Friday, January 02, 2026

வடக்கின் வளர்ச்சியை முடக்க முயற்சி

 ஆவணி 19 வியாழன் (4 9 2025)


ஊடகத்தாருக்கு 


 *வடக்கின் வளர்ச்சியை முடக்க முயற்சி* 

பாலசிங்கம் செயமாறன் 

சிவ சேனை


கச்சதீவைச் சுற்றுலா மையம் ஆக்காதே 

மாற்று ஆற்றல் காற்றாலை நிறுவாதே

மாற்று ஆற்றல் சூரிய ஒளி நிறுவாதே

கனிம வளத்தை எடுக்காதே 

அரசு சார்பற்ற நிறுவனங்களுக்குக் கோடி கோடியாய்க் கொட்டி பொதுமக்களை விலைக்கு வாங்கித் தேவையற்ற போராட்டங்களை முன்னெடு.

போராடிப் பெற்ற மாகாண ஆட்சிப் பரவலை நடுவன் அரசுக்குத் தாரை வார்.

பொதுமக்கள் முதலீட்டில் வளர்ச்சியில் ஈடுபடாமல் கடையடைப்புகளை நடத்து. 

போருக்குப் பிந்தைய வடக்கில் ஊருக்கு ஊர் சென்று காதல் வலை விரி, மதம் மாற்று.


அத்தனையும் எங்கிருந்தோ வரும் பணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள். வடக்கின் வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள். 


நேற்று யாழ்ப்பாணம் ஆயர் பேசுகிறார். முந்தையநாள் மன்னார் ஆயர் பேசுகிறார்.

அதற்கு முதல் நாள் ஆபிரகாம்கள் பேசுகிறார்கள்.


அனைவருக்கும் ஒரே இலக்கு. வடக்கின் வளர்ச்சியை முடக்க வேண்டும். வடக்கின் மக்களைப் பொருண்மிய மலடாக்க வேண்டும். வடக்கின் மக்களை அரசியல் குருடராக்க வேண்டும்.


தெற்கே வெந்தோட்டை சுற்றுலா மையமாகி அமெரிக்க வெள்ளிகளைக் குவிக்கலாம். வடக்கே நெடுந்தீவும் அனல தீவும் கச்ச தீவும் வானம் பார்த்த நிலங்களாக வற்றிய பொருளாதாரத்தில் தாழலாம். 


வடக்கே சுற்றுலாப் பயணிகள் வரவே கூடாது இதுவே யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் இறை உணர்வுக் கொள்கை.


பல்லாயிரம் ஆண்டு பழமையான நிலம் கச்ச தீவு. நாவின் அறு சுவைக்குள் ஒரு சுவையைத் தாங்கிய இடப் பெயர். அருமையான தமிழ்ப் பெயர். பரங்கிப் பெயர் அன்று. சராசரியாக 9 மீட்டர் ஆழமுள்ள வடகடலில், பாக்குத்ஹ தொடுவாயில் 16 மீட்டர் ஆழமுள்ள சிங்க இறால் பொந்துகளைக் கொண்ட கடலோரம் கச்சதீவு.


நாகர்கள் சிவன் கோயில் அமைத்து வழிபட்ட திருத் தீவு கச்ச தீவு. பரதவர்கள் காளி கோயில் அமைத்து வழிபட்ட கச்ச தீவு. காளியாத்தா தந்த கடல் வாழ்வு என வாழ்ந்த தமிழரின் தீவு கச்ச தீவு.


யாழ்ப்பாணம் மறை மாவட்ட பயன்படுத்தும் தீவாம்? ஆயர் பொய்களை அவிழ்த்து விடுகிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே எந்தக் கிறித்தவக் கோயிலும் இல்லவே இல்லை.


மலையாளக் குஞ்சலி வீரர்கள் சங்கிலியனுக்கு ஆதரவாக வந்தனர். பரங்கிப் போர்த்துக்கேயக் கத்தோலிக்கன் இடீ லிவராவின் கடற்படையை ஓடோட விரட்டிய தீவு கச்ச தீவு. சங்கிலியனின் போர் வீழ்ச்சிக்குப் பின் கச்ச தீவின் காளியாத்தா கோயிலையும் சிவன் கோயிலையும் இடிப்பித்தவன் பரங்கிப் போர்த்துக்கேய கத்தோலிக்கன் இடீ லிவரா.


கச்சதீவில் கோயிலை இடிக்கும் முன்பே கருவறையில் உள்ள மூலவர்களான காளியாத்தாவையும் எட்டுப் படை இலிங்கச் சிவனையும் அப்படியே பெயர்த்து எடுத்துப் படகில் நெடுந்தீவுக்கு கொண்டு வந்து காத்து வருபவர்கள் நெடுந்தீவின் மூத்த முதலிக் குடும்பங்கள்.


கச்ச தீவில் சைவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பரங்கிகளின் எச்சங்கள் பறித்தெடுக்க முயல்கிறார்கள். நூறாண்டுகளே பழமையான சிறிய அந்தோனியார் தேவாலயத்துக்காக கச்ச தீவு முழுவதும் சுற்றுலா மையமாகக்கூடாது என்று கொக்கரிப்போர் போர்த்துக்கேயர் கத்தோலிக்க ஆக்கிரமிப்பாளரின் எச்சங்கள்.


இலங்கை முழுவதும் மாற்று ஆற்றல் காற்றாலை நிலையங்கள் பற்பல. இலங்கையை வளமாக்கும் நிலையங்கள். மன்னாருக்கு வரக்கூடாதாம். மன்னார் ஆயர் முடக்குகிறார் வடக்கின் வளர்ச்சியை.


கடற்கரைகள் வனக் காப்பகங்கள், தொல்லியல் பேணு களங்கள், யாவும் சுற்றுலா மையங்கள். அமெரிக்க வெள்ளிகளை அள்ளிக் குவிக்கும் சுற்றுலா மையங்கள். கச்ச தீவின் கடற்கரையும் சுற்றியுள்ள தெளிந்த கண்ணாடி போன்ற நீரும் சுழியோடிகளின் சொர்க்கம். கச்ச தீவு சுற்றுலா மையமானால் வடக்கு வடங் கொளிக்கும். 


தீவுகளெங்கும் புதிய படகுத் துறைகள். அங்கே நாரிழை வள்ளங்கள், உல்லாசப் படகுகள். ஏழாற்றுப் பிரிவு தொடக்கம் கச்ச தீவு வரை அமெரிக்க வெள்ளிகள் புழங்கும்.


கச்ச தீவுச் சிவன் கோயிலை உடைத்த தளபதி இடி லிவேராவின் எச்சங்கள் கச்ச தீவின் எதிர்காலத்தை உடைப்பதற்கு அறிக்கை விட்டிருக்கிறார்கள். அரசு அந்த அறிக்கையைக் கவனத்தில் கொள்ளவேண்டா.


8% கத்தோலிக்கருக்காக 80% சைவத் தமிழரின் வளமான எதிர்காலத்தை அடகு வைக்க முடியாது. கச்சத்தீவு யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கு உரியதன்று. சைவத் தமிழ் மக்களின் சொத்து.


கச்சதீவைச் சுற்றுலா மையமாக்குக. யாழ்ப்பாணச் சைவத் தமிழ் மக்களின் பொருண்மிய வளத்தைப் பெருக்குக. புதிய முதலீடுகளை ஈர்க்க. புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துக. புதிய வாழ்வியலை நோக்கியே சைவத் தமிழ் மக்கள் வளர விரும்புகிறோம். மேதகு குடியரசுத் தலைவர் அநுராவின அரசே உதவுக

அனைத்துச் சமயப் பேரவை

 புரட்டாதி 21, செவ்வாய் (07.10.2025)


அனைத்துச் சமயப் பேரவை


மறவன்புலவு க சச்சிதானந்தன் 

சிவ சேனை


....சமயவாதிகள் தத்தம் மதங்களே 

அமைவதாக அரற்றி மலைந்தனர்... 1200 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் கூறினார்.


1400 ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வடமொழியில் நாடகம் எழுதியவன் மகேந்திரவர்மன் என்ற பல்லவ அரசன். அந்த நாடக வரிகளை இப்பொழுதும் படிக்கலாம். மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தில் அக்காலத்தில் வாழ்ந்த சமய வாதிகளைப் பல்லவன் மகேந்திரவர்மன் நகைச்சுவையுடன் கூறுவான்.


1800 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் சமயக் கணக்கர் காதையை வஞ்சிக் காண்டத்தில் எழுதினார். இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் சைவ சமயத்தவரைக் குறித்த பதிவின் தொடக்கம் அஃதே. அக்காலத்தில் வாழ்ந்த சமய வாதிகளைச் சாத்தனார் குறிப்பிடுவார்.


காலம் காலமாகத் தமிழர், சைவ சமயத்தையே முதன்மைச் சமயக் கொண்டனர். சிவனியல் மாலியல் இவை இரண்டுமே தமிழரின் நெறிகள். வேறு நெறிகள் தமிழருக்குக் கிடையவே கிடையாது.


இயற்கை வழிபாட்டையே தமிழர் சமயமாகக் கொண்டனர். தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் கூறும் வரலாறு அஃதே. ஐந்து வகை நிலங்களில் ஐந்து தெய்வங்கள். சைவ சமயம் சார்ந்த தெய்வங்கள். வேறு தெய்வங்கள் தமிழருக்கு உண்டா? கிடையவே கிடையாது.


எனினும் காலத்துக்குக் காலம்‌ தனிமனிதரின் கருத்துக் கோவைகள் சமயக் கருத்துகளாக, பிற தேசங்களில் இருந்து நுழைந்தன. அவற்றுள் சிறந்த, பயனுள்ள, வாழ்வியலை மேம்படுத்தும் கருத்துக்களை, சைவ சமயத்துள் தமிழர் உள் வாங்கினர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், புரட்டாதி 16, ஞாயிறு அன்று, திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் அனைத்துச் சமயப் பேரவை கூட்டத்தில் சொல்கிறார். மதம் என்று சொல் வேண்டாம். சமயம் என்று சொல் வேண்டும்.


மதம் என்று சொல்லில் திமிர் இருக்கிறது. ஆணவம் இருக்கிறது. வெறுப்பைக் கக்கும் உணர்வு இருக்கிறது. சமயம் என்று சொல்லின் மறு பொருள் காலம்.


திணிப்பது மதம். கைக் கொள்வது சமயம். 


மாந்தையிலும் அநுராதபுரத்திலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீகக் கிறித்தவர் வந்து போன சிலுவை அடையாளங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தொல்லியலார் கூறுவர்.


எனினும் தமிழரிடையே வலிந்து துப்பாக்கி முனையில் திணித்த மதமே கிறித்தவம். அதன் பின்னர் உணவுக்காக உடைக்காக உறைவிடத்துக்காகத் தங்கள் சுயத்தை விற்று மதம் மாறியவர்களே சோற்றுக் கிறித்தவர்.


எனவேயே சர்வ மதப் பேரவை. திணித்தவர்கள் மதங்களின் பெயரால் அழைக்கும் பேரவை. சர்வமும் கிடையாது. மதமும் கிடையாது. பேரவையும் கிடையாது. தாம் ஆட்ட ஆடும் பொம்மைகளைத் தேர்ந்து உறுப்பினராக்கிய பேரவை. 


சர்வ மதப் பேரவையின் கூட்டம், மற்றொரு செப செய்திக் கூட்டம்.


அனைத்துச் சமய பேரவை எனில் அங்கே சமயக் கணக்கர் கூடியிருப்பர். மத வெறியர் வந்திரார். சமயக் கணக்கருக்கு மாற்றாகச் சமயப் பரப்புரைஞர் அமையும் பேரவையே சர்வ மதப் பேரவை. 


சர்வ மதப் பேரவை அழைத்து வந்திருந்தோர் தொகையில் 60% அருள் தந்தைகளும் அருள் நங்கைகளுமே. நாக விகாரையின் புத்த பிக்குகளைத் தவிர வேறு புத்தர்கள் வரவில்லை. இமாம்களோடு, அவர்கள் பாதுகாப்புக் கருதி வந்த சில முகமதியர் அவையில் இருந்தனர்.


ஆகா.. ஆகா.. சமயக் கணக்கர் பேரவை அல்லவா கூடியிருக்கிறது. சமயங்களிடையே நல்லிணக்கம் காணும் முயற்சி அல்லவா நடக்கிறது. இவ்வாறு ஏமாந்த சைவப் பெருமக்கள் சிலர் அங்கு வந்திருந்தனர். சமய நல்லிணக்கத்துக்கு ஊறாக அமைந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூற முயன்றனர்.


திருக்கேதீச்சர வளைவை உடைத்தது போல் வேறு என்னென்ன உடைக்கலாம்? கிறித்துவத்தை மேலாட்சி மதமாக மாற்றலாம்? என்ற கண்ணோட்டத்துடன் சர்வ மதப் பேரவைக்கு வந்திருந்தோர் எண்ணிக்கையே கூடுதல்.


அடுத்த நிகழ்ச்சி செம்மணியில் புதைகுழி தொடர்பான நிகழ்ச்சி. சர்வ மதப் பேரவையின் ஊடாகச் செம்மணிச் சிவன் கோயிலைக் கைப்பற்றும் முயற்சி.


செம்மணிப் புதை குழி தொடர்பான போராட்டங்களை நடத்துவதற்கு பல அமைப்புகள் இருக்கின்றன. சர்வ மதப் பேரவை நுழைவதன் நோக்கமே செம்மணிச் சிவன் கோயிலைக் கிருத்துவமயமாக்குவது.


ஒரே கல்லில் மற்றொரு மாங்காய் அடிக்கிறார்கள். சர்வ மதப் பேரவை நடத்தினாலும் அந்த நிகழ்ச்சிக்கு புத்த பிக்கு வர மாட்டார். அவரையும் சைவர் களையும் சிண்டு முடிக்கின்ற முயற்சியில் கிருத்துவத்தார் ஈடுபடுகிறார்கள்.


செம்மணிச் சிவன் கோயிலுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தைச் சுற்றி, அரசு தந்த வரைபடத்திற்கு அமைய முள்வேலி அமைக்க வேண்டிய கட்டாயத்துக்குச் சைவர்களைத் தள்ளுகின்றார்கள் சர்வ மதப் பேரவையினர்.


சீத்தலைச் சாத்தனாரை, மகேந்திரவர்மனை, மாணிக்கவாசகரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை, சைவர்கள் மனத்தில் இருத்துவார்களாக.

அனைத்து மதப் பேரவை

 ஊடகத்தாருக்கு 

புரட்டாதி 23 வியாழன் (09.10.2025)


சிவ சேனை 

பாலசிங்கம் செயமாறன்

எழுதுகிறேன்


 *பொய்யர்தம் மெய்யான சர்வ மதப் பேரவை* 


உயிர்த்தெழுந்த இயேசு தன் 11 மாணவர்களிடமும் சொன்னார். கல் மலைக்குச் வருக.

அங்கே வந்த 11வரிடம் இயேசு சொல்கிறார்.


"... விண்ணின் அனைத்து வலிமைகளையும் இறைவன் எனக்குத் தந்தார்.

மண்ணின் அனைத்து வலிமைகளையும் இறைவன் எனக்குத் தந்தார்.

தந்தை சொன்னதைச் சொல்கிறேன். 

மகனாகிய நான் சொல்கிறேன்.

தூய ஆவியின் கருத்தைச் சொல்கிறேன்.


உலகெங்கும் செல்க. 

உலக மக்களிடம் என் செய்தி சொல்க.

உலக மக்கள் என் செய்தி வழி நடப்பார்களாக.

அதற்காக அவர்களைக் கிறித்துவத்தில் இணைக்க. 

அவர்களுக்கு ஞான நீராட்டுக.

நான் உங்களுக்குக் கூறியதை அவர்கள் பின்பற்ற வழி காட்டுக.

இந்தப் பணியில் நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன். 

ஊழிக் காலம் வரை உங்களுடனேயே இருப்பேன்."


இயேசு உயிர்த்தெழுந்ததை விவிலியம் கூறும். மத்தேயுகாதை 28 16-20 வரிகள் மேல் உள்ளவாறு. 


யோவானின் காதையும் 20:19-23; கூறும். உலுக்கரின் காதையும் 24:36-49; கூறும். மார்க்கரின் காதையும் 16:14-18 கூறும். சமய தூதர் காதையும் 1:6-8 கூறும். மத்தேயுவே மிகத் தெளிவான வழிகாட்டலைக் கொடுத்தார்.


உலகில் மக்கள் அனைவரையும் கிறித்தவராக்குங்கள். ஞான நீராட்டுங்கள் எனத் தெளிவான வழிகாட்டல் விவிலியம் கூறியதே. 


இந்த வழிகாட்டல் சமய நல்லிணக்கத்திற்கு முற்றிலும் மாறானது, எதிரானது. 


அவரவர் நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றட்டும். நமது நம்பிக்கையை நாம் பின்பற்றுவோம் என்ற கொள்கை கிறித்துவத்தில் இல்லை. 


உலகில் அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும் என்ற கொள்கையே விவிலியத்தின் வழிகாட்டல். கிறித்தவர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப் புதைந்த கருத்து.


கிறித்தவரின் ஒவ்வொரு செயலும் இந்த வழிகாட்டலை அடித்தளமாகக் கொண்டதே. மத நல்லிணக்கத்தை அவர்கள் கோருவதில்லை 


மற்றவர்கள் நம்பிக்கைகள் மோசமானவை. மற்றவர்கள் வழிபடும் கோயில்கள் சாத்தானின் வதிவிடங்கள். மற்றவர்கள் கிறித்தவர்களாகும் வரை சாத்தான் என்ற பிசாசின் பிடியில் இருப்பவர்கள். இவ்வாறான கொடுமையான கருத்தைக் கொண்டவரே கிறித்தவர்கள்.


சர்வ மதப் பேரவையில் கிறித்தவர்கள் நுழைகிறார்கள் எனில், அங்கே வருவோரைக் கிறித்தவர்கள் ஆக்குவது எப்படி? என்ற வழிகளை ஆராய்ந்தே நுழைகிறார்கள்.


ஒவ்வொரு கிறித்தவனுக்கும் சர்வ மதப் பேரவை, கிறித்தவ மயமாக்கத்தின் நுழைவாயில். கிறித்தவ மயமாக்க வேண்டும் என்ற நோக்கோடு நுழைபவனை மத நல்லிணக்க வாதியாக மாற்ற முடியுமா?


எனவே சொல்கிறேன், சர்வமும் கிடையாது மதமும் கிடையாது பேரவையும் கிடையாது. சர்வ மதப் பேரவைக் கூட்டம் என்றாலே, செப செய்தியாளரின் கூட்டம் என்றாகிவிடும்.


1999 நவம்பர் 8ஆம் நாள். இந்தியாவில் பாப்பாண்டவர். அனைத்து சமய நல்லிணக்க கூட்டத்தில் உரையாற்றுகிறார். கிறித்தவ மயமாக்குவது எங்கள் பிறப்புரிமை.


இந்தியாவில் சொல்கிறார். இந்துக்கள் நடுவே சொல்கிறார். சீக்கியர் நடுவே சொல்கிறார். யூதர் நடுவே சொல்கிறார். முகமதியர் நடுவே சொல்கிறார். புத்தர் நடுவே சொல்கிறார். சமணர் நடுவே சொல்கிறார். அனைவரும் அந்த மேடையில் இருக்கிறார்கள்.


வலிந்தோ, உற்சாகமூட்டியோ, பரிசுகள் கொடுத்தோ, எவரையும் மதம் மாற்றுவதை கிறித்தவராக்குவதை நாங்கள் ஏற்கோம். தலை இலாமாவின் சார்பாளர் மேடையில் சொல்கிறார். சொல்லிய பின்பு கூட்டத்தை விட்டு வெளியேறுகிறார்.


தலை இலாமாவின் சார்பாளரின் துணிச்சலே சைவர்களின் வாழ்வு. கிறித்தவர்களோடு மத நல்லிணக்கம் பேச மாட்டோம் என்ற உறுதியே சைவர்கள் வாழ்வு. சைவர்களைக் கிறித்தவமயமாக்கும் விவிலிய வரிகளை நீக்கிய விவிலியத்தைக் கைக்கொள்க எனக் கிறித்தவர்களைக் கேட்பதே சைவர்களின் வாழ்வு.


இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பாப்பாண்டவரின் செய்தி என்ன தெரியுமா? இருபத்தோராம் நூற்றாண்டு ஆசியாவைக் கிறித்தவமாக்கும் நூற்றாண்டு என்பதே.


1999 நவம்பர் 8ஆம் நாள் தில்லியில் பாப்பாண்டவர் பேசுகிறார் "Just as the first millennium saw the cross firmly planted in the soil of Europe, and the second in that of America and Africa, so may the third Christian millennium witness a great harvest of faith on this vast and vital continent," he told a crowd in a New Delhi sports stadium.


சைவர்களே இந்தப் பின்னணியில் கிறித்தவர்களைப் பாருங்கள். சைவர்களைக் கிறித்தவர்களாக்கச் சர்வ மதப் பேரவைக்குள் நுழைந்துள்ளார்கள்.


சைவ உள்ளங்களே நல்லோர் உள்ளங்களே நலிந்து போன சைவ சமயத்தை வலிந்த நிலைக்கு மாற்ற விரும்புகின்ற சைவ சமயப் பெருமக்களே, சைவர்களைக் கிறித்தவ மயமாக்கும் மாயைக்குள் அகப்படாதீர்கள்.


சமய நல்லிணக்கத்துக்கு ஒரு பொழுதும் உடன்படாத கிறித்தவரோடு சர்வ மதப் பேரவையில் இருப்பதால் நீங்களும் கிறித்தவராக கூடிய வாய்ப்பே கூடுதல்.

அனைத்து மத நல்லிணக்கப் பேரவை

 ஊடகத்தாருக்கு 


புரட்டாசி 26 ஞாயிறு (12 10 2025) 


சிவ சேனை

பாலசிங்கம் செயமாறன்

எழுதுகிறேன் 


பொய்யர்தம் மெய்யரின் பேரவையே சர்வ மதப் பேரவை


அம்மா, வாழும்போதே தெய்வம். 

ஆற்றலின் மறுவடிவம் அம்மா. 


கல்வி தருவாள் 

செல்வம் தருவாள் 

வீரம் தருவாள் 

அன்பையும் அறத்தையும் அருளையும் பொழிவாள் 

எனவே அவள் தெய்வம்.


தமிழர் வகுத்த ஐந்து நிலங்கள். 

அங்கே பாலை நிலத்தின் தெய்வம் தாய். அம்மா அவளே. காளி அவளே. கொற்றவை அவளே.


கொற்றவை வழிபாடு பல்லாயிரம் ஆண்டு காலத் தமிழர் பண்பாடு. கொற்றவியே காளி.


காளி கோயிலை இடித்தேன். இடிப்பதற்கு அமைச்சர் பதவி உதவியது. கோயிலை இடித்த இடத்தில் முகமதியருக்கு கட்டடம் கட்டிக் கொடுத்தேன். ஒட்டுமாவடியில் இடித்தேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடித்தேன். கிழக்கு மாகாணத்தில் இடித்தேன். இலங்கையில் இடித்தேன்.


200 - 300 ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்துக்காக வந்தவன். குடியேறியவன். ஒட்டுமாவடியில் இடம் கொடுத்தோம். தங்கினான். நன்றியாகப் பல்லாயிரம் ஆண்டுகாலத் தமிழ்ப் பண்பாட்டுக் கோயிலை இடித்தான். இடித்தது மட்டுமின்றி, மார்பு தட்டிக் காணொளி வெளியிட்டான்.


இடம் கொடுத்து உதவிய இந்துக்களின் உள்ளம் கொதிக்கும். நெஞ்சத்தில் இரத்தம் பீறிடும். 


போர்க்காலப் புண்களோடு இழப்புகளோடு இடப்பெயர் அழிவுகளோடு வாழ்கின்ற மக்களை, பனையில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் காளி கோயிலை இடித்தேன் என முகமதியன் மத வெறியோடு கூறினான்.


காசிப முனிவரின் காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரை காளிக்குக் கோயில் கோயிலாகக் கட்டி வைத்திருக்கிறோம். வங்காளம் முழுக்க காளி கோயில்கள்.


வீரத்தின் திருமகள். வெற்றியின் தாய். துர்க்கையாய் கொற்றவையாய் காளியாய் கோலங்கள் கொண்டவள். ஞாலத்தை வழிநடத்துபவள். என்றெல்லாம் நாங்கள் போற்றிப் பாராட்டிப் பணிந்து வணங்கி வாழ்ந்து வருகிறோம்.


நீயோ காளி கோயிலை இடித்தேன் என்று கொக்கரிக்கிறாய். அய்யய்யோ தவறு செய்து விட்டோமே. இந்துக்களைப் புண்படுத்தினோமே என்று முகமதியன் ஒருவனாவது உன்னைக் கண்டித்தானா?


உன்னோடு நல்லிணக்கம் பேசும் சைவர்கள் மூடர் அன்றோ! இந்துக்கள் கோழைகள் அன்றோ!


காளி கோயிலை இடித்தது மட்டுமன்று. முகம் மறைக்க இடம் கொடுத்தால் கொட்டில் முழுவதுமே தனதாக்கும் ஒட்டகம் போல் அம்பாறையில் திருகோணமலையில் மட்டக்களப்பில் மன்னாரில் புத்தளத்தில் சைவர்களை ஒடுக்கினாய். அவர்கள் நிலங்களைக் கைப்பற்றினாய். காதல் வலை வீசி சைவப் பெண்களை முகமதியர் ஆக்கினாய். ஒன்றுக்கு நாலாக்கி உன் வம்சத்தைப் பெருக்கினாய்.


சைவர்களின் குடும்பச் சீரழிவில் இந்துக்களின் நில இழப்பில் திருக்கோயில்களின் உடைப்பில் கொக்கரிக்கும் முகமதியனோடு நல்லிணக்கம் காண முடியுமா?


எனவே தான் சொல்கிறேன் சர்வமும் கிடையாது. மதமும் கிடையாது. பேரவையும் கிடையாது. சர்வ மதப் பேரவை என்றாலே திருக்கோயில்களை உடைத்தோம், உருவ வழிபாட்டைக் கெடுத்தோம், என்ற முகமதியரின்ன் கொக்கரிப்புக்கு மேடையமைத்து கொடுக்கும் அமைப்பே.


குர்ஆன்: [4:116] உருவத் திருமேனிகளைக் கடவுளாக வழிபடுவோரை அல்லா ஒரு பொழுதும் மன்னிக்க மாட்டார். GOD does not forgive idol worship. இதை ஒத்த பல வரிகள் குர்ஆனில் உள்ளன. 


குர்ஆனின் வழிநடத்தலில் ஒட்டுமாவடியில் காளி கோயிலை இடித்தான் முகமதியன். அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இடித்தான் முகமதியன்.


குளித்த புருவம் என்கிறோம். கொவ்வைச் செவ்வாய் என்கிறோம். பனித்த சடை என்கிறோம். பவளம் போல் மேனி என்கிறோம். பால் வெண்ணீறு என்கிறோம். இனித்தம் உடைய எடுத்த பொற் பாதம் என்கிறோம். உருவத் திருமேனியைக் காண்பதற்கே இந்த மனிதப் பிறவி என்கிறோம். சைவ சமயம் இஃதே. இந்து சமயம் இஃதே. 


உருவத்தைக் கண்டாலே உடை என்கிறான். எப்படி அவனோடு நல்லிணக்கம் காண முடியும்? சர்வ மதப் பேரவையில் அவனோடு நல்லிணங்கி உட்கார முடியுமா?


நீ நம்பிக்கை அற்றவன். நான் நம்பிக்கை உள்ளவன். நீ காஃபீர். நான் முஸ்லிம்.


குர்ஆன் 9:12. நம்பிக்கை அற்றவர்களோடு, அவர்களின் தலைவர்களோடு போரிடு. “Fight the leaders of unbelief”

குர்ஆன் 9:14 நம்பிக்கை அற்றவர்களோடு போரிடு. உன் கைகளால் அல்லா அவர்களைத் தண்டிக்கிறார். நம்பிக்கையற்றவர்களை மதிப்பு அற்றவர்களாக்கு. அதன்வழி, நம்பிக்கை உள்ளவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை நீ கொண்டு வருகிறாய். அதற்காக அல்லா உனக்கு அருள் புரிவார். “Fight them; God will punish them by your hands and bring them to disgrace, and assist you against them, heal the hearts of a believing people, remove the rage of their hearts, and God turns (mercifully) to whom He pleases, and Allah is Knowing, Wise” (9:14).

குர்ஆன் 9:36. பல்வேறு உருவத் திருமேனிகளை வழிபடுவர்களோடு முழுமையாகப் போரிடு “Fight the polytheists all together” 


குர்ஆன் கூறும் வரிகளை முகமது நபி சொன்னதாக எழுதி வைத்திருக்கிறார்கள். குர்ஆன் அனைத்து மசூதிகளிலும் இருக்கும். 


முகமது நபி பிறந்து 187 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் புக்காரி. சகீஹ் புக்காரியின் 7562 ஹதீசுகளும் எல்லா மசூதிகளிலும் இருக்கும்.


முகமது நபியும் புக்காரியும் வழிகாட்டும் வரிகள் நம்பிக்கையற்றவர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) தொடுங்கள் என்பதே.


குர்ஆனின் ஒன்பதாவது பகுதியையும் புக்காரியில் புனிதப் போர் தொடர்பான வரிகளையும் படித்தால் நம்பிக்கையாளரான முகமதியரோடு, காஃபீர்களான நம்பிக்கையற்றவரான முகமதியர் அல்லாதவர் நல்லிணக்கம் காணவே முடியாது. சர்வ மதப் பேரவையில் இணங்கிப் பேச முடியாது.


அதனால் தான் மீண்டும் சொல்கிறேன், சர்வமும் கிடையாது, மதமும் கிடையாது, பேரவையும் கிடையாது. நல்லிணக்கத்துக்குக் கதவுகளை மூடிக் கொண்ட மனத்தோடு பொய்யர் தம் மெய்யராகச் சைவர்களிடம் வருகிறார்கள் முகமதியர்.

மாவீரர் நாள் - நல்லாட்சிக்கு இலக்கணம்

 Scroll down for Sinhala and English versions 


ஊடகத்தாருக்கு


ஐப்பசி 21 வெள்ளி (07 11 2025)


நல்லாட்சிக்கு இலக்கணம், நாளை நமதே.


மறவன்புலவு க சச்சிதானந்தன்

சிவ சேனை 


இந்த மண் என் மண். வேறு எந்த மண்ணும் மண்நான் பிறந்த மண் அன்று. நான் இறக்கும் மண்ணும் அன்று.


இப்பொழுதைக்கு நான் இந்த நாட்டின் குடிமகன். என் உணர்வுகளின் சங்கமமான இந்த மண்ணோடும் குடிமகனாக இந்த நாட்டோடும் இருக்க உந்துவதே உதவுவதே ஆதரிப்பதே ஆட்சி.


எனக்கு மக்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்ததும் தமக்கெனக் கொள்கை கொண்டனர். முரண்பட்டோரொடு போராடினர். தம் கொள்கைகளுக்காக உயிர் நீத்தனர்.


அவர்கள் உடலை எரித்தோம். கொள்கை வீரர், மாவீரர் என வாழ்ந்தோரை எரித்த நாள் சிவனோடு அவர்கள் சேர்ந்த நாள்.


எனக்கு எந்த நாளும் அவர்கள் நினைவே. ஆனாலும் அந்தத் திதி, முக்தி அடைந்த நாள், எனக்குச் சிறப்பு நாள். 


நீராட்டுவேன். மலரிடுவேன். தூபம் காட்டுவேன். துதிப்பேன் பொங்குவேன், படைப்பேன். என் உணர்வுகளின் பீறலோ மீறலோ யாருக்கும் துன்பம் தருவன அல்ல.


அந்த உணர்வுகளுக்கு இடம் தர மாட்டேன் எனத் தடுத்த ஆட்சி மறைந்தது. வெற்றிக் களிப்பில் மிதந்து, தோல்வியைத் தழுவியோரைத் தொடர்ந்து துன்புறுத்திய வெற்றிப் படையின் எக்காள ஓர்மம் மறைந்தது.


மண்ணின் மகன் நீ. நாட்டின் குடிமகன் நீ. உணர்வுகளின் சங்கமும் நீ. உன் உணர்வுகளுக்கு இடம் தருவேன் நினைவுகளைப் போற்ற உதவுவேன். தடுக்க மாட்டேன் என எந்த ஆட்சி கூறுகின்றதோ அந்த ஆட்சியே நல்லாட்சி.


மாவீரர் நினைவுகளைப் போற்றுங்கள். துயிலும் இல்லங்கள் மாவீரர்களுக்கு உரியன. வீரத்தின் விளை நிலமாய்ச் சிவனுடன் இரண்டறக் கலந்த செம்மை வீரர்களைப் போற்றும் நிகழ்வை, நீராட்டி மலர் தூவி விளக்கேற்றிப் படைத்து உரிய திதியில் அஞ்சலி செலுத்துவதை ஊக்குவிப்பதே உற்சாகிப்பதே இந்த அரசின் கொள்கை.


மேதகு குடியரசுத் தலைவர் ஆணையிட்டார். மாண்புமிகு அமைச்சர் நேற்று அறிவித்தார். 


இந்த மண்ணை விட்டு வேறெங்கும் போக முடியாத, இந்த நினைவுகளை விட்டு வேறெதையும் கொள்ள முடியாத மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அன்றோ. 


விடுதலையின் விதைகளை, வீர விளை நிலங்களில் போற்றுவோம்.


අයිප්පසි 21 සිකුරාදා (07 11 2025)


ආදර්ශමත් යහ පාලනය


මරවන්පුලව් කේ සචිදානන්දන්

ශිව සේනා


මේ පස මගේ පසයි. මේ ලෝකයේ වෙනත් කිසිම පසක් මා ඉපදුණු පස නොවේ. එය මා මිය යන පස ද වේ.


දැනට, මම මේ රටේ පුරවැසියෙක්. මේ පස සමඟ සිටීමට මා පොළඹවන එකම දෙය මගේ හැඟීම් සහ හැඟීම්වල එකතුවයි. එහි පුරවැසියෙකු ලෙස, මගේ යහපැවැත්ම කෙරෙහි මගේ අහිංසක හැඟීම් සහ හැඟීම්වලට සහාය වීමට රජය බැඳී සිටී.


මට දරුවන් සිටියා. ඔවුන් හැදී වැඩුණු විට, ඔවුන් තමන්ගේම දෘෂ්ටිවාදයක් අනුගමනය කළහ. ඔවුන් එම දෘෂ්ටිවාදයට විරුද්ධ වූ අය සමඟ සටන් කළහ. ඔවුන් ඔවුන්ගේ දෘෂ්ටිවාදය වෙනුවෙන් මිය ගියහ.


අපි ඔවුන්ගේ සිරුරු පුළුස්සා දැමුවෙමු. වීරයෙකු ලෙස ජීවත් වූ තැනැත්තා වීරයෙකු ලෙස මිය ගියේය. ප්‍රාණ පරිත්‍යාගශීලීත්වය ශිවගේ පාමුල පවතී.


මම සෑම දිනකම දිවි පිදූවන් සිහිපත් කරමි. කෙසේ වෙතත්, ඔවුන් ශිවගේ නෙළුම් පාමුල සිටීමට සමත් වූ එම දිනය මට විශේෂ දිනයක්.


මම ඒවාට වතුර දමමි. මම මල් පූජා කරමි. මම සුවඳ දුම් පෙන්වන්නෙමි. මම පොංගල් උයන්නෙමි, පූජා කරන්නෙමි.. එවැනි හැඟීම් සහ හැඟීම් ප්‍රකාශ කිරීම කිසිවෙකුට රිදවන්නේ හෝ රිදවන්නේ නැත.


එම හැඟීම් වලට ඉඩක් නොදෙන බව පැවසූ පාලන තන්ත්‍රය දැන් නැති වී ගොස් ඇත. ජයග්‍රහණයේ ප්‍රීතියෙන් ගිලී සිටි ජයග්‍රාහී හමුදාවේ හොරණෑව, පරාජයේදී දිවි පිදූවන්ට දිගටම වධ හිංසා කරමින්, දැන් පරාජිතයින්ට ඔවුන්ගේ වැරදි අවබෝධ කරගෙන ඇත.


ඔබ පසේ පුත්‍රයෙකි. ඔබ රටේ පුරවැසියෙකි. ඔබ හැඟීම් සහ හැඟීම් මිටියක් ද වේ.


මම ඔබේ හැඟීම් වලට ඉඩක් ලබා දෙන අතර ඔබේ මතකයන් අගය කිරීමට ඔබට උදව් කරමි. එවැනි ප්‍රතිපත්තියක් ක්‍රියාත්මක කිරීමට පවසන පාලන තන්ත්‍රය යහපාලනය නියෝජනය කරයි.


වීරයන්ගේ මතකයන් අගය කරන්න. වීරයන්ගේ නිවාස වීරයන්ට අයත් වේ. මෙම රජයේ ප්‍රතිපත්තිය වන්නේ ධෛර්යයේ ඵලයක් ලෙස ශිවගේ පාමුල සිටින ගෞරවනීය වීරයන්ගේ අනුස්මරණ සැමරීම දිරිමත් කිරීමයි. වතුර වත් කිරීමෙන්, මල් ඉසීමෙන් සහ පහන් දල්වා ඔවුන්ට ගෞරව කරන්න. සුදුසු හින්දු සැමරුම් දිනයේදී ඔවුන්ට උපහාර දක්වන්න.


ගරු ජනාධිපතිතුමා එය නියෝග කළේය. ගරු අමාත්‍යතුමා ඊයේ එය නිවේදනය කළේය.


මෙම භූමියට හිමිකම් කියන සහ මෙම මතකයන් හැර වෙනත් කිසිවක් රැගෙන යා නොහැකි වීරයන්ගේ දෙමාපියන්ට මෙය ශුභ ආරංචියකි.


වීරත්වයේ මෙම සාරවත් දේශයේ නිදහසේ බීජ අපි අගය කරමු.


Press release 


Aippasi 21 Friday (07 11 2025)


Exemplary Good Governance


Maravanpulavu K Sachithananthan 

Siva Senai


This soil is my soil. No other soil in this globe is the soil where I was born. It is also the soil where I will die.


For now, I am a citizen of this country. The only thing that motivates me to be with this soil is the confluence of my emotions and feelings. As it's citizen, the government is duty bound to support my innocent emotions and feelings towards my well being.


I had çhildren. When they grew up, they adopted their own ideology. They fought with those who opposed those ideology. They died for their ideology.


We burned their bodies. The one who lived as a hero died as hero. Martydom is being at the feet of Siva.


I remember the martyrs every day. However, that day, the day they attained to be at the lotus feet of Siva is a special day for me.


I water them. I offer flowers. I will show incense. I will cook pongal, I will make offerings.. Expression of such emotion and feelings does not hurt or injure or harm anyone.


The regime that said it would not give space to those feelings has now gone. The trumpet of the victorious army immersed in the joy of victory, continued to torment those who were martyrs in defeat, has now realised their wrongs to the losers.


You are a son of the soil. You are a citizen of the country. You are also the bundle of emotions and feelings. 


I will give space to your feelings and help you cherish your memories. The regime that says to implement such policy represent good governance.


Cherish the memories of heroes. The homes of heroes belong to heroes. The policy of this government is to encourage the memorial observance of the honorable heroes who are at the feet of Siva, as the fruit of valor. Honour them by pouring water, sprinkling flowers and lighting lamps. Pay them homage on the appropriate Hindu date of observance.


The Honorable President ordered it. The Honorable Minister announced it yesterday.


This is good news for the parents of heroes who claim this land and who cannot take anything else with them except these memories.


Let us cherish these seeds of freedom in this fertile land of heroism.

மரபணு வினைப் பயன் தினமணி

 ஐப்பசி 26 புதன் (13 11 2025) 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவ சேனை

எழுதுகிறேன் 


திரு க. வைத்தியநாதன் அவர்கள் 

ஆசிரியர், தினமணி, சென்னை 


வணக்கம். 

இன்றைய காலை உங்கள் ஆசிரியத் தலையங்கம் படித்தேன்.


அறிவியல் சார்ந்த கொள்கை. 

தமிழ் சார்ந்த கொள்கை. 

சைவம் சார்ந்த கொள்கை. 

வினைப் பயன் சொல்லும் கொள்கை.


12 திருமுறைகளிலும் 14 திருநெறிகளிலும் வினைப் பயன் சார்ந்த கொள்கையை பல்வேறு நிலைகளில் விளக்கி இருக்கிறார்கள். பகுத்தறிவு சார்ந்த கொள்கையாக விளக்கி இருக்கிறார்கள். 


இன்றைய தலையங்கம் அதற்குச் சான்று.

அரசியல் சமூகம் சார்ந்து எழுதுவீர்கள்.

அறிவியல் சார்ந்தும் எழுதினீர்கள். வாழ்க.


மரபணு எனப் பரவலாக நாம் அழைக்கும் இரட்டைப் பாம்பு வடிவத்தையும் இணைப்புச் சலாகைகளையும்  69 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் தளத்தில் அரங்கேற்றியவர்கள் நால்வர். அவர்களுள் ஒருவர் வாட்சன்.


கலிபோனியா (சண்டியாகோ) பல்கலைக்கழகத்தில் என் பேராசிரியர் இரால்ப் உலூயினுடன் வாட்சனின் அறைக்கு நான் சென்றிருகிறேன்.


மறவன்புலவில் மரபணு வடிவத்தை எட்டடி உயரத்தில் அமைப்பித்தேன். கல்வெட்டாக வாட்சனின் பெயரையும் வைத்திருக்கிறேன்.


திருவருட்பயனில் வினைப் பயனை உமாபதி சிவாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மரபணுக்கள் வினைப் பயன் தாங்கிகள், கடத்திகள் என நான் கருதுகிறேன்.


நன்றி

எதிர்ப்புகளையே வாழ்வாக்காதீர்

 கார்த்திகை 9 செவ்வாய் (25 11 2025)


ஈழநாடு நிறுவனர் ஆசிரியர் பொறுப்பாளர் 

திரு குகநாதன் அவர்களுக்கு 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

சிவ சேனை எழுதுகிறேன்


இலக்கற்ற எதிர்ப்புகள் என்று தலைப்பில் உங்களது தலையங்கம் படித்தேன்.


16 ஆண்டுகளுக்கு முன் பெரும் தோல்வி, படுதோல்வி. 13 அரசுகள் எதிரிக்கு சார்பானதாலும் தோல்வி.


அறவழி 30 ஆண்டுகள் 

மறவழி 30 ஆண்டுகள் 

போராட்டங்கள்.


போராட்ட உணர்வு மதிக்க வேண்டியதே. 

மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்ட உணர்வு.


போராட்ட உணர்வு தொடர்ச்சியானது. 

மனித மனத்தில் மங்காதது. 


போராட்டம் ஒரு கருவியே.  

போராட்டமே வாழ்வு அன்று. 

60 ஆண்டுகளான போராட்ட நிலையோ வேறென்ன காரணமோ எதிர்ப்புணர்வைத் தமிழ் ஈழ மக்கள் எங்கிருந்தாலும் ஒவ்வொருவரும் எல்லையற்று வளர்த்துள்ளனர்.


எதை எதிர்ப்பது?

எதை எதிர்க்க கூடாது?


எதிர்ப்பதில் 

எதற்கு போராடுவது? 

எதற்கு போராடக்கூடாது? 


போராடுவதானால் எந்த வழி? 

கருத்து வழியா? 

செயல் வழியா? 


கருத்து வழியெனில் எவ்வாறு வெளிக் கொணர்வது?

எழுத்து வழியா? பேச்சு வழியா? கலை வடிவ வழியா? அல்லது அனைத்தும் கலந்த அளவுகளிலா? 

கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்வாறு? 

கருத்துகளுக்கு ஆதரவு திரட்டுவது எவ்வாறு?


செயல் வழியாயின் தன்னை ஈந்தா? ஒத்தவர்களையும் ஈந்தா?

செயல்வழியில் ஈடுபடாதவர்கள் ஒப்பாதவர்கள் துன்பம் அடைவார்களா?


கருத்து வழியாயின் 

செயல்வழியாயின் 

பட்டறிவு என்ன? 

கற்ற பாடங்கள் என்ன? 

முன்பு நாம் விட்ட பிழைகள் தவறுகள் தடங்கல்களாக தடுப்புகளாக பின் தள்ளியவையாக தோல்விக்கானவைகளாக இருப்பின் அவற்றை மீண்டும் முன்னெடுக்காமல் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?


கருத்து வழியும் 

செயல்வழியும் 

எதிர்த்தோம் எதிர்க்கிறோம் எதிர்ப்போம் 

போராடினோம் போராடுகிறோம் போராடுவோம் 


இவை ஒன்றே நமக்குத் தெரிந்த வழியா? 


அறிவும் ஆற்றலும் திறமையும் புலமையும் ஓடி ஒளிந்தனவா? 


ஆயிரம் மலர்கள் மலரட்டுமே என்ற அகன்ற விரிந்த பரந்த நோக்கமும் பார்வையும் எங்களை விட்டு அகன்றனவா? 


பகுப்பாய்வும் கொள்கை வகுப்பும் அற்ற கருத்துத் திணிப்பும் ஒருங்கமையாத ஒருங்கிணைக்காத தன்னிச்சையான தான்தோன்றித்தனமான கருத்துகளும் செயல்களும் வெளிப்பாடுகளும் எல்லை மீறிக் கட்டுக்கடங்காமல் காட்டு வெள்ளமாக மாறினவா?


அறிவு என்னும் அணையும் 

அன்பு என்னும் அரவணைப்பும் 

அருள் பெருக்கும் கண்ணோட்டமும் 

அறத்துக்குள் நிற்கின்ற வாழ்வும் 


இவை இல்லாத வாழ்வியல் முன்னெடுப்புகள், மலர்ச்சிக்கான முயற்சிகள் வளர்ச்சிக்கான திட்டமிடல் யாவும் தோல்விக்கு மேல் தோல்வியைத் தொடர்ந்து தருமல்லவா?


ஆகா, இப்படி ஒரு முதிர்ச்சியற்ற சமூகம் சமுதாயம் இனம் மக்கள் இருக்கிறார்களே இவர்களை 

எளிதில் மேலாதிக்கத்துள் கொண்டு வரலாம் 

எளிதில் மதமாற்றம் செய்துவிடலாம் 

எளிதில் இவர்கள் மரபுகளை உடைத்து விடலாம்  

இவர்களை அடக்கி விடலாம் ஒடுக்கி விடலாம் அழித்துவிடலாம் 

என்ற நிலை ஏற்படலாம் அல்லவா? 


நயமிக்க நாகரீகரைக் கொடுங் காட்டுமிராண்டிகளே மோதலில் போரில் எப்பொழுதும் வென்றுள்ளார்கள் என்ற வரலாறு நமக்குப் பாடமாக அமையாதா? 


இலக்குகளற்ற எதிர்ப்புகளை வாழ்வாகக் கொள்ளாதீர். ஈழநாடு இதழில் உங்கள் தலையங்கம் உணர்த்தும் செய்தி. 


ஈழத் தமிழ் மக்களுக்கு நல் வழிகாட்டும் செய்தி.


