Wednesday, December 07, 2016

அப்பர் கூறிய கோயிலா நகுலேச்சுரம்?

கார்த்திகை 23, 2047 (22.12.2016)
அன்பு நிறை மறவன்புலவு க. சச்சிதானந்தன் மற்றும்  'சைவம்' இணையதள குழுவினருக்கு
இணைய உலாவின்பொது கண்டெடுத்த, ஈழத்து  மிக்க வடக்காக  யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள கடற்கரையில் அமைந்த தேவாரத் (வைப்பு) தலமாவைது நகுலேசுவரம் ஆகும்
ஓலைச் சுவடியில்  நாகலேசுவரம்  என வருவது  இசைப்பாடலுக்காக, வடமொழி வழி, விளியில் நீண்ட திரிபு  ஆகும். கபாலம் ஏந்தியவன் கபாலி - பாடலில் நீண்டு காபாலி எனவும் வருவதுபோல், நகுலம் = கீரி; நகுல + ஈசுரம் = நகுலேசுவரம்; வடமொழி புணர்ப்பு விதிகளில் வழி  அ ஆ  பி ன் இ ஈ வரின் இரண்டும் கெட ஏ தோன்றும். 
கீரிமலை எனும் இடத்தில் உள்ள மிக மிகப் பழம்பெரும் தலமே நகுலேசுவரம். சோழ + ஈச்சுரம் = சோழேச்சுரம் ஆவதுபோல், நகுலேசுவரம் நாகேசுவரம் என்றதன் திரிபு ஆகாது ஏனெனில் 'லகரம்' கூடி வந்துள்ளது.
மேலும், நகுலேசுவரம் முன் நாகேசுவரம் (நாக + ஈச்சுரம்) எனும் மற்றோர் தலமும்  பிரித்துக்காட்டும் குறிப்புடன் வந்துள்ளதால், அப்பரடிகளி ன்  பொதுப்பதிகமாம் அடைவு திருத்தாண்டகத்தில்  போற்றப்பெற்றுள்ள கோயில் நாகலேச்சுரமே
நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம்  *நாகலேச்சுரம்* நன்கானல் கோடீச்சுரம் / கொண்டீச்சுரம் / திண்டீச்சுரம் / குக்குடேச்சுரம் / அக்கீச் சுரம் /  கூறுங்கால், ஆடகேச்சுரம் / அகத்தீச்சுரம்/ அயனீச்சுரம் /அத்தீச்சுரம் / சித்தீச்சுரம் அம்தண்கானல்ஈடுதிரை /இராமேச்சுரம் / என்றென்று ஏத்தி இறைவனுறை சுரம் உலவும் இயம்பு வோமே ( 6.71.8) என வரும் எட்டாவது பாடலில்  நகு லேச்சுவரம்  என்பதாகும்
விக்கியின் ஓர் பக்கம்; historically known also as the Thirutambaleswaram Kovil of Keerimalai, is a famous Hindu temple in Keerimalai, located north of Jaffna, Northern Province, Sri Lanka near the ancient port of Kankesanthurai.
தம்பலம் + ஈசுரம் தம்பலேசுவரம் பிரமனும் திருமாலும் அடிமுடி காணாது  ஈசுவரன் தம்பமாக நிற்கும்  அம்பலம், இப்பெயர் நகுலேசுவரம் என்பதன் பின்வந்த வழக்கு மாற்றம்  எனல் வேண்டும் காண்க
https://en.wikipedia.org/wiki/Naguleswaram_temple
நூ த லோ சு
மயிலை

அன்புநிறை உலோகசுந்தரம் அவர்களுக்கு,
இலங்கையில் தொன்மை வாய்ந்த ஐந்து ஈச்சரங்கள் உள. வடக்கே நகுலேச்சுரம், கிழக்கே திருகோணச்சுரம், மேற்கே 1. திருக்கேதீச்சுரம், 2. முன்னேச்சுரம், தெற்கே தொண்டடீச்சரம்.
இவற்றுள் தொண்டீச்சரம் சிதைந்து போயுளது. மற்ற நான்கிலும் ஆகம வழிப் பூசனை, வழிபாடு நடைபெற்று வருகின்றன. இவை ஐந்தும் 5000 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்து வருகின்றன.
இபன் பற்றுற்றா (1304-1369) தொண்டடீச்சரத்தைக் கண்டு அங்கு ஓராயிரம் தேவரடியார் நடனமாடியதாக எழுதினார். 
He was a guest of the Jaffna King Marthanda Singai Aryan Pararajasegaram ( Arya Chakravarty) circa 1344. Ibn Battuta reached Adam's Peak traveling via the hilly part of the country and discovered that gems are found in abundance in this part of the island. From Adam's Peak he took a southern route to Dondra (Dinewar), a southern coastal town, where he found a Hindu temple which had a gold statue of the size of a man with eyes fashioned by two large rubies. (This may be the same temple Admiral Zheng Hee's trilingual inscription refers to and which was later pillaged and destroyed by the Portuguese.) From there he went to Galle (Qali), thence to Colombo ( Calenbu) and from there back to Puttalam. From here he sailed to the Tamil Nadu coast.
1371- 1435 காலப் பகுதியில் சீனரின் முதலாவது கப்பற் படைக் கப்பல் தொண்டீச்சுரம் வந்தது. இரண்டாவது முறை வரும்பொழுது கல்வெட்டு ஒன்றை விட்டுச் சென்றது. ஒரே செய்தி சீனம், தமிழ், பாரசீகம், ஆகிய மூன்று மொழிகளில் உள.
The historically significant inscription confirming Chinese presence in the late medieval Sri Lanka is now kept in the National Museum in Colombo. The three languages used in this inscription were Chinese, Tamil and Persian. Indeed, Persian was more widespread than Arabic among Muslim traders in Asia, Tamil was an international trade language, too. The inscription left by Zheng He, though he himself was a Chinese Muslim, praises the Buddha and mentions donations to the Hindu temple of Tondeswaram at Sri Lanka’s southernmost point, Dondra Head.
திருக்கேதீச்சரம், (பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர் நத்தார்படை -7 -80; சுந்தரர்)
திருக்கோணேச்சரம் (பதிகம்: நிரைகழலரவ -3 -123 திருஞானசம்பந்தர்) 
இரண்டும் தேவாரப் பாடல் பெற்றவை.
அப்பரின் 06071008 பாடலில் நாகளேச்சுரம் என உளதே அன்றி நாகலேச்சுரம் என்றில்லை. எனினும் பாடபேதமாக இருக்கலாம். நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம். அத்தீச்சுரம் இவை வைப்புத் தலங்கள் என்ற குறிப்புரை www.thevaaram.org தளத்தில் உண்டு. எந்த நாட்டில் எந்தப் பகுதியில் இவை உள என்ற குறிப்பு அங்கில்லை.
அப்பர் கூறும் நாகளேச்சுரம் = நகுலேச்சரம் எனில் ஈழத்துச் சைவ உலகம் திருவருளை மேன்மேலும் போற்றும்.
நன்றி
க. சச்சிதானந்தன்https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

அன்புநிறை திரு சச்சிதானந்தம் அய்யா,
அப்பர் திருத்தாண்டகத்தில் வரும் நாகளேச்சுரம் இப்போது நகுலேச்சுரமாக் இருப்பதுடன் அன்றும் நகுலேச்சரமாகவே இருந்துள்ளது எனபதுதான் கருத்து
ஓலைச் சுவடி கள் மாற்றுப்பதிவு செய்யுங்கால் பாடபேதம் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் எப்போதும் எங்கும்  உண்டு இதனிலெவ ருக்கும் ஐயமில்லை
அவ்வடிதான் (அ ப்படிதான்), கண்>> வாய்>> செவி >> கை  வழி (PHONETIC ERROR) படி மாற்றம் நிகழுங்கால் லகர ளக ர திரிபும் ககர குகர திரிபும் நுழைந்துள்ளது. மற்றப்படி நாகலேச்சுரம் என நகரம் நாகாரமாக் நீண்டலுக்கு விளியில் கபாலி, காபலியாகும் நேரான வடமொழி இயல் (இலக்கண) முறை காட்டினேன்.
மேலும் அடிப்படையில் உள்ள நகுல + ஈச்சுரம்  எப்படி நகுலேச்சுரம் ஆகும் என்பதும் நேரான வடமொழி இயல் (இலக்கண) முறை காட்டினேன்.
அவ்வடியிலேயே தற்காலம் வழங்கும் தம்பாலீசுவரர் எனபதன் தலப்பெயர்  புராணங்கள் வழி பிறப்பும் விளக்கியுள்ளேன்.
அதான்று ஓர் நிகர் நிலை காண்க. திருமுறையில் நூற்றுக்கணக்கான வரிகளில் காணும் புராண நிகழ்வாம் திரிபுரம் எரித்தமை தனை…
(1) திரி எனும் சொல்லினை தமிழாகக்க கொண்டு தூங்கு எனவும் உடன் வருவதால் வானத்தில் (பறந்து) திரிகின்ற புரங்கள் எனும் பொருள் காட்டி, கோட்டைகளும் சிறகுகளைக் கொண்டு பறந்து வந்துள்ள நிலையும்,
(2) த்ரி எனும் வடமொழிச் சொல்லாக்க கொண்டு முப்புரங்கள் (மூன்று கோட்டைகள்  )  என கருத்துரை  தொடர்ந்து வழங்கி வந்ததும் காண்கின்றோம்.
மேலும் அப்புராணக் கதையில் துணைப் பண்பாக வரும் தூங்கு எனும் சொல்லினுக்கு உயரத்தில் எனும் பொருளுக்கு இயைய, பறவைகள் போல் சிறகுகளும் அமைத்தனர்.
இப்போதுள்ள அறிவியலின் வழி மூன்று கோட்டை கள் பறவைகள் போல் சிறகுகளுடன் பறந்து இருக்க முடியுமா? அதுவும் ஓர் அம்பினால் எரித்துவிடும் கோட்டைகள்.
தூங்கு எனும் சொல்லினுக்கு மலையின் மேல் உயரத்தில் என நேரான  பொருள் காட்டியிருக்க வேண்டும்.
          மக்களை ஈர்ப்பதற்காக நுழைக்கப்ப்டும் வியப்பு எனும் மெய்ப்பாடு இயல்பாக புராணங்களின் தன்மை வழி வந்துள்ளது அவ்வளவே.
இவை யாவும் ஏடெழுதும்போது வந்துள்ள எழுத்து // பொருள்கோள் இரட்டுற மொழிதல் /  பிழைதனைக் காட்டும் அல்லவா?
அவ்வளவு ஏன் மதிரை எனும் பாண்டிய மன்னனின் தலைநகரின் பெயரை, மதுரை என ஓர் மிகப்பெரிய திட்டமிட்டு முழு மூச்சுடன்  எங்கும் எதிலும் மாற்றிவிட்டனர்  அல்லவா?  ஆனால் ஒருமுறை எழுதினால் மாற்றமுடியாத கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் மதிரை எனும் சொல் இன்றும் நின்று அன்று வழங்கிய மதிரையே இந்நாளைய மதுரை என்று மாற்றத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன.
பாட பேதங்கள் யாவும் இயல்பாக மனக்குறையால் மறதியால் மட்டும் வருவதல்ல. ஏடெழுதும் கோலாலர் தன  (ஆணவம்) எண்ணப் போக்கின் வழி மாற்றம் திருத்தம் செய்தவைகளும் ஆகும் என்பதுதான் அறிவுடைமை.
Oru Arizonan : Dec 08 03:48AM -0700
நாகுலேஸ்வரம் பற்றிய இக்கருத்தைபற்றி முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன், மறவன்புலவு ஐயா அவர்களே.  
இலங்கையில் சைவம் செழிப்புற்றிருந்தது, இன்று தெற்குப்பகுதியில் அது வாடுகிறது என்றும் அறிந்துகொண்டேன். ஆகவே, ஒரு மாணவனாகவே நான் தங்கள் பதிவைப் படித்தேன்.
மேற்கொண்டு கருத்துச்சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை,ஐயா.
*பணிவன்புடன்,*
*ஒரு அரிசோனன் *

"N. Ganesan" : Dec 08 05:37AM -0800
On Wednesday, December 7, 2016 at 5:06:59 PM
நகுலேச்சுரமும், நாகளேச்ச்சுரமும் ஒன்றா என உறுதியாகக் கூற இயலவில்லை என்கிறார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.
          ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழகம்: ஊரும் பேரும் நூலில் கூறுகிறார்: *நாகளேச்சுரம் * தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் குழிக்கரை என்னும் ஊரில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு நங்காளீச்சுரம் என்று சாசனம் கூறும்.
திருநாவுக்கரசர் குறித்த நாகளேச்சுரம் இத்திருக்கோயிலாயிருக்கலாம் என்று தோன்றுகின்றது. பழைய பல்லவர், சோழர் காலச் சிவன் கோயில் நாகலாபுரத்தில் உண்டு. சுருட்டப்பள்ளி, சென்னை அருகே கிருஷ்ணதேவ மாராஜனால் பெரிதாகக் கட்டப்பெற்ற
வேதநாராயணப் பெருமாள் கோயில் பிரபலம். ஆனால், பழைய சிவன் கோயிலும் அவ்வூரில் இருக்கிறது. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1997&Cat=3
”தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின்கீழ் அமர்ந்த நிலையில்தான் பொதுவாகத் தரிசித்திருப்போம். ஆனால், நாகலாபுரத்தில் சமபாத ஸ்தானமாக நின்ற நிலையில் வீணை வாசிக்கும் பாவனையில் வீணாதர தட்சிணாமூர்த்தி அருட்காட்சி நல்குகிறார்.
மானும் மழுவும் ஏந்தியுள்ள இவரது பாதத்தின் கீழ் முயலகனும் சனகாதி முனிவர்களும் காட்சி தருகின்றனர்.”
          இது பழைய பல்லவர்கால வடிவம். கல்லில் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மிக அழகான சோழர் கால வெண்கலப் படிமங்கள் வார்க்கப்பெற்றன. நாகலா+ஈச்சுரம் = நாகலேச்சுரம்/நாகளேச்சுரம்
எனக் கருதலாம். இன்னும் பார்க்கவேண்டும்.
தம்பலேசுவரம்: ”தம்பலம் + ஈசுரம் தம்பலேசுவரம் பிரமனும் திருமாலும் அடிமுடி காணாது ஈசுவரன் தம்பமாக நிற்கும் அம்பலம், இப்பெயர் நகுலேசுவரம் என்பதன் பின்வந்த வழக்கு மாற்றம் எனல் வேண்டும் காண்க”
தம்பலேசுவரம் - தம்பலம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் காணலாம். தம்பல-காம = தம்பலக் கிராமம். இதே பெயரில் உள்ள ஊரில் உள்ள சிவன் கோயில்:https://www.lanka.com/about/attractions/aathi-koneswaram/. தம்பலேச்சுரம் பற்றி அடுத்த மடலில் எழுதுகிறேன்.

நா. கணேசன்

No comments: