[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://youtu.be/1zCkhJxM8jk
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0YANQQ5PbijLEQipn3ishqVuyXsYqUt3ef6LxpWBx7nmhHvy6FYY6LuM2rhdEaQ5Hl&id=100069945033329&sfnsn=wa&mibextid=6aamW6
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1H4oN1TBCE/
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1AgbsTDdgW/
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1CS7trkDoV/
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/1CuUvQi52o/
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://www.facebook.com/share/v/182L8WAUs7/
[27/1, 7:52 PM] சச்சிதானந்தன் க மறவன்புலவ: https://youtu.be/0B6QwI-JIfM?si=u301K7shl6ZaaFFI
சுமந்திரன்
https://youtu.be/0B6QwI-JIfM?si=TJLklYM95roZ-Jtz
சுமந்திரன்
https://www.facebook.com/share/v/1C9rwrqe31/
மீரா சங்கரின் முன்
https://www.facebook.com/share/v/1W3j43tQdx/
மாவையும் தில்லியும்
https://www.facebook.com/share/v/1Gz2nH2YPk/
மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (1)
கலியுகம் 5064 தை மாதம் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை பதினோராம் நாள் மூலம் நட்சத்திரம்.
யாழ்ப்பாணம் இணுவில் மருதனார்மடம் மேக் லீயோட் மருத்துவமனை.
கரவெட்டியின் மதியாபரணம் குடத்தனையில் முடித்த மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவிக்குப் பேறுகாலம். அன்று காலை மகப்பேறு மருத்துவர்கள் கூடினார்கள். மதியாபரணத்தின் மனைவி சுமந்திரனைப் பெற்றெடுத்தார்.
அறிவு சார்ந்த ஆசிரியப் பெருமக்களின் மகன் மதியாபரணம். அத்தகைய ஆசிரியப் பெருந்தகைகளின் மகள் அவர் துணைவியார்.
மதியாபரணம் இணையரின் அறிவு அறிந்த மக்கட்பேறு சுமந்திரன். மருதனாமடத்தில் பிறந்தவர். குடத்தனையில் ஆசிரியப் பெருந்தகைகளின் மடிகளில் வளர்ந்தவர். பெற்றோருடன் கொழும்புக்குச் சென்றார்.
மேட்டுக்குடியினர் கல்வி பயிலும் கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர். உயர்நிலை கல்வி முடித்ததும் சென்னை, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பட்டதாரி மாணவர். இயற்பியல் முதன்மைப் பாடம்.
கொழும்பு மீண்டார். சட்டக் கல்லூரி மாணவரானார். பட்டம் பெற்றார். வழக்குரைஞர் ஆனார். பட்ட மேற்படிப்பில் நாட்டம் கொண்டு ஆத்திரேலியா மெல்போன் நகரில் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இலத்திரனைவியல் மற்றும் மின்னம்பலச் சட்டங்கள் படித்து முதுநிலைப் பட்டதாரி ஆனார்.
எப்பொழுதும் விவிலியத்தைக் கையிலேயே வைத்திருக்கும் மாணவனாக மெல்போனில் நான் அவரை அறிவேன் என இக்காலத்தில் பிரிஸ்பேனில் வாழும் கிரிஷ் இளங்கோ கூறுவார்.
கொழும்பில் மூத்த வழக்கறிஞர் கனக ஈஸ்வரனிடம் பயிற்சியாளராகச் சுமந்திரன் இணைந்தார். அக்காலத்தில் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா சம்மந்தன், கட்சிக்காகப் புதுமுகங்களை, இளைஞர்களைத் தேடிக்கொண்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் ஈவிரக்கமற்றவர்கள் எனக் கருதுபவர், வெளிப்படையாகவே சொல்பவர், சம்பந்தன். போராளிகளின் முகமாக பயங்கரவாதிகளின் முகமாக ஈழத் தமிழர் அரசியல் தெரிவதை அவர் விரும்பவில்லை. போராளிகளையும் வன்முறைப் போரையும் உள்ளத்தால் மறுத்தவர், உதடுகளால் வெளிப்படையாகச் சொல்பவர் சம்பந்தன். மாற்று முகங்களை, அறிவு சார்ந்த முகங்களைச் சம்பந்தன் தேடிக்கொண்டிருந்தார்.
மூத்த வழக்கறிஞர் கனக ஈஸ்வரன் விதந்துரைக்க, இளம் சட்டத்தரணி சுமந்திரனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார், தமிழரசுக் கட்சியில் சேர்த்துக் கொண்டார், தேசியப் பட்டியலில் 2010இல் 46 வயதினரான சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கினார் சம்பந்தன்.
மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (3)
கண்டி அரசன் இராசசிங்கனின் முதலமைச்சர். ஆங்கிலேய அரசு கண்டி அரசை வீழ்த்த முனைகிறது. ஓயிட் என்ற ஆங்கிலேயத் தளபதி. அவரூடாக அவிசாவளையில் தங்கி இருந்த ஆளுநர் நோர்தோடு முதலமைச்சர் பேசுகிறார். முதலமைச்சரே காட்டிக் கொடுக்கிறார். கயமைத்தனத்தைப் பொறுக்காத கண்டி அரசர் முதலமைச்சரின் கழுத்தை அறுக்கிறார்.
கயவர் பிலிமத்தலாவை. அவர் பெயரில் அவர் வாழ்ந்த ஊர். கொழும்பிலிருந்து கண்டிக்குப் போகும் நெடுஞ்சாலையில் கடுகண்ணாவையைத் தாண்டிப் பேராதனைச் சந்திக்கு முன்பு வருகின்ற ஊரே பிலிமத்தலாவை.
சிங்கள புத்த மரபுகளை உடைக்க வேண்டும். தமிழ்ச் சைவ வாழ்வியலை அளிக்க வேண்டும். பயிற்சி கொடுக்கிறார்கள். கயமைக்குப் பெயர் பெற்ற பிலிமத்தலாவையில். மெதடித்த திருச்சபையின் குருத்துவப் பயிற்சி நிலையம், மதமாற்றிகள் பயிற்சி நிலையம், அமைந்த ஊர் பிலிம்த்தலாவை.
காட்டிக் கொடுக்கும் கயமையைத் தொடர்கின்ற கயமை நிலையத்தின் இருப்பிடம் பிலிமத்தலாவை. மண்ணின் மரபுகளை அழிக்க உடைக்க சிதறடிக்க ஊழியர்களை உருவாக்கும் நிலையம் பிலிமத்தலாவையில்.
அங்கே பயின்றவர்கள் பயில்பவர்கள் பயிலப் போபவர்கள் மெதடித்த திருச்சபையின் தேவாலய குருக்கள். Theological College Pilimathalawa. அந்தக் கல்லூரிக்குள் நுழைந் து வெளியே வராமல் மெதடித்த திருச்சபையின் பாதிரியார் ஆக முடியாது. பாதிரியார்களுள் ஒருவரே மெதடித்த திருச்சபையின் துணை ஆயர் Deputy Bishóp, இணை ஆயர் Auxiliary Bishop ஆயர் Bishop ஆகலாம். தலைவர் President ஆகலாம். துணைத் தலைவர் Vice president ஆகலாம்.
கயமையின் இருப்பிடம் பிலிமத்தலாவை. பிலிம்த்தலாவை குருத்துவக் கல்லூரியில் பயின்றவரே தேவாலயங்களில் உரை மேடையில் போதகர் preacher ஆகலாம்.
குடத்தனை பொன்னு மாஸ்டர் - இலில்லி அம்மையார் இணையரின் இரண்டாவது மகள் புஷ்பராணியின் மகனே சுமந்திரன். நூறு வயது வரை வாழ்ந்த பொன்னு மாஸ்டர், தென்னிந்திய திருச்சபையின் குடத்தனைச் சார்பாளர். உடன்பிறப்புகளான தங்கம்மா, கந்தையா, வேலுப்பிள்ளை ஆகியோர் தமிழர் - சைவர் ஆகவே தொடர, பொன்னு மாஸ்டர் மதம் மாறியவர்.
மாணவப் பருவம், சட்டத் தொழில்முறை வாழ்க்கை என இளமை தொடக்கம் கிறித்தவப் போதகராகச் சுமந்திரன். சிறந்த தேவாலய உரை மேடைப் போதகர் எனச் சான்றிதழ்கள் பெற்றவர் சுமந்திரன். வெள்ளவத்தை தேவாலயத்தில் இவரின் உரைகளைக் கேட்பதற்காகவே கிறித்தவர் பெருமளவில் கூடுவர்.
சிறந்த போதகர் என்பதால் போதகர் பதவி நிலைகளில் உயர்ச்சி பெற்ற முயற்சியாளர். 44ஆம் வயதில் மெதடித்த திருச்சபையின் துணைத் தலைவராகப் பதவியேற்றவர். 2 ஆண்டு காலம் பதவி வகித்தவர்.
மெதடித்த திருச்சபையின் செயல்பாடுகளை ஆட்சி செய்யும் திறமை இவரிடமிருந்தது. புத்தர்களையும் சைவர்களையும் மதம் மாற்றும் நோக்கோடு மெதடித்த திருச்சபையின் கட்டமைப்புக்கு மெருகூட்டியவர். தோராயமாக 50 ஊழியர்கள் சமகாலத்தில் மெதடித்த திருச்சபைக்காக மதம் மற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை மேற்பார்த்தவர்.
மெதடித்த திருச்சபையின் மதமாற்றிகள் சிங்கள மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் எதிர்ப்பைப் பெற்றதை மெதடித்த திருச்சபையின் ஆண்டறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
மதம் மற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு: கடந்த ஆண்டில் புதிய இடங்களில் மதம் மாற்றும் முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தோம். புதிதாக மதம் மாறியவர்களை அச்சுறுத்தினார்கள். அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள் உள்ளூர் சங்கங்களில் அவர்களுடைய உறுப்புரிமையை நீக்கினார்கள். குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைகளையும் கேலி செய்தார்கள். பாடசாலைகளில் துன்புறுத்தினார்கள். புதிய இடங்களுக்கு நாம் அனுப்பும் மதமாற்றிகளைத் துன்புறுத்தினார்கள். எமக்கு எதிராகத் துண்டு வெளியீடுகளைப் பரப்பினார்கள். சுவரொட்டிகளை ஒட்டினார்கள். எங்களைப் பற்றிய பொய்ச் செய்திகளை பரப்ப ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினார்கள். எங்களை துர்நடத்தையாளர் எனப் பழித்தார்கள். எங்களை ஏசவும் திட்டவும் ஆட்களை அனுப்பினார்கள். சிலர் எங்களைத் தாக்கினார்கள். இதனால் நம் சமயத்தவரும் தொண்டர்களும் தாக்குதலுக்காளானார்கள். இவ்வாறான துன்பங்களைத் தாங்கிக் கொள்ள ஆண்டவர் எமக்கு அருளுகிறார். அத்துடன் இத்துன்பங்களுக்கு தாங்கிக் கொண்ட எங்களோடு ஆண்டவரின் இரட்சிப்பில் அவருடைய இராச்சியத்தில் புதிய பலர் உறுப்பினர்கள் ஆகியுள்ளார்கள். எங்களுக்காக நீங்கள் தொடர்ந்து வழிபடுங்கள்.
சுமந்திரன் துணைத் தலைவராகப் பதவி வகித்த மெதடித்த திருச்சபை, மதமாற்றிகளை அனுப்பியதையும் அவர்கள் துன்புற்றதையும் மேற்கண்டவாறு தனது ஆண்டறிக்கையில் ஒன்றில் கூறியுள்ளது.
மதமாற்றிகளைப் பயிற்றுவிப்பது, 50க்கும் கூடுதலான மதமாற்றிகளை முழு நேர ஊழியர்களாக வைத்திருப்பது, அவர்களுக்குரிய துண்டு வெளியீடுகள், நூல்கள், பரப்புரைப் பொருட்கள், அச்சிடுவித்தும் தயாரித்தும் வழங்குவது, மெதடித்த திருச்சபையின் நடவடிக்கைகளுள் முதன்மையானது. சுமந்திரன் அத்திருச்சபையின் துணைத் தலைவரானவர்.
இந்த ஆண்டு கலியுகம் 5126. தை மாதம் 29ஆம் நாள் மூலம் நட்சத்திரம். தேய்பிறை பத்தாம் நாள். வியாழக்கிழமை (12.02.2026). சுமந்திரனுக்கு 62 வயது.
46வது வயதில் சுமந்திரனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிய சம்பந்தனுக்கு சுமந்திரனின் கிறித்துவ மதமாற்ற நோக்குப் பின்னணி தெரியாது.
"இயேசுபிரானின் அருள் உரைகளைப் போதிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" சுமந்திரன் பிறந்த ஆண்டிலிருந்து (09.02.1964) சரியாக 150 ஆண்டுகளுக்கும் முன்பு காலியில் சுகுவான்சு பாதிரியார் (Rev Thomas Sqvance Hall - 03.07.1814) தொடங்கிய மதமாற்றப் பணி.
150 ஆண்டுகளுக்குப் பின் அறிவார்ந்த குடும்பத்தில் வடமராட்சி பெற்றோருக்குப் பிறந்த சுமந்திரன் அப்பணியில் ஈடுபடுவார் என அப்பொழுது சுகுவான்சு பாதிரியாருக்கு தெரிந்திருக்குமோ?
150 ஆண்டுகளாக ஐரோப்பியர் ஆட்சியில் இருந்த மெதடித்த திருச்சபையைச் சுமந்திரன் பிறந்த ஆண்டில் இலங்கையர் ஆட்சிக்கு மாற்றினார்கள்.
சுமந்திரன் மதமாற்றத்தில் ஈடுபாடுவார். விவிலியத்தை எப்பொழுதும் கையில் ஏந்துவார். மக்களிடையே எடுத்துச் செல்வார். தேவாலய உரைமேடைகளிலும் பொது இடங்களிலும் விவிலியச் செய்திகளைப் பரப்புவார், அடித்தளம் சுமந்திரன் பிறப்பதற்குச் சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு காலியில் அமைந்தது.
"இயேசுபிரானின் அருள் உரைகளைப் போதிக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்" எனச் சுகுவான்சுப் பாதிரியார் காலியில் சொன்னதைச் சிங்களவரும் தமிழரும் முன்னெடுத்துச் செல்வார் எனச் சுமந்திரன் பிறந்த ஆண்டில் இலங்கையர்களுக்குத் திருச்சபையின் ஆட்சியை மாற்றிக் கொடுத்த மெதடித்த திருச்சபையினர் நம்பினார்கள்.
150 ஆண்டு காலத்தில் மெதடித்த திருச்சபை இலங்கையில் 178 பாடசாலைகளை நிறுவியது. 1961இல் இலங்கை அரசாங்கத்திற்குக் கையளித்தது.
மதம் மாற்றும் நோக்குடன் சிறுவர்களை வளரிளம் பருவத்தினரை இளைஞர்களை ஈர்ப்பதற்குக் கல்வியைக் கருவியாக்கினர் மெதடித்த திருச்சபையினர்.
காலியில் திருச்சபையினர் தொடங்கிய முயற்சியை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தனர். சீக்குவான்சு பாதிரியாரோடு யாழ்ப்பாணம் வந்த யேம்சு இலிஞ்சர் 1816இல் யாழ்ப்பாணம் வெசிலியன் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். அதுவே பின்னாளில் 1827இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரி ஆனது.
சிறுவர்களை அழைப்போம். வளரிளம் பருவத்தினரை அழைப்போம். இளைஞர்களை அழைப்போம். ஆங்கில கல்வி ஊட்டுவோம். ஆங்கிலேயக் கல்வி முறையைப் புகுத்துவோம். இலிஞ்சரின் மதமாற்ற நோக்கத்தின் கருவியே கல்வி.
சைவர்கள், தமிழர்கள், கல்வி அறிவு அற்றவர்கள். மூடநம்பிக்கையில் மூழ்கியவர்கள். சாத்தானை வழிபடுபவர்கள். சைவர்களை மதம் மாற்றுவோம். கர்த்தரின் வழிக்கு மாற்றுவோம். என்பதே இலிஞ்சரின் கபட நோக்கம்.
ஆங்கிலத்தில் சொன்னால் காலம் கடந்து விடும். சிங்களத்திலும் தமிழிலும் சொல்லுவோம் எனக் கருதினர் மெதடித்த திருச்சபையினர்.
தெற்கே சிங்கள - ஆங்கில அகராதி, பாலி ஆங்கில அகராதி, என உருவாக்கிய மெதடித்த திருச்சபைனர், வடக்கே விவிலியத்தை தமிழுக்குள் தரக கருதினர்.
பன்முக ஆற்றல் கொண்ட ஆறுமுகம், பெர்சிவல் பாதிரியார் கைகளில் சிக்கினார். பாதிரியாரிடம் ஆங்கிலம் கற்றார். பாதிரியாரோ இவனை ஆசிரியராக்கித் தமிழ் கற்றார்.
ஆறுமுகத்தின் பன்முக ஆற்றல். ஆங்கிலத்தில் புலமை. தமிழில் புலமை. இலத்தீனில் புலமை. கணிதத்தில் புலமை. கலையில் புலமை. இசையில் புலமை. நாடகத்தில் புலமை. எழுத்தில் புலமை. பேச்சில் புலமை. பெர்சிவல் பாதிரியாரைக் கவர்ந்தது.
வளரிளம் பருவ மாணவன். ஆற்றல் திறமை புலமை இவற்றின் கலவை. தமிழரை மதம் மாற்றுவதற்கு, விவிலியத்தைத் தமிழுக்குக் கொண்டு செல்ல இவனே துணை, எனப் பெர்சிவல் பாதிரியார் கருதினார்.
விவிலியத்தை ஆறுமுகமும் பெர்சிவலும் இணைந்து தமிழாக்கினர். சென்னைக்கு கொண்டு சென்றனர். தமிழ் அறிஞர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டினர். சிறந்த மொழிபெயர்ப்பு எனச் சான்றிதழ் பெற்றனர். அங்கேயே அச்சிட்டனர்.
இலிஞ்சரின் கபட நோக்கம், பர்சிவலின் கபட நோக்கம், தமிழ் மரபுகளை அழிப்பது, ஆங்கில மரபுகளைப் புகுத்துவது, கிறித்தவத்தைப் புகுத்துவது. சைவத்தை அழிப்பது. ஆறுமுகம் புரிந்து கொண்டார்.
மதமாற்றத்துக்கு எதிரான பேரியக்கத்தைத் தொடக்கி வைத்த பெருமை மெதடித்த திருச்சபையின் கபட நோக்கத்துக்கே உரியது. இலிஞ்சரும் பார்சிவல் பாதிரியாரும் சைவ சமயத்தை அழித்தொழிக்க நினைக்கிறார்கள், தமிழ் மரபுகளை உடைத்தெறிய முயல்கிறார்கள், என்ற கபடக் கயமைக் கண்ணோட்டத்தை ஆறுமுகம் கண்டார். மதம் மாற்றத்திற்கான தடை முயற்சிக்குக் கால்கோள் நாட்டினார்.
எந்தத் திறமை, எந்த ஆற்றல், எந்தப் புலமை, விவிலியத்தை மொழிபெயர்க்க உதவியதோ, அதே புலமை, அதே திறமை, அதே ஆற்றல், விவிலியத்தைப் பரவ விடாமல் தடுப்பதற்குக் கை கொடுத்தது.
சுமந்திரனுக்கு முன்னோடிகள் இலிஞ்சரும் பர்சிவலும். ஆறுமுகத்தின் அடியொற்றிகள் தொடர்ச்சியாகப் பலர். இன்றோ நம்மிடையே சிவ சேனையர்.
மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் (4)
கண்டி அரசனுக்கு முதலமைச்சர். ஆங்கிலேயன் போய்டு Boydவிடம் செல்கிறார். நானே அரசன் என்பது போல் பேசுகிறார். ஆளுநர் நார்த்துடன் North அவ்வாறே பேசுகிறார்.
More Royal than the King என்ற ஆங்கிலப் பழமொழி. அரசனுக்கு இல்லாத அரசு உரிமை தனக்கு இருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறார். அவர் பெயர் பிலிமத்தலாவை.
பொன்னு மாஸ்டர் தமிழ்ச் சைவக் குடும்பத்தவர். சைவராக வளர்ந்தவர். அவரோடு சேர்ந்து உடன்பிறப்புகளாக வளர்ந்த கந்தையா மாறவில்லை. தங்கம்மா மாறவில்லை. வேலுப்பிள்ளை மாறவில்லை. பொன்னு மாஸ்டர் மட்டும் மதம் மாறினார்.
அவருக்கு மகள் புஷ்பராணி. புஷ்பராணியின் மகன் சுமந்திரன். இரண்டு தலைமுறைகளாகக் கிறித்தவர்கள். தென்னிந்திய திருச்சபையின் கிறித்தவர்கள்.
ஆயிரம் ஆண்டுகளாகக் கிறித்தவர்களானவர் செய்யாததை இரண்டு தலைமுறைக் கிறித்தவர்கள் செய்தார்கள். அரசன் செய்யாததை முதலமைச்சர் செய்தது போல, More Royal than the King ஆக நடந்து கொண்டார் சுமந்திரன்.
இயல்பான கிறித்தவர்கள் தாம் உண்டு, தம் பணி உண்டு, தம் வாழ்வு உண்டு என இருப்பார்கள். கல்வாரி மலையில் இயேசு சொன்னார். "உலகெங்கும் செல்லுங்கள். அனைவரையும் கிறித்தவராக்குங்கள் மதம் மாற்றுங்கள். " அயலவர்களை மதம் மாற்ற முயற்சிக்காத கிறித்தவர்களே ஏராளம்.
"...வானத்திலும் நிலத்திலும் உள்ள ஆட்சி அனைத்தையும் என்னிடம் இறைவன் தந்துள்ளார். எனவே நீங்கள் அனைத்து நாடுகளுக்கும் செல்லுங்கள். அனைவரையும் கிறித்தவராக்குங்கள். தந்தை பெயராலும் மகன் பெயராலும் ஆவி பெயராலும் அவர்களுக்கு ஞானத்தை வழங்குங்கள். நான் உங்களுக்கு வழங்கிய ஆணைகளை அவர்களும் பின்பற்ற உதவுங்கள். இந்தப் பணியில் நான் உங்களோடு உள்ளேன். இப் பணியில் மட்டுமன்று, காலத்தின் எல்லை வரை நான் உங்களுடனேயே இருப்பேன்..." (மத்தேயு 28:18-20)
இரண்டு தலைமுறைக் கிறித்தவர்களுக்கு இந்த வாக்கே வேத வாக்கு. பல தலைமுறைகளாகக் கிறித்தவர்களோ, இப்படியும் இயேசு கூறியிருக்கிறார் என்று கருதிக் கடந்து செல்வார்கள். இரண்டு தலைமுறைக் கிறித்தவர்களோ More Royal than the King ஆவர்.
All authority in heaven and on earth has been given to me. Go therefore and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit, teaching them to observe all that I have commanded you. And behold, I am with you always, to the end of the age. (Matthew 28:18–20)
இயல்பான கிறித்தவர்கள் ஆடுகள். சோற்றுக்காக மதம் மாறிய கிறித்தவர்கள் ஆடுகள் நடுவே எப்படி இருப்பார்கள் என மலை உரையில் இயேசுவே சொல்கிறார்.
"..ஆடுகளின் நடுவே கூர்ந்து கவனியுங்கள் ஆட்டுத்தோல் போற்ற ஓநாய்கள் அங்குள்ளன. அவர்கள் பொய்யானவர்கள். உங்களைக் கடித்துக் குதறும் உள்நோக்க ஓநாய்கள்..." (மத்தேயு 7:15)
“Beware of false prophets, who come to you in sheep’s clothing, but inwardly they are ravening wolves. (Mathew 7:15)
குடத்தனையின் பொன்னு மாஸ்டர், மகள் புஷ்பராணி, மகன் சுமந்திரன் இவர்களும் ஒத்தவர்களும் விவிலியச் சொற்களின் நேர் பொருளைக் கொள்ளார். மாற்றுப் பொருள் கொள்வார்.
கிறித்தவனாய் இரு. அல்லது உனக்குச் சமுதாயத்தில் இடமில்லை. மதம் மாறு அல்லது வெளியேறு. குற்றம் புரிந்தவனா உடனே நீக்குவேன். கிறித்தவனா நீ என்ன தவறு செய்தாலும் உயர்த்தி விடுவேன்.
வழக்குகளே இல்லாத தமிழ்ச் சைவன் ஸ்ரீதரன், வழிக்கு வராவிட்டால் நீக்குவேன். முறைகேடுகளுக்காக வழக்குகளில் மாட்டிக் கொண்டிருக்கும் சாணக்கியன் தமிழ் - சிங்களக் கிறித்தவன். எனவே நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆக்குவேன். இதுவே சுமந்திரன் விவிலிய அறிவு. கிறித்தவப் புரிதல்.
கண்ணுக்குக் கண் என்றனர். பல்லுக்குப் பல் என்றனர். நான் சொல்லுகிறேன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு. அங்கியைக் கேட்டால் மேலாடையையும் கொடு. இவை இயேசுபிரானின் வரிகள். மலையுரை வரிகள். (மத்தேயு 5:38-40)
“You have heard that it was said, ‘An eye for an eye and a tooth for a tooth.’
But I say to you, offer no resistance to one who is evil. When someone strikes you on your right cheek, turn the other one to him as well.
If anyone wants to go to law with you over your tunic, hand him your cloak as well. (Mathew 5:38-40)
46ஆவது வயதில் தமிழரசுக் கட்சியில் உறுப்பினராகிறார். அவரது 50ஆவது வயது தொடக்கம் தமிழரசுக் கட்சி சிறு சிறு குறைகளுக்காக குற்றங்களுக்காக கட்சியின் தூண்களை, நெடுங்காலச் சுற்றங்களைக் கட்சியை விட்டு நீக்குகிறது. 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 20 உறுப்பினர்களைக் கட்சியை விட்டு நீக்கினர்.
சுமந்திரன் வர முன்பு, கட்சியின் 60 ஆண்டு கால வரலாற்றில் கட்சியை விட்டு நீக்கியோர் தொகை 5-7 மட்டுமே. சுமந்திரன் வந்த பின்பு கட்சியை விட்டு நீக்கியோர் தொகை தோராயமாக 20.
கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்றனர். இயேசு புறந்தள்ளினார். இயேசுவின் வழிவந்ததாக மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடும் மெதடித்த திருச்சபையின் உறுப்பினர் (ஒரு காலத்தில் துணைத் தலைவர்) சுமந்திரனின் வருகையே தமிழரசுக் கட்சியில் பழிவாங்கும் படலத்தின் தொடக்க காலம்.
கொள்கைக்காக, கருத்தியலுக்காக, வாழ்வின் ஏற்றத்திற்காக, ஆன்மீகத் தேடலுக்காக, மதம் மாறினார்களா? சோற்றுக்காக மதம் மாறினார்களா? கூலிக்கு மாரடித்தல் என்பார்கள்.
கிறித்தவக் கொள்கைப் பிடிப்புள்ளோருக்கு மன்னிப்பே கருவி. அன்பையே முன்னெடுப்பர் அறத்தையே எடுத்துச் சொல்வர். அருளில் மூழ்கித் திளைப்பர். எதிர்த்தல் விரட்டுதல் பழிவாங்குதல் சிதறடித்தல் உடைத்தல் நீக்குதல் உண்மைக் கிறித்தவர்களின் அகராதியில் இல்லை.
இந்தச் சொற்களைத் தமிழரசுக் கட்சிக்குள் புகுத்தியவர் யார்? இந்தக் கருத்தியலைத் தமிழரசுக் கட்சிக்குள் தந்தவர் யார்? மெதடித்த கிறித்தவர் ஆன செல்வநாயகமா? தென்னிந்திய திருச்சபையின் மருத்துவர் நாகநாதனா? கத்தோலிக்கரான அழகக்கோனா? மார்ட்டினா? செல்லத்தம்புவா? மட்டக்களப்பின் சாம் தம்பிமுத்துவா? யோசப் பரராசசிங்கமா? இவர்களோடு தமிழரசு கட்சியைச் செம்மையாக வழிநடத்திச் சென்ற ஆயிரக்கணக்கான கிறித்தவ உறுப்பினர்களா?
சுமந்திரன் வந்த பின்பு, குலநாயகம் பொறுப்பேற்ற பின்பு, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கியவர்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். யாவரும் தமிழ்ச் சைவப் பழங்கள்.
அரசனை விட அரசு வடிவம் கொண்டவனே நான் More Royal than the King என்ற பிலிமத்தலவை காட்டிக் கொடுத்த துரோகி.
ஆடுகள் மென்மையானவை இனிமையானவை. ஆட்டு மந்தைக்குள் ஆட்டுத் தோல் போர்த்து இடையில் புகுந்த ஓநாய்கள் கொடூரமானவை என்கிறார் இயேசுபிரான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என பழி வாங்கும் போக்குடைய கிறித்தவர்களானோர் ஆட்டுத் தோல் போட்ட ஓநாய்கள்.
சுமந்திரன் குலநாயகம் ஆகியோர் எந்த வகையினர்? நீங்களே தேர்க.
தை 11 திங்கள் (26 1 2026)
ஊடகத்தாருக்கு
தமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனையும் சிவஞானத்தையும் நீக்குக
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா
இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
1961 பங்குனி
யாழ்ப்பாணத்தில் நடந்த அறப்போருக்காக தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டேன்.
1961 சித்திரை
யாழ்ப்பாணம் கச்சேரி முன் அறப்போர். மல்லாகம் திரு நடராஜா அவர்கள் நடத்திய அஞ்சலகத்தில் தொண்டனாகப் பணிபுரி பணிபுரிய வாய்ப்பு.
தமிழரசுக் கட்சியோடு அன்று தொடங்கிய தொடர்புகள் இன்று வரை இடையீடு இன்றி தொய்வின்றி தளர்வின்றி தொடர்கின்றன.
65 ஆண்டுகள் நான் தமிழரசு கட்சியின் தொண்டன். 1977க்குப் பின் வாழ்நாள் உறுப்பினர். நடுவண் குழு உறுப்பினர். அரசியல் குழு உறுப்பினர். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர்.
கட்சியைக் கண்ணை இமை போல் காத்து வந்த கடமை வீரர்கள் நடுவே நான் களங்கமின்றி வாழ்ந்தேன்.
தந்தை செல்வா என்னை அரவணைத்தவர். திரு அமிர்தலிங்கம் என்னை இணைத்து அணைத்துப் போற்றியவர். தொண்டனாக இருந்தேன். பதவிகளைக் கேட்கவில்லை. பொறுப்புகளைக் கேட்கவில்லை. எனினும் பதவி வழி செய்ய முடியாத பொறுப்பு வழி செய்ய முடியாத பல பணிகளைக் கட்சிக்காக நான் 65 ஆண்டு காலமாக ஆற்றி வருகிறேன்.
அயோக்கியத்தனமாக நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலப் படுகொலைகளுக்கு நான் துணை போகவில்லை.
மதமாற்றிச் சபையான international fellowship of evangelical students அமைப்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களைப் பெற்று இலங்கையிலும் தெற்காசியாவிலும் மதமாற்றப் பணிகளில் நான் ஈடுபடவில்லை.
மெதடித்த திருச்சபையின் இணை ஆயராகப் பதவியேற்ற பின்பு பாதிரியாகவே நான் தொடர்ந்து மதமாற்றத்திற்காக 52க்கும் அதிகமான தொண்டர்கள் வைக்கும் பணியில் நான் எப்பொழுதும் ஈடுபடவில்லை
கனடாவில் இருந்து வந்த தொகைகளை ஏமாற்றிக் கையகப்படுத்தவில்லை. அதற்காகக் குதாசனோடு நான் முரண்படவில்லை.
மதமாற்றச் சபைகள் வழி என்னைத் தோற்கடித்தார் என மாவை சேணாதிராசா என்னைக் குற்றச்சாட்டவில்லை.
சயந்தனை அனுப்பி நான் அருந்தவபாலனை ஓரம் கட்டவில்லை.
பொது வேட்பாளரான என்பதற்காக அரியநேந்திரனை நான் வெளியேற்றவில்லை.
கருத்து ஒன்றை ஊடகத்தில் தெரிவித்ததற்காக மன்னார் சிவகரனை அகற்றவில்லை.
ஊழல்வாதி இரவிகரனுக்காக நான் சிவமோகனைக் கலைக்கவில்லை.
முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த விக்னேசுவரனை அடக்க முடக்க இரணிலோடு நான் கூட்டுச் சேரவில்லை.
தேசத்தின் நலனைக் கருத்தாக கூறிய அனந்தி சசிதரனை நான் வெளியேற்றவில்லை.
சிறையில் வாடும் தமிழ் இளைஞரை விடுவிப்பதே வாழ்வாகக் கொண்ட தவராசாவை நான் விரட்டவில்லை.
உதயன் நாளிதழ் சரணவபவனை நான் கலைக்கவில்லை.
சசிகலா இரவிராசருக்கு மாறாகத் துரும்பைக் கூட நான் எடுக்கவில்லை.
சுரேஸ் பிரேமசந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதன் குழுக்கள் தமிழர் கட்சியோடு இணைந்து போவதை முறித்துக் கூட்டமைப்பை உடைக்கவில்லை.
மாவை சேனாதிராசாவை அறுவான் என ஒரு பொழுதும் நினைக்கேன், நினைத்தால் அன்றோ அச்சொல் வாயில் வரும்.
அல்பிரட் துரையப்பாவோடு கூட்டு வைத்த அயோக்கியன் நான் அல்லன்.
முழங்காலின் கீழ் சூடு வாங்கிய அயோக்கியன் நான் அல்லன்.
கூட்டுறவு ஊழலில் விடுதலைப் புலிகள் சிறையில் அடைத்த அயோக்கியன் நான் அல்லன்.
கூட்டுறவுக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி கொள்ளையடித்த அயோக்கியன் நான் அல்லன்.
தேசத்தை தேசியத்தை தேசியத்தைக் காக்க எழுந்த மாவீரர்களை காட்டிக் கொடுத்தேன் எனச் சுண்டு விரலாலும் சுட்ட முடியாத களங்கமற்ற 65 ஆண்டுகாலத் தமிழரசு கட்சியின் தொண்டன் நான்.
தமிழரசு கட்சியை மதமாற்றுச் சபையாக்கி தமிழினத்தை ஆபிரகாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் சுமந்திரனையும் அயோக்கிய மனம் கொண்டு அறுவான் என அழைக்கும் சிவஞானத்தையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கத் தமிழரசு கட்சியினரை அழைக்கிறேன்.