Tuesday, December 30, 2025

மண்ணித்தலையில் மத வெறி

 கிளிநொச்சி மாவட்டம் 

பூநகரி வட்டம் 

விநாசியோடை மன்னித்தலை நிலதாரிப் பிரிவு 

19.08.2025 அன்று நண்பர்கள் ஒரு மணி அளவில் 


பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான 

தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கிற 

சிவன் கோயிலை இடி 

என்று சொன்னவன் செலஸ்டின் 


நான் வழக்குரைஞர் 

படையும் காவல்துறையும் மட்டும் என்னிடம் பேசலாம் 

பொதுமக்கள் என்னிடம் பேச முடியாது என்று வீறாப்புப் பேசினான் 


சுற்றி வளைத்தனர் சைவ மக்கள் 

நான்கு மணி நேரம் அவனைச் சுற்றி வளைப்பில் சிறை வைத்தனர் 


சுற்றி வளைத்த பின்பு காவல்துறைக்கும் அரசு அலுவலகங்களுக்கும் சிவன் கோயில் பொறுப்பாளர்கள் அறிவித்தனர் 


அரசு அலுவலர்கள் தலையிட்டு 

சைவர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு 

செலஸ்டினையும் அந்தோணிப் பிள்ளையையும் அறிவுறுத்தினர்


சைவர்கள் காலில் விழுந்து 

இனிமேல் ஒரு நாளும் சைவ சமயத்தவரைப் புண்படுத்த மாட்டோம் 

எந்தச் சிவன் கோயிலை இடி என்று சொல்ல மாட்டோம் 

என உரக்கக் கூறினர் செலஸ்டினும் அந்தோணிப் பிள்ளையும்


அவ்வாறு சிவன் கோயிலை இடியுங்கள் என தெரியாமல் தவறாகச் சொன்னதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான் வீரப்பாக பேசிய வழக்குரைஞர் செலஸ்டின் அவனுக்கு துணை நின்ற ஓய்வு பெற்ற ஆசிரியரான அந்தோணி பிள்ளை. 


இரண்டு பேரும் கல்வி கற்றவர்கள் 

பாடங்கள் படித்தவர்கள் 

ஆனாலும் படிக்காத முட்டாள்களாக மதவெறியுடன் முட்டி மோதினார்கள் 


மன்னிப்பு கேட்ட பின் சைவ சமயத்தவர்கள் பெருந்தன்மையுடன் அவர்களே முற்றுகையைக் கைவிட்டனர்


சிறைக் கம்பியை எண்ண வேண்டிய செலஸ்டினும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அந்தோணிப் பிள்ளையும் 

மத நல்லிணக்கத்தை விரும்புகின்ற சைவப் பெருமக்களின் பெருந்தன்மையால் 

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என 

மண்ணித்தலைய விட்டுக்  குதிக்கால் பிடரியில் தொட ஓட்டம் பிடித்தனர்

No comments: