Sunday, November 26, 2023

நீர்வேலி மயூரகிரியார் வாழ்த்து

 27.11.2011

தேவார திருவாசகமாதி அருட் திருமுறைகள்

நாவார ஓதி நயக்க பல் மொழி வரியிலும்

பாவாணர் உளங்கொள புத்தாக்கம் செய்

கோவாம் சச்சிதானந்த பெரியார் நீடு வாழ்கவே


தருமைக் குருநாதர் தந்த ஆசி பெற்றே

    தாய்லாந்தின் அரசகுரு வாமதேவமுனி

அரிதுணர்ந்து போற்ற மணிவாசகர் தந்த

    அற்புதத் திருவெம்பாவைத் தேனை

இருளகல ஒளிபரவ கிரந்தத்தில் தந்த

    இனியவராம் மறவன்புலவூரார் ஈசன்

கருணை மிகப்பெற்ற சச்சிதானந்தர் நற்

   காரியங்கள் பற்பல செய்து வாழ்க நீடு


No comments: