Saturday, November 26, 2016

மதமாற்றத்துக்குத் தடை

கார்த்திகை 10, 2047 (25.11.2016) வெள்ளிக்கிழமை
பாகித்தான், சிந்து மாகாணம், மதம் மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சட்டத்தை மாகாண அவையில் நிறைவேற்றி உள்ளனர்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், குசராத்து, ஒடிசா, இமாசலப் பிரதேசம், சத்திர்கார், மாராட்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் மதம் மாற்றத் தடைச் சட்டங்கள் உள. 1950இல் நடுவண் அரசு வெளியிட்ட ஆணை ஒன்றும் மதம் மாற்றத் தடுப்பு நடவடிக்கையாகவே கொள்ளவேண்டும்.
நேபாளத்திலும் அத்தகைய முயற்சிகள் 2015 அரசியமைப்பில் சேர்ந்தன. A new Nepalese legislation currently includes a clause that states: "No one shall behave, act or undertake activities that breach public order or break public peace/peace in the community; and no one shall attempt to change or convert someone from one religion to another, or disturb / jeopardize the religion of others, and such acts / activities shall be punishable by law."
பாகித்தானில் உள்ள இந்துக்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பைக் கொடுக்கிறது எனச் சட்ட சபை உறுப்பினர் நந்த குமார் குல்கர்ணி கூறியுள்ளார்.
ஒருவர் மற்றொருவரை மதம் மாற்ற முயன்றால் 5 ஆண்டு சிறைத் தண்டனை.
18 வயதுக்குள் எவரும் மதம் மாறவே முடியாது.
மதம் மாற விழையும் ஒருவர் அவ்வாறு விழைந்து 21 நாள்கள் காத்திருந்தே மதம் மாற முடியும்.
திருமணம் காரணமாகக் கட்டாய மதம் மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம். ஐந்து ஆண்டுகள் சிறை.
எவரும் நீதிமன்றத்தில் முறையிடலாம். முறையிட்ட 7 நாள்களுக்குள் விசாரிக்க வேண்டும். 90 நாள்களுக்குள் தீரப்பு வழங்கவேண்டும்.
Nand Kumar Goklani, the legislator who tabled the bill, said, “Every other day, reports pouring in suggest that minor girls belonging to non-Muslim communities are forced to change their religions…This bill aims to end this inhumane practice.”

No comments: