Friday, February 21, 2025

சரக்குக் கப்பல்

 மார்கழி 9 புதன்கிழமை (22 1 2025)


மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன


வணக்கம்


 *நாகப்பட்டினம் காங்கேயன்துறை இடையே வட மாகாண வளர்ச்சிக்கான கொடுக்கலும் வாங்கலும்* 


2009 இல் தொடங்கிய என் முயற்சி. விளைவாக, 2023 அக்டோபர் 14ஆம் நாள் நாகப்பட்டினத்தில் இருந்து பயணிகளுடன் காங்கேயன்துறைக்குக் கப்பல் புறப்பட்டது. இன்று வரை தொய்வின்றிக் கப்பல் பயணிக்கிறது.    


தேற்றம் ஈட்டும் தொழிலாக வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன.


இலங்கை அரசும் இந்திய அரசும் வருவாயைப் பெருக்கியுள்ளன.

இலங்கை மக்களும் இந்திய மக்களும் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் பயனைப் பெருக்குகிறார்கள்.


பயணிகளோடு பயணிகளாகக் குருவிகள் பொருள்களைக் கொண்டு வருகிறார்கள்.


2023 அக்டோபர் 10, நாகப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவராக இருந்த திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். என்னை அழைத்துச் சென்றவர், நாகப்பட்டினம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணியாளர் திரு தங்க கதிரவன்.


திரு சந்திரசேகரின் அறையில் சரக்கு கப்பலைத் தொடங்க வேண்டும் என அவரிடம் சொன்னேன்.


முன்னமே, தமிழக அரசின் தமிழ்நாடு கடல் சார் வாரிய மூத்த அலுவலர் கப்பித்தான் திரு அன்பரசன் அவர்களிடம் சரக்குக் கப்பல் தொடர்பாக நான் பேசிய பொழுது, அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்க இந்திய மற்றும் தமிழக அரசு சார்பில் ஒத்துழைப்பதாகக் கூறியிருந்தார். 


திரு சந்திரசேகரனையும் திரு. தங்க கதிரவனையும் அழைத்துக் கொண்டு அக்காலத்தில் நாகப்பட்டினத்தில் தங்கி இருந்த திரு அன்பரசனிடம் சென்றோம். அங்கிருந்து நாகப்பட்டின ஆட்சியரிடம் சென்றோம். சரக்குக் கப்பலின் தேவைகளை இருவரிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.


ஆர்வமீதியால் திரு சந்திரசேகரனும் திரு தங்க கதிரவனும் நாகப்பட்டினத்தில் இருந்து 14 10 2023 புறப்பட்ட முதலாவது பயணிகள் கப்பலில் யாழ்ப்பாணத்திற்குப் பயணித்தனர்.


மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா முதலாக வணிகர் சங்கங்கள் ஊடாக வணிகர்கள் வரை பலரைச் சந்தித்தனர்.


நாகப்பட்டினமும் காங்கேயன்துறையும் 3-4 மீட்டர் ஆழமுள்ள துறைகள்.


சரக்குப் பெட்டகங்கள் இறக்க வசதி இல்லாத துறைகள்.


நாகப்பட்டினத்திற்கும் காங்கேயன்துறைக்கும் இடையே 300 தொன் சரக்குகளைக் கொண்டு செல்கின்ற தோணிகளையே ஓட விடலாம் என்பதைத் தெரிந்து கொண்ட திரு சந்திரசேகரன், தூத்துக்குடியில் இருந்தும் கடலூரில் இருந்தும் அத்தகைய தோணிகளைக் கொண்டு வர முயன்றார்.


அவரின் முயற்சிக்கு நானும் ஒத்துழைத்தேன் தொடர்புகளைக் கொடுத்தேன். உரியவர்களோடு பேசினேன்.


வட மாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் கொழும்பு வழியே செல்கின்றன.


வட மாகாணத்துக்குத் தேவையான முதல் நிலை உற்பத்திப் பொருள்கள், கட்டடப் பொருள்கள், தொழில் உற்பத்திப் பொருள்கள், பல கொழும்பு வழியே இந்தியாவில் இருந்து வருகின்றன.


வட மாகாண வணிகருடன் திரு சந்திரசேகரன் பேசினார். நான் பேசினேன். கோண்டாவில் மேற்கு திரு சிறீந்திரன் பேசினார். வேறும் பலர் பேசினர்.


வட மாகாண வணிகர்களுக்கு ஆர்வம் இருந்தது ஆனால் மனத்தடைகள் இருந்தன.


கொழும்பிலிருந்து பல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுப் பொருள்களை வாங்கி வடமாகாணத்தில் விற்பனை செய்து வந்தவர்களுக்கு 

(1) தாமே முதலிட்டு 

(2) தாமே கிடங்குகள் அமைத்துப் பொருட்களைச் சேமித்து அவற்றைத் 

(3) தாமே விற்பனை செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைகளையும் எதிர்கொள்ள ஆர்வம் இருக்கவில்லை.


ஒருமுறை எனது வேண்டுகோளை ஏற்ற மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா 

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வணிகர்கள் வங்கியாளர் இந்திய தூதரகம் மற்றும் சார்ந்தவர்களை அழைத்துக் கூட்டமும் நடத்தினார்.


இந்த முயற்சி தோற்பதற்கான காரணங்கள் பலவற்றை எடுத்துக் கூறியோர் பலரே அங்கு இருந்தனர்.


சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற, வாய்ப்பாடு பிழைப்பான் நிலையை எடுக்கக்கூடிய ஓரிருவரே இருந்தனர்.


வங்கியாளரும் வழக்கம் போலத் தடங்கல்களுக்குரிய படிநிலைகளைக் கூறினரே அன்றி,

எச்சரிக்கைகளின் படிநிலைகளைக் கூறினரே அன்றி, வெற்றிக்குரிய படிநிலைகளைக் கூறவில்லை.


போரில் தோல்வியடைந்த வட மாகாணத்தின் மனோ நிலை மீண்டும் தோல்விகளையே சந்திக்காதிருக்கத் தடங்கல்களையே கருத்தாக்கியது.


தடைக்கற்களே படிக்கட்டு என்ற மனோநிலை உள்ளவர்கள் கூட்டத்தில் ஒரு சிலரே.


(1) வட மாகாண வணிகர்களின் எதிர்மறைச் சிந்தனைகள், 

(2) 3-4 மீட்டர் ஆழப் பயணச் சரக்குத் தோணிகளின் பற்றாக்குறை 

இவை இரண்டும் திரு சந்திரசேகரின் அயரா முயற்சியையும் எனது விடாத தூண்டுதல்களையும் 

கரைத்தன, காலத்தை கடத்தின.


ஆழமற்ற துறைகளுக்கு ஏற்பத் தோணிகளைப் புதிதாகக் கட்டலாமா என அதற்கான வரைபடங்களைத் தயாரிக்கவும் முதலீட்டாளரை ஈர்க்கவும் நாகப்பட்டினம் திரு சந்திரசேகரன் எடுத்த முயற்சிகளை நான் பாராட்ட வேண்டும்.


சரியாக ஓர் ஆண்டு காலத்துக்குப் பின்னர் 

2024 அக்டோபரில் தோணிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புப் பெருகியது. கடலூர் மற்றும் அந்தமான் துறைகளில் உள்ள தோணிகளைக் கொண்டு வரலாம் என முயற்சியில் முன்னேற்றம் கண்டோம்.


வட மாகாண - இந்திய ஏற்றுமதிகளை காங்கேயன் துறை வழி அனுப்ப வேண்டும்.


கொழும்பு வழியாக முதல் நிலை உற்பத்திப் பொருள்கள் மூன்று நான்கு கைகள் மாறி வடக்கே வரும் பொழுது 40% வரை கூடிய விலையை நம் மக்கள் கொடுக்கின்றனர்.


மூன்று நான்கு கை மாறும் பொழுது வடக்கு வரும் பொழுதும் அதற்கான முதலீடு கொழும்பிலேயே. வடக்கில் அன்று.


முதலீடு இன்றியே பொருள்களை வாங்கி விற்ற பின் கடனை அடைத்துப் பழகிய வடக்கர்கள் முதலிட்டு இறக்கத் தயங்குகிறார்கள். வங்கிகளும் துணை நிற்கத் தயங்குகின்றன.

கிடங்குகளும் பற்றாக்குறையே.


சில்லறைப் பொதிகளாக வருகின்றவற்றை இறக்க ஆளணி, காங்கேயன்துறையில் இடைக்காலக் கிடங்குகள் - இவற்றால் தொடக்கத்தில் இழப்பாகுமோ என்ற அச்சம் வடக்கருக்கு.


எனினும் தடைகள் பல தாண்டிச் சரக்குக் கப்பல் சில வாரங்களின் பின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு வருவது உறுதி.


முதலாவது தோணி

திரு இரகுநாத கோபாலாச்சாரியார்

+91 98457 11962

Ayya ship ready.

We proudly announces that 700-ton all-weather MS vessel, Tara Kiran, is set to commence its journey from Nagapattinam to Kankesanthurai (KKS) in the third week of February 2025.

All interested exporters and importers in Northern province Sri Lanka please contact me

Ragunath


இரண்டாவது தோனி 

திரு வலதரிசர்

Valdaris 

Shel Shipping and Logistics, Chennai.

+91 98940 29397

I am bringing Thoni from February 2nd week to KKS ex Nagapattinm.

If you or your friends have any cargo, just let me know.

Regards

Valdaris 


இந்திய அரசும் தமிழக அரசும் நாகப்பட்டினத்தில் சரக்குக் கப்பல் தொடங்கக் கொடுக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வளர்ச்சியின் கூறுகளாகவே பார்க்கிறேன்.



பண்டைய தமிழர்களால் கடற்கலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தமிழ்ச் சொற்கள்.


---------------------------------------------


\கடற்கலங்களுக்கு 200 பெயர்கள் இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்! அவற்றினுள் என்னால் சேகரிக்கப்பட்ட 160+ பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழவும்…. ஆனால் அதற்கு முன்னர் உருவோடுபவர்கள் பற்றி இவ்விடத்தில் நீங்கள் வாசிப்பது சிறிது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


→ கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது.


கடற்றுறை - கடலின் கரையில் மக்கள் புழங்கும் & பொருள் வந்திறங்கும் இடம். - Old word for Harbour. அந்த கடற்றுறையின் முகப்பு. ஆனால் இன்று கடற்றுறை என்னுஞ் சொல் வழக்கிறந்து முகப்பினைக் குறித்த துறைமுகம் வழக்கிலுள்ளது.,


துறைமுகப்பட்டினம் - கப்பல்கள் நிறுத்திவைக்கப்படவும் மக்கள் அல்லது சரக்குகளை துறைமுகத்திலிருந்து நிலத்திற்கு கொண்டுசெல்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டிருக்கும் கடற்கரை அல்லது கரையில் உள்ள இடவமைப்பாகும்


முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.


பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.


தங்குதுறை - கப்பல் வந்து தங்கிச் செல்லும் கடற்றுறை-இறங்குதுறை - Jetty-உலர்துறை - dry docks.


பதனம் - கலங்கள் காற்றினாலும் கொள்ளைக்காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாய் இருக்குமிடம்.


தோணித்துறை, நாவாய்த்துறை/நாவாந்துறை - தோணிகளை நிறுத்தவும் செலுத்தவும் வாய்ப்பான துறை... தற்காலத்து மீன் பிடித் துறைமுகங்கள் & நாயாற்றில் கடல்வேங்கை தாவளம் (முகாம்=urudu) இருந்த இடமும் இந்த வகையே!


மீனவர் - நீர்நிலை வேடுவர்


கடற்கலனை செலுத்துபவருக்கான பொதுச்சொற்கள் - (helmsman)


மீகாமன்


மீகான்


ஓட்டி


நீகான்


கடற்பாய்ச்சி


படவன் - படகினை ஓட்டுவோன்


மண்டாடி - இவர் தொழில் நுணுக்கங்களை அறிந்தவர். இவரே மேலாப்பாச்சி எனவும் அழைக்கப்படுவார்.


தண்டுக்காரன் - மரக்கலத்தை இயக்கத் தண்டுபிடிப்பவன், கொம்பால் கட்டுமரத்தை செலுத்துபவன்.


சம்மாடி - படகு/வள்ளத்தின் தலைவர்


தண்டையல்/தண்டயல்/தண்டல், மேந்தலை, நீயான் - (captain of the ship) தமிழர் கப்பற்கலை மரபில் கப்பல் தலைவர் ஆவார்.


திண்டேல்‌ - கப்பலைக்‌ கண்காணிப்பவன்‌ - boat swain.


கலவர், கலாள், கம்மகாரர், பரவர், பரதர், பரதவர், நாவிகர், கடலர், திரையர் - (mariners, sailors, seaman, or seafarer) - கடற்கலங்களில் செலவாவோரிற்கான தமிழ்சொற்கள்.


கடலோடி - கடல் பற்றிய அறிவு கொண்ட நீண்ட காலம் கடலில் செலவாகக்கூடிய பரதர்.


