Wednesday, February 24, 2016

ஊர்மிளா 53

ஊர்மிளா 53 06-12-2012
நற்றவத்தார் நிற்குணானந்தன் புவனேசுவரி நீர்வேலியில் ஈன்றெடுத்த
கொற்றவையே குணக்குன்றே இலாவண்யன் கவுதமன் இருவரையும்
பெற்றெடுக்க வெற்றிமகன் செயக்குமாரனைக் கொண்டவளே ஊர்மிளாவே
வெற்றிவாழ்வு ஐம்பத்திமூன் றாண்டுகளாம் வாழ்கவாழ்க பல்லாண்டே.

பற்றுடனாய்ப் பாசமிகு வாழ்வதனைச் சிட்னியில் செம்மையாக
வெற்றியுடன் வாழ்ந்துவரும் உரும்பராயின் பெற்றியனே செயக்குமார
சுற்றிவரும் ஊர்மிளாவார் சுமந்துதந்த இலாவணியன் கவுதமனும்
பெற்றவரே ஐம்பத்திமூன் றாண்டானீர் பல்லாண்டு வாழ்வீரே.

No comments: