Tuesday, April 30, 2024

திருநாவுக்கரசு நாயனார் பயணத் தொலைவுகள்

 கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியது இந்த பதிவை முடிக்க. பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதிந்துள்ளேன். சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?

 இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்

திருவாமூர் – பாடலிபுத்திரம் 35

பாடலிபுத்திரம் – திருவதிகை 25

திருவதிகை – திருப்பாதிரிப்புலியூர் 22

திருப்பாதிரிப்புலியூர் – திருவதிகை 22

திருவதிகை – திருமாணிக்குழி 15

திருமாணிக்குழி – திருதினைநகர் 23

திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23

திருமாணிக்குழி – திருவீரட்டானம் 16

திருவீரட்டானம் – திருவெண்ணைநல்லூர் 125

திருவெண்ணைநல்லூர் – திருவாமாத்தூர் 22

திருவாமாத்தூர் – திருக்கோவலூர் 37

திருக்கோவலூர் – திருபெண்ணாடகம் 86

திருபெண்ணாடகம் – திருத்தூங்கானை 0.5

திருநாரையூர் – சீர்காழி 67

திருவரத்துறை – திருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58

திருமுதுகுன்றம் – சிதம்பரம் 44

சிதம்பரம் – திருப்பாப்புலியூர் 42

திருப்பாப்புலியூர் – சிதம்பரம் 42

சிதம்பரம் – திருவேட்களம் 5

திருவேட்களம் – திருக்கழிப்பாலை 4

திருக்கழிப்பாலை – திருநாரையூர் 84

திருநாரையூர் – சீர்காழி 62

சீர்காழி – திருக்கோலக்கா 166

திருக்கோலக்கா – திருக்கறுப்பறியலூர் 95

திருக்கறுப்பறியலூர் – திருப்புன்கூர் 98

திருப்புன்கூர் – திருநீடூர் (நீடூர்) 18

திருநீடூர் (நீடூர் – குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10

திருநன்றியூர் – திருநனிப்பள்ளி 14

திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52

(செம்பனார்கோவில்) நாகப்பட்டினம் – மயிலாடுதுறை 55

மயிலாடுதுறை – திருத்துருத்தி 15

திருத்துருத்தி – திருவேள்விக்குடி 3

திருவேள்விக்குடி – எதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4

எதிர்கொள்பாடி – திருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9

திருக்கோடிக்கா – திருவாவடுதுறை, 3

திருவாவடுதுறை – திருவிடைமருதூர், 10

திருவிடைமருதூர் – திருநாகேஸ்வரம் 5

திருநாகேஸ்வரம் – பழையாறை 14

பழையாறை – திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1

திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம் – திருநல்லூர், 14

திருநல்லூர் – திருக்கருகாவூர், 26

திருக்கருகாவூர் – திருவாவூர் திருவாவூர் – புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.

திருவாவூர் – திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது

திருப்பாலைத்துறை – திருப்பழனம் 19

திருப்பழனம் – திங்களூர் 2

திங்களூர் – திருச்சோற்றுத்துறை 10

திருச்சோற்றுத்துறை – திருநல்லூர் 35

திருநல்லூர் – திருவாரூர் 49

திருவாரூர் – திருவலஞ்சுழி 47

திருவலஞ்சுழி – திருகுடமுக்கு 13

திருகுடமுக்கு – திருநாவலூர் 108

திருநாவலூர் – திருச்சேறை 122

திருச்சேறை – திருகுடவாயில் (குடவாசல்) 5

திருகுடவாயில் – திருநறையூர் 11

திருநறையூர் – திருவாஞ்சியம் 18

திருவாஞ்சியம் – திருப்பெருவேளூர் 42

திருப்பெருவேளூர் – திருவாரூர் 49

திருவாரூர் – திருவலிவலம் 21

திருவலிவலம் – திருக்கீழ்வேளூர் 16

திருக்கீழ்வேளூர் – திருக்கன்றாப்பூர் 16

திருக்கன்றாப்பூர் – திருவாரூர் 16

திருவாரூர் – திருப்புகலூர் 21

திருப்புகலூர் – திருச்செங்காட்டங்குடி 4

திருச்செங்காட்டங்குடி – திருநள்ளாறு 15

திருநள்ளாறு – திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268

திருப்புகலூர் – பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)

பூம்புகலூர் – திருக்கடவூர் 296

திருக்கடவூர் – திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24

திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33

திருவீழிமிழலை – திருவாஞ்சியம் 9

திருவாஞ்சியம் – திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90

திருமறைக்காடு – திருவாய்மூர் 37

திருவாய்மூர் – திருமறைக்காடு 37

திருமறைக்காடு – திருவீழிமிழலை 93

திருவீழிமிழலை – திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47

திருநாகைக்காரோணம் – திருவாவடுதுறை 62

திருவாவடுதுறை – பழையாறை 25

பழையாறை – திருவானைக்கா 87

திருவானைக்கா – திருவாலம்பொழில் 44

திருவாலம்பொழில் – திருக்கானுர் 184

திருக்கானுர் – திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176

திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41

திருக்கண்டியூர் – மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21

மேலைத்திருக்காட்டுப்பள்ளி – திருவானைக்கா 32

திருவானைக்கா – திருவெறும்பியூர் 15

திருவெறும்பியூர் – திருச்சி 11

திருச்சி – திருப்பராய்த்துறை 16

திருப்பராய்த்துறை – திருப்பாதிரிப்புலியூர் 192

திருப்பாதிரிப்புலியூர் – திருப்பைங்ங்கீலி, 178

திருப்பைங்ங்கீலி – அண்ணாமலை 232

அண்ணாமலை – திருவோத்தூர் 484

திருவோத்தூர் – காஞ்சி 30

காஞ்சி – திருமால்பேறு 22

திருமால்பேறு – காஞ்சி 22

காஞ்சி – திருக்கழுக்குன்றம் 52

திருக்கழுக்குன்றம் – திருவான்மியூர் 52

திருவான்மியூர் – மயிலாப்பூர் 8

மயிலாப்பூர் – திருவொற்றியூர் 17

திருவொற்றியூர் – திருப்பாச்சூர் 56

திருப்பாச்சூர் – பழையனூர் 15

பழையனூர் – திருவாலங்காடு 2

திருவாலங்காடு – திருக்காரிக்கரை (ராமகிரி) 370

திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338

திருக்காளாத்தி – திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396

திருப்பருப்பதம்  கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843

திருவையாறு – திருநெய்த்தானம் 2

திருநெய்த்தானம் – திருமழபாடி 17

திருமழபாடி – திருப்பூந்துருத்தி 21

திருப்பூந்துருத்தி – சீர்காழி 94

சீர்காழி – திருப்புத்தூர் 210

திருப்புத்தூர் – மதுரை 65

மதுரை – திருப்பூவணம் 20

திருப்பூவணம் – ராமேஸ்வரம் 180

ராமேஸ்வரம் – திருநெல்வேலி 215

திருநெல்வேலி – திருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221

திருக்கானப்பேர் – பூம்புகலூர் 191

பூம்புகலூர் – திருப்புகலூர் 2

———–

மொத்த தூரம் 14,380

வெறுமனே நாம் எங்கே இருக்கிறோம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்தார்கள் என்று மட்டும் சிந்தித்து குறைந்தது இன்று முதல் தினசரி அருகில் உள்ள கோவிலுக்கு தவறாமல் செல்வது என்ற சங்கல்பம் மட்டுமாவது எடுத்துக்கொண்டால் இந்த பதிவை இட நான் பட்ட பாட்டிற்கு பலன் கண்டதாக எடுத்துக்கொள்வேன்.