நன்றி


Karthigai 9 Tuesday (25 11 2025)


To

Eelanada Founder Editor-in-Chief

Mr. Kuganathan


From

Maravanpulavu K. Sachithananthan 

Siva Senai


I read your editorial titled " Objectives sans Protests".


16 years ago, a major defeat, a crushing defeat. 13 governments supported the enemy. We were defeated.


30 years of non-violent resistance 

30 years of violence. 


The spirit of struggle must be respected.

The spirit of struggle is against hegemony.


The spirit of struggle is continuous.

It does not fade in the human mind.


Struggle is a tool.

Struggle is not life itself.

The 60 years of struggle or may be other reasons have endlessly cultivated the habit of opposing anything and everything by the Tamil Eelam people, wherever they are.


What to oppose?

What not to oppose?


In opposition,

Why fight?

Why not fight?


If we fight, what way?

Is it through ideas?

Is it through action?


If it is through ideas, how do we express it?


Is it through writing? Is it through speech? Is it through art? Or is it a combination of all of them?

How do we get the ideas to the people?

How do we gather support for ideas?


If it is through action, do we sacrifice ourselves? Do we sacrifice like-minded people?


Will those who do not engage in action and those who do not agree, suffer?


If it is through ideas,

If it is through action,

what is wisdom?

What are the lessons learned?

If the mistakes we made in the past are obstacles, setbacks, and failures, shouldn't we choose alternative ways instead of repeating them?


Through ideas and action,

We opposed, we will oppose,

We fought, we will fight,

Are these the only ways we know?


Have knowledge, power, talent, and scholarship fled and hid?


Have the broad, expansive purpose and vision that a thousand flowers bloom departed from us?


Have the imposition of ideas without analysis and principle, the uncoordinated, arbitrary, ideas, actions, and expressions, gone beyond the limits and become an uncontrollable, like wild flood?


The bund of knowledge, the embrace of love, the perspective that increases grace, and the life that stands within virtue


Without these, will not all life initiatives, efforts for flourishing, and planning for development continue to yield failure after failure?


Ah, there is such an immature society, community, race, people that

can easily be brought into dominance

can easily be converted

can easily break their traditions

can suppress them, destroy them

can it not happen?


Isn't history a lesson for us that barbarians who by conquest of civilized societies have always won in conflict and war?


Don't make aimless protests your life. Your editorial in Eelam Nadu magazine is an enlightening message.


A message that guides the Tamil people of Eelam.


Thank you

அளவெட்டியில் அத்துமீறித் தேவாலயம்

 Scroll down for Sinhala Hindi and English versions


மார்கழி 17, வியாழன், (01.01.2026)


பாலசிங்கம் செயயமாறன்

சிவசேனை


அளவெட்டியில் உள்ள சட்டப்புறம்பான கிறித்தவ தேவாலயம் ,


வலிகாமம் வடக்கு பிரதேச சபை

தெல்லிப்பழை வட்ட ஆட்சியர் பிரிவு


அளவெட்டி தெற்கு

கலை நகர்

செல்லையா சாலை

முதல் ஒழுங்கை


புதிதாக அமைந்த கிறித்துவ வழிபாட்டிட வளாகம் இருக்கும் இடம்


(1) இந்து கோயிலான, அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் கோயில் முன்பாக


(2) இந்துக் கோயிலான சீரடி சாய் பாபாவின் அருள்மிகு சிவலிங்கம் கோயிலுக்குப் பின்னால்,


அளவெட்டியில் இந்துப் பெற்றோர்களான நல்லையா மற்றும் இராசமணி ஆகியோருக்கு ஒரு பத்தியுள்ள இந்துவாகப் பிறந்த சதீஷ்குமாரி நிலத்தின் உரிமையாளர்.


அவர் யேர்மனிக்குச் சென்றார்


குடியுரிமை மற்றும் பிற அரசு சலுகைகளைப் பெறுவதற்காக, அவர் கிறித்தவ மதத்திற்கு மாறினார்.


கலை நகர் முழுவதும் இந்துக்களே. கிறித்தவர்கள் எவரும் இல்லை. பெர்ட்னாடோ மற்றும் நவந்தினி ஆகியோரின் சூழ்ச்சியுடன், சதீஷ் குமாரியின் ஆதரவுடன் அவரது சொத்தில் தற்போது வசிப்பவர்கள், வெளியே உள்ள பெயர் பலகையில் காட்டப்பட்டுள்ளபடி (கீழே உள்ள படம்) கிறிதீதவ வழிபாட்டுக் கூட்டங்களை நடத்துவதற்காக வீட்டை நீள் மண்டபமாக விரிவுபடுத்தினர். வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தி வரும் மதமாற்ற அமைப்பின் விவரங்கள் பெயர் பலகையில் உள்ளன.(படம் இணைப்பில்)


குடியிருப்பின் நோக்கத்தை ஒரு வழிபாட்டுத் தேவாலயமாக மாற்றுவதற்கு அப்பகுதியில் உள்ள அனைத்து அண்டை வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இரு இந்து கோவில்களிலிருந்து 25 முதல் 30 மீ தொலைவில் அமைந்துள்ள வழிபாட்டு மண்டபத்திலிருந்து நாள்தோறும், எரிச்சலும் தொந்தரவும் தரும் மாசொலிகள் வருகின்றன.


இத்தகைய மதமாற்ற நடவடிக்கைகளிலிருந்து நாட்டின் குடிமக்களுக்கு போதுமான சட்டப் பாதுகாப்பு உள்ளது.


ஒரு குடியிருப்பை வழிபாட்டு மண்டபமாக மாற்ற முடியாது.


நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் உரிமம் தராது.


உள்ளூராட்சி அமைப்புகள் அத்தகைய மாற்றத்தை ஏற்கா.


2008 ஆம் ஆண்டு புத்த சாசன சுற்றறிக்கை தெளிவாகக் கூறுகிறது, இப்போதுள்ள எந்த இந்து புத்த கோவில்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் வேறு மத எந்த வழிபாட்டுத் தலங்களும் இருக்க முடியாது.


(1) வலிகாமம் வடக்கு பிரதேச சபை, 

(2) தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் 

(3) அப்பகுதியின் காவல் நிலையம் 

ஆகியவற்றின் கடமை அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கு இடையேயான உறவுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது.


இந்த வழிபாட்டுக் கூட்டங்கள், அளவெட்டி தெற்கில் உள்ள கலை நகரின் மக்கள் தொகை விகிதாசாரத்தை மாற்றவும், மத ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், அமைதியின்மையை உருவாக்கவும், மதமாற்றிக் குழுக்களால் திட்டமிட்டு செய்யப்படும் ஆத்திரமூட்டல்களாகும்.


மேற்கத்திய நாடுகள் மற்றும் அரபு நாடுகள் உலகத்தை கிறித்தவ மயமாக்கவும், இசுலாமிய மயமாக்கவும் மேற்கொள்ளும் ஒரு பாரிய முயற்சியின் ஒரு பகுதியே அளவெட்டி கலை நகரில் இந்த முயற்சி.


இந்து மக்களை மதமாற்றிக் கிறித்தவமயமாக்குவோரின் கைகளில் சுதந்திர இலங்கை நாடு, பகடைக் காயாக மாறுவதை இந்துக்கள் ஏற்க முடியாது.


බාලසිංහම් ජෙයමරන්

සිව සේනායි


අලවෙඩ්ඩි හි නීති විරෝධී ක්‍රිස්තියානි පල්ලිය,


වලිකාමම් උතුර ප්‍රදේශීය සභාව

තෙලිප්පලෙයි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශය


දකුණු අලවෙඩ්ඩි

කලෙයි නගර්

චෙල්ලියා පාර


පළමු පටුමග


පරිශ්‍රය


(1) හින්දු කෝවිල් ඉදිරිපිට, අරුල්මිකු පුබනේස්වරි අම්මාන් කෝවිල.


(2) තවත් හින්දු කෝවිලක් වන ෂිර්ඩි සායි බාබාගේ අරුල්මිකු සිව්ලිංගම් කෝවිල පිටුපස.


අලවෙඩ්ඩි හි හින්දු දෙමව්පියන් වන නල්ලයියා සහ රාසමනී යන අයට දාව භක්තිමත් හින්දු භක්තිකයෙකු ලෙස උපත ලැබූ සතිෂ් කුමාරි ඉඩමේ හිමිකාරියයි.


ඇය ජර්මනියට ගියා


පුරවැසිභාවය සහ අනෙකුත් රාජ්‍ය ප්‍රතිලාභ ලබා ගැනීමේ හේතූන් මත ඇය ක්‍රිස්තියානි ආගමට හැරුණාය.


කාලිනගර් ගම්මානයම හින්දු ආගමට හැරුණාය. කිතුනුවන් නැත. සතිෂ් කුමාරි, ෆර්ඩ්නාඩෝ සහ නවන්තිනිගේ කුමන්ත්‍රණයෙන්, සතිෂ් කුමාරිගේ දේපළෙහි වත්මන් පදිංචිකරුවන් නිවස ශාලාවක් බවට පත් කර, පිටත නාම පුවරුවේ (පහත පින්තූරය) ප්‍රදර්ශනය කර ඇති පරිදි ක්‍රිස්තියානි යාච්ඤා රැස්වීම් පැවැත්විය හැකිය. යාච්ඤා රැස්වීම් පවත්වන එවැන්ජලිස්ත සංවිධානයේ විස්තර නාම පුවරුවේ ඇත.


ප්‍රදේශයේ සියලුම අසල්වැසියන් නිවසේ අරමුණ එවැන්ජලිස්ත පල්ලියක් බවට වෙනස් කිරීමට විරුද්ධ වෙති. ඓතිහාසික හින්දු කෝවිල් දෙකකින් මීටර් 25 සිට 30 දක්වා දුරින් පිහිටා ඇති යාඥා ශාලාවෙන් දිනපතා කරදරකාරී ශබ්ද පැමිණේ.


එවැනි එවැන්ජලිකල් ක්‍රියාකාරකම් වලින් රටේ පුරවැසියන්ට ප්‍රමාණවත් නීතිමය ආරක්ෂාවක් ඇත.


නාගරික සංවර්ධන අධිකාරිය අවසර නොදේ.


පළාත් පාලන ආයතන එවැනි වෙනසක් කිරීමට අවසර නොදේ.


2008 බුද්ධ ශාසන චක්‍රලේඛයේ පැහැදිලිවම පවසන්නේ පවතින හින්දු සහ බෞද්ධ කෝවිල් වලින් නිශ්චිත දුරක් තුළ කිසිදු පූජනීය ස්ථානයක් පිහිටා තිබිය නොහැකි බවයි.


සාමය, ආගමික සහජීවනය සහ අන්තර් ආගමික සබඳතාවලට බාධා නොවන බව සහතික කිරීම (1) වලිකාමම් උතුර ප්‍රාදේශීය සභාව, (2) තෙලිප්පලෙයි ප්‍රාදේශීය ලේකම් සහ (3) ප්‍රදේශයේ පොලිස් ස්ථානය සතු යුතුකමකි.


මෙම යාඥා රැස්වීම් යනු අලවෙඩ්ඩි දකුණේ කලෙයි නගර්හි නොසන්සුන්තාවයක් ඇති කිරීමට, ආගමික අසමගිය ප්‍රවර්ධනය කිරීමට සහ ජනවිකාස තත්ත්වය වෙනස් කිරීමට එවැන්ජලිකල් කණ්ඩායම් විසින් සැලසුම් සහගත ප්‍රකෝප කිරීම් ය.


මෙම උත්සාහය බටහිර ජාතීන් සහ අරාබි ලෝකය විසින් ලෝකය ක්‍රිස්තියානිකරණය කිරීමට සහ ලෝකය ඉස්ලාමීයකරණය කිරීමට ගන්නා විශාල උත්සාහයක කොටසකි.


හින්දු භක්තිකයන්ට ස්වාධීන ශ්‍රී ලංකාව හින්දු ජනගහනය ක්‍රිස්තියානිකරණය කිරීමේ එවැන්ජලිස්තවරයාගේ අතකොළු වීමට ඉඩ දිය නොහැක.


बालासिंघम जयमारन से शिव सेनाई


अलावेड्डी में गैर-कानूनी क्रिश्चियन चर्च,

वालिकमम नॉर्थ प्रथेसिया सभा

तेलिप्पलाई DS डिवीज़न


अलावेड्डी साउथ

कलाई नगर

चेलिया रोड

फर्स्ट लेन


जगह

(1) हिंदू कोइल, अरुलमिकु पुबनेश्वरी अम्मन मंदिर के सामने।

(2) शिरडी साईं बाबा के अरुलमिकु शिवलिंगम मंदिर के पीछे, एक और हिंदू मंदिर।


सतीश कुमारी, जिनका जन्म हिंदू माता-पिता नल्लैया और रासमणि के घर अलावेड्डी में हुआ था, एक पक्की हिंदू हैं और ज़मीन की मालिक हैं।

वह जर्मनी चली गईं।

नागरिकता और दूसरे सरकारी फायदे पाने के लिए, उन्होंने ईसाई धर्म अपना लिया।


कालीनगर का पूरा गाँव हिंदू है। यहाँ कोई ईसाई नहीं है। सतीश कुमारी, फर्डनाडो और नवंथिनी की मिलीभगत से, सतीश कुमारी की प्रॉपर्टी पर अभी रहने वालों ने घर को एक हॉल में बदल दिया है ताकि ईसाई प्रार्थना सभाएं की जा सकें, जैसा कि बाहर नेम बोर्ड (नीचे तस्वीर) में दिखाया गया है। प्रार्थना सभाएं करने वाले इवेंजेलिस्ट संगठन की जानकारी नेम बोर्ड पर है।


इलाके के सभी पड़ोसी घर को इवेंजेलिकल चर्च में बदलने के इस मकसद पर एतराज़ कर रहे हैं। रोज़ाना, प्रार्थना हॉल से परेशान करने वाली आवाज़ें आती हैं, जो दो पुराने हिंदू मंदिरों से 25 से 30 m दूर है।


देश के नागरिकों को ऐसी इवेंजेलिकल एक्टिविटी से काफ़ी कानूनी सुरक्षा मिली हुई है।

किसी घर को प्रार्थना हॉल में नहीं बदला जा सकता।

अर्बन डेवलपमेंट अथॉरिटी इसकी इजाज़त नहीं देती।

लोकल सरकार के नियम ऐसे बदलाव की इजाज़त नहीं देते।

बुद्ध सासन सर्कुलर 2008 में साफ़ कहा गया है कि कोई भी पूजा की जगह मौजूदा हिंदू या बौद्ध मंदिरों से तय दूरी के अंदर नहीं हो सकती।


यह (1) वालिकामम नॉर्थ प्रदेश सभा, (2) तेलिप्पलाई डिविजनल सेक्रेटरी और (3) इलाके के पुलिस स्टेशन की ड्यूटी है कि वे यह पक्का करें कि शांति, धार्मिक मेलजोल और अलग-अलग धर्मों के रिश्तों में कोई दिक्कत न आए।


ये प्रार्थना सभाएं इवेंजेलिकल ग्रुप्स द्वारा अशांति फैलाने, धार्मिक वैमनस्य को बढ़ावा देने और अलावेड्डी साउथ में कलाई नगर की डेमोग्राफिक स्थिति को बदलने के लिए प्लान की गई उकसावे की कार्रवाई हैं।


यह कोशिश पश्चिमी देशों और अरब दुनिया द्वारा दुनिया को ईसाई और इस्लाम बनाने की एक बड़ी कोशिश का हिस्सा है।


हिंदू, आज़ाद श्रीलंका को उन इवेंजेलिस्ट के हाथों मोहरा नहीं बनने दे सकते जो हिंदू आबादी को ईसाई बना रहे हैं।


From

Balasingham Jeyamaran 

Siva Senai


Illegal Christian Church at Alaveddy, 

Valikamam North Prathesiya Sabha

Tellippalai DS Division


Alaveddy South 

Kalai Nagar

Chelliah Road

First Lane


Premises 

(1) in front of Hindu Koil, Arulmiku Pubanesvari Amman temple.

(2) Behind Arulmiku Sivlingam temple of Shirdi Sai Baba, another Hindu temple.


Satish Kumari born to Hindu parents Nallaiah and Rasamani as a devout Hindu at Alaveddi is the owner of the land. 

She went to Germany 

For reasons of getting citizenship and other state benefits, she converted to Christianity.


The entire village of Kalinagar is Hindu. There are no Christians. With conniving Satish Kumari, Ferdnado and Navanthini, the current occupants of the property of Satish Kumari extended the house into a hall to conduct Christian prayer meetings as displayed in the name board outside (picture below). Details of the evangelist organisation which is conducting prayer meetings is in the name board.


All neighbours in the area are objecting to this change of purpose of the residence into an evangelical church. Everyday, disturbing noises come from the prayer hall which is located 25 to 30 m from two historicl Hindu temples.


Adequate legal protection is available to citizens of the country from such evangelical activity.

A residence cannot be converted into a prayer hall. 

Urban Development Authority does not permit. 

Local government ordnances do not permits such change. 

Buddha Saasana circular of 2008 clearly says that no places of worship can be located within specified distances from existing Hindu of Buddhist temples. 


It is the duty of the (1) Valikaamam north Pradeshya Sabha, (2) Tellippalai divisional secretary and (3) the police station of the area to ensure peace, religious harmony and interfaith relationships are not disturbed. 


These prayer meetings are intended planned provocations by evangelical groups to create unrest, to promote religious disharmony and change the demographic status of Kalai Nagar in Alaveddy South. 


This effort is part and parcel of a larger effort to Christianise the globe and Islamise the globe by the western nations and the Arab world. 


Hindus cannot allow independent Sri Lanka to become pawns at the hands of evangelist Christianising the Hindu population.

மாவை சேனாதிராசா

 மார்கழி 14, திங்கள் (29 12 2025)


மாவை சேனாதிராசா 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் 


உணர்வு சார்ந்தது தேசியம். அறிவு சார்ந்ததும் தேசியம். உணர்வு மீ நிற்பதா? அறிவு மீ நிற்பதா? தேசியம்.


இரண்டுமே கற்பனை நிலை. இரண்டையும் கண்ணால் காண முடியாது. காதால் கேட்க முடியாது. பொறிகள் புலன்கள் இரண்டுக்கும் அப்பால் உணர்வும் அறிவும். 


தெல்லிப்பழையைச் சேர்ந்த மரபினர். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். இளம் பருவத்தில் கொழும்புக்கு வருகிறார் கல்கிசையில் பாடசாலை மாணவனாக.


பள்ளிப்படிப்புக்குப் பின் சட்டம் படிக்கிறார். கொழும்பிலே மிகச்சிறந்த வழக்கறிஞர், வழக்குரைஞர். 


கொழும்புச் சட்ட நூலகத்தில் தோழர் ஒருவரின் அழைப்பை ஏற்றுத் தமிழ் அரசியலுக்குள் நுழைகிறார்.


அறிவு அளப்பரியதாய். உணர்வு ஓரளவினதாய். அரசியல் களத்தில் அறிவு சார்ந்து நிமிர்கிறார். 


நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் அரசியலுக்கும் பிணைப்பைக் கொடுக்கிறார். அவர் சா ஜே வே செல்வநாயகம். 


அரசியலில் நேர்மைக்கும் களம் உண்டு என்பதைத் தமிழரிடையே நிறுவியவர் தந்தை செல்வநாயகம். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற நேர்மைக் களம் ஒழுக்கக் களம் அவரது அரசியல் முன்னெடுப்பு.


உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்தார். சிந்தனைச் சிறகை விரித்தார். அறிவுப் பரப்பை அலசினார். கொள்கை வகுத்தார். அரசியல் நெறி அமைத்தார். 


தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். தேர்தல்களில் வெற்றி பெற்றார். தொண்டர்களைத் தன்வயமாக்கினார். தமிழர்களின் தனித்துவச் சார்பாளராக மீ நின்றவர் தந்தை செல்வநாயகம்.


தமிழரசுக் கட்சி தொடங்கிய 10-15 ஆண்டுகளின் பின், மாவிட்டபுரத்தில் கட்சித் தொண்டராக அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் மாவை சேனாதிராசா.


அறிவுப் புலம் உங்களுடையது. சிந்தனைக் களம் உங்களுடையது. உணர்வுப் பிழம்பாக நாங்கள் இளைஞர் இருக்கிறோம். உங்கள் பின் பட்டாளமாக வருவோம் என வாழ்ந்து காட்டியவர் மாவை சேனாதிராசா.


தமிழரசுக் கட்சிக்குள் உணர்வலைகளைத் தயக்கமின்றி வெளிகாட்டியவர்களுள் மாவை சேனாதிராசா முதன்மையாளர். 


படிப்பைத் தொடரவில்லை. பணி தேடும் ஆர்வத்தைக் கைவிட்டார். தமிழர் உரிமை மீட்பே வாழ்வியலாகக்கியவர் மாவை சேனாதிராசா.


அரசியலில் எதிர்பார்ப்புகள் இன்றி வாழ்வது எளிதல்ல. கட்சிக்குள் பதவி ஒருபுறம். மக்கள் மன்றத்தில் சார்பாளராதல் மறுபுறம். இவை அரசியல் வாழ்வு ஈர்ப்புகள். 


இவை வேண்டாம், தொண்டே போதும், தமிழர் உரிமை மீட்பே இலக்கு, என வாழ்ந்தவர் மாவை சேனாதிராசா. அறிவுப் புலத்தைத் தந்தை செல்வாவிடம் விட்டார். உணர்வுப் புலத்தில் பணிபுரிந்தார். 


போராட்டங்கள், களப் பணிகள், சிறை வாழ்க்கை எனக் கட்சிக்காக அவர் ஆற்றிய கைமாறு கருதாப் பணிகள் சொல்லில் அடங்கா. எழுத்தில் அடங்கா.


அமிர்தலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீது, மூவர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு. அரசியலமைப்புச் சார்ந்த வாதங்களை மு. திருச்செல்வம் முன் வைத்தார். வழக்குரை வாதங்களைப் படித்தேன்.  தமிழில் அவற்றைத் தொகுத்தேன். அதுவே ஈழத் தமிழர் இறைமை என்ற நூல்.


அக்காலத்தில் மாவை சேனாதிராசா சிறை வாழ்வில். நான் தமிழாக்கிய நூலின் படி அவருக்கு எப்படியோ கிடைத்தது. 


"அண்ணே, நீங்கள் தமிழாக்கிய வழக்குரை வாதங்களைப் படித்து என் அரசியல் அறிவைப் பெருக்கிக் கொண்டேன், சிறைக்காலத்தில்" என என்னிடம் அடிக்கடி கூறுவார் மாவை சேனாதிராசா.


அதே காலத்தில் நிலவரைவுத் திணைக்கள மேனாள் இணை ஆணையர் Deptuty Surveyor General (retired) ஜே. ஆர். சின்னத்தம்பி உடன் இணைந்து நான் ஆக்கிய நூல், தமிழ் ஈழம் நாட்டெல்லைகள்.


அந்த நூலின் படியையும் தன் சிறை வாழ்வில் மீண்டும் மீண்டும் படித்ததாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறுவார். 


நான் அவருக்குச் சிறையில் நூல்கள் வழி அறிமுகமானேன். எனினும் நேரில் நான் அவரைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் அவர் சிறையில் இருந்து வெளிவந்த பின்பே.


தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர், தமிழர் பொருளாதார இயக்கச் செயலாளர் எனத் திரு அமிர்தலிங்கம் எனக்கு யாழ்ப்பாணத்தில் ஒப்படைத்த பணிகள். அவற்றைச் செவ்வனே செய்வதில் மாவை சேனாதிராசா எனக்குத் துணை நின்றார். 


எனக்கு வயதில் குறைந்த தம்பி மாவை சேனாதிராசா. சென்னையில் தணிகாசலம் தெருவில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவை சேனாதிராசா இல்லத்தாரோடு தங்கி இருந்தார். தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் பணிபுரியுமாறு அழைத்தவர் திரு அமிர்தலிங்கம்.


அக்காலத்தில் நானும் மாவையாரும் இணைந்து பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டோம். சிறப்பாக, கடிதம் எழுதுவது, அச்சிடுவது தமிழகத் தலைவர்களுக்குக் கொடுப்பது ஆகிய பணிகள்.


சில ஆண்டுகளின் பின் அவர் திருச்சிக்கு இல்லத்தோடு சென்றாலும் சென்னைக்கு வரும் பொழுது என்னைச் சந்திப்பார். சென்னையில் என் வீட்டில் வெற்றிடமாக இருந்த அறை ஒன்றில் அவரும் மகன்களும் சென்னைக்கு எப்போதாவது வந்தால் தங்குவதை வழமையாக்கிக் கொண்டனர்.


அமிர்தலிங்கத்துக்குப் பின் நாடாளுமன்றத்தில் அவரிடத்திற்கு மாவை சேனைதிராசா வரவேண்டும் என்பதைக் கொழும்பில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன். அவரை ஆதரித்தேன்.


நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறை சென்னைக்கு வந்து என் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுப் பொறுப்புகளைத் தன்னிடம் தர வேண்டும், கடிதமாக எழுதி எனக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன்.


தமிழகத் தலைவர்களான கலைஞர் கருணாநிதி வைகோ மருத்துவர் இராமதாசு ஆகியோரையும் பிறரையும் சந்திக்க வேண்டும் என என்னிடம் கேட்பார். அழைத்துச் செல்வேன். 


ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க வேண்டும் என ஒரு முறை என்னிடம் தெரிவித்தார். அந்த ஏற்பாடுகளுக்காக நானும் அவரும் தில்லிக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்தோம். பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர்.


யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய பின், தமிழரசுக் கட்சிப் பணிகளில் ஈடுபட விரும்பினேன். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுப் பணிகளில் ஈடுபட விரும்பினேன். மாவை சேனாதிராசா ஆர்வம் காட்டவில்லை.


வவுனியாவில் கட்சிக் கூட்டம் ஒன்றில் நான் கருத்துக் கூறிக் கொண்டிருந்த பொழுது சுமந்திரன் குறுக்கிட்டார். சுமந்திரனை மாவை சேனாதிராசா கண்டித்தார்.  மேடைக்கு வந்த சுமந்திரன் தேவையின்றிக் குறுக்கிட்டமைக்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.


உணர்வுகள் மீ நிற்கும் தொண்டரான மாவை சேனாதாராசா, அறிவுப் புலத்தில் நாட்டம் கொள்ளாததால், தமிழரசுக் கட்சியின் வளர்ச்சியில் தாக்கம் தெரிந்தது. தமிழரின் குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். எனினும் அவருக்குக் கட்சிக்குள் ஆதரவு குறைந்தே வந்தது.


மாவை சேனாதிராசாவின் வரலாறு தமிழ்த் தேசிய உணர்ச்சிப் பிழம்பின் வரலாறு. ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில்  பிரிக்க முடியாத தொண்டராக, ஊழியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, முடிசூடிய தலைவனாக, தமிழரசுக் கொள்கைகளே வாழ்வியலாகக் கொண்ட மாவை சேனாதிராசா புகழ் வாழ்க.


அவர் நினைவைப் போற்றுவோம்.

இராமர் பாலம் கத்தோலிக்க எதிர்ப்பு

 மார்கழி 18 வெள்ளி (2 1 2026)


ஊடகத்தாருக்கு Press release


From

அ. மாதவன் A Madhavan

சிவ சேனை Siva Senai


கத்தோலிக்கர்களுடன் மதநல்லிணக்கம் பேசும் இலங்கைத் தமிழ் இந்துக்களே, சைவர்களே இதற்கு என்ன சொல்கிறீர்கள்? 


இத்நகைய மத வெறியர்கள் சமூகத்தில் இருக்கலாமா? 

சமூகம் இவர்களை ஒதுக்கப்படவேண்டாமா?

சிந்தியுங்கள் 

சைவர்களே இந்துக்களே 

களத்தில் இறங்குங்கள்


Tamil Sinhala Hindi and English versions of 


Catholic outpourings against Hindus in Mannar Sri Lanka 

Catholic outpourings against Lord Rama in Mannar Sri Lanka 

Catholic religious terror on Hindus in Mannar Sri Lanka 


தவிசாளர், நகரசபை. மன்னார்.

கனம் தவிசாளர் அவர்களுக்கு,

இனிய வணக்கம்!

மன்னார் நகரத்தின் நுழைவாயிலில்

சுற்றுலாத்துறை அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள பெயர்ப்பலகை தொடர்பாக

30.12.2025

மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் (பிரதான பாலத்தின் அருகாமையில்) சுற்றுலாத்துறை அமைச்சினால் இராமர் பாலம் தொடர்பான ஒரு பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது, இந்துசமயக் கடவுளர்களின் படங்களைத் தாங்கியதான இந்தப் பெயர்ப்பலகையானது மன்னாரின் மதநல்லிணக்கத்தைப் பாதிப்பதாகவும், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் சீர்குலைத்து முறுகல்நிலையை, குழப்பத்தைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது. இப்பெயர்ப்பலகை தொடர்பாக பொதுமக்கள் பலர் தமது அதிருப்தியை, எதிர்ப்பை நாளாந்தம் அனைத்து மத எமக்குத் தெரிவித்தவண்ணமே உள்ளனர். எனவே மன்னாரில் உள்ள மக்களின் நன்மைகருதி இப்பெயர்ப்பலகையை இவ்விடத்தில் இருந்து நீக்குவதற்கு ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இது தொடர்பான தங்களின் நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்படிக்கு,

உண்மையுள்ள,

அருட்தந்தை பி, கிறிஸ்துநாயகம்

மன்னார் மறைக்கோட்ட முதல்வர்

பங்குத்தந்தை - புனித செபஸ்தியார் பேராலயம்

மன்னார்


සිංහල සඳහා පහළට අනුචලනය කරන්නතවිසලාර්, නගර සභාව. මන්නාරම.

ගරුතවිසලාර් මහතා වෙත,

සුභ පැතුම්!

මන්නාරම නගර පිවිසුමේ සංචාරක අමාත්‍යාංශය විසින් සවිකර ඇති නාම පුවරුව සම්බන්ධයෙන්

2025.12.30


රාමා පාලමට අදාළ නාම පුවරුවක් මන්නාරම නගර පිවිසුමේ (ප්‍රධාන පාලම අසල) සංචාරක අමාත්‍යාංශය විසින් ස්ථාපනය කර ඇත. හින්දු දෙවිවරුන්ගේ රූප දරන මෙම නාම පුවරුව මන්නාරමේ ආගමික සමගියට බලපාන අතර ආගම් අතර සමගිය කඩාකප්පල් කරමින් ආතතිය හා ව්‍යාකූලත්වය ඇති කරයි. මෙම නාම පුවරුවට එරෙහිව බොහෝ මහජනතාව දිනපතාම තම අතෘප්තිය සහ විරෝධය සියලුම ආගම්වල අපට ප්‍රකාශ කරමින් සිටිති. එබැවින්, මන්නාරම ජනතාවගේ යහපත සඳහා මෙම නාම පුවරුව මෙම ස්ථානයෙන් ඉවත් කිරීමට පියවර ගන්නා ලෙස මම ඔබෙන් නිහතමානීව ඉල්ලා සිටිමි.

මේ සම්බන්ධයෙන් ඔබගේ ක්‍රියාමාර්ගය පිළිබඳව මම මගේ කෘතඥතාව පළ කරමි.

ඔබගේ අවංක,

පූජ්‍ය පී. ක්‍රිස්ටෝනායකම්

මන්නාරම අගරදගුරු පදවියේ විදුහල්පති

පාර්ශව-පියා - ශාන්ත සෙබස්තියන් ආසන දෙව්මැදුර

මන්නාරම


सिंहल तविसलार, नगर सभा के लिए नीचे स्क्रॉल करें। मन्नार।

माननीय तविसलार को,

नमस्ते!

मन्नार शहर के एंट्रेंस पर टूरिज्म मिनिस्ट्री द्वारा लगाई गई नेमप्लेट के बारे में

30.12.2025

मन्नार शहर के एंट्रेंस (मेन ब्रिज के पास) पर टूरिज्म मिनिस्ट्री द्वारा राम ब्रिज से जुड़ी एक नेमप्लेट लगाई गई है। यह नेमप्लेट, जिस पर हिंदू देवताओं की तस्वीरें हैं, मन्नार के धार्मिक मेलजोल पर असर डाल रही है और धर्मों के बीच एकता को बिगाड़ रही है और तनाव और कन्फ्यूजन पैदा कर रही है। कई आम लोग रोज़ाना हम सभी धर्मों के लोगों के सामने इस नेमप्लेट को लेकर अपनी नाराज़गी और विरोध ज़ाहिर कर रहे हैं। इसलिए, मैं आपसे विनम्रतापूर्वक रिक्वेस्ट करता हूँ कि मन्नार के लोगों की भलाई के लिए इस नेमप्लेट को इस जगह से हटाने के लिए कदम उठाएँ।

इस बारे में आपके एक्शन के लिए मैं आपका शुक्रिया अदा करता हूँ।

आपका,

रेवरेंड फादर पी, क्रिस्टोनायकम

मन्नार आर्चडायोसिस के प्रिंसिपल

पार्ट-फादर - सेंट सेबेस्टियन कैथेड्रल

मन्नार


To

Tavisalar, Nagara Sabha. Mannar.

To the Hon.Tavisalar,

Greetings!

Regarding the nameplate installed by the Ministry of Tourism at the entrance of Mannar city

30.12.2025

A nameplate related to the Rama Bridge has been installed by the Ministry of Tourism at the entrance of Mannar city (near the main bridge). This nameplate, which bears the images of Hindu gods, is affecting the religious harmony of Mannar and disrupting the unity between religions and creating tension and confusion. Many members of the public have been expressing their dissatisfaction and opposition to this nameplate to us of all religions on a daily basis. Therefore, I humbly request you to take steps to remove this nameplate from this place for the benefit of the people of Mannar.

I express my gratitude for your action in this regard.

Yours sincerely,

Reverend Father P, Christonayakam

Principal of the Mannar Archdiocese

Part-Father - St. Sebastian's Cathedral

Mannar

மதமாற்றத் தடைக்கான உலக நாள்

 हिंदी सिंगाला इंग्लिश वर्जन के लिए कृपया नीचे स्क्रॉल करें

හින්දි සංගලා ඉංග්‍රීසි අනුවාද සඳහා කරුණාකර පහළට අනුචලනය කරන්න.

For Hindi, Snhala, English versions please scroll down


கார்த்திகை 6 சனிக்கிழமை 


மதமாற்றத் தடைக்கான உலக நாள்


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


கடந்த எட்டு ஆண்டுகளாக 

சைவத்தமிழ் மரபு அழிந்து போகாமல் உடைந்து போகாமல் அற்றுப்போகாமல் 

நமக்கு வாய்த்த இந்தப் பிறவியில் எங்களால் முடிந்தவற்றைச் சிவ சேனையாகச் செய்து வருகிறோம்.


1365 ஆண்டுகளுக்கு முன்பு திருவடிப் பேறு எய்தியவர் திருநாவுக்கரசர். மதம் மாற்றத் தடைக்கு வழிகாட்டி அவர். 

யானையால் மிதித்தாலும் மதமாற்றத் தடைப் போராளி நான். 

கல்லிலே கட்டிக் கடலில் போட்டாலும் மதமாற்றத் தடைப் போராளி நான்.

சுண்ணாம்பறைக்குள் வெம்மைக்குள் அடைத்தாலும் மதமாற்ற தடைப் போராளி நான்.

அவரே திருநாவுக்கரசர். 


ஈனர் என்றும் எத்தர் என்றும் மதமாற்றிகளை அழைத்தவர் 1386 ஆண்டுகளுக்கு முன் திருவடிப் பேறேய்திய மதமாற்றத் தடைப் போராளி திருஞானசம்பந்தர்.


புத்தர்களை மீண்டும் சைவ மதத்திற்கு மாற்றிய பெருந்தகை, மதமாற்றத் தடைப் போராளி மாணிக்கவாசகர் 1135 ஆண்டுகளுக்கு முன் திருவடிப் பேறு எய்தினார்


கத்தோலிக்க மதமாற்ற வெறியன் பிரான்சிஸ் சேவியரை மன்னாரில் இருந்து ஓட ஓட விரட்டிய மதமாற்றத் தடைப் போராளி சங்கிலியன் 416 ஆண்டுகளுக்கு முன் திருவடிப் பேறெய்தினான்.


136 ஆண்டுகளுக்கு முன்பு திருவடிப் பேறெய்திய மதமாற்றத் தடைப் போராளி ஆறுமுக நாவலர்.


மதமாற்ற தடுப்பு சைவ சமயத்துக்கு அரண். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சங்கிலியன், ஆறுமுக நாவலர் என நமக்குத் தெரிந்த மதம் மாற்றத் தடைப் போராளிகள். இவர்களைப் போன்றே சைவ சமயத்தின் பல இலட்சம் எண்ணிக்கையிலான போராளிகளே, இன்று நானும் நீங்களும் சிவபெருமானை உள்ளார்ந்து நெஞ்சார்ந்து நெஞ்சத்தை அவருக்கே இடமாக வைத்து, நீரும் பூவும் தூபமும் மறவாது வழிபடும் நிலையைத் தந்தவர்கள்.


மத மாற்றத் தடைப் போராளிகளின் நினைவு மாதம் கார்த்திகை. சிறப்பாக மக நாள். அஃதே ஆறுமுகநாவலர் நினைவு நாள். 


ஆறுமுகம் நாவலர் நினைவு நாளையே உலக மதமாற்றத் தடை நாளாக்கினோம். 


இந்த ஆண்டு கார்த்திகை 25ஆம் நாள், மகம் நாள், ஆறுமுக நாவலர் நினைவு நாள், மதமாற்றத் தடைக்கான உலக நாள்.


शनिवार, कार्तिगई 6


विश्व धर्म परिवर्तन विरोधी दिवस


मारवनपुलावू के. सचिदानंदन


पिछले आठ सालों से, हम शिव सेनाई श्रीलंका में, इस जीवन में, जन्म के तोहफ़े में, अपनी पूरी कोशिश कर रहे हैं कि शैव तमिल परंपरा खत्म न हो, टूटे नहीं, गायब न हो।


थिरुनावुक्करासर, जिन्हें 1365 साल पहले अमरता मिली थी, वही हैं जिन्होंने हमें धर्म परिवर्तन पर रोक लगाने की ओर गाइड किया।

उन्होंने कहा, भले ही हाथी मुझे कुचल दे, मैं धर्म परिवर्तन के खिलाफ़ लड़ने वाला हूँ।

उन्होंने कहा, भले ही मुझे पत्थर से बांधकर समुद्र में फेंक दिया जाए, मैं धर्म परिवर्तन के खिलाफ़ लड़ने वाला हूँ।

उन्होंने कहा, भले ही मुझे पत्थर से बांधकर समुद्र में फेंक दिया जाए, मैं धर्म परिवर्तन के खिलाफ़ लड़ने वाला हूँ।

उन्होंने कहा, भले ही मुझे बहुत ज़्यादा गर्मी में चूना पत्थर की गुफा में बंद कर दिया जाए, मैं धर्म परिवर्तन के खिलाफ़ लड़ने वाला हूँ।

वह थिरुनावुक्करासर थे।


धर्म बदलने वालों को नीच या घटिया और जादूगर या नकली कहने वाला थिरुगननसंबंदर था, जो धर्म बदलने के खिलाफ लड़ने वाला था और 1386 साल पहले अमर हो गया था।


महान धर्म बदलने के खिलाफ लड़ने वाले मणिकवसागर, जिन्होंने बौद्धों को वापस शैव धर्म में बदला, 1135 साल पहले अमर हो गए थे।


धर्म बदलने के खिलाफ लड़ने वाले राजा संगिल्यन, जिन्होंने मशहूर कैथोलिक प्रचारक फ्रांसिस ज़ेवियर को मन्नार से खदेड़ दिया था, 416 साल पहले अमर हो गए थे।


धर्म बदलने के खिलाफ लड़ने वाले अरुमुगा नवलार, जिन्होंने 136 साल पहले अमर हो गए थे।


धर्म बदलने के खिलाफ लड़ाई शैव धर्म का किला है। धर्म बदलने के खिलाफ लड़ने वाले जिन्हें हम थिरुनावुक्करासर, थिरुगननसंबंदर, मणिकवसागर, संगिल्यन और अरुमुगा नवलार के नाम से जानते हैं। इनकी तरह, शैव धर्म के लाखों लड़ाकों की वजह से, आज आप और मैं भगवान शिव की पूजा पूरे दिल और दिमाग से करने की 10000 साल पुरानी परंपरा को आगे बढ़ा रहे हैं, बिना जल, फूल और धूप चढ़ाना भूले।


धर्मांतरण विरोधी लड़ाकों की याद का महीना कार्तिगई है। खासकर माघ के दिन। वह अरुमुगा नवलार मेमोरियल डे है।


हमने अरुमुगा नवलार मेमोरियल डे को वर्ल्ड एंटी-कनवर्जन डे बनाया है।


इस साल, कार्तिगई की 25 तारीख को माघ का दिन, अरुमुगा नवलार मेमोरियल डे, वर्ल्ड एंटी-कनवर्जन डे है।


කාර්තිගයි 6 වන සෙනසුරාදා


ආගමික පරිවර්තනයට එරෙහි ලෝක දිනය


මරවන්පුලව් කේ. සචිදානන්දන්


පසුගිය වසර අටක කාලය තුළ, ශ්‍රී ලංකාවේ ශිව සේනායි හි අපි, මේ ජීවිතයේ දී, උපතේ ත්‍යාගය වන ශයිව දෙමළ සම්ප්‍රදාය විනාශ නොවන බව, බිඳී නොයන බව, අතුරුදහන් නොවන බව දැකීමට අපගේ උපරිමය කරමින් සිටිමු.


වසර 1365 කට පෙර අමරණීය තත්ත්වය ලබා ගත් තිරුනාවුක්කරසාර්, ආගමික පරිවර්තනය තහනම් කිරීම සඳහා අපට මඟ පෙන්වූයේ ඔහු ය.


අලියෙකු විසින් පාගා දැමුවත්, මම ආගමික පරිවර්තනයට එරෙහිව සටන් කරන්නෙක් බව ඔහු පැවසීය.


ගලක බැඳ මුහුදට විසි කළත්, මම ආගමික පරිවර්තනයට එරෙහිව සටන් කරන්නෙක් බව ප්‍රකාශ කිරීමට දිවි ගලවා ගත්තෙමි.


දැඩි උණුසුමක් තුළ හුණුගල් ගුහාවක සිර කළත්, මම ආගමික පරිවර්තනයට එරෙහිව සටන් කරන්නෙක් බව ඔහු ප්‍රකාශ කළේය.


ඒ තිරුනාවුක්කරසාර්.


ආගමට හැරුණු අයව පහත් හෝ කාලකණ්ණි සහ ජග්ලර්වරුන් හෝ ව්‍යාජ ලෙස හැඳින්වූ තැනැත්තා තිරුඥානසම්බන්ධර් ය. ඔහු වසර 1386 කට පෙර අමරණීය තත්ත්වය ලබා ගත් ආගමික පරිවර්තනයට එරෙහි සටන්කරුවෙකි.


බෞද්ධයන් නැවත සයිව ආගමට හරවා ගත් මහා පරිවර්තන විරෝධී සටන්කරු මාණික්කවාසගර් වසර 1135 කට පෙර අමරණීය තත්ත්වය ලබා ගත්තේය.


මන්නාරමේ සිට ප්‍රසිද්ධ කතෝලික එවැන්ජලිස්ත ෆ්‍රැන්සිස් සේවියර් නම් ක්‍රිස්තියානි ආගමට හරවා යැවූ සංගිලියන් රජු වසර 416 කට පෙර අමරණීය තත්ත්වය ලබා ගත්තේය.


වසර 136 කට පෙර අමරණීය තත්ත්වය ලබා ගත් ආරුමුග නාවලර් නම් පරිවර්තන විරෝධී සටන්කරුය.


ආගමට හැරවීමේ විරෝධී සටන ශයි ආගමේ බලකොටුවයි. තිරුනාවුක්කරසර්, තිරුඥානසම්බන්ධර්, මාණික්කවාසගර්, සංගිලියන් සහ ආරුමුග නාවලර් ලෙස අප දන්නා පරිවර්තන විරෝධී සටන්කරුවන්. මොවුන් මෙන්, ශෛව ආගමේ මිලියන සංඛ්‍යාත සටන්කරුවන් නිසා, අද ඔබ සහ මම අපගේ මුළු හදවතින්ම සහ මනසින් ශිව දෙවියන්ට නමස්කාර කිරීමේ වසර 10000 ක උරුමය දිගටම කරගෙන යමු, ජලය, මල් සහ සුවඳ දුම් පූජා කිරීමට අමතක නොකර.


ආගම් පරිවර්තන විරෝධී සටන්කරුවන් සිහිපත් කිරීමේ මාසය කාර්තිගයි ය. විශේෂයෙන් මාඝ දිනයේදී. ඒ ආරුමුග නාවලර් අනුස්මරණ දිනයයි.


අපි ආරුමුග නාවලර් අනුස්මරණ දිනය ලෝක ආගම් පරිවර්තන විරෝධී දිනය බවට පත් කර ඇත්තෙමු.


මෙම වසරේ කාර්තිගයි හි 25 වන දින මාඝ දිනය, ආරුමුග නාවලර් අනුස්මරණ දිනය, ලෝක ආගම් පරිවර්තන විරෝධී දිනයයි.


Saturday, Karthigai 6


World Day for anti - Religious Conversion


Maravanpulavu K. Sachidanandan


For the past eight years, we in Siva Senai Sri Lanka, have been doing our best in this life, the gift of birth, to see that the Saiva Tamil tradition does not perish, does not break, does not disappear.


Thirunavukkarasar, who attained the immortal status  1365 years ago, is the one who guides us towards prohibition of religious conversion.

Even if trampled by an elephant, I am a fighter against religious conversion he said.

Even if tied to a stone and thrown into the sea, I am a fighter against religious conversion he survived to declare.

Even if locked in a limestone cave inside intense heat, I am a fighter against religious conversion, he proclaimed.

That was Thirunavukkarasar.


The one who called the converts as mean or wretch and jugglers or counterfeits was Thirugnanasambandar, the fighter against religious conversion who attained the immortal status 1386 years ago.


The great anti-conversion fighter Manickavasagar, who reconverted the Buddhists back to Saivism, attained immortal status 1135 years ago


The anti-conversion fighter King Sangilyan, who drove the inquisition famed Catholic evangelist Francis Xavier from Mannar, attained immortal status 416 years ago.


The anti-conversion fighter Arumuga Navalar, who attained immortal status 136 years ago.


The anti-conversion fight is the fortress of Saivism. The anti-conversion fighters we know as Thirunavukkarasar, Thirugnanasambandhar, Manickavasagar, Sangilyan, and Arumuga Navalar. Like these, because of millions of fighters of the Saiva religion, today you and I continue the 10000 year heritage of worshiping Lord Shiva with all our hearts and minds, without forgetting to offer water, flowers and incense.


The month of remembrance of the anti-conversion fighters is Karthigai. Especially on the Magha day. That is the Arumuga Navalar Memorial Day.


We have made the Arumuga Navalar Memorial Day the World Anti-Conversion Day.


This year, the 25th of Karthigai is the Magha day, the Arumuga Navalar Memorial Day, the World Anti-Conversion Day.