<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-15610208</id><updated>2011-07-07T18:01:55.318-07:00</updated><title type='text'>மறவன்புலவு க. சச்சிதானந்தன்</title><subtitle type='html'>காட்டில் மழை</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-7167761498352767942</id><published>2007-06-30T22:14:00.000-07:00</published><updated>2007-06-30T22:30:33.957-07:00</updated><title type='text'>திருக்குறள் இந்தியத் தேசிய நூல்</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;இந்தியாவின் உயிர்மையைத் தேடி......&lt;br /&gt;மறவன்புலவு க. சச்சிதானந்தன்&lt;br /&gt;இந்தியத் தேசம் சிலிர்க்கிறது, ஆர்ப்பரிக்கிறது, தோள் கொட்டுகிறது. ஐவகை நிலத்தின் பரப்பு அகன்று நீண்டு விரிகிறது. வானளாவ உயர்ந்த இமய மலைகளின் முடிமீது பனிப்பாளங்கள் குவிந்து மின்னுகின்றன. கிழக்கிலும் மேற்கிலும் நீண்ட கரையோரமெங்கும் நீலத் திரைகடல் ஓயாது ஒலியெழுப்பி அமைமோதிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;நிலம் நீர் தீ காற்று ஆகாயம் எங்கும் இந்தியா நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் நிலமெங்கும் நீரெங்கும் மலை முகடுவரையும் காற்றின் ஊடேயும் வானை நோக்கியும் பரந்து செறிந்துள்ளோர் இன்றைய கணக்கில் நூறு கோடி மக்கள். அனைவரும் இந்திய மக்கள். பாரதத் தாயின் தவச் செல்வங்கள்.&lt;br /&gt;பாரதத் தாய் பேசுகிறாள், உரத்த குரலில் அவள் ஒலிக்கிறாள். 100 கோடி மக்களின் ஆயிரக் கணக்கான மொழிகளே பாரதத்தின் குரல்.&lt;br /&gt;100 கோடி மக்களின் பண்டைய பராம்பரியம் மிக்க பண்பாடே பாரத தேசம். நூற்றுக் கணக்கான வழிபாட்டு முறைகளைத் தன்னுள் கொண்டதே பாரதம். பல்லாயிரக் கணக்கான தொழில்கள் பாரதத்தை வளம்படுத்துகின்றன. இன்றைய 100 கோடி மக்களின் உழைப்புத் தொகுப்பே இன்றைய பாரதத்தின் செல்வம்.&lt;br /&gt;புவிக்குள்ளே முதன்மையுற்ற மனிதர்களைப் பாரதத் தாய் ஈன்றிருக்கிறாள். மனித வாழ்வு முறைகளை மாற்றி வளர்த்த முதுமுனிவோர்களை ஈன்றது மட்டுமல்ல அவர்களின் கருத்துகள் உலகு பயனுறுமாறு உவந்தளித்த திருமண் பாரதம். இன்று பாரதம் வீறுகொண்ட வியத்தகு தேசமாக உருவெடுத்துள்ளது. முன்னெப்பொழுதுமில்லாத தேசத் தன்மைகள் பாரதத்தை மிளிரச் செய்கின்றன. அனைத்து மொழிகளும் அனைத்து வழிபாட்டு முறைகளும் அனைத்துப் பண்பாட்டு நெறிகளும் அனைத்து வளங்களும் ஒரு தன்மைத்தாகப் பேச முடியுமா? முடியும். ஒருமித்துக் குரல் கொடுக்க முடியும். பொதுச் செய்தியை வழங்க முடியும்.&lt;br /&gt;தெற்கே கன்னியாகுமரியில் சொல்லும் கருத்தை அப்படியே முரண்பாடின்றி வடக்கே இலாடகத்தில் சொல்ல முடியும். மேற்கே கூர்ச்சரத்தின் கருத்தே கிழக்கெல்லை நாகர்களின் கருத்தாவது எளிதானது. அனைத்து நிலத்துக்கும் பொதுவான, அனைத்து மக்களுக்கும் பொதுவான, அனைத்து வழிபாட்டு முறைக்கும் பொதுவான, அனைத்துப் பண்பாட்டு ஒழுக்க நெறிகளுக்கும் பொதுவான, அனைத்து வாழ்வு முறையினருக்கும் பொதுவான, அனைத்து அரசு முறைகளுக்கும் ஏற்ற கருத்துகளின் பேழையே திருக்குறள். இந்தியப் பரப்பெங்கிலும் எவரும் தொகுத்தளிக்காத பொதுமைப் பண்புகளைத் திருவள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏழேழு சீர்களாக 1,300 பாக்களில் உலகத்துக்காக விட்டுச் சென்ற வழிகாட்டல் பெட்டகமே திருக்குறள். அதே இந்தியாவின் இயல்பு, பண்பாடு, மொழி, பார்வை, எதிர்காலம், செல்நெறி, வாழ்வுமுறை, அரசுமுறை என்றெல்லாம் இந்தியாவிலுள்ள எவரும் எடுத்துக் கூறி அமைதி பெறக் கூடிய நுண்ணியதான கருப்பொருளும் விரிந்த பருப்பொருளும் கொண்ட ஒரே நூல் திருக்குறள். ஒரு தேசத்தின் வெளிப்பாடு. ஒரு தேசத்தின் குரல். ஒரு தேசத்தின் இயல்பு. ஒரு தேசத்தின் நூல். ஒரு தேசத்தின் உயிர்மை. அதுவே திருக்குறள். எனவே திருக்குறள் தேசிய நூலாகிறது. வேறு எந்த நூலும் இந்தியாவின் உயிரோட்டத்தைக் கூறுவதில்லை. தனி மனிதனின், தனி மனித குழுமத்தின், தனி நிலத்தின், தனி ஒரு மொழியின் தனி ஒரு தத்துவத்தின், தனி ஒரு பண்பாட்டின், தனி ஒரு அரசின், தனி ஒரு தொழிலின், தனி ஒரு வளத்தின், புகழையோ நிகழ்வையோ ஒட்டி அமையாத ஏதாவது ஒரு நூல் இந்தியாவில் உண்டெனின் அது திருக்குறள் மட்டுமே.  ஏனெனில் அஃது இந்தியப் பொது நூல். காலத்தால் முந்திய நூல். கருத்தால் செறிந்த நூல். தேசத்துக்கென அமைந்த நூல். இந்தியர் எங்கிருப்பினும் திருக்குறளில் உள்ளவை தமக்கு ஒவ்வாதவை என்று கூற இயலாத அடித்தளக் கருத்துகளை உள்ளடக்கிய நூல். இத்தகைய நூல் இல்லையே என இந்தியா தேடிக்கொண்டிருக்க வேண்டாம். உலகத்தோர் தேடித் தேடி வந்து திருக்குறளை அப்படியே மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொள்ள முயல்கின்றனர். எந்தவோர் அரசின் தூண்டுதல் ஆதரவு, நெருக்குதல், திணிப்பு எதுவும் இன்றி, எந்த ஒரு மடத்தின் அல்லது நிறுவனத்தின் ஆதரவோ பரப்புரை முயற்சியோ எதுவுமின்றித் திருக்குறள் உலகப் பொது நூலாகி வருகின்றது. படித்தவர், கேட்டவர், பயின்றவர் யாவரும் வியந்து தத்தம் மொழிகளுக்கத் தாமாகவே எடுத்துச் சென்ற, செல்கின்ற நூல் திருக்குறள். அத்தகைய சிறப்பு வாய்ந்த பண்பாட்டுப் பெட்டகத்தை, காலப் பேழையை, மனித வெளிப்பாட்டைத் தேசிய நூலாக ஏற்றுக்கொள்வதால் இந்தியா பெருமை அடையும். அயல்நாடுகளின் அல்பேட்டுச் சுவைற்சர், போப்பையர் முதலாக, இந்திய தேசத் தந்தை காந்தியடிகள் ஊடாக, தமிழ் நாட்டுப் புலவர் ஔவை, பாரதி போன்றோர் ஈறாகத் திருக்குறள் தொடர்பாகச் சொல்லிய புகழுரைகளை மீட்டும் மீட்டும் வரி வரியாகப் பெயர்த்துச் சொல்வது கூறியது கூறலாகலாம். அத்தகைய உலகச் சான்றோர் பலர், பல்லாற்றானும் சொன்னவற்றின் திரட்டையே தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தினர் இந்திய நடுவண் அரக்கும் தமிழக மற்றும் புதுவை அரசுகளுக்கும் எடுத்து கூறி, பண்டைய புகழாரங்கழைத் தொகுத்து முடிசூட்டித் திருக்குறளைத் தேசிய நூலாக்குங்கள் என வலியுறுத்துகின்றனர்; இந்தியாவுக்கு உயிர்மையூட்டுங்கள் எனக் கோருகின்றனர். திருக்குறள் இந்தியத் தேசிய நூல் என்ற அறிவிப்பு எவ்வளவு விரைவில் வெளிவருகிறதோ அவ்வளவு சிறப்பும் பெருமையும் இந்தியாவைச் சேரும். இந்தியத் தேசம் சிலிர்க்கும், ஆர்ப்பரிக்கும், தோள் கொட்டும்! அந்த அறிவிப்பு வெளிவரும் காலம் வரை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் போராட்டங்கள் ஓயா.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-7167761498352767942?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/7167761498352767942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=7167761498352767942' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/7167761498352767942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/7167761498352767942'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2007/06/blog-post.html' title='திருக்குறள் இந்தியத் தேசிய நூல்'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-117155944955101743</id><published>2007-02-15T09:07:00.000-08:00</published><updated>2007-03-03T20:58:28.142-08:00</updated><title type='text'>நான் ஏன் எழுதுகிறேன்?</title><content type='html'>பரந்த வயல்வெளி. நடுவே பிள்ளையார் கோயில். அருகே குளம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் எங்கள் வீடு. ஒரு நாள் காலை நேரம். என்னைத் தன் தோளில் சுமந்து சென்றவர் அப்பா. கூட வந்தவர் என் தாயாரும் என் அக்காவும். வெற்றிலை, பாக்கு, பழம், அரிசி. தாம்பாளங்கள் இவற்றுடன் அப்பாவின் உதவியாளர்கள் பின்னாலே வந்தனர். வயல் வரப்புகளில் நடந்து கோயிலுக்குப் போனோம். அங்கே முன் மண்டபத்தில் என் தந்தையாரின் தாயாரும் அவரது தம்பியும் காத்து இருந்தனர். அன்று 1944ஆம் ஆண்டின் கலைமகள் பூசை. மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் முன் மண்டபத்தில் தாம்பாளத்திலே அரிசியைப் பரப்பினர், அருகிலே நிறைகுடம் வைத்தனர், குத்துவிளக்குகள் ஏற்றினர். பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் யாவையும் சுத்தம் செய்து, காம்பு நீக்கி, அழகாக மற்றொரு தாம்பாளத்தில் அடுக்கி வைத்தனர். பழைய ஏட்டுக் கட்டு ஒன்றைத் தாம்பாளத்தில் என் தந்தையாரின் மாமனார் வைத்தார். அத்துடன் ஒரு புதிய பனை ஓலை. அருகில் இரும்பாலான எழுத்தாணி. ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் மணந்தது. கற்பூரமும் ஏற்றினர்.சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் முதலில் கருவறையில் பூசை செய்தார்.பின்னர் வந்து முன் மண்டபத்தில் அமர்ந்தார். அவர் பக்கத்தில் என் தந்தையார் அமர்ந்தார். எதிரே என் தாயாரும் பிறரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.என் தந்தையார் தம் மடியில் என்னை இருத்தினார். என் வலது கையின் சுட்டு விரல் நுனியைத் தம் கைவிரல்களால் பிடித்து, தாம்பாளத்தில் அரிசித் தட்டில் எழுதுவித்தார். அனா... அனா.... அனா... என்று சொல்லியவாறே, அ என்ற எழுத்தை எழுதுவித்தார். எனக்கும் எழுத்துக்கும் இயற்கையைச் சாட்சியாக்கித் தந்தையார் ஏற்படுத்திய தொடர்பு அங்குதான், அப்பொழுதுதான்.அதன் பின்னர் புதிய பனை ஓலையை ஏடாக்கி, அதில் அகரம் முதலாத அஃகேனம் ஈறாக இருந்த எழுத்துகளை என் தந்தையார் சொல்ல நான் திருப்பிச் சொன்னேன். எனக்கு ஏடு தொடக்கிய நாள் அன்று. புதிய பனை ஓலையில் இரும்பு எழுத்தாணியால் என் தந்தையார் விரலுள் அகப்பட்ட என் விரல்கள் கிறுக்கின.பின்னர், கிடுகு வேய்ந்த எம் மண் வீட்டில், சாணம் பூசிய திண்ணைத் தரையில், மண் பரப்பி, என் சுட்டுவிரலால் எழுதக் கற்பித்தவர் என் தாயார். ஒரு பிடி சோறு, ஒரு வாழைக்காய்ப் பொரியல் துண்டு, நிலவின் ஒளியில் வீட்டு முற்றத்தில் ஓடுவதும் பிடி சோறு தின்பதும், பொரியலைக் கடிப்பதும், மணற் பரப்பில் அனா ஆவன்னா எழுதுவிப்பதுமாய் என் தாயாருடன் சில மாதங்கள் கழிந்திருக்கவேண்டும்.எனக்கும் எழுத்துக்கும் என் மூன்றாவது வயதில் இப்படித்தான் நெருக்கம் ஏற்பட்டது.படிப்படியாகச் சிலேற்றிலும் கொப்பியிலும் எழுதத் தொடங்கினேன். என் கையெழுத்தை விட என் அக்காவின் கையெழுத்து அழகாக இருக்கும். தாயார் சுட்டிக் காட்டுவார், அழகாக எழுதுமாறு காட்டித் தருவார்.ஆறாவது வகுப்பில், என் சக மாணவர் தங்கராசா பக்கத்தில் அமருவார். முத்துமுத்தான அவருடைய எழுத்துகள் என்னைக் கவர்ந்தன. அவரைப் போல எழுத ஆர்வம்கொண்டேன். வகுப்பில் குறிப்பு எழுதுவதில் அவர் வல்லவர். நான் விளையாட்டுத்தனமாக இருப்பேன். கவலையீனமாக இருப்பேன். அவர் கவனமாகக் குறிப்பு எழுதுவார்.வண்ணார்பண்ணையில் எங்கள் வீட்டுக்குக் கிட்டத்தான் அவரின் வீடு. மாலையில் அவரிடம் போய் அவர் கொப்பியை வாங்கிவந்து பாடக்குறிப்பைப் பார்த்து எழுதியபோது அவர் கையெழுத்துப் போலவே எழுதும் பழக்கம் வந்தது. என் எழுதும் முறையில் திருத்தத்தைக் கொண்டுவந்தவர் தங்கராசா. யாழ்ப்பாணத்தின் சிறந்த ஓவியர்களுள் ஒருவராக, கட்டடக் கலை வல்லுநராக இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் தங்கராசா இருக்கிறார்.என் தந்தையார் 1952இல் யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். பள்ளி முடிந்ததும் மாலை வேளைகளில் அங்கு போவேன். அச்சடித்த தாள்களில் பிழை திருத்தம் செய்து கொண்டிருப்பவரோடு என்னைச் சேர்த்து விடுவார். பிழைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார். பிறர் கண்டு பிடிக்காத பிழை ஒன்றைக் கண்டுபிடித்துச் சொன்னால், தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்று போளி வாங்கித் தருவார். பிழை நீக்கி எழுதுவதற்குப் பழக்கியவர் என் தந்தையார்.வட்டுக்கோட்டைப் புலவர் சிவபாதசுந்தரனார், புங்குடுதீவு வித்துவான் ஆறுமுகம் போன்ற பலர் என் தந்தையாரிடம் வருவர். எழுத்து மற்றும் பிழை திருத்தப் பணிகளில் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன். அதுவே பின்னர் என் எழுத்துகளுக்கு செம்மையைத் தந்தது.பத்தாவது படித்துக் கொண்டிருந்த காலத்தில், என் தங்கையின் பள்ளியில் ஆண்டு மலருக்கு ஏதாவது எழுதித் தருமாறு தங்கையைக் கேட்டிருந்தனர். ஏதாவது எழுதித் தாங்கோ அண்ணை என அவர் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள் வந்து, அன்றே கடைசி நாள் என்றார்.கா கா என்று கரைந்தது காகம் எனத் தொடங்கி, எட்டு வரிகளை எழுதி முடித்துத் தங்கையிடம் கொடுத்தேன். அவரும் அந்த வரிகளைத் தன் ஆசிரியரிடம் கொடுக்க, பள்ளி மலரில் என் தங்கை பெயரில் கவிதையாக வெளிவந்தது. எனக்கு எழுதும் ஆற்றல் உண்டு என நம்பி, என்னை விடாமல் கேட்டு, எழுதுவித்த என் தங்கையே என் எழுத்து முதன்முதலாக அச்சில் வரக் காரணமானார்.அவ்வாறு எழுதுதற்கு எனக்குத் தூண்டுதலாக இருந்தவர் என் வகுப்புத் தோழர் சண்முகசுந்தரம். தான் பார்த்த திரைப் படக் கதையை எனக்குக் கூறுவார். தான் படித்த பாரதியாரின் கவிதை வரிகளைக் கூறுவார். பாரதிதாசனின் கவிதை வரிகளைக் கூறுவார். நான் சுவைத்த வரிகளை அவரிடம் கூறுவேன். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதுகையில் கவிதை நடை இருவரது கடிதங்களிலும் வெளிப்படும். இப்பொழுது தோழர் சண்முகசுந்தரம் நோர்வேயில் பல்கலைக் கழகம் ஒன்றில் வேளாண்துறையில் பேராசிரியராக உள்ளார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். தொடக்க நாள்களில் லூயி பிஷரின் காந்தியடிகள் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. காந்தியடிகளை எனக்கு முழுமையாக அறிமுகம் செய்த நூல் அதுவே. காதி பவன் சென்று காந்தியடிகளின் நூல்கள் பலவற்றை வாங்கிப் படித்தேன். புவிக்குள்ளே முதன்மையுற்றாய் என்ற தலைப்பில் காந்தியடிகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை, 1960 அக்டோபர் 2இல் யாழ்ப்பாணம் ஈழநாடு இதழில் வெளியானது. அப்பொழுது ஈழநாடு ஆசிரியராக இருந்தவர் திருவையாறு கே. பி. ஹரன். நேரே அவருக்கு அனுப்பினேன். திருத்தல் நீக்குதலின்றி வெளியிட்டார். மார்கழி விடுப்புக்கு யாழ்ப்பாணம் போனபொழுது அவரைப் பார்த்தேன். தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தார். 19 வயதில் என் எழுத்து யாழ்ப்பாணத்தில் அரங்கேறியது.பின் திரும்பிப் பார்க்கவில்லை. கதைகள் எழுதும் கற்பனை வளம் எனக்கு இருக்கவில்லை. தகவல்களைத் தொகுத்துச் சுவைபடச் சொல்லும் ஆற்றல் இருந்ததாக நம்பிக்கொண்டேன். சில நேரங்களில் அவை கவிதை வரிகள் போலவும் தோன்றின. கவிதையாக வந்த பொழுது எழுதிவைத்தேன்.என் அயலில் நிகழ்ந்தழவும் என்னைப் பாதித்தனவும் என் எழுத்துகளுக்கு நெம்புகோலாயின. நான் கேட்ட சொற்கள், படித்த வரிகள், எனை உந்தும் மொழியாயின. பழமொழிகளும் பாடல்களும் சந்தத்தையும் ஓசையையும் சேர்த்தன. பரந்து சிதறிய தகவல்கள் எனக்குச் செயல்களமாயின. நூல்கள் என் சிந்தனையைத் தூண்டின. என் நண்பர்கள் என் எழுத்துகளை ஊக்குவித்தனர்.மூன்று நான்கு சொற்களில் வாக்கியங்களை அமைக்க முயன்றேன். மூன்று நான்கு வரிகளைப் பந்திகளாக்கினேன். பிற மொழிச் சொற்களைத் தவிர்த்தேன். என் சொல் வளப் பெருக்கலுக்குத் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளும் சாத்திர நூல்களும் உதவின. என் 13ஆவது வயது முதலாகக் கந்தபுராண படனத்தில் பயிற்சி பெற்றேன். புராணப் பாடலை முதலில் உரத்துப் படிப்பேன். பின் அப்பாடலைப் பதம் பிரித்து, பொருள் தரும் துண்டுகளாக்கிக் கொடுக்க, அம் மண்டபத்தில் எனக்கு எதிரில் இருக்கும் நல்லையாப் புலவர் என் பிழைகளைத் திருத்துவார், எதிரே காத்திருக்கும் கூட்டத்திற்கு அப்பாடலின் பொருளைச் சொல்லுவார். ஈராண்டுகள் தொடர்ச்சியாக இப்பயிற்சியில் ஈடுபடத் தந்தையார் பணித்திருந்தார். மார்கழி மாதங்களில் திருவாதவூரடிகள் புராண படனத்தில் ஈடுபட்டேன். இவை என் சொல்லாட்சி வளர்ச்சிக்குத் துணை நின்றன.கொழும்பில் பணிபுரிந்த காலத்தில் அமெரிக்க நூலகத்துக்குத் நாள்தொறும் போவேன். ஆங்கில நூல்களையும் இதழ்களையும் வாசிப்பேன். அந்த உரைநடை எனக்குப் புதிய உலகத்தை அறிமுகம் செய்தது. செய்திகளை எளிமையாகச் சொல்லும் திறனையும், ஆங்கில உரைநடைத் திறனையும் அங்கு வளர்த்தேன். அங்கு பார்த்த உலக வரை படங்கள் என் உள்ளத்தில் ஆழப் புதைந்தன. நாடுகள், மக்கள், அரசுகள், ஆட்சி முறைகள், இயற்கை வளங்கள் பற்றிய செய்திகள் எனக்குத் தகவல் புதையல்களாயின. அறிவியல் செய்திகளைத் தமிழில் தருவதில் எனக்குக் கொழும்பு, வீரகேசரி களம் அமைத்துக் கொடுத்தது. இலங்கை வானொலியில் உரையாற்றினேன். கொழும்பு, தினகரன் ஆசிரியர் உற்சாகப்படுத்தினார். அரசியல் கட்டுரைகளைக் கொழும்பு, சுதந்திரன் வெளியிட்டது. அரசுக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குப் பகுதிநேர மொழிபெயர்ப்பாளரானேன். அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தேன். பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கையில் இலங்கை அரசு வௌயிட்ட கலைச்சொற்றொகுதிகள் எனக்கு உதவின. பதினொன்றரை ஆண்டுக்காலம் கடற்றொழில் ஆராய்ச்சியாளராக இருந்த காலங்களில், யப்பானிய, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் என் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன. பின்னர் ஐநா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகி, 23 அரசுகளுக்குப் பணிபுரிகையில் அரபு, சுவாகிலி, கிரியோல் மொழிகளில் என் ஆக்கங்கள் வெளிவந்தன. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மாநாட்டுக் கருத்தரங்குத் தொகுப்புகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான என் கருத்துகள் கட்டுரைகளாகின. 1975ஆம் ஆண்டில் என் மொழிபெயர்ப்புகள் கொழும்பு, சுதந்திரன் வெளியீடுகளாகின. தந்தை செல்வநாயகம் அனைத்துலக நீதி ஆணைக்குழுவுக்கு ஈழத் தமிழர் துயர நிலை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட கடிதமும் கட்டுரையும் சுதந்திரன் வௌயீடாகத் தமிழில் வந்ததும் பல ஆயிரம் படிகள் விற்பனையானதும், மாதம் ஒரு நூலாக என் மொழிபெயர்ப்பு நூல்களைச் சுதந்திரன் வெளியிட்டது. அரசியல் கட்டுரைகளைத் தீவிரமாக எழுதத் தொடங்கிய காலப் பகுதியில் சுதந்திரன் இதழில் கோவை மகேசன் ஆசிரியராக இருந்தார். தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் என் தமிழ் நடையைப் பாராட்டுவார், உற்சாகம் தருவார்.1976இல் திருச்செல்வத்தின் வழக்குரை வாதங்களைத் தமிழில் தந்தபொழுது, ஈழத் தமிழர் இறைமை என்ற அந்த 100 பக்க நூல், ஒரே நாளில் 2,000 படிகள் யாழ்ப்பாணத்தில் முற்றவெளிக் கூட்டத்தில் விற்பனையானதுடன்,வெளியிட்ட நாள் அன்றே கூடிய விலையில் அக்கூட்டத்தில் விற்பனையானது.பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை வீரகேசரி வார இதழில் 1980களில் தொடர்ச்சியாக 20 வாரங்கள் எழுதினேன். அக்காலத்தில் ஏடன் நகரில் ஐநா. ஆலோசகராக இருந்தேன். அங்கு வலசை வந்த நாரைகள் என்னை எழுதத் தூண்டின.அந்தக் கட்டுரைகளுள் ஒன்றை, இலங்கைப் பாடநூற் சபை, 9ஆம் வகுப்புத் தமிழ் பாடநூற் கட்டுரைகளில் ஒன்றாக்கியது. அறிவியல் தமிழை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக அந்தக் கட்டுரை பயன்பட்டது. அந்தக் கட்டுரையைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு வழிகாட்டியாக ஒரு நூலையும் பாடநூற் சபை வெளியிட்டது.அந்தக கட்டுரைகளை வீரகேசரியில் படித்தோர், என் தந்தையாரிடம் சென்று பாராட்டைத் தெரிவிப்பர். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர். என் தந்தையாருக்கு அவையே ஊட்டச் சத்தாயின. அவற்றின் அருமை தெரிந்தவர் அவர். வீட்டிற்குச் சென்றதும் என் தாயாருடனும் உடன் பிறப்புகளுடனும் தன் மகிழ்வையும் பெருமையையும் பகிர்ந்து கொள்வார். வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலில் தன் மடியில் வைத்து அனா ஆவன்னா எழுதுமாறு விரலைப் பிடித்து என்னை எழுத்துக்கு அறிமுகம் செய்த என் தந்தையாருக்கும், நிலா முற்றத்தில் மணற் பரப்பில் அனா ஆவன்னா எழுதச் சுட்டுவிரலை அழுத்திய என் தாயாருக்கும் இதைவிட வேறு கைம்மாறு என்னால் செய்திருக்க முடியாது. வலது கைச் சுட்டு விரல், எழுத்தாணி, சிலேற்றுப் பென்சில், பென்சில், பேனை என என் எழுதுகோல்கள் மாறிக்கொண்டேயிருந்தன. இரு விரல்களால் எழுதிக் கொண்டிருந்தவன், இப்பொழுது பத்து விரல்காளலும் கணினியில் எழுதுகிறேன். கருத்துகள் வரும் வேகத்துடன் என் விரல்கள் ஒத்துழைப்பதில்லை. ஆனாலும் கணினி தரும் எழுத்துச் சுகம் வேறொன்றிலில்லை.சென்னையில் என் எழுத்துகளுக்கு முதற் களம் பச்சையப்பன் கல்லூரி மலர்கள். அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறேன். பின்னர் கோயம்புத்தூர் கலைக்கதிரில் என் அறிவியற் கட்டுரைகள் வெளியாகின. மலேசியாவில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், சிங்கப்பூரில் தமிழ் முரசு, பிரான்சில் கனடாவில் ஈழநாடு, கொழும்பில் வீரகேசரி, தினகரன், தினபதி, சுதந்திரன், தினக்குரல், யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, உதயன், சென்னையில் தினமணி, முரசொலி, தீராநதி, அமுதசுரபி, தமிழர் கண்ணோட்ட்ம், வளர்தொழில், தென்செய்தி, அறிக அறிவியல், ஜனசக்தி போன்ற பல்சுவை இதழ்கள் என் ஆக்கங்களை வெளியிட்டன. ஒருமுறை கலைஞர் கருணாநிதியைச் சந்தித்பொழுது, தமிழகத்தில் ஈழத்தவர் ஆற்றிய பங்களிப்புப் பற்றிய கட்டுரையைக் கொடுத்தேன். அந்த வார இறுதி முரசொலியில் அந்தக் கட்டுரை வந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு கே. பி. ஹரன், கொழும்பில் சுதந்திரன் கோவை மகேசன், வீரகேசரி எஸ். டி. சிவநாயகம், தினகரன் இ. சிவகுருநாதன், பாரிஸ் ஈழநாடு குகநாதன், சென்னையில் குங்குமம் பாவை சந்திரன், வளர்தொழில் ஜெயகிருட்டினன், தினமணி ஆசிரியராக இருந்த சம்பநதம், இராயப்பா, அமுதசுரபி அண்ணா கண்ணன், இந்து மாலினி பார்த்தசாரதி போன்ற பலர் என்னை எழுதுமாறு ஊக்குவித்தவர்கள். தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழகத்தில் புலமைச் சான்றோரிடம் என்னை எடுத்துச் சென்றதால், தமிழக வாசகரின் பரவலான பார்வைக்குள் அகப்பட்டேன்.என் எழுத்து, யாரை நோக்கியேதா, அவர்களைச் சென்றைடய வேண்டுமென்பதில் கருத்தாக இருந்தேன். அரசு அதிகாரிகளை நோக்கிச் செயற்றிட்ட அறிக்கைகள் எழுதினேன். அந்த நடை வேறு. அறிஞர்களை நோக்கி ஆய்வுக் கட்டுரைகளை எழுதினேன். அந்த நடை வேறு. தமிழீழ விடுதலைக் கருத்துருவாக்கத்தில் கண்ணாக இருந்தேனாதலால் அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நோக்கி வாதங்களை அடுக்கினேன். அந்த நடை வேறு.எந்த ஒரு எழுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தாமலிருந்ததில்லை. செயற்றிட்ட அறிக்கைகள் நாடுகளின் வளர்ச்சிக்குப் பயனளித்தன. அறிவியற் கட்டுரைகள் அறிவியல் தமிழ் எழுதுவோருக்கு வழிகாட்டின. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவு வளர்ச்சிக்கு உதவித் தொழினுட்ப முன்னெடுப்புகளுக்குப் பயனளித்தன. Colombo’s Camaflaouge என எழுதி, இந்து நாளிதளில் வெளியான என் கட்டுரை இலங்கை அரசைக் கடுங்கோபத்துக்குள்ளாக்கியது. பதிப்புத் தொழில் உலகத்தில் நான் எழுதும் கட்டுரைகளால் பலரின் சினத்துக்கு ஆளாயிருக்கிறேன்.ஏசுவார்கள், எரிப்பார்கள், எழுதுங்கள், அஞ்சாமல் எழுதுங்கள் என்ற வரிகள் யாழ்ப்பாணத்து ஈழநாடு இதழுக்காக யோக சுவாமிகள் கூறியவை. எழுதுகையில் அசாத்தியத் துணிச்சலும் வரவேண்டும், நயத்தக்க நாகரிகமும் மிளிர வேண்டும், தகவல்களிலும் தவறு நேர்ந்துவிடக் கூடாது. வாசிப்பவருக்குப் புரியவும் வேண்டும், வாசகரை என் கருத்து நோக்கி ஈர்க்கவும் வேண்டும். அந்த வாசகர் பாராட்டுவரா, சினப்பாரா என்பது நோக்கமல்ல. என் எழுத்துப் பயனுறுத்தியதா என்பதே எனக்குள் எழும் வினா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-117155944955101743?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/117155944955101743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=117155944955101743' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/117155944955101743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/117155944955101743'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2007/02/blog-post.html' title='நான் ஏன் எழுதுகிறேன்?'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-115462501941664055</id><published>2006-08-03T10:08:00.000-07:00</published><updated>2006-08-03T10:10:19.436-07:00</updated><title type='text'>வல்லார்யார் சச்சியல் லால்</title><content type='html'>வல்லார்யார் சச்சியல் லால்&lt;br /&gt;முனைவர் தமிழப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்&lt;br /&gt;கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய&lt;br /&gt;சோறிட்டான் பாயசத்தால் சொக்கவைத்தான் சச்சியைப்போல்&lt;br /&gt;வேறெவர்தாம் செய்வார் விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தைப்போல் சோறு முருங்கைக்காய் நற்குழம்பு&lt;br /&gt;சத்தான இஞ்சிநெல்லி சார்ந்துவர - இத்தரையில்&lt;br /&gt;வல்லாரை(ப்) போற்றி வளைத்துமே போடுவதில்&lt;br /&gt;வல்லார்யார் சச்சியல் லால்.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்தென்றால் நானும் விருப்புடனே சென்றேனா&lt;br /&gt;விருந்தா மருந்தா வியந்தேன் - அருந்திடவே&lt;br /&gt;இஞ்சிநெல்லி வல்லாரை இவைவைத்தால் என்சொல்ல&lt;br /&gt;கொஞ்சு தமிழ்மொழியே கூறு.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அழைப்பானோ மாட்டானோ என்றேநான்&lt;br /&gt;தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன் - தூண்டுசுவை&lt;br /&gt;உண்டார் மறப்பாரோ ஒண்டொடியே என்வயிறு &lt;br /&gt; அண்டாவாய் ஆகிவிட்ட தே.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் தமிழப்பன், 15.05.2004&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-115462501941664055?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/115462501941664055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=115462501941664055' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/115462501941664055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/115462501941664055'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2006/08/blog-post.html' title='வல்லார்யார் சச்சியல் லால்'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-115248600361752144</id><published>2006-07-09T15:56:00.000-07:00</published><updated>2006-07-09T16:00:03.636-07:00</updated><title type='text'>கைதடியின் நன்மகள்</title><content type='html'>மறவன்புலவு க.  சச்சிதானந்தன்&lt;br /&gt;அப்பொழுது எனக்கு 15 வயது. ஒரு நாள் மாலை நேரம் 5 மணி இருக்கும். வகுப்புகள் முடிந்ததும் என் தந்தையாரின், காங்கேயன்துறை வீதியிலுள்ள அச்சகத்துக்கு வந்திருந்தேன். வாயிலில் தந்தையாரும் தவத்திரு யோக சுவாமிகளும் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர். என் கல்வியைப் பற்றித் தவத்திரு யோக சுவாமிகள் விசாரித்தார். எந்தப் பாடத்தில் பயிற்சி குறைவு எனக் கேட்டார். பௌதிகத்தில் போதிய விளக்கம் இல்லை என்றேன்.&lt;br /&gt;வைத்தீசுவர வித்தியாலயத்தில் மேல்வகுப்பில் பயிலும் மூத்த மாணவரான திரு. பரஹம்சதாசனிடம் பாடம் கேட்குமாறும், நாள்தொறும் மாலை 5 மணிக்கு கதிரேசன் கோயிலுக்குப் பக்கலில் உள்ள கடை ஒன்றில் வகுப்புக்கு வருமாறும் தவத்திரு யோக சுவாமிகள் கூறினார்.&lt;br /&gt;உரிய நேரத்துக்குச் செல்வேன். திரு. பரஹம்சதாசன் வந்து பாடம் நடத்துவார். அங்கிருந்த சாய்மனைக் கதிரையில் தவத்திரு யோக சுவாமிகள் சாய்ந்திருப்பார். ஒரு மணி நேர வகுப்பு முடிந்ததும் போய்விடுவேன்.&lt;br /&gt;அந்தக் கடைக்குத் தவத்திரு யோக சுவாமிகளைப் பார்க்க, வைத்தீசுவர வித்தியாலய ஆசிரியரான திரு. விசுவலிங்கம் வருவார். என்னிடமும் நலம் விசாரிப்பார். திரு. விசுவலிங்கம் அவர்களுடன் அறிமுகம் அவ்வாறுதான் நிகழ்ந்தது. &lt;br /&gt;பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், தவத்திரு யோக சுவாமிகள் சொன்னதைக் கேட்டு, நாள் தொறும் மாலை வேளைகளில் சிவதொண்டன் நிலையமும் போவேன். கூட்டுறவுப் பரிசோதகராக இருந்த திரு. நல்லையா அவர்களிடம் கந்தபுராணப் படனப் பயிற்சி பெறுவேன். அங்கும் அடிக்கடி திரு. விசுவலிங்கம் அவர்களைக் காண்பேன்.&lt;br /&gt;அந்த நாள்களில், மாலை வேளைகளில் ஒரு ஒஸ்ரின் கார் வரும். சிவதொண்டன் நிலைய வாசலில் காத்திருக்கும். சிறிது நேரத்தின் பின் திரு. விசுவலிங்கம் அவர்கள் அந்தக் காரில் ஏறிக் கொள்வார்கள். கார் போய்விடும். யாழ்ப்பணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த திரு. முத்துக்குமாரசாமி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராக இருந்த திருமதி முத்துக்குமாரசாமி இருவருமே அந்த ஒஸ்ரின் காரில் சிவதெண்டன் நிலையம் வந்து திரு. விசுவலிங்கம் அவர்களை அழைத்துச் செல்பவர்கள்.&lt;br /&gt;நாவற்குழியைச் சேர்ந்த திரு. செல்லத்துரை அவர்களும் கைதடியைச் சேர்ந்த திரு. விசுவலிங்கம் அவர்களும் சிவதொண்டன் நிலையத்தின் பொறுப்புகளை அக்காலப் பகுதியில் கவனித்து வந்தததைக் கண்டேன்.&lt;br /&gt;கைதடியில் மணியகாரர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள்; தவத்திரு யோக சுவாமிகளின் அதீத அடியவர்கள்; மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்டவர்கள். யாவற்றுக்கும் மேலாக என் தந்தையாரின் பெரு மதிப்புக்கு உரியவர்கள். எனவே என் மதிப்பிலும் அவர்கள் உயர்ந்து நின்றனர்.&lt;br /&gt;காலவோட்டத்தில் சென்னைக்குப் படிக்க வந்தவன், முடிந்தபின் கொழும்பில் பணிக்குப் போனேன். &lt;br /&gt;திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் என்னை மறக்கவில்லை. ஒருநாள் அவரிடம் இருந்து கடிதம் வந்தது. கைதடியில் சைவ சமய விழா; விழாவுக்கு ஒரு மலர்; அந்த மலருக்கு என்னிடமிருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார். எழுதி அனுப்பினேன்; வெளியிட்டிருந்தார். மலரின் படியையும் அனுப்பி இருந்தார்.&lt;br /&gt;யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக இருந்த திரு. மு. கார்த்திகேயன் அவர்கள் காலமானதும் அவருக்கு இந்துக் கல்லூரியில் நினைவு அஞ்சலிக் கூட்டம். நான் அந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் எனத் திரு. முத்துக்குமாரசாமி என்னைக் கேட்டார். திரு. மு. கார்த்திகேயன் இந்துக் கல்லூரியில் எனக்கு ஆங்கில ஆசிரியர். என்னை நண்பனாகவே கருதுவார். அய்யனார் கோயிலடியில் நான் வசித்த வீடு, யாழ்ப்பாணம் மாநகர சபையின் பத்தாம் வட்டாரத்தின் பகுதி. எம் உறவினர் திரு. துரைராஜா அவ்வட்டாரத் தேர்தலில் வேட்பாளர். திரு. மு. கார்த்திகேயனும் வேட்பாளர். திரு. கார்த்திகேயனின் வெற்றிக்காக உழைத்த மாணவர் குழாமில் நானும் ஒருவன். அத்தகைய அன்பும் மதிப்பும் உறவும் திரு. கார்த்திகேயனுடன் வைத்திருந்தேன்.   இதைத் தெரிந்து கொண்ட திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் என்னையும் நினைவஞ்சலி உரை நிகழ்த்த  அழைத்தார்.&lt;br /&gt;1979 வைகாசியில் ஒரு நாள். மறவன்புலவில் வீட்டில் இருந்தேன். கார் ஒன்று வந்து நின்றது. கைதடியிலிருந்து ஆசிரியர் திரு. கந்தையா அவர்களும் நண்பரும் வந்திருந்தனர். கைதடிப் பிள்ளையார் கோயிலில் தேர் திருவிழா நடைபெறுவதாகவும் தேர் வடம் பிடிக்க அனைத்துச் சமூகத்தினருக்கும் அநுமதி இல்லை என்றும் கூறினர். நானும் என் பெண் மக்கள் இருவரும் நீராடி, தோய்த்துலர்ந்த உடை அணிந்து, திரு. கந்தையா அவர்களின் காரில் கைதடிக்குப் போனோம்.&lt;br /&gt;கோயிலில் பெரிய கூட்டம். தேரில் எழுந்தருளிப் பிள்ளையார் அலங்கரித்து வீற்றிருந்தார். நானும் பிள்ளைகளும் வீழ்ந்து வணங்கினோம். &lt;br /&gt;சாவகச்சேரிக் காவல் நிலையத்திலிருந்து காவலர் படை வந்திருந்தது. படைத் தலைவரை அழைத்தேன். உங்களுக்கு இங்கே என்ன பணி? இது. கோயில். எவரும் மோதாமல் பார்த்துக் கொள்வது எங்கள் கடமை. நீங்கன் இங்கு இருந்தால் சிக்கல் மேலும் அதிகமாகும் எனக் கூறினேன். காவல் படையினர் ஒதுங்கினர். வெளிப்புறத்திற்குப் போயினர்.&lt;br /&gt;இரண்டு கைகளிலும் 8, 9 வயதுச் சிறுமிகளான என் பெண் மக்கள். இருவருடனும் தேரடிக்குப் போனேன். திரு. விசுவலிங்கம் அவர்கள் நின்றார்கள். திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் நின்றார்கள். அவர்களே கோவில் அறங்காவலர்கள் எனத் தெரிந்து கொண்டேன். சிக்கலின் இழைகளை விரித்துக் கூறினர். எவரும் தேர் வடம் பிடிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றனர். ஆனாலும் வேறு ஒரு பிரிவினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன்  வன்முறைக்கும் தயாராக உள்ளதைக் கூறினர்.&lt;br /&gt;அப்பிரிவினரிடையே செல்வாக்குப் பெற்றவரான திரு. கே. சி. நித்தியானந்தா அவர்கள் சுண்ணாகத்தில் இருந்தார். கார் ஒன்றை அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினேன். அவரும் ஓடோடி வந்தார். அவருக்கு விவரங்களைக் கூறினேன். அவரது சொல்லுக்கும் அப்பிரிவினர் மதிப்புக் கொடுக்கவில்லை. &lt;br /&gt;அனைத்துச் சமூகத்தினரும் வடம் பிடித்தால் தேர் ஓடும். அல்லாவிடில் தேர் ஓடாது என்ற கருத்தில் நான் பிடிவாதமாக இருந்தேன். திரு. விசுவலிங்கம் அவர்களுக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை. அறங்காவலர் அல்லவா. எப்படியாவது தேர் ஓடவேண்டும் என்றார். எனது நிலையை நான் தளர்த்தவில்லை. தேர் ஓடுவதில்லை எனத் தீர்மானித்தனர். எழுந்தருளிப் பிள்ளையாரைத் தேரில் இருந்து இறக்கிக் கோயிலுக்குள் எடுத்துச் சென்றனர்.&lt;br /&gt;திரு. முத்துக்குமாரசாமி தம்பதிகள், மற்றும் சார்ந்தவர்கள் யாவருக்கும் என் தலையீட்டில் உடன்பாடில்லை. இவ்வளவு காலமும் இந்தக் கோயிலுக்கு வராத நீர், இன்றைக்கு மட்டும் வந்தீரே? எனத் திரு. விசுவலிங்கம் அவர்களின் மென்மையான வினா, சார்ந்தவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடு.&lt;br /&gt;அனைவரும் அமைதியாக வீடு திரும்பும் வரை நானும் என் பெண் மக்களும் திரு. கே. சி. நித்தியானந்தா அவர்களும் கோயிலடியில் வெயிலில் காத்திருந்தோம்.&lt;br /&gt;பின்னர் திரு. கே. சி. நித்தியானந்தா அவர்களைக் காரில் சுண்ணாகத்துக்கு அனுப்பிவைத்தேன். நேராகத் திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் இல்லத்துக்குப் பெண் மக்களுடன் சென்றேன். அன்பாகப் பேசினேன். உபசரித்தனர், விருந்தோம்பினர், விடைபெற்றேன்.&lt;br /&gt;பின்னர் கைதடியில் அறப்போர், செய்தி இதழ்களில் பிரசாரம், யாழ்ப்பாணம் முற்ற வெளியில் பொதுக்கூட்டம், பேச்சுவார்த்தை எனத் தொடர்ந்து, திரு. கதிரவேற்பிள்ளை, திரு. கே. சி. நித்தியானந்தா, திரு. கு. நேசையா திரு. வி. எஸ் துரைராஜா, திரு. க. ஜீவகதாஸ் ஆகியோர் இணைந்து பேசி, அனைத்துச் சமூகத்தவருக்கும் கோயிலை திறந்துவிடும் நிலையும் அனைத்து வழிபாடுகளிலும் அனைத்துச் சமூகத்தவரும் கலந்து கொள்ளும் நிலையும் சில மாதங்களுக்குள்ளேயே ஏற்பட்டன.&lt;br /&gt;முரண்பாடுகள் நிறைந்த இக் காலப் பகுதி முழுவதும் எனக்கும் திரு. விசுவலிங்கம் அவர்களுக்கும், திரு. முத்துக்குமாரசாமி தம்பதிகளுக்கும் இடையே அன்பு குறையவில்லை. வழமையான இயல்பான தொடர்புகள் குன்றவில்லை.&lt;br /&gt;நான் வெளிநாடுகளில் பணி புரிந்த காலங்களில் இரமணன் - கௌரி திருமணச் செய்தி பெற்றதும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.&lt;br /&gt;திரு. முத்துக்குமாரசாமி தம்பதிகளைத் தெரிந்த அளவு, அவர்களின் மக்கள் எனக்கு அறிமுகமானவரல்ல. எனினும் அவர்கள் அறிவறிந்த மக்கள் என்பதையும் மரபறிந்த மக்கள் என்பதையும் பெற்றோரையும் பெயரரையும் கொண்டே மதிப்பிட்டேன். தாம் தேர்ந்த துறைதொறும் துறைதொறும் வல்லுநராய் விளங்கும் மக்களாக அவர்கள் உளர். சைவத்திலும் தமிழிலும் தோய்ந்த மக்களாய் அவர்கள் உளர். &lt;br /&gt;இரமணனின் காரியம் யாவிலும் கைகொடுக்கும் துணைவியாராய், நன்மக்களை ஈன்றெடுத்த நற்றாயாய்க் கௌரியை அறிவேன்.&lt;br /&gt;திருமதி. முத்துக்குமாரசாமி அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தியைப் படித்ததும் இந்த நினைவலைகள் என் நெஞ்சில் மோதின, ஆழிப் பேரலையாய் மோதியதால் துக்கம் நெஞ்சை நிறைத்தது. கண்கள் பனித்தன. &lt;br /&gt;மனித வரலாற்றின் பண்பாட்டு வளர்ச்சியில் செதுக்கிச் செதுக்கிக் கூர்மையாக்கிய நல்லியல்புகளின் உறைவிடமான திருமதி முத்துக்குமாரசாமியின் பூதவுடல் மறைந்தாலும், அவர் காத்த நல்லியல்புகள் மறையாது பேண அவரின் வழிவந்தோர் பலர் உளர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-115248600361752144?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/115248600361752144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=115248600361752144' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/115248600361752144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/115248600361752144'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2006/07/blog-post.html' title='கைதடியின் நன்மகள்'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-112754621841813312</id><published>2005-09-24T00:16:00.000-07:00</published><updated>2005-09-24T00:16:58.423-07:00</updated><title type='text'>1. திருப்பிரமபுரம்</title><content type='html'>1. திருப்பிரமபுரம்&lt;br /&gt;1. தோடுடையசெவியன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்&lt;br /&gt;காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்&lt;br /&gt;ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த&lt;br /&gt;பீடுடையபிர மாபுரமேவிய&lt;br /&gt;பெம்மானிவனன்றே. 1&lt;br /&gt;தோடணிந்த திருச்செவியை உடைய உமை யம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-112754621841813312?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/112754621841813312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=112754621841813312' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112754621841813312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112754621841813312'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2005/09/1.html' title='1. திருப்பிரமபுரம்'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-112607879084363301</id><published>2005-09-07T00:30:00.000-07:00</published><updated>2005-09-07T00:39:50.846-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;KANAPATHIPILLAI SACHITHANANTHAN&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;Address:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;p&gt;68, Anna Saalai,&lt;br /&gt;Chennai 600 005&lt;br /&gt;India.&lt;br /&gt;&lt;em&gt;Date of Birth&lt;/em&gt;: 5th December, 1941&lt;br /&gt;&lt;em&gt;Place of Birth:&lt;/em&gt; Jaffna, (Sri Lanka).&lt;br /&gt;&lt;em&gt;Education:&lt;/em&gt;&lt;br /&gt;1992 M.A Degree in Tamil from the University of Madras.&lt;br /&gt;1966 M.Sc. Degree in Zoology with Marine Biology from the University of Madras, under the Government of India General Scholarship Scheme.&lt;br /&gt;1963 B.Sc. degree with Zoology as main subject and Chemistry as ancillary subject&lt;br /&gt;from the University of Madras obtaining a first class pass.&lt;br /&gt;1958 Educated up to secondary school level in Jaffna. (at Maravanpulo, Sakalakalavalli&lt;br /&gt;Vidyasalai,1945-1948; at Jaffna Hindu College, 1949-1958)&lt;br /&gt;Employment:&lt;br /&gt;1980- Established Kaanthalakam, a book publishing house, in Chennai, India.&lt;br /&gt;1979 (Aug.-1985 Dec.) Consultant, FAO/UN (Red Sea, Gulf of Aden, South West Indian Ocean)&lt;br /&gt;1977 (Dec.-1979 July) Lecturer (Zoology), University of Jaffna.&lt;br /&gt;1977-93 Established Kaanthalakam, a book publishing house, in Jaffna, after resigning&lt;br /&gt;from the Sri Lanka Scientific Service in August 1977,&lt;br /&gt;subsequent to the communal disturbances of July 1977.&lt;br /&gt;1971 (Apr. to Aug.) Consultant, FAO/UN (South Pacific)&lt;br /&gt;1967 (Jan. to 1977 Aug.) Research Officer (Sri Lanka Scientific Service),&lt;br /&gt;Fisheries Research Station, Colombo.&lt;br /&gt;1966 (October ) Private Secretary to Hon. M. Tiruchelvam, Minister for Local Government&lt;br /&gt;1966 (July-Sept.) Visiting Lecturer (Zoology), Jaffna College Undergraduate department.&lt;br /&gt;1963 (Oct.-1964 Mar.) Government Clerical Service, Government of Ceylon.&lt;br /&gt;Training:&lt;br /&gt;1973 (August) Participated in the UNESCO training programme on Marine Microbiology at&lt;br /&gt;Nanyang University, Singapore for one month under the guidance of Professor&lt;br /&gt;Ralph A. Lewin (Scripps Institution of Oceanography), University of California.&lt;br /&gt;1969 (June-December) Trained at Tokai Regional Fisheries Research Laboratory, Tokyo, Japan for six&lt;br /&gt;months in Fisheries Biochemistry on a group training programme in Marine Fish&lt;br /&gt;eries Research, by the Overseas Technical Corporation Agency, Government of&lt;br /&gt;Japan.&lt;br /&gt;Research:&lt;br /&gt;1976 Extended investigations into processing of dried fish in Sri Lanka studying among&lt;br /&gt;other things the feasibility of a mechanical device to dry fish, jointly with engineers&lt;br /&gt;of Walker Sons Ltd. Colombo.&lt;br /&gt;1969 Investigated into the problems related to the Beche-de-mer fishery of Sri Lanka.&lt;br /&gt;1967 Continued scientific investigations in the Jaffna Lagoon, studying its physical, chemi&lt;br /&gt;cal and biological nature in relation to the revision of the Northern Province Fishery&lt;br /&gt;Regulations. Commended by one man committee of inquiry for the contribution,&lt;br /&gt;in his report on the revision of the regulations.&lt;br /&gt;1964 (May - June) Accepted a Research Studentship Award to work on the physical and chemical&lt;br /&gt;aspects of Jaffna Lagoon, under the guidence of Dr. K. D. Arudpiragasam, Zool&lt;br /&gt;ogy Department, University of Sri Lanka, Colombo. This study was temporarily&lt;br /&gt;terminated to be able to follow a course in India leading to the M.Sc degree.&lt;br /&gt;Projects:&lt;br /&gt;1984-1985 As consultant with FAO/UN - Project for development of Fisheries in the&lt;br /&gt;South West Indian Ocean, participated in many projects related to processing&lt;br /&gt;and marketing of fish and fishery products, including training programs, in Seychelles,&lt;br /&gt;Mauritius, Madagascar, Tanzania, Kenya and Somalia.&lt;br /&gt;1979-1984 As consultant with FAO/UN - Project for development of Fisheries in the Red&lt;br /&gt;Sea and Gulf of Aden, participated in many projects related to processing and&lt;br /&gt;marketing of fish and fishery products, including training programs, in South&lt;br /&gt;Yemen, North Yemen, Saudi Arabia, Jordan, Egypt, Sudan and Djibouti.&lt;br /&gt;1976 (December) Participated in a field experiment organised by the Association for Science Cooperation&lt;br /&gt;in Asia at Cox’s Bazar, Bangladesh on an efficient method in sundrying&lt;br /&gt;fish.&lt;br /&gt;1976 (June) Participated in the conference on handling, processing, marketing of tropical fish&lt;br /&gt;in London organised by the Tropical Products Institution, London.&lt;br /&gt;1975-1976 Member, working party on Fish Technology Indo-Pacific Fisheries Council, FAO/&lt;br /&gt;UN since 1973, and attended its meetings in Bangkok 1975, London 1976,&lt;br /&gt;Colombo 1976. Also prepared a report for the working party on the dried fish&lt;br /&gt;trade in Sri Lanka.&lt;br /&gt;1975 Organised the Quality Control Laboratory at the Fisheries Department to test&lt;br /&gt;checkquality of frozen prawns and other fishery products destined for export from&lt;br /&gt;Srilanka. As officer in charge of the Quality Control Laboratory, supervised the&lt;br /&gt;work of two graduate level students on Fish Technology and the duties of four&lt;br /&gt;Laboratory Assistants.&lt;br /&gt;1975 Member, Drafting Committee preparing standard requirements for frozen prawns,&lt;br /&gt;frozen lobsters, dried fish, canned fish and other related fishery products of the&lt;br /&gt;Bureau of Standards, Colombo.&lt;br /&gt;1973-1975 Designed jointly with the engineers from Walker Sons Co. Ltd., a mechanical&lt;br /&gt;device (named de-scummer) for cleaning the scum off the outer surface of&lt;br /&gt;holothurians during processing,&lt;br /&gt;Prepared feasibility studies and participated in the implementation of Five Bechede-&lt;br /&gt;mer Processing Factories in Sri Lanka (constructed in Mannar, Manthai,&lt;br /&gt;Nachchikudah, Kalpitiya and Triconmalee) by the respective District Development&lt;br /&gt;Councils of the Ministry of Planning. Two more feasibility studies&lt;br /&gt;(Chilavathurai, Jaffna) were with the Ministry of Planning for approval.&lt;br /&gt;1971 (May-August) FAO/UN consultant in Beche-de-mer fishery in the South Pacific Islands, for&lt;br /&gt;four months based in Noumea, New Caledonia, travelling to Fiji, New Herbides,&lt;br /&gt;British Soloman Islands, Trust Territory of Pacific Islands, (Ponape, Truk, Marshal&lt;br /&gt;Islands Yap, Palau). Trust Territory of Papua and New Guinea, Philippines,&lt;br /&gt;Hongkong and Singapore.&lt;br /&gt;Knowledge of Languages:&lt;br /&gt;Language Degree of knowledge&lt;br /&gt;Tamil - Excellent&lt;br /&gt;English - Good&lt;br /&gt;Sinhalese - Working knowledge&lt;br /&gt;Japanese - Working knowledge&lt;br /&gt;Arabic - Working knowledge&lt;br /&gt;Publications other than research contributions:&lt;br /&gt;Frequent contributor of articles in Tamil and English, in periodicals, newspapers and radio in Sri Lanka,&lt;br /&gt;India, Singapore and Malaysia on popularisation of Science, Science in Tamil and Tamil research. Translated&lt;br /&gt;few English books on Zoology into Tamil for the Education Publication Department of Sri Lanka and other&lt;br /&gt;institutions.&lt;br /&gt;Professional Societies:&lt;br /&gt;General Research Committee, Sri Lanka Association for the Advancement of Science.&lt;br /&gt;Plankton Society of Japan.&lt;br /&gt;American Fisheries Society.&lt;br /&gt;International Association for Tamil Research.&lt;br /&gt;Marine Biological Association of India.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-112607879084363301?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/112607879084363301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=112607879084363301' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607879084363301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607879084363301'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html' title=''/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-112607816315477198</id><published>2005-09-07T00:23:00.000-07:00</published><updated>2005-09-07T00:29:23.153-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/5218/1450/1600/kanthalakam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/5218/1450/400/kanthalakam.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-112607816315477198?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/112607816315477198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=112607816315477198' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607816315477198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607816315477198'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2005/09/blog-post_112607816315477198.html' title=''/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-112607765192799141</id><published>2005-09-07T00:16:00.001-07:00</published><updated>2005-09-07T00:20:51.926-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/5218/1450/1600/sachiphoto.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/5218/1450/400/sachiphoto.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-112607765192799141?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/112607765192799141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=112607765192799141' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607765192799141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607765192799141'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2005/09/blog-post_112607765192799141.html' title=''/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-112607388382327971</id><published>2005-09-06T23:06:00.000-07:00</published><updated>2005-09-06T23:18:03.833-07:00</updated><title type='text'>மணிமேகலைக் காப்பியத்தில்  சிறை</title><content type='html'>&lt;strong&gt;காயசண்டிகை:&lt;/strong&gt;&lt;br /&gt;காஞ்சனன் கணவன், காயசண்டிகை மனைவி, இமயமலைச் சாரலில் காஞ்சனாபுரத்தில் வசித்தனர்.&lt;br /&gt;பொதிகைமலையின் வனப்புக் காணச் சுற்றுலாப் பயணிகளாகத் தமிழகம் வந்தனர். வியந்து, மகிழ்ந்து பல்வேறு இடங்களுக்கும் பயணித்தனர்.&lt;br /&gt;ஒருநாள், குளக்கரையருகே முனிவன் ஒருவன் குளிக்கச் செல்லும் பொழுது விட்டுச் சென்ற நாவல்பழத்தை, விவரமறியாது காலால் காயசண்டிகை மிதித்தாள். குளித்துவிட்டு மீண்ட முனிவன், நாவல் பழத்தை மிதித்த காயசண்டிகையைச் சினந்தான்.&lt;br /&gt;&lt;em&gt;என் பசிக்கு உணவாகிய பழத்தை மிதித்தனை, என்னைப்போல் உனக்கும் தீராப் பசிப்பிணி வருவதாக&lt;/em&gt; என முனிவன் சபித்தனன். காயசண்டிகையின் தீராப் பசிப்பிணியைத் தீர்க்கக் காஞ்சனன் முயன்றான். தமிழகமெங்கும் ஊரூராகச் சென்றான். மருத்துவர்களை நாடினான்.&lt;br /&gt;சோழத் தலைநகர் பூம்புகார் வந்தான். வருவோர்க்கெல்லாம் வற்றாது உணவு வழங்கும் உலக அறவியில் காயசண்டிகையைச் சேர்த்தான். இணையோடு வந்தவன் தனியாக வடக்கே காஞ்சனாபுரத்திற்குத் திரும்பினான்.&lt;br /&gt;&lt;strong&gt;மணிமேகலை&lt;/strong&gt;:&lt;br /&gt;கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. &lt;em&gt;மூப்பு, பிணி, சாக்காடு ஆய மூன்றுக்கான இப்பிறவியின் உடல், துன்பங்களின் கொள்கலன்; துறவே பிறவியின் பயன்&lt;/em&gt;; இவற்றைத் தேர்ந்த மணிமேகலை சிறுவயதிலேயே துவராடையை உடுத்தித் தேரரானாள்.&lt;br /&gt;துறவுபூண்ட மணிமேகலை, யாழ்ப்பாணம் சென்றாள். கந்தரோடையில் கோமுகிப் பொய்கையில் அமுதசுரபிப் பாத்திரத்தைப் பெற்றாள்.&lt;br /&gt;புகார் நகரம் திரும்பிய மணிமேகலை, &lt;em&gt;பாரகம் அடங்களும் பசிப்பிணி அறுகென&lt;/em&gt; அமுதத்தை அனைவருக்கும் அள்ளி ஈந்தாள்.&lt;br /&gt;காயசண்டிகைத் தங்கியிருந்த உலக அறவியில் மணிமேகலை பசிப்பிணி போக்கிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த காயசண்டிகைக்கு அமுதசுரபியிலிருந்து அள்ளிக் கொடுத்த உணவே மருந்தாயிற்று. தீராப் பசியை மணிமேகலை தீர்த்தாள். நன்றி கூறிய காயசண்டிகை தன் கணவனைத்தேடி வடக்கே காஞ்சனாபுரத்திற்குப் புறப்பட்டாள்.&lt;br /&gt;&lt;strong&gt;உதயகுமாரன்&lt;/strong&gt;:&lt;br /&gt;சோழமன்னனின் மகன் உதயகுமாரன் மணிமேகலையை விழைந்தான். மணிமேகலையின் பாட்டி சித்திராபதியும் உதயகுமாரனுக்கு மணிமேகலை மீது காமவேட்கையை ஊட்டினாள்.&lt;br /&gt;உதயகுமாரன் மணிமேகலையைத் தேடினான்.  உதயகுமாரன் தேடிப் பின்தொடர்தலைக் கண்ட மணிமேகலை அவனுக்காக வருந்தினாள். அருகிலிருந்த சம்பாபதிக் கோயிலுள் மறைந்தாள். மாறுவேடம் பூண்டாள், காயசண்டிகையின் உருவத்தைப் பெற்றாள், உலக அறவி வந்தாள். பசிநீக்கும் பணியைத் தொடர்ந்தாள்.&lt;br /&gt;காயசண்டிகையின் உருவத்தில் இருந்ததால் உதயகுமாரனுக்கு மணிமேகலையைத் தெரியவில்லை.அறக்கோட்டமாக்குக உலக அறவியில் மட்டுமல்ல புகார் நகரின் ஏனைய இடங்களிலும் பசித்தோர்க்கு உணவை அள்ளியள்ளிக் கொடுத்தாள்.&lt;br /&gt;புகார் நகரின் ஒரு பகுதியிலிருந்த சிறைக்கோட்டம் சென்றாள். சிறைக்கைதிகளுக்கு உணவை அள்ளியள்ளிக் கொடுத்தாள். அவர்களும் வயிறு புடைக்க உண்டனர். சிறைக்காவலருக்கோ வியப்பு. மன்னனிடம் சென்றனர். மணிமேகலையின் அன்புப் பெருக்கத்தையும், வற்றா உணவுப் பெருக்கத்தையும் வியந்து பாராட்டிக் கூறினர்.&lt;br /&gt;மன்னன் தன் அரசவைக்கு மணிமேகலையை அழைத்தான். காயசண்டிகையாக மாறுவேடம் புனைந்த மணிமேகலை அரசவைக்குச் சென்றாள். &lt;em&gt;பெருந்தொண்டு புரியும் அணங்கே, உனக்கு என்ன வேண்டும் கேள்&lt;/em&gt; என மன்னன் வினவினான். &lt;em&gt;வேந்தே, தண்டனை பெற்ற கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குங்கள். அவர்களை அறவோர் ஆக்குங்கள். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குங்கள்&lt;/em&gt; என மணிமேகலை வேண்டுகோள் விடுத்தாள். மன்னன் உடன்பட்டான். மணிமேகலை மகிழ்ந்தாள்.&lt;br /&gt;காயசண்டிகையின் உருவுடன் உலக அறவிக்கு மீண்டாள். பசிப்பிணிப் போக்கும் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டாள்.&lt;br /&gt;&lt;strong&gt;கொலை&lt;/strong&gt;:&lt;br /&gt;உதயகுமாரன் ஓயவில்லை. அமுதசுரபி மணிமேகலையின் கையிலிருந்ததே, இப்பொழுது வேறொருத்தியின் கையில் உள்ளதே! யாரிந்தப்பெண்? மணிமேகலையே இந்த மாறுவேடத்தில் உள்ளாளோ? என உதயகுமாரன் மயங்கினான்.&lt;br /&gt;காயசண்டிகைதான் மணிமேகலை என உய்த்துணர்ந்தான்.  காஞ்சனாபுரத்திற்குக் காயசண்டிகை திரும்பியதை அறியாத காஞ்சனன் அவளைத் தேடிப் பூம்புகாருக்கு வந்தான், உலக அறவியுள் புகுந்து தேடினான். அங்கே காயசண்டிகை உருவிலிருந்த மணிமேகலையின் பின்னே உதயகுமாரன் காம வயப்பட்டுத் தொடர்வதைக் கண்டான். &lt;em&gt;என் மனைவி மீது மாற்றான் மயங்குகிறானே&lt;/em&gt; எனக் கருதினான். வாளொடு காஞ்சனன் பதுங்கியிருக்க, உதயகுமாரன் அவ்வழி வந்தான். ஒரே வீச்சில் உதயகுமாரனை வெட்டி வீழ்த்திய காஞ்சனன் தப்பி ஓடினான்.&lt;br /&gt;&lt;strong&gt;சிறையிடுதல்&lt;/strong&gt;&lt;em&gt;:&lt;/em&gt; உதயகுமாரன் இளவரசனல்லவா! மன்னனுக்குச் செய்தி போயிற்று. &lt;em&gt;துறவு பூண்ட மணிமேகலையைக் காமுற்ற உதயகுமாரன் என் மகனாயினும் தவறிழைத்தவனே, தண்டனைக்குரியவனே. பழிச்சொல் பரவுமுன்பு அவனுடலை எரித்து விடுங்கள், மணிமேகலையை ஆய்வுக்காகச் சிறையிலிடுங்கள்&lt;/em&gt; என்றான் மன்னன். மனுநீதிகண்ட சோழனின் வழிவந்தவனல்லவா இம்மன்னவன். தேர்க்காலில் பசுக் கன்றைத் தன்மகன் கொன்றான் என்று தெரிந்ததும், &lt;em&gt;மகனைத் தேர்க்காலில் இடுக&lt;/em&gt; எனச் சொன்னவன் மனுநீதிச்சோழன். அந்த நீதி மரபில் வந்த அரசனும், அரசியும் மகனை இழந்த துக்கத்தை வெளிக்காட்டவேயில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;உடல்வதை&lt;/strong&gt;:&lt;br /&gt;தாய்ப்பாசம் விடுமா? அரசிக்கு மணிமேகலை மீது அடங்காத சீற்றம். எனினும் அதை மறைத்தாள். கணிகை மகளை என் மகன் காமுறுவது தவறா? எனத் தனக்குள்ளே வினவிக்கொண்டாள். மணிமேகலை மீது பரிவு காட்டுவது போல் நடித்துப் பழித் தீர்க்க விழைந்தாள். அரசனிடம் அரசி சென்றாள். குற்றமற்ற மணிமேகலையை விடுவியுங்கள் என்றாள். அரசனும் மணிமேகலையைக் காவலிலிருந்து விடுவித்தான்.&lt;br /&gt;மணிமேகலைக்கு பித்தேற்றும் மருந்தை அரசி ஊட்டினாள். மணிமேகலை தப்பினாள்.&lt;br /&gt;கல்லா இளைஞன் ஒருவனை அரசி அழைத்து, மணிமேகலையுடன் கூடினேன் எனப் பொய்யுரை வதந்தியைப் பரப்ப முயன்றாள். அவ்விளைஞனோ புகாரை விட்டே ஓடினான்.&lt;br /&gt;மணிமேகலையைப் பட்டினி போட்டாள்.&lt;br /&gt;சுண்ணாம்பு அறைக்குள் மணிமேகலையை அரசி அடைத்தாள். எவ்வித வருத்தமுமின்றி மாதவத்தாள் இருந்தாள்.&lt;br /&gt;தன் உடல்வதை முயற்சிகள் தோல்வியுற்றதைக் கண்ட அரசி மாதவத்தாள் மணிமேகலையைத் தொழுதாள்.&lt;br /&gt;&lt;strong&gt;மன்னிப்பு&lt;/strong&gt;:&lt;br /&gt;தனக்குத் துன்பங்களைத் தொடர்ந்து தந்த அரசியை மன்னித்த மணிமேகலை அரசியைத் தொழுதாள். காஞ்சனன் தன் நாடு திரும்பிக் காயசண்டிகையைக் கண்டு மகிழ்வோடு வாழ்ந்தான்.&lt;br /&gt;&lt;strong&gt;முடிவுரை&lt;/strong&gt;:&lt;br /&gt;குற்றமிழைக்காதவர்களைச் சிறையிலிடுவதும், தண்டனைக்கு உள்ளாக்குவதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்துவரும் பிறழ்ச்சிகள்.&lt;br /&gt;&lt;em&gt;கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வா&lt;/em&gt; எனத் தீர்ப்பு வழங்கியவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அறிவுகெட்ட மன்னவனே (தேரா மன்னா) எனக் கண்ணகி அவனைச் சினந்தாள். அரசியல் பிழைத்தவனுக்கு அறங் கூற்றாயது. பாண்டியனோ மனைவியுடன் மாண்டான். மதுரையும் பற்றி எரிந்ததே.&lt;br /&gt;குற்றமிழைக்கா மணிமேகலையைக் காவலில் வைத்த மன்னவனும் உடல் வதைக்குள்ளாக்கிய அரசியும் மனம் திருந்தினர். மன்னிப்புக் கோரினர். &lt;br /&gt;அன்னை திரேசா நம் காலத்தில் பசிப்பிணி போக்கிய மாதரசி. 1,700 ஆண்டுகளுக்கு முன்பே பசிப்பிணி போக்கி வழிகாட்டிய அருந்தவத் தமிழ்மகள் மணிமேகலை.&lt;br /&gt;அம்னெஸ்டி இன்ரநாஷனல் என்ற அனைத்துலக மன்னிப்புச் சபை சிறையிலுள்ளோரை மன்னித்து விடுவிக்கப் போராடுவது இந்த நூற்றாண்டில். நம் தமிழ்ப்பெண் மணிமேகலையோ 1,700 ஆண்டுகளுக்கு முன்பே சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கி வழிகாட்டினாள்.&lt;br /&gt;நமக்குக் கொடுமை செய்வோரை நாம் மன்னித்துத் தொழவேண்டும் என வாழ்ந்து காட்டிய தமிழ் மகளும் மணிமேகலையே.&lt;br /&gt;சிலப்பதிகாரக் காப்பியமும், மணிமேகலைக் காப்பியமும் இவற்றுக்குச் சான்றாக இன்றும் நம்மிடை உள.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-112607388382327971?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/112607388382327971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=112607388382327971' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607388382327971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112607388382327971'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2005/09/blog-post_112607388382327971.html' title='மணிமேகலைக் காப்பியத்தில்  சிறை'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15610208.post-112453607225531500</id><published>2005-08-20T04:04:00.000-07:00</published><updated>2005-09-06T22:39:04.180-07:00</updated><title type='text'>சோழன் குடா  நக்காவரம்  தமிழர்</title><content type='html'>&lt;div align="left"&gt;ஆடையின்றி ஒருவர் வந்தார். நகைப்புக்குரியவராக, பழிப்புக்குரியவராக, இழிவுக்குரியவராக, தாழ்வானவராக, கேலிக்குரியவராக, கிண்டலுக்குரியவராக அவரை ஆடையணிந்த சமூகம் கருதியது; ஆடையற்றவர் நகுதற்குரியவரானார்.&lt;br /&gt;என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். &lt;em&gt;நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்&lt;/em&gt; (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை.&lt;br /&gt;நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர்.&lt;br /&gt;எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடையற்றிருப்பின் அவர்களுக்குப் பெயர் சூட்டவேண்டாமா? குழு, இனம், சாகியம், கணம் என்பனவும் சாரணர் ஆகும்.&lt;br /&gt;ஆடையற்ற, நகுதற்குரிய மனிதர் கூட்டத்தினரே நக்க சாரணர். &lt;em&gt;சூர்மலை வாழும் நக்க சாரணர், நயமிலர்&lt;/em&gt; என்ற மணிமேகலை (16 55, 56) வரிகளில் இந்தச் செய்தி உண்டு.சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆடையின்றி அம்மணராக வாழ்ந்த நக்கசாரணர், அவ்வாறே மணிமேகலையின் காலத்திலும் ஆடையின்றித் தொடர்ந்தனர், இன்று வரை அவர்களுட் பலர் ஆடையின்றியே வாழ்கின்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அந்த நக்கசாரணர் வாழ்கின்ற இடமே நக்காவரம். &lt;strong&gt;நக்காவரம்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நிக்கோபார் என்ற இன்றைய வழக்குச் சொல் நக்காவரத்தின் போலி. அந்தமான் நிக்கோபார் என இன்று அழைக்கிறோமே, அத்தீவுக் கூட்டத்தில் வாழும் பழங்குடியினர் பலர் இன்றும் ஆடையின்றியே வாழ்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="left"&gt;நக்காவரம் தீவுக் கூட்டத்தில், கொக்குத் தீவு, கச்சல் தீவு எனத் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட தீவுகள் பலவுள.பன்னெடுங்காலமாக நக்காவரத்துக்குத் தமிழர் சென்று மீள்கின்றனர். அங்கு வாழும் நக்கசாரணரின் மொழியில் வல்லவரான தமிழர், காலந்தோறும் வாழ்ந்துளர். பூம்புகார்த் தமிழனான சாதுவன், நக்காவரத்து நக்கசாரணரின் மொழியில் வல்லவனாயிருந்த செய்தியை, &lt;em&gt;மற்றவர் பாடை மயக்கறு மரபின் கற்றவனாதலின்&lt;/em&gt; என மணிமேகலை (16 60, 61) கூறும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;இன்றைய இந்தோனீசியாவில் உள்ள, சாவகத்துக்கு 1,800 ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டுச் சென்று புத்தரின் கோட்பாட்டைப் பரப்பியவர் மணிமேகலை. கடல்வழி பயணித்த அவர், சாவக மொழியை அறிந்திருந்தார்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;மகேந்திர பல்லவன் காலத்தில், 1,400 ஆண்டுகளுக்கு முன், சாவகம், காம்போசம் ஆகிய பகுதிகளில் கோயில்கள் கட்ட, மாமல்லபுரச் சிற்பப் பாணியில் கட்ட, சிற்பிகள் சென்றனர். அங்கிருந்து வந்தோர் சிற்பக் கலையில் பயிற்சி பெற்றுச் சென்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;சீன நாட்டினருக்காக 1,000 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் தூபி அமைத்தவன் சோழப் பேரரசன் இராரசராசன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;600 ஆண்டுகளுக்கு முன், மதுரைப் பாண்டிய இளவரசன் ஒருவன் தன் உடன்பிறப்பொடு எழுந்த பகையைப் போக்க, நாகப்பட்டினம் வழி தன் தூதரைச் சீனம் அனுப்பிச் சீனப் படையைத் துணை கேட்ட வரலாறும் உண்டு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமிழகத்தின் கிழக்குத் துறைமுகங்களான மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டினம் துறைகளிலிருந்து கிழக்கே வணிகத்துக்காக, சமயக் கொள்கை பரப்புவதற்காக, கோயில்கள் கட்டுவதற்காக, பேரரசு அமைப்பதற்காக, அரசுகளுக்குத் தூது அனுப்புவதற்காகக் காலம் காலமாகத் தமிழர் தம் கப்பல்களில் சென்று வருகின்றனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமிழகத்தின் கிழக்குக் கரையை விட்டகன்று, கிழக்குற்றால் நெடுங்கடலைத் தாண்டியதும் முதலில் கண்ணுக்குத் தெரியும் நிலப்பகுதி நக்காவரம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;சோழன் குடாவில் வலசை, இடசை:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;சோழன் குடா நெடுங்கடலுக்கு ஆங்கிலேயர் இட்ட பெயர் வங்காள விரிகுடா; தமிழரிடை நெடுங்காலமாகப் பயின்றுவரும் பெயரே சோழன் குடா. &lt;/div&gt;&lt;div align="left"&gt;அக்குடாவில் தமிழரின் கப்பல் பயணத்துக்குத் இயற்கைத் துணைகள் மூன்று, 1. விண்மீன்கள், 2. காற்று, 3. கடல்நீரோட்டம். &lt;/div&gt;&lt;div align="left"&gt;மீகாமானுக்கு இவ்வியற்கைக் கூறுகள் பற்றிய அறிவை, ஏடுகளும் தந்தன; பட்டறிவும் தந்தது. வானியல் ஏடுகள் தமிழில் நிறைந்திருந்தன; விண்மீன்களைப் பற்றிய அறிவு நிலத்திலேயே கிடைத்தது. காற்றையும், நீரோட்டத்தையும் அறியக் கடலில் பயணித்துப் பயிற்சி பெற்ற பட்டறிவே துணையாயது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஐப்பசியில் தொடங்கித் தையில் முடியும் வாடை; வைகாசியில் தொடங்கி ஆடியில் முடியும் தென்றல்: இவை கடுங் காற்றுகள். மாசி பங்குனியில் கொண்டல்; ஆவணி புரட்டாதியில் கச்சான்; இவை மென் காற்றுகள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;வாடைக் கால நீரோட்டம், நக்காவரத்திலிருந்து வடக்கே போய், வங்காளக் கரையைத் தொட்டு, கலிங்கக் கரையோரமாக ஓடிவந்து தமிழகக் கரையைத் தழுவி, இலங்கையின் கிழக்குக் கரையோரமாகச் சென்று மீண்டும் நக்காவரத்துக்குச் செல்லும் வலசை (வலங்கை).&lt;/div&gt;&lt;div align="left"&gt;தென்றல் கால நீரோட்டம், இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து புறப்பட்டு, தமிழகக் கரையைத் தழுவி, கலிங்கக் கரையோடு ஓடி, வங்கக் கரையைத் தொட்டு, நக்காவரம் வந்து, மீண்டும் இலங்கையின்கிழக்குக் கரைக்கு வருகின்ற இடசை (இடங்கை).&lt;/div&gt;&lt;div align="left"&gt;வலசையிலும் இடசையிலும் கடுவேக நீரோட்டத்தைக் காணும் சோழன் குடா, இடைக்காலத்தில் அலைகள் குறைந்த, வேகமற்ற காற்றுள்ள குளமாகி, கப்பல் பயணத்துக்கு ஏதாகி அமையும். மீகாமான்கள் இதை அறிவர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;வலசையும் இடசையும் வரலாற்றுப் பதிவுகளாக உள. மணிமேகலையில் வலசையின் பாதிப்புச் செய்தி உண்டு; மகாவமிசத்தில் இடசையின் பாதிப்புச் செய்தி உண்டு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;நக்காவரத்தில் சாதுவன்&lt;/strong&gt;:பூம்புகாரின் வணிகனான சாதுவன் கணவன், ஆதிரை அவனுக்கு மனைவி. பெரும் பொருள் ஈட்டினான் சாதுவன்; மனைவியை விட்டான்; கணிகையை நாடினான்; வட்டாடினான்: பொருள் அனைத்தையும் இழந்தான்; கணிகையும் நீங்கினாள். மீண்டும் பொருளீட்ட விழைந்தான். வணிகர்களுடன் பூம்புகாரில் மரக்கலம் ஏறினான்; கிழக்கு நோக்கிப் பயணமானான். &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஐப்பசித் திங்களில் அவன் புறப்பட்டான். வாடையின் கடுங்காற்றுக் காலம்; வலசை நீரோட்டக் காலம். நெடுங்கடலில் அலைகள் அந்த மரக்கலத்தை உடைத்தன; அதிலிருந்த மிதப்புக் கட்டைகளைப் பற்றிய வணிகர் மிதந்தனர். தொடர்ந்து வந்த மரக்கலங்கள் மிதந்த வணிகர் சிலரை மீட்டன. சாதுவனை மீட்க முடியவில்லை.தப்பிய வணிகர் பூம்புகார் திரும்பினர்; இடைச் சாமத்திலே எறிதிரைகள் மரக்கலத் உடைத்தன; அந்த அழிவில் நாம் தப்பினோம், ஒழிந்தோருள் சாதுவனும் ஒருவன் என ஆதிரையிடம் செய்தி கூறினர். &lt;/div&gt;&lt;div align="left"&gt;கணவனைக் கணிகைக்கு இழந்தவள், மீள்வான் என வாழ்ந்தவள், கடலுக்கு இழந்ததும் உயிர்நீக்க விழைந்தாள்; ஏதோ அவளைத் தடுத்தது; வருவான் கணவன் என ஆதிரை உயிர் தரித்திருந்தாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;நெடுங்கடலில் உடைந்த மரக்கலத்தின் மிதப்புக் கட்டை ஒன்றைப் பற்றிய சாதுவன் மூழ்கவில்லை; வலசை நீரோட்டத்துடன் அள்ளுப்பட்டான்; வடக்கே இழுத்த நீரோட்டம் நக்காவரத் தீவொன்றில் சாதுவனைக் கரைசேர்த்தது. மயங்கிய நிலையில் கரையில் ஒதுங்கிச் சாதுவன் கிடந்தான். &lt;/div&gt;&lt;div align="left"&gt;நக்காவரத்தின் நக்கசாரணர் ஆடையற்றவர் மட்டுமல்ல, மனித உடலை விரும்பி உண்பவர். தனியனாகக் கரைசேர்ந்த சாதுவன், நல்ல உணவாவான் என மகிழ்ந்தனர். சாதுவனை நெருங்கினர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;நக்கசாரணரின் மொழியில் சாதுவன் பேசத் தொடங்கினான். கேட்டதும் மகிழ்ந்த நக்கசாரணர், சாதுவனைத் தொழுதனர். தீவின் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். பேச்சினால் அத்தலைவனைத் தன்வயமாக்கினான் சாதுவன். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;em&gt;உணவற்றுக் கடலில் அலைந்தவனுக்கு உணவு கொடுங்கள், இளம் பெண்ணைக் கொடுங்கள், புலாலும் கள்ளும் வேண்டும் வரை கொடுங்கள்&lt;/em&gt; என ஆணையிட்டான் அத்தலைவன்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;உணவைத் தவிர பிறவற்றை ஏற்க மறுத்தான் சாதுவன். புத்தரின் அறவுரைகளைத் அத்தலைவனுக்குப் போதித்தான். தலைவனும் நக்கசாரணரும் மனம் மாறினர். மரக்கலம் கவிழ்ந்து கரைவந்த மக்களை முன்பு உணவாக்கினோம், இனி அவர்களைக் காப்போம் என அத்தலைவன் சாதுவனுக்கு உறுதி அளித்தான். தைத்திங்களில் வலசை முடிந்தது; கடல் குளம்போலாயது; சந்திரதத்தன் என்பானின் மரக்கலம், மலைநாட்டிருந்து அவ்வழியே பூம்புகாருக்குப் போய்க்கொண்டிருந்தது. அந்த மரக்கலத்தை மறித்துச் சாதுவனை அதில் பரிசுப் பொருள்களுடன் ஏற்றிவிட்டான் தீவின் தலைவன். சாதுவனும் மாசித் திங்களில் பூம்புகார் திரும்பி ஆதிரையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;நக்காவரத்தில் விசயனும் தோழர்களும்:&lt;/strong&gt;வங்கத்துக்கு வடக்காக, மகதத்துக்குத் தெற்காக இலாலை நாடு. காடுகள் சூழ்ந்த இலாலை நாட்டின் அரசன் சிங்கபாகன்; பட்டத்து அரசி சிங்கவள்ளி.இவர்களுக்குப் பிறந்த அனைவரும் இரட்டையர்களாக முப்பத்திரண்டு ஆண்கள். மூத்தவனான விசயன் பட்டத்து இளவரசனான். விசயனுக்குத் தோழர்கள் பலர். விசயனும் தோழர்களும் தீய பழக்கங்கள் உடையவராயினர், வன்முறையில் ஈடுபட்டனர். குடிமக்கள் இதனால் துன்புற்றனர். மன்னனிடம் குடிமக்கள் முறையிட்டனர். இளவரசனையும் தோழர்களையும் மன்னன் இருமுறை எச்சரித்தான்; இளவரசனும் தோழரும் செவிசாய்க்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;தொல்லை பொறுக்காத குடிமக்கள் திரண்டனர்; இளவரசனைக் கொன்றுவிடுக என மன்னனிடம் கோரினர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;விசயனையும் எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்த அரசன், அவர்களின் முடியை மழிப்பித்தான். கங்கை ஆற்றில் நின்ற மரக்கலத்தில் ஏற்றுவித்தான். அந்த மரக்கலம் கங்கை ஆற்றுவழியாக முகத்துவாரம் வந்தது; வங்கத்தின் தெற்கெல்லையில் கடலுள் பயணித்தது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அது சித்திரை மாதம். கொண்டல் காற்று நின்றதும் தென்றல் வீசத் தொடங்கியது. சோழன் குடாவில் இடசை நீரோட்டம் தொடங்கிய காலம். &lt;/div&gt;&lt;div align="left"&gt;மரக்கலத்தை நீரோட்டம் தென் கிழக்காக இழுத்துச் சென்றதால் நக்காவரத்தை மரக்கலம் அடைந்தது; நக்கர் தீவை (ஆடையற்றோர் தீவை) விசயனும் தோழர்களும் அடைந்தனர் என மகாவமிசம் (வரி 5.41) கூறும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;விசயனின் தோழர்கள் அங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே விசயன் மீண்டும் அவர்களுடன் மரக்கலத்தில் ஏறினான். நீரோட்டத்தைப் பின்பற்றினான். இடசை நீரோட்டம் அவர்களைத் தெற்கே இழுத்து வந்து, இலங்கைத் தீவில் இயக்கர் நிறைந்து வாழ்ந்த தாமிரக் கடவையில் (இன்றைய தம்மன் கடவை) திருகோணமலைக்குக் கீழே கரைசேர்த்தது. &lt;/div&gt;&lt;div align="left"&gt;சித்திரையில் இலாலை நாட்டை விட்டுப் புறப்பட்டனர். வைகாசி முழுநிலா நாளில் விசயனும் தோழர்களும் (மகாவமிசம் 5.47) இலங்கையை வந்தடைந்தனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;நக்காவரமும் தமிழரும்:&lt;/strong&gt;அந்தமான்நிக்கோபார் தீவுக் கூட்டம் என்ற பெயர் ஆங்கிலேயர் தந்தது. நக்காவரத் தீவுக் கூட்டம் என்பதே தொன்மைப் பெயர்; தமிழர் இட்ட காரணப் பெயர். 1,800 ஆண்டுகளுக்கு முந்தைய மணிமேகலையும் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவமிசமும் இந்தப் பெயரின் தொன்மையை உறுதி செய்கின்றன.அந்தத் தீவுக் கூட்டத்திலுள்ள இடப்பெயர்கள் பல தமிழாக உள. இன்று சிறிதே சிதைந்து, ஆங்கில ஒலிக்குள் புகுந்து பெயர்ப் போலிகளாகியுள.&lt;/div&gt;&lt;div align="left"&gt;தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்து மியன்மார், சீயம், மலைக்கா, சாவகம், காம்போசம், சீனம், நிகோன் போன்ற பல நாடுகளுக்குத் தமிழர் செல்லும் மரக்கலங்களின் முதற் தங்கிடமாக நக்காவரம் தீவுகள் இருந்தன. அங்கு வாழ்ந்த நக்கசாரணரின் மொழியைத் தமிழகக் கடலாடிகள் கற்றனர்; நக்கசாரணருடன் நல்லுறவு பூண்டனர், உதவி பெற்றனர், நாகரிகமுள்ளவராக்கினர், வணிகமும் செய்தனர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15610208-112453607225531500?l=sachithananthan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://sachithananthan.blogspot.com/feeds/112453607225531500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15610208&amp;postID=112453607225531500' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112453607225531500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15610208/posts/default/112453607225531500'/><link rel='alternate' type='text/html' href='http://sachithananthan.blogspot.com/2005/08/blog-post.html' title='சோழன் குடா  நக்காவரம்  தமிழர்'/><author><name>Sachithananthan_Maravanpulavu</name><uri>http://www.blogger.com/profile/11261211017709496052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry></feed>
