்தார்
1.8 ஊடகவியலாளர் திரு குகநாதன், தான் தொலைக்காட்சி
1.9 வட மாகாணத்தின் கடற்படை அலுவலகத்தார்
1.10 இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் அலுவலர்கள்
1.11 யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ சமய அமைப்புகள்

இந்தியாவில் இம்முயற்சிக்கு ஆதரவு தந்தோர்:
2.1 இந்தியப் பிரதமர் அலுவலகம்
2.2 இந்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு இராசநாதர் சிங்கர்
2.3 இந்திய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு சுசுமா சுவராசர்
2.4 இந்திய கப்பல் துறை அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்காரி
2.5 இந்திய கப்பல் துறை இணை அமைச்சர் மாண்புமிகு பொன் இராதாகிருட்டிணன்
2.6 தமிழக அரசின் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம்
2.7 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு இல கணேசன்
2.8 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஊடகவியலாளர், வங்காளத்துத் திரு
சுவப்பனதாசர் குப்தா
2.9 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு வா மைத்திரேயன்
2.10 இந்தியப் பிரதமரின் ஆலோசகர் திரு குருமூர்த்தி
2.11 இந்திய ஆட்சிப் பணியர் திரு விசய இராம்மோகன்
2.12 இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு அருச்சுனர் சம்பத்து
2.13 தில்லி ஒரே தேசம் அமைப்பு திரு இராமகிருட்டிணன்
2.14 தில்லி இந்துப் போராட்ட அமைப்பின் தலைவர் திரு அருண் உபாத்தியாயர்
2.15 கொல்கத்தா பாரதிய சனதாக் கட்சி, திரு தேவ தத்தாமாசி
2.16 தில்லி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் திரு. இராம் சங்கர் இராசா
2.17 சென்னை கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன்

வழிபடு பயணிகள் கப்பலாக 2010இல் நான் தொடங்கிய இம்முயற்சி, படிப்படியாக விரிவடைந்து, இந்திய சாகர் (கடல்) மாலைத் திட்டத்துள் ஒன்றாகியது. புதுச்சேரி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக, இக்கப்பல் பயணப் பணிகளுக்காக ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குகிறது. காரைக்கால் துறைமுக வாரியம் இப்பயணத்துக்காக முகவர்களிடம் ஒப்பந்தம் கோரி உள்ளது. இலங்கைப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் என இத்திட்டம் பல்முனைப் பரிணாமங்களைக் கொண்டு வளர்கிறது.

காங்கேயன்துறையில் இருந்து புதுச்சேரிக்குப் பயணிகள் கப்பலை இயக்க வேண்டும் என்று மேதகு ஆளுநர் கூரே அவர்களுக்கு இருந்த வற்றாத பற்று, நெஞ்சார்ந்த உணர்வு, ஆழமான ஈடுபாடு யாவற்றையும் அறிவேன்.

அவருடைய உணர்வுக்குச் செயல்வடிவம் கொடுத்த உங்களுக்கு இலங்கைச் சைவச் சமூகம் என்றும் கடப்பாடுடையது.

புத்த பெருமானின் போதனைகளை ஏற்று நடக்கின்ற நீங்கள், ஆன்மீக சாதனைக்காகப் பிள்ளையாரையும் முருகனையும் மாயவனையும் வழிபடுகின்ற பின்புலத்தைச் சேர்ந்தவர். இதை நீங்கள் அடிக்கடி என்னிடம் கூறுவீர்கள்.

பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

நன்றி
அன்புடன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    

PILGRIMAGE BY SHIP TO INDIA

From
Maravanpulavu K Sachithananthan

To
Mr. Sumanapala
Formerly District Secretary, Kaluthurai
and formerly coordinator, Hon Governor Northern province.

My dear Sir

Congratulations and greetings.

On 1st December 2022 at 11 o'clock, we both met the Secretary, Ministry
of Shipping, Sri Lanka at Fort Colombo.

When we requested him to initiate the shipping service for the benefit of the Hindu pilgrims during December 2022 / January 2023, he placed before us the prevailing obstacles to the shipping program.

Kannkeyanthurai Pier had no facilities for receiving/departing passengers, he said. The process of constructing the facilities is underway, he said. He continued to say that it will take about 8 to 9 months before the work could be completed.

We told him of my request in 2016 to the Honourable Governor of the Northern province Mr. Reginald Cooray. We showed him a copy of the letter I wrote then. We told him about the forthcoming festival at Chidambaram by end of December.

We asked him about the possibility of helping the Hindu pilgrims below the poverty line to reach Chidambaram to fulfill their vows.

After that, I showed him a copy of the (three years older) quotation from M/s Haley's Ltd to operate the shipping service.

He was kind enough to contact Haleys and thereafter he contacted another shipping operator called Mr. Rajan. He was kind enough to allow us to hear the conversation on the speakerphone and allowed us to participate in the discussion.

That was a turning point. The Secretary assured Mr. Rajan of the approval of the Ministry of Shipping for the service. He asked him to call on him the next day. He also suggested that we meet Mr. Rajan.

After that, I had very fruitful and constructive meetings with Mr. Rajan twice. Mr. Rajan assured me that the shipping service could start by the end of December. He collected the approval from the Ministry the next day, he told me.

You were in touch with Mr. Rajan who has been appraising you of the day-to-day progress. It appears that he met the Hon. Minister yesterday 13th December 2022.

Today's (14th December) news from the Honourable Minister of Shipping, Sri Lanka is another step forward in our joint effort towards connecting people across the Palk Straits. 

When the Honourable Governor Mr. Reginald Cooray responded positively in December 2016 to my request to enable Hindu pilgrimages to Chidambaram in Tamil Nādu, you were with him in implementing his decision.

You took me to many officers in Colombo and introduced me to crucial people in the relevant departments and with your kind and courteous approach, facilitated the procedural progress.

You attended meetings on behalf of the Honourable Governor in the Ministry of Internal affairs, the Ministry of External Affairs, the Ministry of Defence, and the Ministry of Shipping.

If the Honourable Governor Reginald Cooray was very sincere and dedicated to providing pilgrimage facilities to the Hindus in Sri Lanka, it was you with a strong faith in Lord Vinayga, Lord Katragama, and Lord Mayan, who made crossing any red tape possible.

We, Hindus in Sri Lanka a grateful for the ground-breaking by the Honourable Governor Reginald Cooray and his able coordinator, yourself, Mr. Sumanapala. Both of you laid a strong foundation.

Today is another day of happiness and celebration for the Hindus in Sri Lanka. A faith-based society, a belief-based community with the singular goal of spiritual emancipation, Sri Lankan Hindus travel to holy temples in India to fulfill their vows. It is my hope that within the next 30 days, the shipping service between Kankeyanthurai and Puducherry will begin as announced by the Honourable Minister of Shipping.

It is my duty to place on record a list of those who encouraged me, helped me and supported me in furthering the progress of this project since 2010.

I approached Honourable Minister Mr. Devanantha in 2010. Thereafter in 2013, I wrote to Honourable Minister Mr. Vasudeva Nanayakkara, who promptly wrote to Honourable Prime Minister Mr. D. M. Jayaratne. 

However, my request of 2016 to the Honourable Governor, Mr. Reginald Cooray in 2016 December at a public meeting in Nallur, Jaffna set the ball rolling.

Those in Sri Lanka:

1.1 Honourable Governor, Northern Province Mr. Reginald Cooray

1.2 Secretary to His Excellency the President Mr. Austin Fernando

1.3 Honourable Minister Mr. V. M. Swaminathan

1.4 Consul General Mr. Natarajan and the officials at the Indian Consulate, Jaffna

1.5 Secretary to Honourable Governor Northern Province Mr. L.Ilangovan and his officials

1.6 Coordinator to Honourable Governor, Northern Province Mr. H. Sumanapala

1.7 Director, Hindu Cultural Department Mr. Uma Maheswaran and his officials

1.8 Mr. S. Kuhanathan and of DAN TV

1.9 Northern Province Naval Headquarters at Kankeyanthurai

1.10 Chairman and officials of the Ceylon Shipping Corporation

1.11 Leaders of Saiva Organisations in Jaffna.

Those in India:

2.1 Honourable Prime Minister's Office Delhi

2.2 Honourable Minister for Home Affairs Mr. Rajnath Singh

2.3 Honourable Minister for External Affairs Mrs. Susuma Swaraj

2.4 Honourable Minister for Shipping Mr. Nithin Gadkari

2.5 Honourable Minister of State for Shipping Mr. Pon. Rathakrishnan

2.6 Honourable Deputy Chief Minister, Tamilnadu Mr. O. Panneerselvam

2.7 Honourable Member of Parliament, Rajya Sabha Mr. L. Ganesan

2.8 Honourable Member of Parliament, Rajya Sabha Mr. Swarna Das Gupta

2.9 Honourable Member of Parliament, Rajya Sabha Dr. V. Maithireyan

2.10 Advisor to Prime Minister of India Mr. Grurumoorthy

2.11 Mr. Vijay Rammohan, I. A. S. Delhi

2.12 Hindu Makkal Kadchi leader Mr. Arjuna Sampath

2.13 Mr. Ramakrishnan, Ore Desam, Delhi

2.14 Hindu Struggle Committee leader Mr. Arun Upathyaya

2.15 Hindu Activist and Barthiya Janantha Party leader, Kolkata, Mr. Dev Dutta Maji

2.16 Supreme Court Advocate, Delhi, Mr. Ram Shankar Raja

2.17 Chennai, Kalaimaamani Sasirekha Balasubramanian

If it was a dream that Sivaperuman gave me, it was you who brought life and steam into its implementation. Hindus remain ever grateful to Hon Governor Mr. Reginald Cooray and his able coordinator Mr. Sumanapala.

Thank you,

Yours sincerely,

Maravanpulavu K. Sachithananthan

சைவ சமயம் அரசியலமைப்பு

 கார்த்திகை 16 புதன்கிழமை (30.11.2022)

 

அனுப்புநர்

அ. மாதவன்,

துணைத் தலைவர் சிவசேனை இலங்கை சிதம்பரபுரம் வவுனியா.

 

பெறுநர்

மேதகு குடியரசுத் தலைவர்

பெருமதிப்புக்குரிய இரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

பொருள்: சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை

 

இலங்கையின் இயற்கையோடு இணைந்த 10,000 ஆண்டு கால வரலாற்றுத் தொன்மைச் சமயமே சைவ சமயம் என்றும் அதற்கு பின் வந்ததே புத்த கிறித்தவ முகமதிய சமயங்கள் என்றும் பொருள் அமையத் தாங்கள் நேற்றுக் கூறிய கருத்துக்களைப் படித்ததும் சிவ சேனையில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

 

இலங்கையின் வரலாற்றை ஆதி சமயமாக சைவ சமயப் பின்னணியில் பார்க்க வேண்டும் ஆராய வேண்டும் மீள எழுத வேண்டும் என்ற தங்களின் முன்னோடிக் கருத்தை வரவேற்கிறோம்.

 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்ந்து இருக்கும் சைவ சமயமே இலங்கையின் சமயமாக இருந்தும் இக்கால அரசியல் அமைப்பில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுக்கு முரணாகப் புத்த சமயத்தை முன்னுரிமைச் சமயமாக எழுதி வைத்துள்ளீர்கள்.

 

இந்தத் தவறைத் திருத்த வேண்டும். அரசியலமைப்பில் சைவ சமயமும் முன்னுரிமைச் சமயமாக அமைய வேண்டும்.

 

சிவ சேனையில் உள்ள நாம் இக்கருத்துக்களை கடந்த ஆறு ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். 2021ஆம் ஆண்டு சித்திரையில் இலங்கை முழுவதும் இக்கருத்தை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு இருந்தோம்.

 

சுவரொட்டிகள் செய்தி அறிக்கைகள் கருத்துருவாக்கங்கள் என அறவழியில் அமைதி வழியில் சைவ சமய வழியில் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

 

சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அடையாள உண்ணா நோன்பில் கலந்து கொண்ட படத்தையும் சுவரொட்டிகளின் படத்தையும் இணைத்துள்ளோம்.

 

புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் வரிகளைச் சேர்க்குமாறு இலங்கையில் உள்ள சைவ சமயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இலங்கையில் தொடரும் சைவ சமயத்தைப் பேண, பாதுகாக்க, வளர்க்க அரசு கொள்கை வகுக்கவும் நிதி ஒதுக்கவும் செயலாக்கவும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

நன்றி

அன்புடன்

 

இலங்கைச் சைவ சமயிகள் சார்பில்

அ. மாதவன்

சிவ சேனை

துணை தலைவர்

சச்சி 81

 மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்


இதே வெள்ளிக்கிழமை

இதே கார்த்திகை மிருகசீரிட நட்சத்திரம்

இதே புலர் காலை 4 மணி

29,845 நாள்களுக்கு முன்பு

1020 முழு நிலவுகளுக்கு முன்பு

81 ஆண்டுகளுக்கு முன்பு

நான் பிறந்தேன்.


உடல் ஊனமின்றி

உள்ளம் ஊனமின்றி

நெடுநோய் எதுவும் இன்றி

கடுநோய் எதுவும் இன்றி


அன்புத் தேடலும் 

அறன் தேடலும் 

அருள் தேடலும் 

அறிவுத் தேடலும் 

புலமைப் தேடலும் 

ஆற்றல் தேடலுமாய்

81 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.


அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான் திருவருள் 

அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் திருவருள்

என் பெற்றோர் எனக்குத் தந்த மரபணுக்கள்

81 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.


எனக்கு எவ்விதக் குறையும் இல்லை.

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன்

எனக்கு மிக நிறைவான வாழ்க்கை.


சிவபெருமான் திருவருளைப் போற்றுகிறேன்


From Maravanpulavu K Sachithananthan


Today is Friday, 29845 days ago the same Friday.

Today is in the month of Kaarthikai. 29845 days ago, during the very same month of Kaarthikai.

Today is Mirukaseeridam natchthitam. 29845 days ago, on the very same Mirugaseeridam.

1020 full moons ago

81 years ago

I was born.


Without physical mental disabilities

Without serious illnesses

Yearning for love

Yearning for dharma

Yearning for divine grace

Yearning for knowledge

Yearning for intellect

Yearning for efficiency 

I lived through 81 years.


By the grace of Arulmiku Sivakami and Natarajar

By the grace of Arulmiku Vallaikkulam Veerakathy Pillaiyaar

Carriying the eternal DNA handed over to me by my parents

I lived through 81 years.


In fullness

Without any regrets

With your eternal blessings 

I lived through 81 years.


Hailing the divine grace of Sivaperuman.


A verse flower 


To Dr Sacchithananthan 


( English translation by Prof. S. A. Sankaranarayanan)


Karthikai born is He

Under the asterism of Mrigasirus is He

Soaring as lambent flame is His Glory

Lit the Lives of several devout 

with great delight had He

Far famed Wise Sage is He 

in our world of piety

Saivaite Tamil is His relish

In  accord with WORD 

He leads the flocks

His valiancy is His sole ornament

Any place He goes to is Veerattam 

By Miraculous Grace of Aran , 

whatever he touches 

turns golden noble

To dispel dark He in rage enlightened

For Supreme Siva Consciousness, He configured SivaSenai! 

Hail His Weal, 

Hail His Exclusiveness

Word-blossoms I offer Him

Praise Him Bow to Him


Sweet B'day Greets to Sacchi Ayya.


கார்த்திகையில் பிறந்தார் ஒளிப்பிழம்பாய் உயர்ந்தார்

பற்பலரின் வாழ்வில் விளக்கேற்றி மகிழ்ந்தார்

பார் புகழும் அறிஞர் சைவத் தமிழ்ச் சுவைஞர்  

நிற்பவர் எந்நாளும் சொற்படியே காணும்

போர்க்குணமே அணியாம் கொள்கைப் பிடிப்பு 

பணியாம்

அற்புதன் அரன் அருளால் இவர் தொட்டதெல்லாம் துலங்கும்

காரிருளைப் போக்க வீறு கொண்டு வந்தார்

சிற்பரன் சிவன் பணிக்கே சிவசேனை கொண்டு வந்தார்

சீருடனே வாழ்க சிறப்புடனே வாழ்க

சொற்பலவால் போற்றி வாழ்த்தி வணங்குகின்றேன்.


இன்று, கார்த்திகை மிருகசீரிடத்தில் பிறந்தநாள் காணும் சச்சி ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வணக்கங்கள்.


செந்தண்மை அந்தணனே செய்நல் வினையால்

      சீர்மிகுயாழ்ப் பாணத்தில் தேசுடன் வாழ்ந்து

அந்திவண்ணன் திருவருளால் ஆயிரம் பிறைதனை

       ஐயநீயும் கண்டுவந்து அறிவுச் சுடராய்

விந்தைமிகு சிவப்பணியும் காலம் போற்ற

      வேட்கையொடு தமிழ்பணியும் இயற்றி இன்று

பந்தமெலாம் உனைவாழ்த்த எண்பத் தோராம்

        பண்பாளா பிறந்ததினம் கொண்டா  டவாழி!


பொங்கிவரும் சிவப்பொலிவை  முகத்திற் கண்டேன்!

   புன்னகையில் இதயத்துத் தூய்மை கண்டேன்!

எங்குமென்றும் மறத்தமிழன் வீரந் தனைநீ

       இயற்றிவரும் செயல்களிலே இலங்கக் கண்டேன்!

பங்கமில்லாப் பணியெனவே தமிழில் நூல்கள்

       பதிப்பிக்கும் பெற்றிதனைக் காந்த ளகமும்

சங்கரனின் அருளாலே சாற்றக் கண்டேன்;!

        தவச்செல்வா நலமோடு ஊழி வாழி!


                                                  மாறா அன்புடன்             

                                                      பாரதி இளமுருகனார்

உச்சிப் பொழுதாய் ஒளிரும் திருப்பணிகள்

மெச்சிப் புகழும் தமிழ்ப்பணிகள் - இச்சகத்தில்

நச்சி வளர்த்தெடுத்த நற்பணிகள் சொல்லுமே

சச்சி உமது பெயர்.

           அண்ணா கண்ணன் 







கலை உணர்வு எனக்கு

 கலை உணர்வு?


உள்ள உணர்வின் புற உரு. 

உள்ள ஒடுக்கத்தின்  திறன் நிலை.

உள்ள வெள்ளத்தின் வடிகால்.

புறத்தே கலை அகத்தே அழகு.

புறத்தே கலை அகத்தில் நிறைவு.


கேட்க இனிக்கும் இசைக் கலை

காண இனிக்கும் ஓவிய நடன நாடகக் கலை

உண்ணச் சுவைக்கும் அடுக்களைக் கலை

முகர நிறைக்கும் மலர்க் கலை

மெய்விதிர் விதிர்க்கும் பேரின்பச் சிற்றின்பக் கலை.


ஐம்புலன்களுக்கு விருந்தாகும் 

ஐம்பொறிகளுக்கு அயராப் பணியாகும் 

பயின்று புறந்தருதல் கலைஞர் கடனே

உயிராய் மயங்குதல் சுவைஞர் திறனே

உள்ளம் வெள்ளமாய் கலையே பள்ளமாய்


சுவைஞர் உள்ளத்தை இளக்கும்

சுவைஞர் மகிழ்ச்சியில் திளைப்பர்

உடைந்த உள்ளத்தில் மடைதிற மகிழ்ச்சி 

இறுகிய உள்ளம் இளகி இனிக்கும் 

குறுகிய உள்ளம் பரந்து விரிக்கும்


இவை தெரிந்தவர் என் தந்தைதாயர்

பண்ணோடு இசைசேர் பள்ளிக்கு அனுப்பினர்

என் குரல்நாண் குழைய மறுத்தது

என் இடைமென்சவ்வு இயங்கப் பிழைத்தது

இசைக்க முயன்றேன் கையைப் பிசைந்தேன்


உள்ளம் கைகளைத் தட்ட முயன்றேன்

தாளம் கேட்டது வேகம் பிழைத்தது

ஒழுங்கு பிழைக்க விழுந்தது சுடுசொல்

நீண்ட முயற்சியில் ஆதி தாளம்

எட்டு முறையாய்த் தட்டிப் பழகினேன்


திருக்கோ யிலினிலே வெண்சங்கு ஊதினேன்

சேமக் கலத்தை ஒழுங்கறத் தட்டினேன்

இறந்தோர் உடல்முன் சேர்ந்து பாடினேன்

பாட்டுக் காரரும் என்னைப் பழித்தனர்

தேவா ரங்கள் மனப்பாடம் ஆயின


வடக்கு வீதிக்கு எழுந்தருளிச் சுற்றுலா

மடக்குவர் ஊர்வலம் தொடக்குக குழலிசை

அடிக்குக மேளம் என்றதும் நகுமோமு 

கேட்டோர் கிறங்கினர் கிறக்கம் தொற்றுநோய்

தாளத்தில் கைகள் அசைத்தலில் தலைகள்


எப்படிப் பாடினரோ எங்கோ கேட்டது

அப்படிக் குழலில் ஊதி இசைக்க

மேளமும் தாளமும் இயைந்து ஒலிக்க 

கேட்ட பாடலைக் குழலில் கேட்டதும் 

நாட்டம் வந்தது கலையைச் சுவைக்க


நகுமோமு என்றோ ஆபேரியில் என்றோ

ஆதிதாளம் என்றோ அன்று அறியேன்

அறியாமலே அசைத்தேன் தலையைக் கிறங்கி

வடக்கு வீதியில் தொடங்கிய கிறக்கம் 

முடக்கம் இன்றி இன்றுவரை தொடர..


இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல்

இலலிதா பத்மினி இராகினி நடனம்

பார்த்தேன் பரதத்தை அன்றே முதலில்

எதுவும் புரியவில்லை அலங்காரம் தவிர

ஆனாலும் அடிக்கடி ஆரவாரம் கைதட்டல்


கோடைப் புழுக்கமும் சோழகக் காற்றும்

மறவன் புலவில் வயலின் வரப்பில் 

வெள்ளை மணலில் முழு நிலவில் 

சிந்தை அறிந்து வாடி பாடுவர்

கணேச ஐயர் சுவைப்பேன் கேட்பேன் 


அருந்தும் சுவையாய் அடிக்கடி கேட்பேன் 

பிருந்தா வனமும் நந்த குமாரனும்

நகுமோமு மெட்டும் நந்த குமாரனும்

ஆழப் புதைந்ததால் அடிக்கடி முனகுவேன்

இசையின் சுவையும் இயைந்தது என்னுடன்


Sunday, October 30, 2022

குருந்தூர் இராதாகிருட்டிணன்

இலங்கை முழுவதும் சிவ பூமி

சிவன் கோயில்களின் பூமி

குருந்தூர்க் குன்று சிவன் கோயில் குன்று.

தொல்பொருள் திணைக்களத்தினர் அண்மையில் அங்கு கண்டு எடுத்த தாரா இலிங்கத்தில் தமிழ் எழுத்தில் மணி நாகன் என உள்ளது. பேராசிரியர் பத்மநாதன் செய்தி சொல்லியுள்ளார்.

சிவனுக்கும் தமிழுக்கும் உள்ள குன்று குருந்தூர்க் குன்று.

புத்தர் வரும்பொழுது அங்கு சிவன் கோயில் இருந்தது.

அக்காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழர், புத்தரின் உரைகளை அடுத்து அவரையும் பின்பற்றத் தொடங்கினார்கள்.

புத்தருக்கும் கோயிலை அருகிலே அமைத்தார்கள்.

சிவ பூமியான இலங்கையில் புத்தர் வருகைக்குப் பின் அமைத்த புத்தர் கோயில்களில் 90% சைவக் கோயில்களுக்கு அருகே அமைத்த கோயில்களே. 

தோராயமான 10% சைவக் கோயில்களை இடித்துப் புத்தர் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள்.

குருந்தூர்க் குன்றைச் சுற்றியுள்ள நிலம் முழுவதும் சைவத்தமிழ் பூமி. சிவ பூமி. 

குருந்தூர் குன்றின் அருகே குருந்தூர்க் குளம். குன்றைச் சுற்றி வயல்வெளி.

2000 ஆண்டுகளுக்கு முன் தமிழி எழுத்துப் புளங்கிய காலத்தில் தமிழ்ப் புத்தரும் அங்கு வாழ்ந்தனர். பின்னர் காலப்போக்கில் புத்த சமயத்தினர் அந்தப் பகுதியில் வாழவே இல்லை.

குருந்தூர்க் குன்றின் புத்த அடையாளங்களைப் பேண இக்காலப் புத்தர் நெடுங்காலமாகவே விரும்பி வருகிறார்கள். புத்த சமயத்தவர் குருந்தூர்க் குன்றைச் சுற்றி வாழாததால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை.

1981இல் குருந்தூர்க் குன்று அடிவாரத்தில் புத்தரின் மடம் இருந்தது. அங்கே புத்தபிக்கு ஒருவர் இருந்தார்.

அவரைக் கொன்றனர். குன்றின் மேலே ஏறி சிவனின் சூலம் ஒன்றை நாட்டினர். அந்நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் இன்றும் அதே மாவட்டத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் அல்லர்.

1981க்குப் பின் முழுநிலா நாளில் குன்றைச் சுற்றி உள்ள வயல்வெளியில் அறுவடை முடிந்த பின்பு மேலே நாட்டிய சூலத்திற்குப் பொங்கல் பொங்கிப் படைக்கத் தொடங்கினர். குருந்தூர்க் குன்றின் வட எல்லையில் குமிழமுனை. அங்கு வாழும் மக்களே இத்திருப்பணியில் திருவிழாவில் ஈடுபட்டனர்.

போர் முடியும் வரை இந்த நிகழ்ச்சி இடைவிடாது தொடர்ந்தது. போர் முடிந்த பின்னரும் இந்த நிகழ்ச்சியை அங்குள்ள மக்கள் தொடர்ந்து விழாவாக்குகிறார்கள்.

போர் தொடங்க முன்பு அறுவடைக் காலத்தில் தொழிலுக்காக மணலாற்றுக்குத் தெற்கே அநுராதபுரம் மாவட்டத்தின் சிங்கள மக்கள் வேலை தேடி வருவார்கள் அறுவடை முடித்துக் கொண்டு தத்தம் ஊர்களுக்குப் போய்விடுவார்கள்.

1981இல் அங்கு வைத்த சூலத்தைப் போருக்குப் பின் படைவீரர்கள் அகற்றினார்கள். குமுழமுனை மக்கள் மீண்டும் சூலத்தை நிறுவினார்கள். படைவீரர்கள் அகற்றினார்கள். நாட்டுவதும் அகற்றுவதுமாக இரண்டு மூன்று முறை நடந்ததாகச் சொல்கிறார்கள்.

போர் முடிந்த பின்பு கொக்கிளாயில் நாயாறில் குருந்தூர்க் குன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புத்தர்களே வாழாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவித் திருமடங்களை அமைத்து வந்த வருகிறார்கள்.

போரில் தோல்வியடைந்த சைவத்தமிழ் மக்களைக் கத்தோலிக்கர் 400 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு விரட்டினார்களோ அவ்வாறே இன்று புத்தரும் விரட்டுகிறார்கள்.

கொக்கிளாயில் அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவில் புத்தர் சிலை அமைத்தனர். எதிர்த்து அருள்மிகு பிள்ளையார் கோயிலார் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். வழக்கு முடியவில்லை.

நாயாறு நீராவியடியில், அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவுக்குள் புத்தர் சிலை புதிதாக. வழக்குகள் என அங்கும் சிக்கல் தொடர்கிறது.

கொக்கிளாயிலோ நாயாறிலோ குருந்தூர்க் குன்றிலோ புத்தர் வாழ்வதில்லை. ஆனாலும் புத்தர் சிலைகளும் சுற்றி மடங்களும். அங்கே வாழ்வதற்குப் புத்த பிக்கு.

கொக்கிளாயில் நானும் தமிழகத்தைச் சேர்ந்த இராம ரவிக்குமாரும் அருள்மிகு பிள்ளையார் கோயில் அறங்காவலரைச் சந்தித்தோம். அருள்மிகு பிள்ளையார் கோயில் வளவிலிருந்து புத்தர் கட்டிடங்களை அகற்ற இந்தியா உதவ வேண்டுமென இராம ரவிக்குமாரிடம் அறங்காவலர் கேட்டுக் கொண்டார்.

நாயாறு நீராவியில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு அருகே புதிதாகப் புத்த வளாகம் அமைந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

குருந்தூர்கா குன்றில் மரம் செடி வேர் பாம்பு புற்று யாவையும் ஏறிக் கடந்தேன். குன்றின் மேலே உள்ள தொல்பொருள் சிதைவுகளைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏறிய பொழுது சூலம் இருந்த இடத்தைப் பார்த்தேன். சூலம் அங்கு இருக்க வில்லை. இன்று வரை சூலம் அங்கு இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்த சமயத்தவரின் எண்ணிக்கை சில நூறாக உயர்ந்திருந்தாலும் எண்ணிக்கையின் உயர்வு விகிதாசாரம் ஏறத்தாழ 400%..

முல்லைத்தீவு நகரில் அரசு சாரா நிறுவனம். பொறுப்பாய் உள்ளவர் ஆம்ஸ்ட்ராங் அடிகளார்.

முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மாகாண சபை உறுப்பினராக இருந்தவர் இரவிகரன். விடுதலைப்புலிகளின் மேலாட்சிக் காலத்தில் குமிழமுனையை ஒட்டியுள்ள கூட்டுறவுச் சங்கத்தில் பொறுப்பாய் இருந்தவர். அச்சங்கத்தின் நிதியை, ஏறத்தாழ முக்கால் கோடி ரூபாய் நிதியை, கையாடினார் என்ற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள் இரவிகரனைச் (நான்கு ஆண்டுகள் என்கிறார்கள்) சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இன்றைய காலத்தில் ஆர்ம்ஸ்டோங் அடிகளாரும் இரவிகரனும் கத்தோலிக்க மத போதகர்களும் கொக்கிளாய் நாயாறு குருந்தூர் புத்தர் சிலை விவகாரங்களைக் கையில் எடுக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். அறிக்கைகள் எழுதுகிறார்கள். அன்டன் புள்ளை நாயகம் என்று கத்தோலிக்கரே இவை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

குருந்தூருக்குத் தொல்லியல் துறையினர் அமைச்சர்கள் வருகின்றார்கள். மேலே ஏறுகிறார்கள் வழிபாடு செய்கிறார்கள். மீள்கிறார்கள்.

குருந்தூரில் ஆதிசிவன் கோவிலை இடித்துவிட்டுப் புத்தர் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள் என ஆர்ம்ஸ்ட்ராங் அடிகளாரும் இரவிகரனும் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிடுகிறார்கள்.

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என நான் மறுத்து அறிக்கை விட்டேன். ஏனெனில் அங்கே சைவக் கோயில் இருக்கவில்லை. சூலமும் இருக்கவில்லை. புத்த கோயிலையும் கட்டவில்லை. என் மீது அவர்கள் கடும் கோபமாக இருக்கிறார்கள். பொய்யன் எனத் திட்டி அறிக்கை விட்டிருக்கிறார்கள்

தொல்லியல் திணைக்களத்தினரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கரும் புத்த சமயத்தவர். எனினும் சைவக் கோயில் அங்கே இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளமையைக் குறிப்பிடுகிறார்கள். சைவர்கள் குருந்தூரில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள அரசு தடையாக இருக்காது எனச் சொல்கிறார்கள்.

Dated 28th September 2022

From 

Maravanpulavu K Sachithananthan

Siva Senai

Professor Anura Manatunga

Director of Archaeology

Dear professor,

Congratulations on your most recent remarks as appearing in

 https://dailyceylon.lk/38872.

You have kept the past amicability and the future  welfare of the two eternally bound people of Sri Lanka, Hindus and Buddhists.

I have been saying this since I visited Kurunthoor in 2019.

When Indian media reported that the Hindu temple in Kurunthoor was destroyed, and consequently few Indian Hindu organisations were agitated, I issued a denial. I told them that neither the Hindu temple was destroyed nor the Buddhist temple built.

Thereafter I consulted my friend Prof Dr Pathmanathan. He told me what I read as your remark today.

All places of worship of/by Buddhists in Sri Lanka are blessed with the Hindu Pantheon. Also Sri Lankan Buddhists are the only people, other than Saiva Tamils, in the Globe to venerate, worship and pray continuously for 1800 years, a Saiva Tamil women - Kannaki as Paththini.

To fan the flames of hatred between Hindus (living in this island since time immemorial) and Buddhists (living in this island since the arrival of Buddha about 2600 years ago) is the worst any one do.

Unfortunately for Hindus and Buddhists, a powerful lobby with foreign funding are instigating local Hindus at Mullathivu to fan the flames of hatred.

Because of my stand on Kurundoor, few local Hindus at the behest of foreign funded lobbies, throw abuses at me using foul language to demean me.

Your scholarly statement or remark today, as appearing in the dailyceylon, will be an eyeopener for those misguided extreme elements among the Hindus Buddhists.

Archaeology is a helpful area to further amicability peace and harmony, making one proud of his/her ancestry and history. 

Please continue the good work. Sri Lanka is a paradise for Hindus and Buddhists.

Thanking you

குருந்தூர் அடிவாரத்தில் தொல்லியல் துறையினர் தமக்குச் சிறிய அலுவலகத்தைக் கட்ட முயன்ற பொழுது அன்டன் புள்ளைநாயகம் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றிருந்தார்.

நீதிமன்றத் தடையை மீறித் தொல்லியல் துறையினர் படையினர் உதவியுடன் மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க முயல்வதை நான் சென்றபோது கண்டேன்.

இப்பொழுது அதே இடத்தில் கட்டடத்தையும் புத்த விகாரையும் அமைத்து வருகிறார்கள். நீதிமன்றத் தடையை மீறாமல் தடைக்குத் தடை வாங்கி உள்ளோம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குருந்தூரைச் சுற்றிய நிலங்களைக் கைப்பற்றி அங்கே சிங்கள புத்த மக்களை குடியேற்ற முனைகிறார்கள்.

மேலே ஏறி நான் பார்த்த பொழுது அங்கே சைவக் கோயில்களுக்கான தடயங்களைக் கண்டேன். புத்தர் கோயில்களுக்கான தடயங்களைக் கண்டேன்.

குருந்தூர் குன்றில் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்துவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் அழைக்க வேண்டும்.

தமிழரின் தொல்லியல் தடயங்களே குருந்தூரில் உள்ளன. சிங்களவருக்கும் குருந்தூருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புத்த எச்சங்களும் சைவ எச்சங்களும் தமிழர் விட்டுச் சென்ற எச்சங்கள்.

இக்காலப் போருக்கு பின்னரான சிங்கள புத்த வெற்றியின் மேலாதிக்க உணர்வுடன் சிங்கள ஆய்வாளர்களை மட்டும் தொல்லியல் துறை ஆய விடக்கூடாது.

இலங்கை இந்திய 1987 உடன்பாடு, குருந்தூர் மரபு வழி தமிழர் தாயகத்தில் உள்ளதை ஏற்கிறது.

முறையாகப் பார்த்தால் தொல்லியல், மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் வரவேண்டிய துறை.

குருந்தூர் குன்றில் புதிதாக எந்த கட்டிடத்தையும் அமைக்கக் கூடாது.  தமிழர்கள் புத்தர்களாக இருந்து கட்டியவற்றின் இடிபாடுகளில் சிங்கள புத்தர் மேலாதிக்கத்திற்கு இடமில்லை. 

புத்த சமயத்தவரே வாழாத பகுதியில் புத்த மேலாதிக்கத்திற்கு இடமில்லை.

சைவ புத்த முரண்பாடுகளை ஊதிப் பெருக்கின்ற கத்தோலிக்க கிறித்தவ அமைப்புகளுக்குத் தெரிந்து கொண்டே சைவரும் புத்தரும் இடம் கொடுக்கக் கூடாது.

Friday, October 28, 2022

தலைமைத்துவப் பயிற்சி

Appeal

Dated 5th October 2022

From 

A Madhavan, Siva Senai

Chidambarapuram 

Vauvniya 

Sri Lanka.

To

Whomsoever it may concern.

Re. Sponsorship for Air travel costs, Indian visa costs and incidental expenses.

Sir / madam

Sri Lankan Saiva-Tamil society need young enthusiastic spiritually oriented committed leaders. 

The post war anxiety and helplessness are consequences of the humiliating defeat in the war. 

The vulnerable groups among the Saiva Tamil society are becoming easy pray for evangelists and love jihadis.

Empowering Saiva Tamil youth is to meet these challenges by building a defence wall to prevent these aggressive evangelists and intruding jehadis.

Chinmaya Mission in Chennai Tamil Nadu India is willing to train the youth in empowerment continuously for batches of 10 at a time. 

After the training they will continuously monitor the trained youth for 1 year in their work towards empowering the Saiva Tamil society.

Guided by Siva Senai chief, Mr Maravanpulavu K. Sachithananthan who went to Chennai to negotiate with the Chinmaya mission for the training program, I went village by village to select 8 potential participants in the training program. 

They are all from the Vauvniya district of Sri Lanka. There are 103 village administrative (nilathari) units in the district. I have chosen few niladhari units in three divisional secretary's areas.

The following is the list of the participants. Each participant will require LKR 100,000 to meet the air travel cost, visa fees and incidental expenses related to travel.























This Youth Empowerment Programme is organised by Chinmaya Mission, Chennai under the tutelage of Swami Mitrananda and Swami Anukoolananda.

Most of the training will happen in Chinmaya Mission, Chennai and in a few centres around.  The training will be for 75 days after which the youngsters will serve for a year in Sri Lanka. 

Their expenses in India during the training will be totally taken up by Chinmaya Mission, Chennai. 

Expected date of departure at Colombo

October 18th 2022 

Expected date of arrival in Colombo 

18th January 2023.

Once we cap up LKR 800,000, we will announce the so that they19th Oct 2022

 will be no more funding. By October 10th we expect the entire funds to be received.

The entire amount of rupees LKR 800,000 will be sent direct by the sponsors to the travel agent.

Conceptualised planned negotiated and progressively implemented by Siva Senai chief Maravanpulavu K Sachithananthan, this training program hopefully becomes a continuous aspect of Saiva Tamil revival and Saiva Tamil empowerment in the 103 nilathari units of Vavuniya district.

Thanking you

Sincerely yours

A. Mathavan

Siva Senai vice chief for

Vauvniya district.

Whatsup +94778351401

16 Oct 2022 From Swami Mitrananda 

Hariom! Namaskaram! We can start the empowerment program for the youth from 10th November to 14th Jan. Warm Regards

19th Oct 2022 From Swami Mitrananda 

Hariom! Namaskaram! I’ve shared your number to Swami Anukoolananda … he will get in touch with you regarding the letter for youth empowerment program.

25 Oct 2022

தவத்திரு சுவாமி அநுகூலானந்தா அவர்களுக்கு

திருவடிகளுக்கு வணக்கம்

முன்பு 8 படிவங்களும் எட்டுக் கடவுச்சீட்டு படிகளும் அனுப்பி இருந்தோம் 

மேலும் இரண்டு படிவங்களும் இரண்டு கடவுச்சீட்டுப் படிகளும் அனுப்புவோம்

 மொத்தமாக 10 பயிற்சியாளருக்கும் தனித்தனி கடிதங்கள் அனுப்பி உதவினால் நன்றி உடையோம்

இந்திய நுழைவனுமதியான விசா பெறுவதற்கு நான்கு நாள்கள் ஆகும்.

விசா வாங்கிய பின்பே 9.11 பயணத்துக்கான வானூர்திப் பயணச் சீட்டுகளை வாங்கலாம்

திருவடிகளுக்கு வணக்கம்

28.10.2022 யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேர் இந்திய நுழைவுக்கு விண்ணப்பித்தனர்

28th October 2022 Friday

From

K. Sachithaananthan,

Trustee, Arulmiku Vallaikkulam Veerakathy Pillayar Koil,

Maravanpulavu

Chavakachcheri, Sri Lanka.

(From 13th October to Nov 28th at: 2B, Mercury Apartments, 65 Pantheon Road, Egmore, Chennai, India)


To

Consulate General of India, Jaffna, Sri Lanka

14, Maruthady Lane,

Nallur, Jaffna, Sri Lanka


Dear sir / madam,


Training the Youth in Empowerment


Sri Lankan Saiva-Tamil society need young enthusiastic spiritually oriented committed leaders.


Chinmaya Mission in Chennai Tamil Nadu India is willing to train the youth in empowerment for 10 youth during Nov 10th, 2022 to Jan 14th, 2023. This Youth Empowerment Programme is organised by Chinmaya Mission, Chennai under the tutelage of Swami Mitrananda and Swami Anukoolananda. Their expenses in India during the training will be totally taken up by Chinmaya Mission, Chennai.


Most of the training will happen in Chinmaya Mission, Chennai and in their centres in Tamil Nadu.  The training will be for 75 days after which the youngsters will serve for a year in Sri Lanka.


Eight persons are from the Vauvniya district of Sri Lanka. Two persons are from the Amparai District in Sri Lanka.


The following is the list of the participants. 

Phone Name Father Date of birth ID no. Passport No. Passport expiry Address

1 +94779065383 Janusikan Karunamoorththy 19-01-2007 20070190096 N9973774 11-10-2032 Lakshman Veethi, SRI Ramapuram, Vavuniya Vavuniya

2 +94758329478 Jayaprasanth Janakanthan 01-05-1995 95122193V N9975326 21-10-2023 254A, Vinayakar Veethi, Vinayakapuram, Koaraikkalappu, Thirukoil Thirukoil

3 +94758901129 Latheepan Thevarasan 20-09-1996 962642489V N9975313 21-10-2032 165, Vishnu Veethi, Vinayakapuram, Koaraikkalappu, Thirukoil Thirukoil

4 +94764413777 Laxshan Pakkiyarajah 25-10-1999 199929910379 N8632074 02-01-2030 35 Naakamma Theru, Katkulam 04, Aasikulam Vavuniya

5 +94774243643 Logeswaran Thiyagaraja 24-01-1991 910242083V N5699393 14-11-2023 72 Thudduvaakai, Neriyakulam Cheddikulam

6 +94775992988 Mokanthas Kalithas 07-03-2004 200406702015 N9817530 05-09-2032 36 Pazhani Murugan Veethi, Katkulam 01 Vavuniya

7 +94773478549 Surenthar Markandu 21-06-1987 871731004V N8693386 30-01-2030 Sinnapoovarasankulam Veethi, Kaddaiyankulam, Puliyankulam Vavuniya North

8 +94767450965 Thanusan Amaran 12-01-2004 200431701505 N9193152 14-12-2031 Panikkaneeraavi, Omanthai, Puliyankulam Vavuniya North

9 +94778803481 Thivan Mathavan 27-10-2003 200330113947 N9817529 05-09-2032 20 Pazhani Murugan Veethi, Katkulam 01 Vavuniya

10 +94767282528 Thusiman Rasu 27-06-1998 199817902815 N8367574 21-06-2029 3rd Olungai, Mathiamadu, Puliyankulam Vavuniya North

Expected date of departure at Colombo, 9th Nov 2022

Expected date of arrival in Colombo 18th January 2023.

I assure you that these trainees will return to Sri Lanka after the program. I request you to kindly issue them the necessary visa for the period of training.

Thanking you

Sincerely yours


K. Sachithanathan

26 Oct 2022 From Mathavan

ஆஸ்திரேலியா இளங்கோ அய்யா இரண்டு பெயர்களுக்கு  பயண செலவை பணத்தை   190000 அனுப்பி உள்ளார்.

From Vinothan Canada

52,714.81 + 344,279.56 = 396,994.37

உங்கள் வங்கியில்பார்த்து விவரம் தெரிவிக்க.

From Mathavan 

இளைஞர் தலைமைத்துவப் பயிற்சி

வரவுகள்

26.10.2022 வினோதன் கனடா 52,714.81

26.10.2022 இளங்கோ ஆத்திரேலியா 190,000

27.10.2022 வினோதன் கனடா 344,279.66

செலவுகள்

25.10.2022 வரை விண்ணப்ப படிவங்கள் 1,500.00

25.10.2022 வரை தொலைப்பேசி போக்குவரத்து 1,500.00

28.10.2022 




Wednesday, October 26, 2022

புத்த அட்டூழியம்

 ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தனது ஜனாதிபதி செயலகத்தில் நந்தி கொடி  ஏற்றி தீபாவளி கொண்டாடியதை சாதனை என செய்தியாக்குபவர்கள் நினைவில் வைத்திருக்க  வேண்டியவை 


கடந்த 13 ஆண்டுகளில்,

திருகோணமலை மாவட்டத்தில்   ஸ்ரீ மலை நீலியம்மன் சைவ கோயிலை அழித்து   பாசன பப்பாத ராஜமஹா விகாரை என்கிற பௌத்த விகாரையை கட்டி இருக்கின்றார்கள் 


திருகோணமலையில்  குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அதே கோவில்  இடத்தில  "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில்  விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் 


இராவணன் காலத்துக்குரிய கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வர பட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள் 


தென்னமரவடி கந்தசாமி ஆலயத்தை  பௌத்த மத பூமி என அறிவித்து இருக்கின்றார்கள் 


முல்லைத்தீவு மாவட்டத்திள்ள செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள் 


திருக்கோணேஸ்வரம் ஆலய புனரமைப்பு பணிகளை தடுத்து கோகர்ண விகாரை மீது தான் குறித்த ஆலயம்  கட்டப்பட்டு இருப்பதாக சொல்லுகின்றார்கள் .


காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் இடிக்கப்பட்டு  ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள் 


மட்டக்களப்பின் தொப்பிகல (குடும்பிமலை)  சூழல் பௌத்த மத பகுதியாக அடையாளம் காட்ட தொல்லியல் திணைக்களம் ஊடக கடுமையாக முயற்சிக்கின்றார்கள் 


தையிட்டி பாடசாலைக்கு  சூழலின்  கலைவாணி வீதிக்கு அருகில் தனியார் காணியை ஆக்கிரமித்து திஸ்ஸ விகாரை கட்டி இருக்கின்றார்கள் 


நாவற்குழியில் சமித்தி சுமண விகாரை என்கிற பௌத்த ஆலயத்தை  அரச காணியில் கட்டி திறந்து வைத்து இருக்கின்றார்கள் 


தையிட்டியில் உள்ள தனியார் காணியில் இப்போது 100 அடியில் கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரைக்கு சில மாதங்களுக்கு முன்னர்  கலசம் வைத்து இருக்கின்றார்கள் 


யாழ்ப்பாணத்தில் உள்ள  சுழிபுரம் பறாளை முருகன் கோவில் சூழலில் பௌத்த மத அடையாளங்களை நிறுவ முயற்சி செய்து வருகின்றார்கள் 


இப்போது கூட  திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரி அம்மன் சைவ ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கின்றார்கள்


இதற்கு மேலதிகமாக  2013 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் (1823/73 இலக்கம் ) கீழ் வடக்கு கிழக்கில் உள்ள 32 ஆலயங்களில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள் 


உருத்திரபுரம் சிவன் கோவில், மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்

மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம் போன்ற பாரம்பரியமான சைவ ஆலயங்களில் கூட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக மேற்குறித்த வர்த்தமானி மூலம் அறிவித்தல் வெளியிட்டு இருக்கின்றார்கள் 


கோட்டாபய ராஜபக்சே நியமித்த தனி சிங்கள ஜனாதிபதி செயலணி ஊடக கிழக்கு மாகாணத்தில் மட்டும் 2,000 இற்கு மேற்பட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள் 


இது போதாதென்று சகல மாவட்டங்களிலும்   தனியார் மற்றும் அரச காணிகளில் எண்ணிலடங்காத பௌத்த மட அடையாளங்கள் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகின்றது 


குறிப்பாக நிலமட்டத்தில் இருந்து உயரமாக இருக்கும் சகல இடங்களிலும் பௌத்த அடையாளங்களை நிறுவி இருக்கின்றார்கள் 


இதனால் தான் தமிழ்சமூகம்  அரசியலமைப்பின் கபௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் உறுப்புரிமை 9 ஐ நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரி வருகின்றது


அதே போன்று வடக்கு கிழக்கில் உள்ள  சைவ ஆலயங்கள், நில மட்டத்திலிருந்து உயரமாக இருக்கும் பகுதி எங்கும்  நிறுவப்பட்டுள்ள பௌத்த மத அடையாளங்களை நீக்க வேண்டும் எவ்வித என்பதே தமிழ் சமூகத்தின் மற்றுமொரு  கோரிக்கையாக இருக்கின்றது


இதற்கு பதிலளிக்கோவோ தீர்வு தராத திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தன்னை 'லிபரல்' ஆக அடையாளம் காட்ட  நந்தி கொடி கட்டல் போன்று நடத்தும் நாடகங்கள் குறித்து அக்கறை கொள்ள வேண்டியதில்லை


இவ்வாறான நாடகங்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கு புதிது அல்ல