Monday, February 20, 2017

சோலை தியகராசன் மியன்மார்

21.02.2015 மியம்மா நாட்டில் நடந்த துயர நிகழ்ச்சியை மின்னஞ்சலில் அறிந்தேன்.
கைவிரல்கள் தலையில் அடித்துக் கொண்டன.
கண்களில் நீர்க்குளம் இமைகளை உடைத்து வழிந்தது.
சுக்கு நூறாய் உள்ளம் உடைந்து நொருங்கியது.
நெஞ்சம் கனத்து நினைவு வெள்ளத்தில் மூழ்கினேன்.
2011ஆம் ஆண்டு மியம்மா (பர்மா) நாடு சென்றேன்.
12.11.2011 தொடக்கம் 20.11.2011 வரை 9 நாள்கள் தங்கினேன். வடக்கே மண்டலே, தெற்கே தட்டோன் எனத் தமிழர் வாழும் ஊர்கள் யாவும் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஓர் உரை அல்லது ஈருரைகள் நிகழ்த்தினேன்.
இந்தப் பயணங்களை ஒருங்கிணைத்தவர் சோலை தியகராசன்.
இரங்கூன் விமான நிலையத்தில் சந்திக்க முன்பு அவருடன் மின்னஞ்சல் தொடர்புகள் மட்டுமே!
என் மியம்மாப் பயணம் முழுவதையும் ஒருங்கிணைத்தவர்.
நான் சென்னை வந்த பின்பு என் வேண்டுகோளை ஏற்று, திருவெம்பாவை மியம்மா மொழிபெயர்ப்பைச் செய்வித்து நூலாக்கியவர்.
மலேசியத் திருமுறை மாநாட்டுக்கு என் அழைப்பை ஏற்றுக் கோலாலம்பூர் வந்தவர்.
இன்று அவரது மறைவுச் செய்தியால்
ஏக்கம் நெஞ்சை நிறைக்க,
துயரம் மனதை நிறைக்க,
நினைவுகளை மீட்கும் என் பதிவுகளைப் பார்த்து
அழுதுகொண்டிருக்கிறேன்.
முகநூலில், மின்தமிழ் குழுமத்தில், மின்னஞ்சலில் இடைவிடாது தொடர்பாக இருப்பவர். 17.2.1015இல் அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திருவாசகம் முழுவதையும் மியம்மா மொழிக்குக் கொண்டு செல்வது பற்றிக் கூறினார்.
என் அன்புச் சோலையார் நான்கு நாள்கள் முன்பு வரை எனக்குச் செயதிகள் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவை, அன்னாரின் தமிழ்ப் பணி ஆர்வத்தைக் காட்டுவன. நீங்களும் அவற்றைப் பார்க்க
thiyagarajan solai
Feb 16 (5 days ago)
to me
அன்பு ஐயா, வணக்கம்.
கமாயுட் கோயில் தலைவர் திரு.VMV. சரவணன் தங்கள் செய்தி கொண்டு வந்தார். திருவாசகம் " நமசிவாய வாழ்க...* பாடல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.மேற்கொண்டு என்ன செய்யலாம்.
என் மின்னஞ்சல்,தொலைபேசி தொடர்ந்து இயங்குகிறது. பேசுவோம்.
அன்புடன்,
சோலை.
Yangon, Myanmar
+95 943042105
thiyagarajan solai
Feb 17 (4 days ago)
to me
வணக்கம்.
நன்றி...நலமாகி வருகிறேன். வீட்டில் ஓய்வு..திருவெம்பாவை ஒருங்குறி மாதிரிப் பணியோடு நின்றுள்ளன. அதனை உரிய நபர் கண்டு முடிக்க வேண்டும்..இதனை விரைவில் முடிக்கலாம்...இப்பணி முடிந்ததும் திருவாசகம் ஒருங்குறி அச்சிடல் செய்யலாம்...சில நாட்களும் செலவினங்களும் தேவை. கருத்தறிய ஆவல்.
சோலை.
thiyagarajan solai
Feb 17 (4 days ago)
to me
ஒருங்குறி தட்டச்சாளரை இன்று கண்டு கொள்வேன்...அதன்பின்னரே என்றைக்கு இறுதியாக அனுப்ப முடியும் என்று சொல்வேன்...
தட்டச்சுக்கூலி, இணையச் செலவுக்கு US$50 டாலர் மட்டும் தேவை...அதற்கும் மேலாக என் உடல் நலன் ஒத்துழைக்க வேண்டும்...மற்றவர்களிடம் பணம் கேட்க விரும்பவில்லை...ஆர்வமில்லாத சூழல் உண்டு என்பது உண்மை...முடிந்தால் Western Union பணமாற்றம் செய்யுங்கள்...இல்லையென்றாலும் யானேமுயற்சி செய்கிறேன்..ஒருங்குறி தட்டச்சாளர் உதவி கிடைத்தால் பணி நிறைவாகும்...இது ஒன்றே பெருங்கவலை...
சோலை

1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT TAMIL! GREAT HUMAN..GREAT MYAMAR/BURMESE CITIZEN: SOLAI THIAGARAJAN! I REMEMBER KALAISELVAN TOO WAS VERY ACTIVE IN HELPING TAMILS & TAMIL TO GROW WITH KNOWLEDGE & PROPERITY!HE WAS IN TOUCH WITH ME WHEN I SENT "SARVADESA TAMILER" MAGAZINE FROM NORWAY!