Monday, May 25, 2020

திருக்கேதீச்சரம் குகைக் கோயில்

1963 கார்த்திகை மாதத்தின் தொடக்க வாரம்.

மாந்தை சந்தியில் உள்ள குகைக் கோயிலை முற்றாக நீக்கி விடுகிறேன். இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்.

மன்னார் மாவட்டத்துக்கும் சேர்ந்து பொறுப்பாக அக்காலத்தில் ஆயராக இருந்த எமிலினியாசுப் பிள்ளை கூறிய வரிகள் இவை.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர் கந்தையா வைத்தியநாதனிடமும் கிழக்கிலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் தங்கராசாவிடமும் ஆயர் எலுமினியாசுப் பிள்ளை கூறிய வரிகள் இவை.

குகைக்கோயிலை அகற்றுகிறேன் 
ஈடாகக் கத்தோலிக்கர் மீதான வழக்குகளை மீளப் பெறுங்கள்.

ஆயர் கேட்கிறார் 
வைத்தியநாதனும் தங்கராசாவும் உடன்பட்டனர்

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. வைத்தியநாதன் அனுப்பவிருந்த மூத்த வழக்குரைஞரை வைத்தியநாதன் அனுப்பவில்லை.

வழக்காளி வரவில்லை எனவே குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள் என்றனர் கத்தோலிக்கர் சார்பில் வந்த மூத்த வழக்குரைஞர்கள்.

இருசாராரும் வழக்கை மீளப்பெறுவது என ஆயர் உடன்பட்டார்.

தந்திரமாகத் தன் சார்பில் மூத்த வழக்குரைஞர்களை அனுப்பிக் குற்றவாளிகளை விடுவித்தார் ஆயர்.

குகைக் கோயிலையும் ஆயர் உடன்பட்டவாறு அகற்றவில்லை.

மன்னார்ச் சைவர்களே புரிந்துகொள்ளுங்கள்.
கிறித்தவர்கள் அனைத்து வழிகளையும் கையாண்டு தங்கள் மேலாதிக்கத்தைச் சைவர்கள் மீது செலுத்த விரும்புகிறார்கள்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைக்குள் கிறித்தவர்கள் ஊடுருவியுள்ளார்கள். விளைவாகக் கிறித்தவ மதமாற்றச்  சபையின் துணைத் தலைவர் ஆபிரகாம் சுமந்திரன், கிறித்தவத்துக்கு மதமாற்றத்தை முன்னெடுப்பதற்காக கிறித்தவ அமைப்பிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் சாவித்திரியின் கணவர் ஆபிரகாம் சுமந்திரன் திருப்பணிச் சபைக்கு வழக்கறிஞர்.

ஆபிரகாம் சுமந்திரனை வழக்குரைஞராக ஆக்குவதைக் கடுமையாகச் சாடுபவர் தவத்திரு தருமராமக் குருக்கள்.

முந்தைய வழக்கில் கத்தோலிக்கர் விடுதலையானமை தந்திரமாகவே எனக் கந்தையா வைத்தியநாதன் எழுதிவைத்துள்ளார்.

ஆபிரகாம் சுமந்திரன் வழக்குரைஞர் ஆவதில் கிறித்தவர்களின் தந்திரம் உள்ளடங்கியது. புரிந்து கொள்ளுங்கள் மன்னார்ச் சைவர்களே!

அகற்றவேண்டிய குகைக்கோயில் உலூர்தம்மாள் தேவாலயமாக வளர்ந்துள்ளது.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் ஒப்புதலுடன் உலூர்தம்மாள் தேவாலயத்தை அமைத்தோம் என உலகுக்குக் காட்டக் கத்தோலிக்கர் விழைந்தனர்.

கத்தோலிக்கரின் தந்திர வலைக்குள் விழுந்தவர் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் செயலாளர் இராமகிருட்டிணன். 

வலைக்குள் விழுந்தாரா அல்லது தாமாகவே விரும்பிச் சென்றாரா என அவரைத் தான் கேட்கவேண்டும். 

உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவில் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைச் செயலாளருக்குப் பாதிரியார் பொன்னாடை போர்த்துகிறார்.

இந்துக்களின் உணர்வை மதிக்கக் குகைக்கோயிலை அகற்றுவோம் என்று உடன்பட்ட கத்தோலிக்கர். அகற்றுமாறு நெடுங்காலமாக கூறிவந்த திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

2020 நாடாளுமன்றத் தேர்தல் மன்னார்ச் சைவர்களின் விழிப்புணர்வுக்கு ஊடகம்.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர் மன்னார்ச் சைவர்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவார்களாயின் 

சைவர்கள் மீது மேலாதிக்கம் கொள்ள விழையும் கத்தோலிக்கரின் தந்திரத்தை முறியடிக்கலாம்.

வன்னித் தேர்தல் மாவட்டச் சைவ வேட்பாளர்கள் வெற்றியைச் சைவர்களின் வாக்குகளே தீர்மானிக்கும்.

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: