Wednesday, December 14, 2022

Ship to Chidambaram 2022 Sumanapala

காங்கேயன்துறை-புதுச்சேரிப் பயணிகள் கப்பல்

அனுப்புநர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை.

பெறுநர்
திரு எச். சுமணபாலா அவர்கள்
மேனாள் மாவட்டச் செயலர், களுத்துறை.
மேனாள் ஒருங்கிணைப்பாளர், வட மாகாண ஆளுநர்.

பேரன்புடையீர்,

வணக்கம்.
வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

வியாழக்கிழமை (2022 திசம்பர் 01) காலை 11 மணிக்குக் கொழும்பு, கோட்டையில், கப்பல் துறை அமைச்சின் செயலாளர் திரு. உரூவன்சந்திரா அவர்களை நாம் இருவரும் சந்தித்தோம்.

காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்கு மார்கழித் திருவாதிரையை ஒட்டி இலங்கையின் சைவ சமய வழிபடு பயணிகளுக்குக் கப்பல் விடுமாறு கேட்டோம்.

இக்கப்பல் சேவை தொடர்பாக இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலை யூன் 15இலேயே பெற்ற செய்தியையும் அவருக்குக் காட்டினோம்.

காங்கேயன்துறைத் துறைமுகத்தில் இறங்கு / ஏறு துறையில் பயணிகளை ஏற்ற / இறக்க அரசு நடைமுறைகளுக்குரிய கட்டடங்கள் இல்லை, உட்கட்டமைப்புகள் இல்லை, எனச் செயலாளர் தெரிவித்தார்.

இவற்றை அமைத்து முடிக்க 8 மாதங்கள் தொடக்கம் ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதற்குப் பின்பே பயணிக்கக் கப்பல் தொடங்கலாம் எனச் செயலாளர் எம்மிடம் கூறினார்.

வழிபடு பயணிகளுக்காக மார்கழி 2016இல் இக்கப்பல் பயணத்தைத் தொடங்குமாறு வடமாகாண ஆளுநர் மேதகு இரெஜினால்டு கூரே அவர்களிடம் நான் கொடுத்த விண்ணப்பக் கடிதப் படியைச் செயலாளரிடம் காட்டினேன்.

இக்கப்பல் பயணத்தை நடத்துவதற்குரிய கப்பல் தொடர்பான செலவினங்கள், வரவு-செலவுத் திட்டம் என்பன கொண்ட, கொழும்பு ஏலிசு (Hayleys Ltd) நிறுவனத்தார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தந்த கடிதப் படியையும் அவரிடம் காட்டினேன்.

அவர் மனத்தில் மாற்றம் தெரிந்தது. கப்பல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் முளைவிட்டது. ஏலிசு நிறுவனத்தாருடன் பேசினார். அவர்கள் ஏற்ற பதிலைச் சொல்லவில்லைப் போலும்.

வேறொரு கப்பல் பயண முகவரிடம் பேசினார். இப் பயணம் தொடர்பாக அம்முகவர் ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டோம்.

பேசிக் கொண்டிருக்கையில் கைப்பேசியின் ஒலிபெருக்கியை இயக்கினார். எங்களையும் உரையாடலில் கலந்து கொள்ளச் சொன்னார்.

இலங்கைக் கப்பல் துறை அமைச்சின் ஒப்புதல் பெற்றால் விரைவில் கப்பலை இயக்கலாம் என அம்முகவர் சொன்னார். நாளை வாருங்கள், கப்பல் துறை அமைச்சின் ஒப்புதலைத் தருகிறேன், எனச் செயலாளர் அவரிடம் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

அக்கப்பல் முகவரி பெயர் திரு. இராசன் என்றும் அவருடன் நாம் பேச வேண்டும் என்றும் தொலைபேசித் தொடர்பு எண்ணைச் செயலாளர் நம்மிடம் தந்தார்.

தொடர்ந்து நான் இரண்டு முறை திரு. இராசன் அவர்களைக் கொழும்பில் நேரில் சந்தித்தேன். கப்பல் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்று விட்டதாகத் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார்.

மார்கழித் திருவாதிரை நாளுக்கு வழிபடு பயணிகளை ஏற்றி செல்லுங்கள் எனத் திரு. இராசனிடம் கேட்டேன். பயண முகவர் ஒருவரையும் அவருக்கு அறிமுகித்தேன்.

திசம்பர் 28ஆம் தேதி கப்பல் புறப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகத் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார். எனினும் கடல் கொந்தளிப்பைக் கருத்தில் கொண்ட கடற்படையினர், சனவரி நடுப்பகுதிவரை பின்போடுமாறு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கரி இறக்குமதியால் மாசுற்ற காரைக்கால் துறைமுகம், துறைமுகத்திலிருந்து காரைக்கால் நகரத்திற்குப் போவதற்குரிய தொலைவு, இரண்டையும் கருத்தில் கொண்டு புதுச்சேரி துறைமுகத்திற்குக் காங்கேயன்துறையில் இருந்து போகக்கூடிய வாய்ப்புகளே உண்டு எனவும் திரு. இராசன் என்னிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மார்கழித் திருவாதிரைக்குச் சைவ வழிபடு பயணிகள் போகவேண்டுமே என அவரிடம் விண்ணப்பித்தேன்.

நான் யாழ்ப்பாணம் வந்த பின்பும் நீங்கள் திரு. இராசனுடன் தொடர்பாக உள்ளீர்கள். நேற்று (13.12.2022) திரு. இராசன் அவர்கள் மாண்புமிகு கப்பல்துறை அமைச்சரைச் சந்திக்கப் போவதாக என்னிடம் சொன்னீர்கள்.

2023 சனவரி நடுப்பகுதியில் இருந்து காங்கேயன்துறைக்கும் புதுச்சேரிக்கும் இடையே பயணிகள் கப்பலில் பயணிக்கலாம் என மாண்புமிகு கப்பல் துறை அமைச்சர் கூறியதாக இன்று 14.12 காலை நாளிதழ்களில் வந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

பயணி ஒருவர் 60 அமெரிக்க வெள்ளி (ரூ. 21,000 இலங்கை ரூபாய்) கொடுத்து, 100 கிலோ பொதிகளுடன் பயணிக்க வாய்ப்புள்ளதாக இன்று கப்பல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வறுமைக்கோட்டை ஒட்டி  வாழும் சைவ வழிபடு பயணிகளின் ஆன்ம ஈடேற்றப் பயணம் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு மிகமிகப் பெருகியுள்ளமை, சிவபெருமான் திருவருளே.

திருவருள் துணையுடன் 2010இல் இம்முயற்சியைத் தொடங்கினேன். மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவை அணுகினேன், மாண்புமிகு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரை அணுகினேன். பிரதமர் மாண்புமிகு தி எம் செயரத்தினாவுக்குக் கடிதம் எழுதினார்.

மீண்டும் சிவபெருமான் திருவருளால் 2016 மார்கழியில் நான் எடுத்த முயற்சி கைகூடும் நிலைக்கு வரும்போலத் தெரிகிறது.

இலங்கையில் இம்முயற்சிக்கு ஆதரவு தந்தோர்:
1.1 வடமாகாண  ஆளுநர் மேதகு இரெஜினால்டு கூரே
1.2 இலங்கைக் குடியரசுத் தலைவரின் செயலாளர் திரு ஆசுடின் பெர்ணாந்து
1.3 மாண்புமிகு அமைச்சர் வி எம் சுவாமிநாதன்
1.4 யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதர் திரு நடராசன் மற்றும் அலுவலகத்தார்
1.5 வட மாகாண ஆளுநரின் செயலர் திரு. இல. இளங்கோவன், மற்றும் அலுவலகத்தார்
1.6 வட மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் திரு. எச். சுமணபாலா
1.7 இந்து கலாச்சாரத் திணைக்கள இயக்குநர், திரு. உமா மகேசுவரன், மற்றும் அலுவலகத்தார்
1.8 ஊடகவியலாளர் திரு குகநாதன், தான் தொலைக்காட்சி
1.9 வட மாகாணத்தின் கடற்படை அலுவலகத்தார்
1.10 இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் அலுவலர்கள்
1.11 யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ சமய அமைப்புகள்

இந்தியாவில் இம்முயற்சிக்கு ஆதரவு தந்தோர்:
2.1 இந்தியப் பிரதமர் அலுவலகம்
2.2 இந்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு இராசநாதர் சிங்கர்
2.3 இந்திய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு சுசுமா சுவராசர்
2.4 இந்திய கப்பல் துறை அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்காரி
2.5 இந்திய கப்பல் துறை இணை அமைச்சர் மாண்புமிகு பொன் இராதாகிருட்டிணன்
2.6 தமிழக அரசின் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ பன்னீர்செல்வம்
2.7 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு இல கணேசன்
2.8 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஊடகவியலாளர், வங்காளத்துத் திரு
சுவப்பனதாசர் குப்தா
2.9 இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு வா மைத்திரேயன்
2.10 இந்தியப் பிரதமரின் ஆலோசகர் திரு குருமூர்த்தி
2.11 இந்திய ஆட்சிப் பணியர் திரு விசய இராம்மோகன்
2.12 இந்து மக்கள் கட்சித் தலைவர் திரு அருச்சுனர் சம்பத்து
2.13 தில்லி ஒரே தேசம் அமைப்பு திரு இராமகிருட்டிணன்
2.14 தில்லி இந்துப் போராட்ட அமைப்பின் தலைவர் திரு அருண் உபாத்தியாயர்
2.15 கொல்கத்தா பாரதிய சனதாக் கட்சி, திரு தேவ தத்தாமாசி
2.16 தில்லி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் திரு. இராம் சங்கர் இராசா
2.17 சென்னை கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன்

வழிபடு பயணிகள் கப்பலாக 2010இல் நான் தொடங்கிய இம்முயற்சி, படிப்படியாக விரிவடைந்து, இந்திய சாகர் (கடல்) மாலைத் திட்டத்துள் ஒன்றாகியது. புதுச்சேரி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக, இக்கப்பல் பயணப் பணிகளுக்காக ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குகிறது. காரைக்கால் துறைமுக வாரியம் இப்பயணத்துக்காக முகவர்களிடம் ஒப்பந்தம் கோரி உள்ளது. இலங்கைப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் என இத்திட்டம் பல்முனைப் பரிணாமங்களைக் கொண்டு வளர்கிறது.

காங்கேயன்துறையில் இருந்து புதுச்சேரிக்குப் பயணிகள் கப்பலை இயக்க வேண்டும் என்று மேதகு ஆளுநர் கூரே அவர்களுக்கு இருந்த வற்றாத பற்று, நெஞ்சார்ந்த உணர்வு, ஆழமான ஈடுபாடு யாவற்றையும் அறிவேன்.

அவருடைய உணர்வுக்குச் செயல்வடிவம் கொடுத்த உங்களுக்கு இலங்கைச் சைவச் சமூகம் என்றும் கடப்பாடுடையது.

புத்த பெருமானின் போதனைகளை ஏற்று நடக்கின்ற நீங்கள், ஆன்மீக சாதனைக்காகப் பிள்ளையாரையும் முருகனையும் மாயவனையும் வழிபடுகின்ற பின்புலத்தைச் சேர்ந்தவர். இதை நீங்கள் அடிக்கடி என்னிடம் கூறுவீர்கள்.

பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

நன்றி
அன்புடன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    

PILGRIMAGE BY SHIP TO INDIA

From
Maravanpulavu K Sachithananthan

To
Mr. Sumanapala
Formerly District Secretary, Kaluthurai
and formerly coordinator, Hon Governor Northern province.

My dear Sir

Congratulations and greetings.

On 1st December 2022 at 11 o'clock, we both met the Secretary, Ministry
of Shipping, Sri Lanka at Fort Colombo.

When we requested him to initiate the shipping service for the benefit of the Hindu pilgrims during December 2022 / January 2023, he placed before us the prevailing obstacles to the shipping program.

Kannkeyanthurai Pier had no facilities for receiving/departing passengers, he said. The process of constructing the facilities is underway, he said. He continued to say that it will take about 8 to 9 months before the work could be completed.

We told him of my request in 2016 to the Honourable Governor of the Northern province Mr. Reginald Cooray. We showed him a copy of the letter I wrote then. We told him about the forthcoming festival at Chidambaram by end of December.

We asked him about the possibility of helping the Hindu pilgrims below the poverty line to reach Chidambaram to fulfill their vows.

After that, I showed him a copy of the (three years older) quotation from M/s Haley's Ltd to operate the shipping service.

He was kind enough to contact Haleys and thereafter he contacted another shipping operator called Mr. Rajan. He was kind enough to allow us to hear the conversation on the speakerphone and allowed us to participate in the discussion.

That was a turning point. The Secretary assured Mr. Rajan of the approval of the Ministry of Shipping for the service. He asked him to call on him the next day. He also suggested that we meet Mr. Rajan.

After that, I had very fruitful and constructive meetings with Mr. Rajan twice. Mr. Rajan assured me that the shipping service could start by the end of December. He collected the approval from the Ministry the next day, he told me.

You were in touch with Mr. Rajan who has been appraising you of the day-to-day progress. It appears that he met the Hon. Minister yesterday 13th December 2022.

Today's (14th December) news from the Honourable Minister of Shipping, Sri Lanka is another step forward in our joint effort towards connecting people across the Palk Straits. 

When the Honourable Governor Mr. Reginald Cooray responded positively in December 2016 to my request to enable Hindu pilgrimages to Chidambaram in Tamil Nādu, you were with him in implementing his decision.

You took me to many officers in Colombo and introduced me to crucial people in the relevant departments and with your kind and courteous approach, facilitated the procedural progress.

You attended meetings on behalf of the Honourable Governor in the Ministry of Internal affairs, the Ministry of External Affairs, the Ministry of Defence, and the Ministry of Shipping.

If the Honourable Governor Reginald Cooray was very sincere and dedicated to providing pilgrimage facilities to the Hindus in Sri Lanka, it was you with a strong faith in Lord Vinayga, Lord Katragama, and Lord Mayan, who made crossing any red tape possible.

We, Hindus in Sri Lanka a grateful for the ground-breaking by the Honourable Governor Reginald Cooray and his able coordinator, yourself, Mr. Sumanapala. Both of you laid a strong foundation.

Today is another day of happiness and celebration for the Hindus in Sri Lanka. A faith-based society, a belief-based community with the singular goal of spiritual emancipation, Sri Lankan Hindus travel to holy temples in India to fulfill their vows. It is my hope that within the next 30 days, the shipping service between Kankeyanthurai and Puducherry will begin as announced by the Honourable Minister of Shipping.

It is my duty to place on record a list of those who encouraged me, helped me and supported me in furthering the progress of this project since 2010.

I approached Honourable Minister Mr. Devanantha in 2010. Thereafter in 2013, I wrote to Honourable Minister Mr. Vasudeva Nanayakkara, who promptly wrote to Honourable Prime Minister Mr. D. M. Jayaratne. 

However, my request of 2016 to the Honourable Governor, Mr. Reginald Cooray in 2016 December at a public meeting in Nallur, Jaffna set the ball rolling.

Those in Sri Lanka:

1.1 Honourable Governor, Northern Province Mr. Reginald Cooray

1.2 Secretary to His Excellency the President Mr. Austin Fernando

1.3 Honourable Minister Mr. V. M. Swaminathan

1.4 Consul General Mr. Natarajan and the officials at the Indian Consulate, Jaffna

1.5 Secretary to Honourable Governor Northern Province Mr. L.Ilangovan and his officials

1.6 Coordinator to Honourable Governor, Northern Province Mr. H. Sumanapala

1.7 Director, Hindu Cultural Department Mr. Uma Maheswaran and his officials

1.8 Mr. S. Kuhanathan and of DAN TV

1.9 Northern Province Naval Headquarters at Kankeyanthurai

1.10 Chairman and officials of the Ceylon Shipping Corporation

1.11 Leaders of Saiva Organisations in Jaffna.

Those in India:

2.1 Honourable Prime Minister's Office Delhi

2.2 Honourable Minister for Home Affairs Mr. Rajnath Singh

2.3 Honourable Minister for External Affairs Mrs. Susuma Swaraj

2.4 Honourable Minister for Shipping Mr. Nithin Gadkari

2.5 Honourable Minister of State for Shipping Mr. Pon. Rathakrishnan

2.6 Honourable Deputy Chief Minister, Tamilnadu Mr. O. Panneerselvam

2.7 Honourable Member of Parliament, Rajya Sabha Mr. L. Ganesan

2.8 Honourable Member of Parliament, Rajya Sabha Mr. Swarna Das Gupta

2.9 Honourable Member of Parliament, Rajya Sabha Dr. V. Maithireyan

2.10 Advisor to Prime Minister of India Mr. Grurumoorthy

2.11 Mr. Vijay Rammohan, I. A. S. Delhi

2.12 Hindu Makkal Kadchi leader Mr. Arjuna Sampath

2.13 Mr. Ramakrishnan, Ore Desam, Delhi

2.14 Hindu Struggle Committee leader Mr. Arun Upathyaya

2.15 Hindu Activist and Barthiya Janantha Party leader, Kolkata, Mr. Dev Dutta Maji

2.16 Supreme Court Advocate, Delhi, Mr. Ram Shankar Raja

2.17 Chennai, Kalaimaamani Sasirekha Balasubramanian

If it was a dream that Sivaperuman gave me, it was you who brought life and steam into its implementation. Hindus remain ever grateful to Hon Governor Mr. Reginald Cooray and his able coordinator Mr. Sumanapala.

Thank you,

Yours sincerely,

Maravanpulavu K. Sachithananthan

சைவ சமயம் அரசியலமைப்பு

 கார்த்திகை 16 புதன்கிழமை (30.11.2022)

 

அனுப்புநர்

அ. மாதவன்,

துணைத் தலைவர் சிவசேனை இலங்கை சிதம்பரபுரம் வவுனியா.

 

பெறுநர்

மேதகு குடியரசுத் தலைவர்

பெருமதிப்புக்குரிய இரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

பொருள்: சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை

 

இலங்கையின் இயற்கையோடு இணைந்த 10,000 ஆண்டு கால வரலாற்றுத் தொன்மைச் சமயமே சைவ சமயம் என்றும் அதற்கு பின் வந்ததே புத்த கிறித்தவ முகமதிய சமயங்கள் என்றும் பொருள் அமையத் தாங்கள் நேற்றுக் கூறிய கருத்துக்களைப் படித்ததும் சிவ சேனையில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

 

இலங்கையின் வரலாற்றை ஆதி சமயமாக சைவ சமயப் பின்னணியில் பார்க்க வேண்டும் ஆராய வேண்டும் மீள எழுத வேண்டும் என்ற தங்களின் முன்னோடிக் கருத்தை வரவேற்கிறோம்.

 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்ந்து இருக்கும் சைவ சமயமே இலங்கையின் சமயமாக இருந்தும் இக்கால அரசியல் அமைப்பில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுக்கு முரணாகப் புத்த சமயத்தை முன்னுரிமைச் சமயமாக எழுதி வைத்துள்ளீர்கள்.

 

இந்தத் தவறைத் திருத்த வேண்டும். அரசியலமைப்பில் சைவ சமயமும் முன்னுரிமைச் சமயமாக அமைய வேண்டும்.

 

சிவ சேனையில் உள்ள நாம் இக்கருத்துக்களை கடந்த ஆறு ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். 2021ஆம் ஆண்டு சித்திரையில் இலங்கை முழுவதும் இக்கருத்தை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு இருந்தோம்.

 

சுவரொட்டிகள் செய்தி அறிக்கைகள் கருத்துருவாக்கங்கள் என அறவழியில் அமைதி வழியில் சைவ சமய வழியில் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

 

சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அடையாள உண்ணா நோன்பில் கலந்து கொண்ட படத்தையும் சுவரொட்டிகளின் படத்தையும் இணைத்துள்ளோம்.

 

புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் வரிகளைச் சேர்க்குமாறு இலங்கையில் உள்ள சைவ சமயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இலங்கையில் தொடரும் சைவ சமயத்தைப் பேண, பாதுகாக்க, வளர்க்க அரசு கொள்கை வகுக்கவும் நிதி ஒதுக்கவும் செயலாக்கவும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

நன்றி

அன்புடன்

 

இலங்கைச் சைவ சமயிகள் சார்பில்

அ. மாதவன்

சிவ சேனை

துணை தலைவர்

சச்சி 81

 மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்


இதே வெள்ளிக்கிழமை

இதே கார்த்திகை மிருகசீரிட நட்சத்திரம்

இதே புலர் காலை 4 மணி

29,845 நாள்களுக்கு முன்பு

1020 முழு நிலவுகளுக்கு முன்பு

81 ஆண்டுகளுக்கு முன்பு

நான் பிறந்தேன்.


உடல் ஊனமின்றி

உள்ளம் ஊனமின்றி

நெடுநோய் எதுவும் இன்றி

கடுநோய் எதுவும் இன்றி


அன்புத் தேடலும் 

அறன் தேடலும் 

அருள் தேடலும் 

அறிவுத் தேடலும் 

புலமைப் தேடலும் 

ஆற்றல் தேடலுமாய்

81 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.


அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப் பெருமான் திருவருள் 

அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் திருவருள்

என் பெற்றோர் எனக்குத் தந்த மரபணுக்கள்

81 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.


எனக்கு எவ்விதக் குறையும் இல்லை.

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன்

எனக்கு மிக நிறைவான வாழ்க்கை.


சிவபெருமான் திருவருளைப் போற்றுகிறேன்


From Maravanpulavu K Sachithananthan


Today is Friday, 29845 days ago the same Friday.

Today is in the month of Kaarthikai. 29845 days ago, during the very same month of Kaarthikai.

Today is Mirukaseeridam natchthitam. 29845 days ago, on the very same Mirugaseeridam.

1020 full moons ago

81 years ago

I was born.


Without physical mental disabilities

Without serious illnesses

Yearning for love

Yearning for dharma

Yearning for divine grace

Yearning for knowledge

Yearning for intellect

Yearning for efficiency 

I lived through 81 years.


By the grace of Arulmiku Sivakami and Natarajar

By the grace of Arulmiku Vallaikkulam Veerakathy Pillaiyaar

Carriying the eternal DNA handed over to me by my parents

I lived through 81 years.


In fullness

Without any regrets

With your eternal blessings 

I lived through 81 years.


Hailing the divine grace of Sivaperuman.


A verse flower 


To Dr Sacchithananthan 


( English translation by Prof. S. A. Sankaranarayanan)


Karthikai born is He

Under the asterism of Mrigasirus is He

Soaring as lambent flame is His Glory

Lit the Lives of several devout 

with great delight had He

Far famed Wise Sage is He 

in our world of piety

Saivaite Tamil is His relish

In  accord with WORD 

He leads the flocks

His valiancy is His sole ornament

Any place He goes to is Veerattam 

By Miraculous Grace of Aran , 

whatever he touches 

turns golden noble

To dispel dark He in rage enlightened

For Supreme Siva Consciousness, He configured SivaSenai! 

Hail His Weal, 

Hail His Exclusiveness

Word-blossoms I offer Him

Praise Him Bow to Him


Sweet B'day Greets to Sacchi Ayya.


கார்த்திகையில் பிறந்தார் ஒளிப்பிழம்பாய் உயர்ந்தார்

பற்பலரின் வாழ்வில் விளக்கேற்றி மகிழ்ந்தார்

பார் புகழும் அறிஞர் சைவத் தமிழ்ச் சுவைஞர்  

நிற்பவர் எந்நாளும் சொற்படியே காணும்

போர்க்குணமே அணியாம் கொள்கைப் பிடிப்பு 

பணியாம்

அற்புதன் அரன் அருளால் இவர் தொட்டதெல்லாம் துலங்கும்

காரிருளைப் போக்க வீறு கொண்டு வந்தார்

சிற்பரன் சிவன் பணிக்கே சிவசேனை கொண்டு வந்தார்

சீருடனே வாழ்க சிறப்புடனே வாழ்க

சொற்பலவால் போற்றி வாழ்த்தி வணங்குகின்றேன்.


இன்று, கார்த்திகை மிருகசீரிடத்தில் பிறந்தநாள் காணும் சச்சி ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வணக்கங்கள்.


செந்தண்மை அந்தணனே செய்நல் வினையால்

      சீர்மிகுயாழ்ப் பாணத்தில் தேசுடன் வாழ்ந்து

அந்திவண்ணன் திருவருளால் ஆயிரம் பிறைதனை

       ஐயநீயும் கண்டுவந்து அறிவுச் சுடராய்

விந்தைமிகு சிவப்பணியும் காலம் போற்ற

      வேட்கையொடு தமிழ்பணியும் இயற்றி இன்று

பந்தமெலாம் உனைவாழ்த்த எண்பத் தோராம்

        பண்பாளா பிறந்ததினம் கொண்டா  டவாழி!


பொங்கிவரும் சிவப்பொலிவை  முகத்திற் கண்டேன்!

   புன்னகையில் இதயத்துத் தூய்மை கண்டேன்!

எங்குமென்றும் மறத்தமிழன் வீரந் தனைநீ

       இயற்றிவரும் செயல்களிலே இலங்கக் கண்டேன்!

பங்கமில்லாப் பணியெனவே தமிழில் நூல்கள்

       பதிப்பிக்கும் பெற்றிதனைக் காந்த ளகமும்

சங்கரனின் அருளாலே சாற்றக் கண்டேன்;!

        தவச்செல்வா நலமோடு ஊழி வாழி!


                                                  மாறா அன்புடன்             

                                                      பாரதி இளமுருகனார்

உச்சிப் பொழுதாய் ஒளிரும் திருப்பணிகள்

மெச்சிப் புகழும் தமிழ்ப்பணிகள் - இச்சகத்தில்

நச்சி வளர்த்தெடுத்த நற்பணிகள் சொல்லுமே

சச்சி உமது பெயர்.

           அண்ணா கண்ணன் 







கலை உணர்வு எனக்கு

 கலை உணர்வு?


உள்ள உணர்வின் புற உரு. 

உள்ள ஒடுக்கத்தின்  திறன் நிலை.

உள்ள வெள்ளத்தின் வடிகால்.

புறத்தே கலை அகத்தே அழகு.

புறத்தே கலை அகத்தில் நிறைவு.


கேட்க இனிக்கும் இசைக் கலை

காண இனிக்கும் ஓவிய நடன நாடகக் கலை

உண்ணச் சுவைக்கும் அடுக்களைக் கலை

முகர நிறைக்கும் மலர்க் கலை

மெய்விதிர் விதிர்க்கும் பேரின்பச் சிற்றின்பக் கலை.


ஐம்புலன்களுக்கு விருந்தாகும் 

ஐம்பொறிகளுக்கு அயராப் பணியாகும் 

பயின்று புறந்தருதல் கலைஞர் கடனே

உயிராய் மயங்குதல் சுவைஞர் திறனே

உள்ளம் வெள்ளமாய் கலையே பள்ளமாய்


சுவைஞர் உள்ளத்தை இளக்கும்

சுவைஞர் மகிழ்ச்சியில் திளைப்பர்

உடைந்த உள்ளத்தில் மடைதிற மகிழ்ச்சி 

இறுகிய உள்ளம் இளகி இனிக்கும் 

குறுகிய உள்ளம் பரந்து விரிக்கும்


இவை தெரிந்தவர் என் தந்தைதாயர்

பண்ணோடு இசைசேர் பள்ளிக்கு அனுப்பினர்

என் குரல்நாண் குழைய மறுத்தது

என் இடைமென்சவ்வு இயங்கப் பிழைத்தது

இசைக்க முயன்றேன் கையைப் பிசைந்தேன்


உள்ளம் கைகளைத் தட்ட முயன்றேன்

தாளம் கேட்டது வேகம் பிழைத்தது

ஒழுங்கு பிழைக்க விழுந்தது சுடுசொல்

நீண்ட முயற்சியில் ஆதி தாளம்

எட்டு முறையாய்த் தட்டிப் பழகினேன்


திருக்கோ யிலினிலே வெண்சங்கு ஊதினேன்

சேமக் கலத்தை ஒழுங்கறத் தட்டினேன்

இறந்தோர் உடல்முன் சேர்ந்து பாடினேன்

பாட்டுக் காரரும் என்னைப் பழித்தனர்

தேவா ரங்கள் மனப்பாடம் ஆயின


வடக்கு வீதிக்கு எழுந்தருளிச் சுற்றுலா

மடக்குவர் ஊர்வலம் தொடக்குக குழலிசை

அடிக்குக மேளம் என்றதும் நகுமோமு 

கேட்டோர் கிறங்கினர் கிறக்கம் தொற்றுநோய்

தாளத்தில் கைகள் அசைத்தலில் தலைகள்


எப்படிப் பாடினரோ எங்கோ கேட்டது

அப்படிக் குழலில் ஊதி இசைக்க

மேளமும் தாளமும் இயைந்து ஒலிக்க 

கேட்ட பாடலைக் குழலில் கேட்டதும் 

நாட்டம் வந்தது கலையைச் சுவைக்க


நகுமோமு என்றோ ஆபேரியில் என்றோ

ஆதிதாளம் என்றோ அன்று அறியேன்

அறியாமலே அசைத்தேன் தலையைக் கிறங்கி

வடக்கு வீதியில் தொடங்கிய கிறக்கம் 

முடக்கம் இன்றி இன்றுவரை தொடர..


இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல்

இலலிதா பத்மினி இராகினி நடனம்

பார்த்தேன் பரதத்தை அன்றே முதலில்

எதுவும் புரியவில்லை அலங்காரம் தவிர

ஆனாலும் அடிக்கடி ஆரவாரம் கைதட்டல்


கோடைப் புழுக்கமும் சோழகக் காற்றும்

மறவன் புலவில் வயலின் வரப்பில் 

வெள்ளை மணலில் முழு நிலவில் 

சிந்தை அறிந்து வாடி பாடுவர்

கணேச ஐயர் சுவைப்பேன் கேட்பேன் 


அருந்தும் சுவையாய் அடிக்கடி கேட்பேன் 

பிருந்தா வனமும் நந்த குமாரனும்

நகுமோமு மெட்டும் நந்த குமாரனும்

ஆழப் புதைந்ததால் அடிக்கடி முனகுவேன்

இசையின் சுவையும் இயைந்தது என்னுடன்