Friday, January 31, 2020

தில்லி இந்தியா ஊடகம் செவ்வி


https://www.indiatvnews.com/amp/news/world/
English News World
Radical Islamists were armed by Sri Lankan govt in Civil War; urge India to do more for Hindus: Siva Senai
Jaffna-based rights’ activist and former United Nations advisor Dr Maravanpulavu Sachithananthan with New Delhi MP Meenakshi Lekhi during his visit to the city last week
Jaffna-based rights’ activist and former United Nations advisor Dr Maravanpulavu Sachithananthan with New Delhi MP Meenakshi Lekhi during his visit to the city last week

Dhairya Maheshwari New Delhi January 24, 2020 19:52 IST

Making a strong pitch for the inclusion of Sri Lankan Hindus under the amended Citizenship Act, Jaffna-based rights’ activist and former United Nations advisor Dr Maravanpulavu Sachithananthan told India TV in an exclusive interview that New Delhi must either create pathways for citizenship for Sri Lankan Hindus or negotiate their rehabilitation in Sri Lanka with Colombo.
He also heads an outfit, Siva Senai, involved in fighting “coercive conversion” of Sri Lankan Hindus to other religions, including Christianity and Islam. He was in New Delhi for a two-day visit last week, during which he caught up with India TV's Dhairya Maheshwari.

Edited excerpts:
Why should Sri Lankan Tamil refugees be included in the ambit of the Citizenship Amendment Act? 
The Sri Lankan government says that efforts are on to rehabilitate the war refugees, mostly Tamilian Hindus, in the wake of the Sri Lankan Civil War.
The Citizenship Amendment Act, 2019 is a great boon to the refugee Hindus. Hindus from the neighbouring countries of Bangladesh, Afghanistan and Pakistan, where there have been reports of persecution of minorities, will finally have a state to call their own.
In the case of Sri Lankan refugees, approximately 1.5 million refugees, mostly Tamilian Hindus, have migrated to 40 different countries. More than a lakh Tamilian refugees in India have been living in refugee camps for almost 35 years now. Besides India, all the other Sri Lankan refugees who have gone to these 40 countries are in a state to exercise their rights as citizens, or permanent residents, of their respective countries. They even have the facilities to travel back to Sri Lanka. They have become ministers. They have become mayors. They have become members of parliament in their new homelands.
Sadly, in the case of Sri Lankan refugees in India, they have failed to realise their full potential because of their inability to hold full-time jobs. They do not even have permission to travel around India freely. Even in Sri Lanka after the end of the Civil War in 2009, refugees were eventually released from the confinement of camps and rehabilitated into the mainstream.
But the refugees in India are stuck in limbo. They can’t apply for government jobs. They can’t apply at universities. About 20 per cent of those refugees were born here. They don’t even know anything about Sri Lanka.
While the Indian government’s consistent position has been that all these Sri Lankan refugees must return to Sri Lanka one day, the fact remains that the political, emotional, economic and educational climate for their return is not conducive enough. New Delhi has been unable to push the Sri Lankan government to accept the provisions of the Indo-Sri Lanka Peace Accord of 1987, which called granting more autonomy to the provinces.
In this backdrop, New Delhi must either grant citizenship to Sri Lankan refugees under the CAA or facilitate their return to Sri Lanka. I would like to reiterate that Sri Lankan refugees could only return to their homeland if the 1987 Accord is implemented in letter and spirit. At present, we are faced with a situation where the traditional homeland of Sri Lankan Tamils has been split.
However, they can’t stay here as stateless people as well. A solution, therefore, must be arrived at soon.
Overall, how receptive has India been to these concerns of Sri Lankan Hindus?
Well, there is no other country that the Sri Lankan Hindus look up to for support other than India. India is involved in a significant way, politically and economically, in re-developing the war-ravaged northern region of Sri Lanka. Most of the commitments made to Sri Lankan Tamils during Prime Minister Modi’s visit to Jaffna in 2015 have or are being fulfilled.
The Indian government also believes that there has to be a pathway for citizenship for Sri Lankan Tamil refugees currently residing in camps.
India is like a big brother and it will continue to remain so for the Sri Lankan Hindus.
How would you characterise the current situation of Sri Lankan Tamils living in the northern and eastern provinces of Sri Lanka?
Sri Lankan Hindus are in a state of despair. While the war is no more, the post-war situation is traumatic, to say the least. Lakhs of them have been displaced. Our schools are in shambles. The health system is in a state of disrepair. The overall infrastructure is broken. The push to resettle the war refugees is not happening as planned, which is mainly because the 1987 Rajiv Gandhi-Junius Jayewardene is not being implemented fully by the Sri Lankan government.
Unfortunately for the Sri Lankan Hindus, Christian missionaries and Islamic preachers are taking advantage of the deplorable situation since the war ended back in 2009. They are poor. They are displaced. So, the money from overseas, mainly channelled from the Gulf region and the West, is being used to lure them towards these religions. At present, there are some 560 Christian missionary groups in Sri Lanka who are converting the Sri Lankan Hindus to Christianity. The constitution of Christians as part of overall population has increased from six to eight per cent. Muslims now make approximately 10 per cent of Sri Lanka’s population, up from seven per cent. On the other hand, the number of Sri Lankan Tamils have come down from 25 per cent of overall population to just 12.5 per cent at present.
Could you also throw some light on the impact that the Easter Bombings of April 2019 have had on the overall political landscape of Sri Lanka?
Let me state one thing from the outset. The radical Islamist groups were armed by the Sri Lankan government during the Civil War. They were provided with all sorts of assistance so they could help the Sri Lankan armed forces in fighting the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
So, after the war ended, these radical Islamist groups emerged so strong that they started asserting themselves, politically as well as through other ways, in the northern and eastern provinces, which had been the traditional homelands for Sri Lankan Tamils.
The effects of this policy of helping the Islamist groups has resulted in the Muslim population in the Eastern province of Sri Lanka registering a steep rise, from just three to four per cent in 1901 to over 40 per cent at present.
What’s the purpose of your current visit to Delhi?
I am here to appeal to the Indian government to resume the ferry service from the northern part of Sri Lanka to the southern part of India. The ferry service from the Talamanier pier of Sri Lanka was shelved a few years ago but efforts have been on to resume the services. I met several Indian lawmakers and appealed to them to begin the service, which would help in building people-to-people ties between people of Sri Lanka and India.

சைவ புத்த சம நிலை

தை 10, 2051, வெள்ளி, (25.01.2020)
இந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முதல்நாள் நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார்.
புத்தர் சிலைகளையும் புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது. அந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும் வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா?
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய அசுகிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார். யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.
புத்தராய்ச் சில புனை துகில் அணிபவரே புத்த சமயிகளே இல்லாத ஊர்களில் புத்தர் சிலைகளை அமைத்து வருகிறார்கள் தேவையற்ற தொல்லையைத் தருகிறார்கள் என நாக விகாரையின் புத்த பிக்கு வணக்கத்துக்குரிய விமல தேரர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஏற்கனவே இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா?
சைவரும் புத்தரும் இணைந்தே இலங்கையைக் காப்பாற்றலாம் மேம்படுத்தலாம்.
இந்தப் பூமிப்பந்தில் தமிழ் பெண் ஒருவரைத் தம் கடவுளாக வழிபடும் தமிழரல்லாத ஒரே இனம் புத்த சமயச் சிங்கள இனமே.
கடவுளாக வழிபடுவதுமட்டுமன்றி ஆண்டுதோறும் கண்ணகிப் பத்தினிக்குப் பெருவிழாக்கள் எடுத்துப் போற்றுகின்ற தமிழரல்லாத ஒரே இனமும் புத்த சமயம் சார்ந்த சிங்கள இனமே.
கோட்டைச் சிங்கள புத்த அரசைக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் வீழ்த்த நினைத்தனர். கோட்டை அரசன் வீதிய பண்டாரத்துக்கும் சீதவாக்கை அரசன் மாயாதுன்னைக்கும் துணையாக நின்றவர்கள் யாழ்ப்பாண சைவத் தமிழ் அரசர்கள்.
பின்னர் அரசன் வீதிய பண்டாரத்திற்குப் புகலிடம் கொடுத்ததாலும் கோட்டை அரசின் களஞ்சியத்துக்குப் பாதுகாப்புக் கொடுத்ததாலும் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணச் சைவத் தமிழ் அரசை வீழ்த்தினர்.
ஆங்கிலேயரும் முகமதியரும் இணைந்து 1915இல் புத்தரை ஒடுக்கினர். புத்த சமயத் தலைவர்கள் உள்ளிட்ட 5000 புத்தர்களைத் தளையிட்டனர். அநாகரிக தர்மபாலரைச் சிறையில் அடைத்தனர்.
முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். யாழ்ப்பாணத்து சைவப் பெருமக்கள் தேர்ந்தெடுத்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் போர்க்காலச் சூழலிலிலும் இடர்களைதா தாண்டி இலண்டன் சென்றார். ஆங்கிலேயர் சிறையிட்ட 5000 புத்தர்களையும் விடுவித்தார்.
இன்றைய புத்தர்களின் தேசிய எழுச்சிக்குச் சைவப் பெருமக்கள் பெரிதும் உதவினர்.
யாழ்ப்பான சைவத் தமிழரசன் சங்கிலியனின் நோக்கையும் போக்கையும் யாழ்ப்பாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர் பொன்னம்பலம் இராமநாதன் நோக்கையும் போக்கையும் ஒட்டி இன்றைய சைவத் தமிழுலகம் தெற்குப் புத்தர்களோடு கை கோர்க்க விழைகிறது.
சங்கிலியனுக்கும் இராமநாதனுக்கும் நன்றியாகச் சைவ சமயத்திற்கும் அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது புத்தர்களின் தலையாய கடன்.
சைவர்களின் வாழ்விடங்களில் சைவர்களின் ஒப்புதலின்றிப் புத்தசமயக் கோயில்களை அமைப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த இரு மாநாடுகளும் உதவ வேண்டும். வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் வணக்கத்துக்குரிய விமல தேரர் இருவரையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு ஏனைய புத்தபிக்குகள் பணிபுரிய வேண்டும்.
நியூசிலாந்து மசூதியில் முகமதியர்களைச் சுட்டுக்கொன்ற கிறித்தவர், கொழும்பு கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாட்டாளர்களைக் கொன்ற முகமதியர் போன்ற தீவிரவாதிகள் புத்தரிடையே இருந்தால் அவர்களைத் திருத்திப் புத்தராக்க வேண்டிய தலையாய கடமை அன்பையும் அருளையும் இரக்கத்தையும் பேணுகின்ற நடுநிலைப் புத்தர்களுக்கு உண்டு. இத்தகைய கண்ணோட்டம் உள்ள புத்த சமயத்தவரே சிங்கள மக்களிடம் பெரும்பான்மையாக உள்ளனர்.
சைவர்களுக்கு உரிய பராம்பரிய நிலங்களில் புத்தர் சமய மடங்களையோ சிலைகளையோ அமைப்பதனால் முகமதியர்களும் கிறித்தவர்களும் புத்த சமயத்தவருக்கு எதிராகச் சைவத் தமிழர்களை உசுப்பி விடுகிறார்கள்
இலங்கை அல்லாவின் பூமி. இலங்கை இயேசுவின் பூமி. இவற்றை நோக்காகக் கொண்டு இலக்காக வைத்து மேற்கத்தைய மற்றும் வளைகுடா நாடுகளின் நிதிக் குவியலுடன் காய்களை நகர்த்திச் சைவர்களையும் புத்தர்களையும் பிரித்து வைக்கும் ஆபிரகாமிய சமய ஊடுருவலுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.
சைவ சமயத்தையும் இலங்கைத்தீவின் முன்னுரிமைச் சமயமாக அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளும் நாள் இந்தத் தீவில் புத்தர் கூறிய அன்பும் அமைதியும் அறமும் ஓங்கும் நாள் ஆகும்.
அழைப்பிதழில் உள்ளதைப் போலவே புத்தர் கொடியும் நந்திக் கொடியும் சமநிலையில் பறக்கும் நாள் இலங்கைக்கு விடிவுநாள்.

சிவபூமி காத்தோர் பட்டியல்

தை 15, 2051 புதன் (29.01.2020)
இலங்கையைச் சிவ பூமியாகக் காத்தோர் பட்டியல்
தொகுப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கைத் தீவு சிவ வழிபாட்டின் தாயகம் = சிவ பூமி. இலங்கைத் தீவைச் சிவ பூமியாக நீடிக்க, ஆண்டோர், தளபதியானோர், புரவலர், புலவர், நாயன்மார், சான்றுகள் கூறியோர் எனப் பட்டியல் நீளும்.
அகத்தியர் தொடக்கம் இரண்டாம் சங்கிலியன் வரையான காலப் பகுதியின் 145 பெயர்களின் பட்டியல்.
வரலாற்றாசிரியர், தொல்லியல் அறிஞர் இலக்கியப் படைப்பாளிகள் இதுநாள் வரை எடுத்துக் கூறிய பங்களிப்பாளரின் பெயர்ப் பட்டியலைத் தொகுத்தேன். இப்பட்டியல் முழுமையானது அல்ல. சேர்க்கை, நீக்கம், திருத்தம் தேவையான பட்டியல்.
1. புலவர் அகத்தியர் (திமு. தமிழ் மொழி தோன்றிய காலம்)
2. அருளாளர் துவட்டர் (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
3. சிற்பி விசுவகன்மா (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
4. அரசன் இராவணன் அரசி வண்டோதரி (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
5. அரசன் இராமன் அரசி சீதை (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
6. அரசன் சிவ நாகன் (திமு. 554-505)
7. புலவர் ஈழ நாகனார், (திமு. 543-205)
8. புலவர் நன்னாகனார், (திமு. 543-205)
9. புலவர் பொன்னாகனார் (திமு. 543-205)
10. புலவர் வெண்ணாகனார் (திமு. 543-205)
11. புலவர் முப்பேர் நாகனார் (திமு. 543-205)
12. அரசன் மால நாகன் (திமு. 545-514)
13. அரசன் குல நாகன் (திமு. 545-514)
14. அரசன் மணி இயக்கன் (திமு. 515-485)
15. அரசன் விசயன் (திமு. 452-414)
16. அரசன் பாண்டிய வாசுதேவன் (திமு. 413-383)
17. அரசன் அபயன் (திமு. 382-362)
18. அரசன் மண்டு நாகன் நாகர்முனை மட்டக்களப்பு (திமு. 362)
19. அரசன் மூத்த சிவன் (திமு. 362-276)
20. அரசன் மீட்ட சேனன் மட்டக்களப்பு (திமு. 282)
21. புலவர் ஈழத்துப் பூதன்தேவனார் (திமு. 276-228)
22. அரசன் கூத்த நாகன் மட்டக்களப்பு (திமு. 275)
23. அரசன் கோவேந்தன் ஆனைக்கோட்டை (திமு. . 228-200)
24. புலவர் மாமூலனார் (திமு. 200-140)
25. வணிகன் ஈழக் குடுமிகன் (திமு. 150-100)
26. வணிகன் ஈழப் பரதவன் (திமு. 150-100)
27. அரசன் சேனன் (திமு. 146-133)
28. அரசன் குடிகன் (திமு. 133-124)
29. அரசன் எல்லாளன் (திமு. 134-70)
30. அரசன் புலவர் கல்லாட நாகன் (திமு. 78-71)
31. அரசன் புலத்தியன் (திமு. 13-10)
32. அரசன் வாகையன் (திமு. 11-9)
33. அரசன் பனை மாறன் (திமு. 9-2)
34. அரசன் பாண்டிய மாறன் (திமு. 1- திபி.1)
35. அரசன் பிள்ளை மாறன் (திபி. . 1-2)
36. அரசன் சோழ நாகன் (திபி. 28-40)
37. அரசன் கோட்டையன் திருகோணமலை (திபி. 39)
38. அரசன் சிவன் (திஇபி. 43-44)
39. அரசி ஆடகசவுந்தரி திருகோணமலை (திபி. 109)
40. அரசன் சோழ அபயன் (திபி. 124-125)
41. அரசன் சிவ சேனன் (திபி. 125)
42. அரசன் ஈழ நாகன் (திபி. 126-131)
43. புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (திபி. 150-220)
44. அரசன் சந்திரமுக சிவன் அரசி தமிழ்த்தேவி (திபி. 150-220)
45. பயணி கிரேக்கத் தாலமி (திபி. 158-182)
46. அரசன் கரிகாலன் (திபி. 185-200)
47. காவியத் தலைவி கண்ணகி (திபி. 190-270)
48. அரசன் சேரன் செங்குட்டுவன் (கிபி. 190-270)
49. அரசன் கயவாகு (திபி. 202-234)
50. அரசன் மாமல்ல நாகன் (திபி. 224-231)
51. புலவர் தீவதிலகை (திபி. . 240-250)
52. காவியத் தலைவி மணிமேகலை (திபி. . 250-280)
53. அரசன் சாவகத்துப் புண்ணியராசன் (திபி. 260)
54. அரசன் கொட்டியாறன் திருகோணமலை (திபி. 269)
55. வணிகன் வீரவராயன் செட்டியார் (திபி. 270-330)
56. அரசன் குச்ச நாகன் (திபி. 272-274)
57. அரசன் குஞ்ச நாகன் (திபி. 275-279)
58. அரசன் நாக திலகன் (திபி. 280-306)
59. அரசி பால்வள்ளி என்ற பீலிவளை (திபி. 280-306)
60. அரசன் மேக வண்ணன் (திபி. 331-359)
61. அரசன் குணசிங்கன் (திபி. 340-400)
62. அரசன் அரசசேனன் மட்டக்களப்பு (திபி. 395)
63. அரசி கலிங்க உலகநாச்சி மண்முனைப் படிகலிங்கர் (திபி. 390-430)
64. அரசன் நல் நாடன் சேரன் (திபி. 420-460)
65. அரசன் முகல்லன் (திபி. 528-546)
66. அரசன் சிவ நந்தி (திபி. 600-680)
67. அருளாளர் திருஞானசம்பந்தர் (திபி. 630-650)
68. அரசன் வங்காலடன் மட்டக்களப்பு (திபி. 664)
69. அரசன் மானவர்மன் (திபி. 690-725)
70. அரசன் பல்லவன் நரசிம்ம வர்மன் (திபி. 690-725)
71. அருளாளர் சுந்தரர் (திபி. 790-820)
72. அரசன் உக்கிரசிங்கன் (திபி. 810-850)
73. அரசி மாருதப்புரவிவல்லி. 810-850)
74. அரசன் பாலசிங்கன் - யாழ் மணற்றிடர் (திபி. 851-900)
75. அரசன் முதலாம் சேனன் - சிவ சேனன் (திபி. 910-950)
76. அருளாளர் மாணிக்கவாசகர் (திபி. 891-920)
77. அரசன் முதலாம் பராந்தகச் சோழன் (திபி. 938-986)
78. அரசன் ஆரியச் சக்கரவர்த்தி சேதிராயன் (திபி. 938-986)
79. அருளாளர் திருமூலர் (திபி. 951-1040)
80. அரசன் அருளாளர் கண்டராதித்தர் (திபி. 986-996)
81. அரசன் அரிஞ்சயன் (திபி. 997-1007)
82. அரசன் சுந்தர சோழன் (திபி. 1008-1014)
83. அரசன் ஆதித்த கரிகாலன் (திபி. 1015-1016)
84. அரசன் முதலாம் இராசராச சோழன் (திபி. 1016 -1045)
85. தளபதி தாழிக்குமரன் (திபி. 1016 -1045)
86. வணிகன் நான்கு நாட்டார் (திபி. 1016 -1045)
87. வணிகன் குமாரகணத்துப் பேரூரார் (திபி. 1017 -1045)
88. வணிகன் சேக்கிழான் (திபி. 1018 -1045)
89. வணிகன் அஞ்ஞூற்றுவர் (திபி. 1019 -1045)
90. வணிகன் மணிக்கிராமத்தார் (திபி. 1020 -1045)
91. அரசன் முதலாம் இராசேந்திர சோழன் (திபி. 1043-1075)
92. தளபதி செயங்கொண்ட மூவேந்த வேளார் (திபி. 1043-1075)
93. அரசன் இராசாதிராச சோழன் (திபி. 1075-1086)
94. அரசன் இரண்டாம் இராசேந்திர சோழன் (திபி. 1082-1094)
95. இளவரசன் பாண்டியன் மாறவர்மன் (திபி. 1089-1121)
96. அரசன் பாண்டியன் முதலாம் விசயபாகு (திபி. 1096-1151)
97. தளபதி குருகுலத்தரையன் (திபி. 1096-1151)
98. இளவரசி அயோத்தி இலீலாவதி (திபி. 1096-1151)
99. இளவரசி கலிங்கத் திரிலோகசுந்தரி . 1096-1151)
100. இளவரசன் வீரப்பெருமாள் இளவரசி சோழச் சுத்தமல்லி ஆள்வார் (திபி. 1110-1171)
101. இளவரசி மித்திரை இளவரசன் குலசேகர பாண்டியன் (திபி. 1080-1141)
102. அரசன் சிங்கை பரராசசேகர ஆரியக் கோமான் (திபி. 1140-1174)
103. வள்ளல் சடையப்பர் (திபி. 1149-1174)
104. புலவர் புகழேந்தி (திபி. 1149-1174)
105. அரசன் விக்கிரமபாகு (திபி. 1152-1161)
106. அரசன் இரண்டாம் கயவாகு (திபி. 1162-1171)
107. அரசன் முதலாம் பராக்கிரமபாகு (திபி. 1195-1228)
108. அரசன் மாகோன் மட்டக்களப்பு (திபி. 1246)
109. அரசன் கலிங்க மாகன் (திபி. 1229-1299)
110. இளவரசன் குளக்கோட்டன் - சோழ கங்கன் (திபி. 1229-1299)
111. அரசன் இரண்டாம் பராக்கிரமபாகு (திபி. 1271-1306)
112. தளபதி காலிங்கராயன் (திபி. 1298)
113. அரசன் குலசேகரச் சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1315-1347)
114. அரசன் நான்காம் பராக்கிரமபாகு (திபி. 1326-1350)
115. அரசன் குலோத்துங்க சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1347-1352)
116. அரசன் விக்கிரம சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1352-1364)
117. அரசன் வரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1364-1382)
118. பயணி அரபு இபன் பற்றுற்றா (திபி. 1375)
119. அரசன் மார்த்தாண்ட சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1382-1397)
120. அரசன் குணபூசண சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1397-1422)
121. அரசன் விரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1422-1441)
122. அரசன் சயவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1441-1448)
123. அரசன் ஆறாம் பராக்கிரமபாகு (திபி. 1441-1493)
124. அரசன் குணவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1448-1470)
125. தளபதி சீனச் செங்கோ (திபி. 1445)
126. புலவர் நல்லுருத்திரனார் அழகியவண்ணன் (திபி. 1450-1530)
127. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1470-1482)
128. அரசன் செண்பகப் பெருமாள் புவனேகவாகு யாழ்ப்பாணம் (திபி. 1482-1498)
129. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1498-1509)
130. அரசன் பரராசசேகரன் யாழ்ப்பாணம் (திபி. 1509-1550)
131. அரசன் சங்கிலி யாழ்ப்பாணம் (திபி. 1551-1591)
132. அரசன் எதிர்மன்னசிங்கன் மட்டக்களப்பு. 1569)
133. அரசன் காசிநயினார் யாழ்ப்பாணம் (திபி. 1591-1617)
134. அரசன் பெரியபிள்ளை யாழ்ப்பாணம் (திபி. 1617-1620)
135. அரசன் புவிராச பண்டாரம் யாழ்ப்பாணம் (திபி. 1621-1628)
136. அரசன் எதிர்மன்னசிங்கம் யாழ்ப்பாணம் (திபி. 1628-1637)
137. அரசன் சங்கிலிகுமாரன் யாழ்ப்பாணம் (திபி. 1637-1650)
138. அரசன் வீதியபண்டாரம் (திபி. 1646)
139. தளபதி மலையாளக் குஞ்சலி வீரர் (திபி. 1647)
140. தளபதி நாயக்க வருண குலத்தான் (திபி. 1648)

Friday, January 24, 2020

அடைக்கலநாதன் அவர்களே

சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை வெளியிட்ட அறிக்கை

கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் உதவுவாரா என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் முந்தையநாள் நடந்த கூட்டம் ஒன்றில் கேட்டுள்ளார்.


சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளார்


அவர் வவுனியாக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதேவேளை நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் அவரது ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.


திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் செல்வம் அடைக்கலநாதனின் சார்பாளர் ஈடுபட்டு வருவதை அவர் மிகத் திறமையாக மறைத்து வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் மீது பாய்ந்துள்ளார்.


அடைக்கலநாதன் அவர்களே, திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்ட நீங்கள் ஆதரவு கொடுத்ததை மறந்து விட்டீர்களா?சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்த இந்த நிகழ்வை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா?


அடைக்கலநாதன் அவர்களே கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டதை அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததை மறைக்க முயல்கிறீர்களா?


அடைக்கலநாதன் அவர்களே, மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி அமைத்தை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா?


அடைக்கலநாதன் அவர்களே, முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் உங்கள் ஆதரவாளரான தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவியதை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா?


அடைக்கலநாதன் அவர்களே, வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களுக்கு வழியெங்கும் தடைவிதிக்கும் உங்கள் ஆதரவாளர்களை மறந்தீர்களா?


அடைக்கலநாதன் அவர்களே, சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே அப் பாதிரியாரும் கத்தோலிக்கர்களும் உங்கள் ஆதரவாளர்கள் அல்லவா?


அடைக்கலநாதன் அவர்களே, நாடாளுமன்றத்தில் இறைத் தூதர் இயேசுவைக் கடவுள் என்றீர்கள் இறைவன் என்றீர்கள் உங்கள் அறியாமையின் உச்சத்தைத் தமிழ் மக்கள் சார்பில் உலகத்துக்குக் கூறி தமிழ் மக்களை வெட்கத்துக்கு உள்ளாக்கினார்கள். உங்களுக்கு வாக்களித்த கத்தோலிக்க மக்களுக்கு துரோகம் இழைத்தீர்கள்.


வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தின தேரர் வன்னியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல வன்னியில் வாழ்கின்ற சைவ மக்களின் வாக்குகளைப் பெற்று வென்றவரும் அல்ல


அடைக்கலநாதன் அவர்களே, நீங்களோ வன்னியில் உள்ள சிறப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். 


அடைக்கலநாதன் அவர்களே, வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்கு நீங்கள் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள்.


என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.


அடைக்கலநாதன் அவர்களே, உச்சமாக, பல்லாயிரம் ஆண்டு பழமையான திருக்கேதீச்சர கோயில் வீதி முகப்பில் வரவேற்பு வளவை உடைத்த பாதிரி கோலத்தில் வந்த மார்க்கசுவுக்கும் குண்டர்களுக்கும் நீங்கள் மறைமுகமாக அளித்த ஆதரவு உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் பிணையில் எடுத்த சோக நிகழ்வு மன்னார் மாவட்டச் சைவர்களை உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது.


அடைக்கலநாதன் அவர்களே, வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரைச் சுட்டும் உங்கள் விரலுக்காக மடித்த உங்களையே சுட்டும் மற்ற மூன்று விரல்களையும் மறைக்காதீர்கள்.


அடைக்கலநாதன் அவர்களே, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தமிழ் வரிகளை மறக்காதீர்கள். சைவருக்கும் புத்தருக்கும் இடையே  தொடர்ந்தும் பிளவை ஏற்படுத்தலாம் குளிர் காயலாம் என்ற உங்களின் பகற் கனவு இனிமேல் ஒரு போதும் பலிக்காது.