ஆழ்கடலோடிகள் - ஆழ்கடல்களில் நீண்ட காலம் செலவாகக்கூடிய பரதர்.


மண்டாடி - கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர்; நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர்.


கம்மாறுகாரர் (கம்மா + ஆறு + கடலான் என்பதின் சுருக்கம்) - மீன் பிடித்தலில் கெத்தானவன்.


முத்துக் குளிப்போர் - கடலில் மூழ்கி சங்கு, முத்து போன்ற கடலாழத்தில் உள்ளவற்றை அகழ்ந்தெடுப்போர்


தொள்ளாழியார் - கடல் ஆழி பற்றி நிறைந்த அறிவுடையவர்.


நுளையர் - தென்னை நாரில் இருந்து பாய்க்கயிறு திரிப்பவர்.


கழியர் - உப்பளவர்.


கடல்கோலமிட்டாந்தான் - கடல் சூழ்ந்த நிலையிலும் மூழ்காதவன்.


உச்சாணியார் - பாய்மரத்தின் மேல் இருந்து வேலை செய்யகூடியவர் .


மூப்பர், சேவை- மூத்த அதிகாரி


கம்மியர் - பொறியியல் அதிகாரி.


காப்பு - கப்பலில் உள்ள ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி.


சுழியோடிகள் - சுழித்துக் கொண்டு ஓடும் வலிமையான சுழல் நீரின் அடியிலும் நீந்திச் செல்லும் திறன் படைத்தவர்கள்.


நீர்முழுகி - நீரில் முழுகுவோன் (diver)


ஓசுநன் - பாய்மரங்களை உயர்த்துபவன்.


ஓடாவியார் - தோணி மற்றும் கப்பல்களை கட்டியவர்கள்.


துறைவன், கொண்கன்- என்றால் துறைமுக பரதவ தலைவன்.


சேர்ப்பன் - நெய்தனிலத் தலைவன்


புலம்பன் - கடற்கரைத் தலைவன்


அழிசி - காயல்(back water) அல்லது கழிமுகப்(delta) பகுதியின் தலைவன். இப்பெயர்கள் கூடுதலாக சேரர்களால் சூட்டப் பெற்றுள்ளன.


கலப்பத்துக்காரன்,கலப்பத்துஆள் - கலத்தின் நீக்கலடைப்பவன்.


சாலர் - போக்கூழாக என்னவென்றே தெரியவில்லை!


பண்டாரி - தோணியில் உள்ள சமையல்காரன்


பண்டாரிப் பெடியன்/ சுடுவான் பெடியன் - சிறுவயது பெடியள், பண்டாரிக்கும் வேலை செய்வொருக்கும் இடையிலான தொடர்பாள்.


கால் பங்காள் அ கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் சுடுவான் பெடியளின் பதவி.


அரைப் பங்காள் அ அரைப் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் பாய்மரமேறி பாய்மரம் அவிழ்த்து விடுவோரின் பதவி.


முக்கால் பங்காள் அ முக்கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் 12–12 மணிநேர வேலையினை சரியாகச் செய்யும் பருவம் வந்தோர்.


முழுப் பங்காள் அ முழுப் பங்குவாங்கி - தண்டலிடம் இன்னார் நிறைவாக வேலை செய்வார் என்ற மனநிறைவை பெற்றவர்.


திடுல், பொறி , கைப்பந்தல், தண்டாரம், சிமிலி, பத்தாசு, மாயிலி, ஏதல், பாரம், பாரகம், மதலை, நவாடா, இகுரி, சோங்கு, பாரதி, வள்ளியம், அம்பணம், ஆலாத்து, நாவம்‌, ஐவி, போழ்‌, கரைவலம், சதா, தொள்ளம் / தொள்ளை, கடவுமரம்- என்னவென்றே தெரியவில்லை!

இலங்கை அரசும் வட மாகாண அரசும் (அரசு சார்ந்த அலுவலர்கள்) பெரும்பாலான வளர்ச்சிச் செயல்திட்டங்களை எதிர்மறையாகவே பார்க்கிறார்கள், சிக்கல்கள் பல இருப்பதாகவே பார்க்கிறார்கள். 


காங்கேயன் துறைமுகத்தில் சரக்குக் கப்பல்கள் வந்திறங்குவதில் உள்ள

சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்ற கருத்துக்களை அரசு சார்ந்தோர் முன்வைக்காததால்  வடக்கின் வளர்ச்சி பின்னடைவாகிறதே.

No comments: