Monday, February 20, 2017

இரா. சனார்த்தனம், சென்னை

திரு. இரா. சனார்த்தனம் காலமானார்.
1965 மாசி தொடக்கம் அவருடன் பழகினேன். இந்தி எதிரப்புப் போராட்ட நாள்களில் பச்சையப்பன் கல்லூரியில் விடுதியில் கோவையில் இருந்து வந்த அவர் தங்கியிருந்தார்.
பச்சையப்பன் விடுதிக்குள் காவல்துறை கண்ணீர்ப் புகை வீசியபொழுது மாணவர்களாகிய பலரும் அவரும் நானும் மூக்கையைம் வாயையும் துவாய்களால் கட்டியவாறு காவலர்களைச் சந்தித்தோம்.
பின்னர் அவர் சிறையில் படுத்துத் தூங்கினார். நான் எழும்பூர் காவல்துறை ஆணைணயர் அலவலக வாங்கு ஒன்றில் சில நாள்கள் படுத்துத் தூங்கினேன்.
1968 இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்டாம். புகைப்படம் இணைப்பில்.
1974 தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு யாழ்ப்பாணம் வந்தபொழும் சந்தித்தார். அவர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இறுதிநாள் வீரசிங்க மண்டப நிகழ்ச்சிக்கு வந்தார் பார்வையாளரகத் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். மாநாடு நடந்த காலத்தில் கடைசி இரு நாள்களில் யாழ்ப்பாணத்தில் இருந்த அவர், தமிழ் இளைஞர்களைச் சந்தித்து வந்தார், பல ஊர்கள் சென்றார்.
எனக்கும் அவருக்கும் 1986க்குப்பின் தொடர்புகள் வலுவாயின. அக் காலங்களில் சென்னையில் என் வீட்டுக்கு அடிக்கடி அதிகாலையில் வருவார். தகவல்கள் கேட்பார். அறிக்கை எழுதுவார்.
அவர் நடத்தும் கூட்டங்களுக்கு அழைப்பார். எழும்பூரில் அவர் அலுவலகங்கள் இருந்த காலங்களில், மாண்டியத் சந்தில் இருந்த காலம் தொட்டு, அசோக ஓட்டல் பின்புறம் இருந்த காலம் வரை அவரிடம் செல்வேன். எழும்பூர் பிரசிடென்சி கிளப்பில் அவர் நண்பர்கள் பலரிருந்தனர்.
அவரைப் பேணிய நண்பர்களுள் என் நண்பரும் அச்சக உரிமையாளருமான திரு. சந்தர் சிறப்பிடம் பெறுகிறார்.

No comments: