Monday, May 25, 2020

சைவ மக்கள் கட்சிக்கு வாழ்த்து

மன்னார் மாவட்டத்தில் 

1 சைவ வாக்கு வங்கியை உருவாக்கி

2 மன்னாரில் பிறந்து வளர்ந்த சைவ வேட்பாளர் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன்

3 மன்னாரின் சைவர்களின் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன்

4 மன்னார் மாவட்டம் வவுனியாவுக்கும் முல்லைத்தீவுக்கும் வழிகாட்டியாகி அங்கெல்லாம் சைவ வாக்கு வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற பரந்த பார்வையுடன்

ஆதரவு நல்கி வரும் அன்பர்கள்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற உழைக்கின்ற தொண்டர்கள்
யாவரையும் போற்றுகிறேன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவில் 103 சைவக் குடும்பங்கள்
ம/134 அரிப்புமேற்கு 4
ம/135 அரிப்புகிழக்கு 1
ம/139 மருதமடு 12
ம/141 பொற்கேணிசப 7
ம/144 சிலாவத்துறை 6
ம/145 சவேரியார்புரம் 26
ம/148 கொக்குப்படையான் 45
ம/149 கொண்டச்சி 2

அவர்களைச் சென்றடைந்து ஒவ்வொரு வீடாகத் தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு உற்சாகம் கொடுங்கள் 

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர் பெயர்களை அறிமுகம் செய்யுங்கள் 

மூன்று வாக்குகளை அளிக்கலாம் என்ற செய்தியைச் சொல்லி யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வழிகாட்டுங்கள்

ஈருருளி உந்தில் இருவர் சென்றாலே காலை முதல் மாலை வரை பணி புரிந்தால் போதும் 103 இல்லங்களுக்கும் சென்று செய்தி சொல்லி விட்டு வரலாம் 

உடனடியாகச் செல்க.

ஒவ்வொரு நிலதாரி பிரிவுக்கும் ஒருவரைப் பொறுப்பாளர் ஆக்கி அவருடைய பெயர் தொலைபேசி எண் என்பவற்றைப் பெற்று வாருங்கள் 

அவரோடு தொடர்பு கொண்டு அடுத்த கட்டப் பிரச்சாரத்துக்கு செல்ல ஆயத்தம் ஆகுங்கள்

சைவச் செயல் வீரர்களை 
சிவக் காவலர்களை 
ஆர்வத்துடன் அழைக்கிறேன் 

வெற்றி நமதே 
நாளை நமதே

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: