Thursday, December 15, 2016

இராமேச்சரம் யாழ்ப்பாண மடம்

13.12.2014 சனிக்கிழமை நண்பகல்.
இராமேச்சரம் வடக்குத் தேர் வீதி, வடக்குக் கோபுர வாயில் எதிரே.
யாழ்ப்பாண மடம்.
பொன்னம்பலம் இராமநாதன் காலத்தைய மடம்.
யாழ்ப்பாணத்தார் சார்பில் சிவத்திரு கோடிலிங்க சாத்திரியார் பொறுப்பாக இருந்தார்.
வழக்கு நடந்தது.
இப்பொழுது இந்து அறநிலையத்துறை ஆட்சியில் யாழ்ப்பாண மடம்.
 இராமேச்சரம் திருக்கோயில் ஊழியர் சிலர் குடியிருந்த கட்டடம்.
இக்காலத்தில் வசிக்கத் தக்க கட்டடம் அன்று என்பதால் எவரும் வசிப்பதில்லை.
திருக்கோயில் ஊழியர் வசிப்பிடமாகப் புதிதாகக் கட்டடம் அமையப் போவதாகத் திருக்கோயில் ஆட்சி அலுவலகத்தில் கூறினர்.
இராமேச்சரத்தில்
காசிவாசிகள் திருமடம் இயங்குகிறது.
குசராத்திகள் திருமடம் இயங்குகிறது.
மராத்தியர் திருமடம் இயங்குகிறது.
இவைபோன்று பலதரப்பினர் மட்ங்கள் இயங்குகின்றன.
அவரவர் மடங்களை அவரவர்களே ஆட்சி செய்கின்றனர்.
யாழ்ப்பாண மடம் திருக்கோயிலின் ஆட்சியில்.
ஈழத்தவர் வரவும் தங்கவும் வழிபடவும் அமைந்த கட்டடம்.
யாழ்ப்பாண மடத்தை மீட்டெடுப்பதும் கட்டடம் அமைப்பதும் ஈழத்தவர் இராமேச்சரம் வந்தால் தங்கித் திருக்கோயிலில் வழிபட வழிசமைப்பதும் ஈழத் தமிழர் கடன்.





No comments: