Wednesday, February 24, 2016

செங்காளனில் எங்காள்கள்

12-10-2013
மறவன்புலவு
திருமதி கண்ணாவின் அண்ணர் நாம்.
திரு பரமானந்தத்தின் மக்கள் நாம்.
கணேசுவரன் நான், இவள் என் மகள்,
இவர் என் தம்பி, இவர் கிருபாகரன்.

சுவிற்சர்லாந்து நாடு.
செங்காளன் மாநிலம்.
சென்மாகிரத்தன் ஊர்.
அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி கோயில்.

கோயிலில் என் உரை.
உரையாற்ற முன் கோயிலார் பாராட்டு.

அதன்பின் ஆளுயர மாலை.
அழகான பூத்தொடுப்பு.
பொன்னின் இழைப் போர்வை.

என்மீது இவை சார்த்தி,
எனக்கு இவை போர்த்தி
மதிழ்ந்தவர்கள், மறவன்புலவின்
கணேசுவரன், தம்பியார் மற்றும் கிருபாகரன்,
நிகழ்ச்சியைப் படமாக்கியவர் அவர் திருமகள்.

எங்காள்கள் வருவார்கள்
எனையேத்திப் புகழ்வார்கள் என்றுநானோ
செங்காளன் வந்தேன்
செவ்வேளின் திருமுகப்பில் கணேசுவரனார்
தங்கமகளார் தம்பியார்
கிருபாகரனார் வந்ததுமே திகைத்தேன்
பொங்குபுகழ் மறவன்புலவு
ஈந்தபெரு மக்களெனை வாழ்த்தினரே.

No comments: